Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:16:43 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18641
#KOTW18641
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 4, 2017
நகரில் CCTV கேமராக்களைப் பொருத்தல், வாடகை வீடுகளில் குடியிருப்போர் விபரங்களை சேகரித்தல் குறித்து ஜமாஅத் / ஊர் நலக் கமிட்டிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் கடிதம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5035 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளாக, திருட்டு, கொலை, போதைப் பொருட்கள் / மதுபானம் விற்பனை உட்பட பல வகையான குற்றங்கள் பெருகியுள்ளன.

இதனைக் கருத்திற்கொண்டு, நகரின் பொது வீதிகளை 100 சதவீதம் CCTV கேமராக்கள் கண்காணிப்பில் கொண்டு வரவும், வெளியூர்களிலிருந்து வாடகை வீடுகளில் குடியேற வருவோரின் விபரங்களைப் படிவங்களில் சேகரித்து வைக்கவும் - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - நகரின் அனைத்து ஜமாத்துகளுக்கும் / ஊர் நல கமிட்டிகளுக்கும் வேண்டுகோள் கடிதம் வழங்கப்படுகிறது.

அக்கடிதத்தின் வாசகம் வருமாறு:-

காயல்பட்டினம் நகரில் - கடந்த சில ஆண்டுகளாக, திருட்டு, கொலை, போதைப் பொருட்கள் / மதுபானம் விற்பனை உட்பட பல வகையான குற்றங்கள் பெருகியுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். அவ்வித குற்றங்கள் தொடர்ந்து நம் நகரில் நடைபெறாதிருக்க - ஒரு வழிமுறையாக, நகரின் சாலைகளை - 100 சதவீதம் CCTV கேமரா கண்காணிப்பில் கொண்டு வர அனைத்து ஜமாத்துகளுக்கும், ஊர் நல கமிட்டிகளுக்கும் - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக கடந்த ஜூலை மாதம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் CCTV கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், பெருவாரியான பொது வீதிகள் CCTV கண்காணிப்பில் - இன்றளவும் இல்லாமல் உள்ளது. நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, தங்கள் பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்துவதை துரிதப்படுத்த தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை, புது டில்லி போன்ற நகரங்களில் - வாடகை வீடுகளில் தங்குவோர் விபரங்களை காவல்துறை மூலமாக சேகரிக்க படிவங்கள் வழங்கப்படுகின்றன. நம் நகரில், நம் நகரைச் சாராதவர்கள், வாடகை அடிப்படையில் குடியமர்வது அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. இவர்களுள் பெருவாரியானவர்கள் கண்ணியமானவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. இருப்பினும் - நாம் வாழும் கால சூழலைக் கருத்திற்கொண்டு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சென்னை, புது டில்லி காவல்துறையினர் பயன்படுத்தும் படிவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி படிவம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.



இப்படிவங்களை - உங்கள் பகுதியில் வாடகைக்கு வீடு கொடுக்கும் உரிமையாளர்களிடம் வழங்கி, அவர்களை - தாங்கள் வாடகைக்கு அமர்த்தி இருக்கும் - நபர்களிடம் நிரப்பிடக் கோர, தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை - தங்கள் ஜமாஅத் / ஊர் நல கமிட்டி பொறுப்பில் வைத்துக்கொண்டு, அவசியம் எனில் காவல்துறை உதவியுடன், அவற்றை ஆய்வு செய்ய தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by VILACK SMA (Jeddah) [04 January 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45064

CCTV பதிவு அவசியமானது . அதுபோல் தற்போதைய சூழ்நிலையில் வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய தகவல் சேகரிப்பும் அவசியமானது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [05 January 2017]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45070

முதலில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சகோதரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

CCTV கேமராக்களைப் பொருத்தல், வாடகை வீடுகளில் குடியிருப்போர் விபரங்களை சேகரித்தல் போன்றவைகள் கண்டிப்பாக செயல் படுத்தனும்.

மேலும், ஊரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஒரு சில ஓட்டுநர்களைத் தவிர மற்றவர்கள் யார்..? எவர் ? என்பதே தெரியவில்லை. விபரம் கேட்டால் நமது ஊர் தான் என்று கூறுகிறார்கள். ஒன்றும் புரிவதில்லை நமக்கு.

ஆக, நம்மை ஓதோ ஒரு கண், கண்காணிக்கின்றது என்றாலே குற்றங்கள் நடைபெறுவது தவிர்க்கப்படும்.

அன்று, நம் ஊரில் அந்த அந்த தெருக்களில் உள்ள பெரியவர்களிடம் தான் அந்த வட்டாரத்தின் கட்டுப்பாடே இருந்தது. வியாபாரிகளில் இருந்து நம் மக்கள் வரை அவர்களுக்கு பயந்து நடந்தார்கள். ஒரு வியாபாரி முடுக்குக்குள் நுழைய முடியாது, அவ்வளவு கண்டிப்பு காட்டுவார்கள்.

இன்றோ ஊர் யாருடைய கட்டுப்பாடில் இருக்கின்றது என்பதே தெரியவில்லை.

வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Nizam (India) [05 January 2017]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45071

சமுக வலைதளங்களின் பலம் முதலில் வெளிப்ட்டது எகிப்தில் கொடுங்கோலன் முபாரக்குக்கு எதிராக வெளிப்பட்டது. இந்தியாவில் அன்னா ஹசாரே ஆரம்பித்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் பின்னாளில் அம் ஆத்மி கட்சியாக பரிணாமம் எடுத்து ஆட்சியை பிடித்தது முகநூல் வழியாகத்தான்.

ஆக நமதூரில் ஓரு வழக்கு பேச்சு உண்டு. சம்பாதித்தமா? ஊர் பிரச்னை நமக்கு எதற்கு? நிம்மதியாக வாழ்ந்தோமா? இதுதான் வெற்றிகரமான புத்திசாலியான வாழ்க்கை. இதுதான் இஸ்லாமிய வாழ்க்கை என்றால் குர்ஆனும் ஹதிஸும் இறைவன் தந்திருக்க மாட்டான்.

ஓரு தீமையை கையால் தடுக்க வேண்டும முடியாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் அதை நினைத்து வெறுக்க வேண்டும் இதுதான் நபிகளார் காட்டி தந்த வழிமுறை. அதைத்தான் நடப்பது என்ன? வாட்சாப் குழுமம் செய்து கொண்டிருக்கிறது அதற்கு வல்ல ரஹ்மான் கூலி கொடுக்க போதுமானவன்

ஆனால் அதே சமயம் எப்படியாவது இஸ்லாமியர்களை ஓழிக்க நினைக்கும் கூட்டத்தின் கை ஓங்கிய காலமிது. ஓரு விசமி இந்த தளத்தில் புகுந்து ஏதாவது நச்சை பரப்பி அதன் முலம் இந்த தளத்தை முடக்க திட்டம் தீட்டலாம். ஏற்கனவே காயல் இணையத்தை ஓருவர் தாக்கி அறிக்கை விட்டதை நினைவு கூற விரும்புகிறேன். ஆதலால் சட்ட பூர்வமாக இந்த அமைப்பை பதிவு செய்வதும் மாடரேசனை உண்டாக்குவதும அவசியம்.

இந்த தளம் நமதுர் கலசாரத்துக்கு ஏற்ப ஆணகளோடு கலக்காமல் பெண்களும் ஓரு தளத்தை ஏறபடுத்தி செயல்பட வேண்டும்.

அதுபோல நமதுரில் பனை மர அழிப்பு
புற்றீசல் போல செல் டவர்கள்தெ
ருக்களிலும் பஜாரிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலான ஆக்கிரமிப்பக்கள் நகராட்சி அனுமதி வாங்காமல் அதிக உயரத்தில் கட்டப்பட்ட வேகத்தடைகள்
பக்கத்து ஊரை கணக்கில் எடுத்து அதக விலைக்ு விற்கப்படும் பொருட்கள்

குறைந்தபட்சம் இரணடு வருடமாவது ஊரில் சேவை செய்ய இளைய சமுதாய மருத்துவரகளை வலியுருத்தல்

போன்றவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்

அதுபோல தொழில் வளர்ச்சி இளைய சமுகத்தில் நல்ல குணாதிசயங்களை வளரத்தல் அவசர மருத்துவ கல்வி உதவி போன்றவற்றுக்கும் தனி பிரிவு ஏறபடுத்தி பணிகளை விரிவு செய்ய வேணடும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved