Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:17:25 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18548
#KOTW18548
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 6, 2016
தமிழக முதல்வர் மறைவையொட்டி காயல்பட்டினத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அமைதி ஊர்வலம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2840 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



கடந்த பல நாட்களாக உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நேற்றிரவு (05.12.2016. திங்கட்கிழமை) காலமானார். அவருக்கு வயது 68.

அவரது உடல், ராணுவ மரியாதையுடன் இன்று மாலையில் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதிக்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, காயல்பட்டினத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ - வேன் - கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து இல்லை. அஞ்சலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், அரசு - தனியார் வங்கிகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெயரளவில் கூட ஒரு கடையும் திறக்கப்படவில்லை.

தமிழக முதல்வரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நகரின் அனைத்துக் கட்சிகள் சார்பில், இன்று 16.30 மணியளவில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் துவங்கி, கடற்கரையில் ஊர்வலம் நிறைவுற்றது.









கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில், அஇஅதிமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், திமுக சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மதிமுக சார்பில் அதன் மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் சார்பில் விடுதலை செழியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், எஸ்.டி.பீ.ஐ. சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பி் நஜீம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், தேமுதிக சார்பில் சுல்தான் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.











இளந்தளிர் முத்து நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நிறைவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.



அதிமுக பிரமுகர்களான சுல்தான், காயல் மவ்லானா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, அதன் செயலாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி, மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட - நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளின் அங்கத்தினர், பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டனர்.







படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அறுதல் கூறும் மனமுடன்,
posted by முஹம்மதுஆதம் சுல்தான்! (yanbu) [06 December 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44973

துணிச்சல் மிகுந்த வீரப் பெண்மணியை தமிழகம் இழந்தது விட்டது. முதல்வரின் பேரைச்சொன்னாலே பதறித்துடிக்கும் அத்தனை அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தன் சுண்டு விரலில் சுழலவைத்த ஒரு வைர நெஞ்சுறுதியான வீராங்கனை!

கட்சியாலும் ,கொள்கையாலும் நானோ என்னைச்சார்ந்த இயக்கமோ அவர்களுக்கு நேர் எதிர்மறையாக இருந்தாலும், அவர்களை எதிர்கொள்ளப்போகும் வேட்டையை ஒரு சாதாரண சிறுமுயல்வேட்டையாக கருதியதில்லை. ஒரு சிங்கத்தை வேட்டையாடப்போகிறோம் என்றுதான் எதிர்கொள்வோம்.அந்த வேட்டையில் சில சமயம் வெற்றியும், சிலநேரம் வெற்றிவாய்ப்பு நழுவியும் இருக்கிரது. அப்படி வெற்றிவாய்ப்பை இழந்த நேரத்தில் நாங்கள் ஒரு சிங்கத்திடம்தாம் வெற்றியை இழந்தோம் என்ற பெருமையைத்தான் அடைந்திருக்கிறோம்! இனி அப்படிப்பட்ட சிங்கத்தை எங்கே தேடுவது?

தன்னுடைய ஆளுமையில் மிகவும் நம்பிக்கைகொண்டவர். தான் எதிர்க்கப்போகின்றவர் இமலாயளவு பலம்வாய்ந்தவராக இருந்தாலும், அதிலிருந்து எழும் எந்த தாக்குதலையும் இலவம் பஞ்சுபோல் ஊதித்தள்ளும் ஒற்றை மனஉறுதி வீரமங்கயை இனி எங்கே பார்ப்பது?

அவர் கொள்கைப்பரப்பு செயலாளராக பதவிபெற்ற பிறகு முதன் முதலில் இடைத்தேர்தல் பிரசாரத்தை நம் காயல் மண்ணிலிருந்துதான் ஆரம்பித்ததாக கேள்வி. அப்படி ஆரம்பித்த நம்மண்ணின் மகிமையால் அவர் வெற்றிப்படிகள் பலதாண்டி புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார் என எண்ணுகிறேன்!

அவர் தற்போது நம்முடன் இல்லை ஆனால் அவருடைய தனிமனித போர்படைத்திறனுடைய பேராற்றல் பல்லாயிர ஆண்டுகள் இப்பரணியில் பரவி புகழ்மணக்க போவது என்பது நிச்சியம்!

மறைந்த முதல்வரின் குடும்பத்தார்களுக்கும்,அவரின் தொண்டர்களுக்கும் என் ஆறுதலடங்கிய ஆழ்ந்த அனுதாபதத்தை தெரிவித்துக்கொள்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அறுதல் கூறும் மனமுடன்,
ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..அழகிய முன்மாதிரியல்ல...இன்று செய்திருக்கலாம் .
posted by mackie noohuthambi (kayalpatnam ) [07 December 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44974

முதல்வர் அவர்கள் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போதே இந்த நிகழ்வு நடைபெற்றது வருந்த தக்கது. எல்லோரும் கண்ணீருடனும் கம்பலையுடனும் தொலைக்காட்சி முன் உட்கார்ந்து நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்ரிப் தொழுதுவிட்டு வந்த பிறகும் அந்த காட்சி தொடர்கிறது. ஆனால் நமதூரில் மௌன ஊர்வலம் மாலை 4 .30 தொடங்கியது வேதனை தருகிறது.

நமதூர் வழக்கம் கூட ஒரு ஜனாஸா வெளியூரில் அடக்கப் பட்டாலும் அந்த ஜனாஸா அடக்கப்பட்டு முடிந்த செய்தி வந்த பிறகுதான் ஸலாம் கொடுக்க ஏற்பாடு செய்வார்கள். காயிப் ஜனாஸாவும் இப்படி தான் நடக்கும். இப்படி இருக்க நமது பாரம்பரியத்தையும் மீறி, ஒரு மக்களின் தலைவர் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும்போதே இப்படி செய்வதற்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியை இன்று மாலை செய்திருக்கலாமே, மிகவும் விஷயம் தெரிந்தவர்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்களே என்று பார்க்கும் போது நான்தான் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்றாலும் மனதில் பட்டதை துணிச்சலாக சொல்லும் தைரியம் படைத்த ஒரு தலைவிக்கு அஞ்சலி செலுத்தும்போது அவரது துணிச்சல் எனக்கும் வருவதில் வியப்பில்லை.

அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திப்பவர்கள் எனக்கு அறிவுரை கூறுங்கள். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved