தண்டுப்பத்து என்ற ஊரில் நடைபெற்ற சாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவர்கள் பரிசும், பாராட்டும் பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான சாரணர் இயக்க முகாம், 29.07.2017. அன்று – தண்டுப்பத்து அனிதா குமரன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளின் சாரணர் (Scout) இயக்க மாணவர்கள் பங்கேற்றனர்.
![](/newsimg/108201750459.jpg)
![](/newsimg/108201750471.jpg)
![](/newsimg/108201750485.jpg)
![](/newsimg/108201750497.jpg)
![](/newsimg/108201750505.jpg)
![](/newsimg/108201750515.jpg)
முகாமில் நடைபெற்ற ஓவியப் போட்டியில், பள்ளியின் 05ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ் முதற்பரிசை வென்றார். இப்போட்டிக்கான தலைப்பு நிகழ்விடத்தில் – போட்டி துவங்கும் நேரத்தில்தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவில், முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தமது அனுபவங்களை அனைவருடனும் பகிருமாறு அழைக்கப்பட்டனர். இதன்போது, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவர் முஹம்மத் இஸ்மாஈல், தான் பெற்ற அனுபவங்களை ஆங்கில மொழியில் சரளமாகப் பகிர்ந்து, அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
![](/newsimg/108201750526.jpg)
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
(மக்கள் தொடர்பாளர் – முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
|