Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:16 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18694
#KOTW18694
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 20, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யப்படும்! போராட்டத்தைக் கைவிடுக!! தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1717 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யப்படும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடி வரும் தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிடுமாறும், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு எவ்வித இடையூறும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் ஒட்டு மொத்த தடை விதித்து தீர்ப்பளித்த பின்னர், அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட ஏதுவாக, சட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தமிழக அரசும் தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிக்கை ஒன்றை 07.01.2016 அன்று வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தன. இந்த அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையினை விதித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு, தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்திட ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.

இது தொடர்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேற்று (19.01.2017) அவரது இல்லத்தில் சந்தித்து, மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.

எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக்கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார்கள்.

மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று புது டெல்லியிலேயே தங்கி, ஜல்லிக்கட்டு நடத்திட வழி செய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்தேன். அதன் அடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தினை, ஒரு அவசரச் சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்த வரைவு அவசரச் சட்டம் மத்திய அரசின் உள் துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையுடன், மேதகு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவேண்டும். மேதகு இந்திய குடியரசுத் தலைவர் இதில் உத்தரவு பிறப்பித்து, அதன் அடிப்படையில் மாநில ஆளுநர் அவசரச்சட்டம் பிறப்பிக்க இயலும்.

இத்தகைய வரைவு அவசரச் சட்டம், நேற்றே புது டெல்லியில் இருந்தபடியே தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, இன்று காலை தமிழக அரசு அதிகாரிகளின் மூலம் அனுப்பிவைத்துள்ளேன். மத்திய அரசில் இதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளை பணித்துள்ளேன். மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவு மற்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, இந்த அவசரச் சட்டம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பிறப்பிக்கப்படும். மாண்புமிகு பாரதப் பிரதமர் உறுதியளித்தபடி, அதற்கான முழு ஒத்துழைப்பு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஓரிரு தினங்களில் நடைபெற உள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள், மாணாக்கர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தங்களது போராட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நீதிமன்ற தீர்ப்பு பிறக்கட்டும் வாடி வாசல் திறக்கட்டும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [20 January 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45144

ஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் விஷயமாக இது மாறி இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் சங்கமிப்பதை பார்க்கும்போது 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம்போல் இது விசுவரூபம் எடுத்துள்ளது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு என்ற பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது.

தமிழர்களின் எழுச்சியை பார்த்து மோடி ஆடிப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். என்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் இருப்பதால் அகிம்சையான வழியில் போராட்டம் நடக்கிறது.கர்நாடக போல் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்காத போக்கு இங்கே இல்லை. எனவேதான் நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வரவேண்டும். நீதியின் வாசல் திறக்கவேண்டும் வாடி வாசல் வழியே காளைகள் சீறிப் பாய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

ரூபாய் நோட்டு விஷயத்திலும் மாணவர்களுக்கான நீட் NEET விஷயத்திலும் காவிரி தண்ணீர் விஷயத்திலும் தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது என்று பேசிக் கொண்டே இருந்தவர்கள் இப்போது ஜல்லிக் கட்டு விஷயத்தில் தங்கள் உணர்வுகளை எதிர்ப்புக்களை அழுத்தமாகவே பதிவு செய்து வருகிறார்கள். மோடிக்கு தெரிந்து விட்டது தமிழன் சாதுவாகத்தான் இருப்பான் ஆனால் விழித்து எழுந்தால் நமது சிம்மாசனத்தையே சிதைத்து எறிந்து நம்மையும் நமது கட்சியையும் தமிழகத்தில் வேரூன்ற விடமாட்டான் காலூன்ற விடமாட்டான்.என்பதை புரிந்து கொண்டார். இது ஒரு நல்ல சமிக்ஞய் தான். தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

ஆரிய இனம் திராவிட இனத்தை எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். திமுக தாய்க் கழகம். அதிமுக சேய் கழகம். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் . தமிழகத்தின் நலம் என்று வரும்போது இருவருமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரண்டு ஆடுகள் சண்டை இட்டுக் கொள்ளும்போது வழியும் இரத்தத்தை குடிக்க துடிக்கும் ஓநாய் போல் இருக்கும் பிஜேபியை இனம் கண்டு கொள்ளவேண்டும்.

ஜெயலலிதா மறைந்து விட்டார். கலைஞர் ஓய்வெடுத்துக் கொண்டார். இருபெரும் வசீகர சக்திகள் நம்மிடையே இல்லாதது பெரிய குறைதான். என்றாலும் இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காலையில் சிறுமழை!  (21/1/2017) [Views - 1721; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved