Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:39:42 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18565
#KOTW18565
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 11, 2016
தம் பதவிக் காலத்தில் ஆண்டுக்கொருமுறை, தம் சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது! MEGA அமைப்பு கோரிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4048 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர்மன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்த காலகட்டத்தில், ஆண்டுக்கு ஒருமுறை தமது சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத உறுப்பினர்கள், மீண்டும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment and Guidance Association; MEGA) கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பின் செயலர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

ஏப்ரல் 25, 1973ஆம் ஆண்டு, தமிழக அரசு அரசாணை ஒன்றை (G.O.MS.NO.858) வெளியிட்டது. அது, நகர்மன்றங்களின் உறுப்பினர்கள் (சொத்து விபரங்களை வெளியிடல்) விதிமுறைகள், 1973 (MEMBERS OF MUNICIPAL COUNCILS [DISCLOSURE OF ASSETS], 1973) என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அரசாணையாகும்.









அச்சட்டத்தின் படி, நகர்மன்றங்களில் (தலைவர், துணைத் தலைவர் உட்பட) உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வோர் ஆண்டின் மார்ச் 31 முடிய - தம் சொத்து விபரங்களை விரிவாக, நகராட்சி ஆணையரிடம் வழங்கவேண்டும். அவ்விபரங்களை - நகராட்சி ஆணையர், நகர்மன்றக் கூட்டங்களில் தாக்கல் செய்யவேண்டும். அந்த ஆவணங்கள் பொது ஆவணங்களாகக் (Public Documents) கருதப்படும். விரும்பும் பொதுமக்கள், அந்த ஆவணங்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

நகர்மன்ற அங்கத்தினர் ஊழல் செய்து, தவறான வழியில் சொத்துக்கள் சேர்க்காமல் இருக்க இயற்றப்பட்ட இச்சட்டம் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தம் சொத்து விபரங்களை - தங்கள் வேட்பு மனுவோடு தாக்கல் செய்ய வேண்டும் என தற்போது வழிமுறைகள் தெரிவித்தாலும், மீண்டும் போட்டியிடும் முன்னாள் உறுப்பினர்கள், தம் பதவிக் காலத்தில் நகர்மன்றத்தில் தமது சொத்து விபரங்களை, ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பித்தார்களா என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் - வேட்பு மனு தாக்கல் படிவத்தில் கேட்பதில்லை.

நகர்மன்றத்திற்குத் தேர்வாகும் அங்கத்தினரின் கடமைகளுள் ஒன்று - அவர்கள் தொடர்புடைய விதிமுறைகளை - சட்டங்களை, தம் பதவிக் காலத்தில் கடைப்பிடிப்பதும் ஆகும்.

அவ்வாறு தம் பதவிக் காலத்தில், தமது சொத்து விபரங்களை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்காத அங்கத்தினர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனவும்,

அவ்வாறு அனுமதிப்பது – 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பொருளற்றதாக்கிவிடும் என்றும்,

வேட்பு மனு நிராகரிப்புக்கான காரணங்களில் - முந்தைய பதவிக் காலங்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதுவும் ஒன்றாக இணைக்கப்படவேண்டும் என்றும்

மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளது.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - MEGA)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கேள்விக் கென்ன பதில்?.
posted by mackie noohuthambi (kayalpatnam ) [11 December 2016]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44978

கேள்வி என்னவோ நல்ல கேள்விதான், ஆனால் விடைதான் கஷ்டமானது. ஆட்சியில் உள்ளவர்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், நீதி பதிகள் எல்லோருமே இருதய சுத்தியுடன் இதை செய்தால் மட்டுமே இது சாத்தியம்.

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. ஒரு வெறிபிடித்த நாயை கொல்வதானாலும் சட்டப் படிதான் கொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். கொலை செய்தவனை கையும் களவுமாக பிடித்தாலும் அவனை நீதிமன்றத்தில் கொண்டுபோய் விடவேண்டும். முஸ்லிம்களை மட்டும் ENCOUNTER றில் சுட்டு தள்ளலாம் என்பது இந்த நாட்டில் எழுதப் படாத சட்டம்.

இப்போது நாட்டில் நடக்கும் நோட்டு விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். தேநீர் விருந்து வைத்து ஒரு திருமணம் நடப்பதாக நமது பிரதமர் மோடி பெருமையாக அவரது ''மனதின் குரல்'' ஒளிபரப்பில் பரப்புரை செய்கிறார். ஆனால் அவரது கட்சிக் காரர் ஜனார்த்தன ரெட்டி சமகாலத்தில் 650 கோடி செலவு செய்து திருமணம் நடத்துகிறார். இன்னும் அதே போன்று நடிகர்கள் நடிகைகள் திருமணங்கள் ஆடல் பாடலுடன் அட்டகாசமாக நடந்து கொண்டிருக்கிறது. இது நமது பிரதமருக்கு தெரியவில்லையா..வருமான வரி அதிகாரிகளுக்கு தெரியாதா .கட்டுக் கட்டாக பழைய நோட்டுக்கள் புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டு வங்கி அதிகாரிகளாலேயே கொண்டு கொடுக்கப்பட்டு அதற்கு கமிஷனும் பெறுகிறார். இது தமிழ்நாட்டு தொழிலதிபர் வீட்டில் நேற்று இன்று நடந்த சம்பவங்கள்.

இதே போல் மறைந்த முதல்வர் அவர்களின் அகால மரணமும் கேள்விக்குறியாகி இருக்கிறது அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். எனவே எல்லோரும் திருடனாய் இருக்கும் நாட்டில் யார் காவலாக இருப்பார்கள். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.

ஒரே வழி இளைஞர்கள் WATCHDOG காக இருந்து இந்த ஊழல்களை தோலுரித்துக் காட்ட வேண்டும். அப்போதும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் யார் தருவார்கள். மணல் கொள்ளையை தடுக்கப் போகும் ஒரு நேர்மையான அதிகாரியை அதே லாரியை அவர் மேலே ஏற்றிக் கொலைசெய்யும் கலாச்சாரம் வேறெங்கும் இல்லை, இந்த தமிழ்நாட்டிலேயே நடக்கிறதா இல்லையா.ஊழல் செய்வது நிரூபிக்கப் படவே ஐந்து வருடங்கள் ஆகி விடும். அப்படி கிடைக் காலத்தில் அது நிரூபிக்கப் பட்டாலும் சம்பந்தப் பட்டவரை திருப்பி அழைக்க சட்டத்தில் இடமில்லை.

''சட்டம் ஒரு இருட்டறை, நீதி ஒரு விளக்கு'' என்று அண்ணா சொன்னார். நீதி என்ற விளக்கும் அந்த இருட்டறையில் சென்று பவ்யமாக ஒதுங்கி கொள்கிறது இந்த நாட்டில் என்பதுதான் நிதர்சன வேதனையான உண்மை.....

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

MEGA 'S SUGGESTION IS QUIET REASONABLE BUT THE INCEPTION IS A BILLION DOLLAR QUESTION .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved