Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:25:16 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20150
#KOTW20150
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 4, 2018
6 வயது சிறுமி காலமானார்! அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் 6 வயது சிறுமி நேற்று காலமானார். அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. விரிவான விபரம்:-

கோயமுத்தூரைச் சேர்ந்த ஸைஃபுல்லாஹ் - மர்யம் ஆகியோர் இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டவர்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமான மர்யமுக்கு சுலைமான், யூஸுஃப் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். 7 ஆண்டுகளுக்கு முன் - அடுத்தடுத்த ஆறு மாதங்களில் அவ்விருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

இந்நிலையில், ஸைஃபுல்லாஹ் - மர்யம் தம்பதிக்கு அடுத்த ஆறு மாதங்களில் ஸமீஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. 6 வயதான இச்சிறுமிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுகவீனத்திற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 05:30 மணிக்குக் காலமானார்.

நேற்றிரவு இஷா தொழுகைக்குப் பின், அவரது ஜனாஸா - காயல்பட்டினம் காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொழுகையிலும், நல்லடக்கத்திலும் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.





தொழுகை நிறைவுற்றதும் - சிறுமியின் தந்தை ஸைஃபுல்லாஹ் உருக்கமாக உரையாற்றினார். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தான் நல்லொழுக்க உரைகளாற்றி வருவதாகக் கூறிய அவர், இவ்வாறான தருணங்களில் பொறுமையைக் கைக்கொள்வதற்குப் பொதுமக்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றெண்ணியதன் காரணமாகவே - தானாக முன்வந்து உரையாற்றுவதாக அவர் கூறினார். தமக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்குமாறு உரையின் நிறைவில் அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்துள்ள பெற்றோரைப் பார்த்து ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..மரணம்_தரும்_படிப்பினை-சிந்தனை அரும்புகள்.
posted by A.R.Refaye (Abudhabi) [04 February 2018]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45996

சிந்தனை அரும்புகள்.....

#மரணம்_தரும்_படிப்பினை.. .

நேற்றைய தினம் ஒரு பச்சிளம் குருத்து மரணத்தைத் தழுவிக் கொண்டது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

அந்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து உருகாத நெஞ்சம் கிடையாது.ஏற்கனவே இரு மகன்களைபறி கொடுத்த நிலையில், இப்போது அறிவும், அழகும் நிறைந்த ஆறு வயது மகளையும் பறி கொடுத்து பரிதவித்து நிற்கின்றனர் அந்த பெற்றோர்கள்.

ஆயினும்அல்லாஹ்வின் நாட்டம் என்பதை புரிந்து, பொறுமையைக் கைகொண்டு, அந்த பிள்ளையின் தந்தையே ஜனாஸா தொழுகையும் நடத்தி, பயானும் தந்தது,வந்தவர்களின் நெஞ்சத்தைக் குலுங்கச்செய்தது என்றால் அது மிகையில்லை.

அவர் புனித தீனை புதிதாய் ஏற்று வந்தவர் என்று சொல்லப்பட்டது..

அவரது ஈமானையும், தக்வாவையும், அவரது பொறுமையையும் பார்த்தபோது, ஓ.... #நாங்கள்_பரம்பரை_முஸ்லிம்கள் என்று சொல்லி பெருமையடித்துத் திரிபவர்கள் வெட்கப்பட வேண்டும்.

வசதி படைத்தவர் மரணித்தால் உடனே ஓடிச் சென்று தன் வருகையைப் பதிவு செய்யும் இந்த சமூகம்,வறியோரின் வீட்டு மரணத்தை கண்டு கொள்ளாததை பல இடங்களில் நாம் பார்க்கிறோம். அந்த அளவுக்கு, நம் இதயம் பெருமையில் மூழ்கிக் கிடப்பதை, யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

திரளான மக்கள் ஜனாஸாவுக்கு வந்திருந்தபோதிலும், எந்த ஜனாஸாவிலும் கலந்து கொள்ளாமல் இருக்கக்கூடியவர்களும் நம்மில் இல்லாமல் இல்லை. இப்படிப்பட்டவர்கள்,.

நாம் இப்படி எந்த ஒரு மைய்யத்திலும் கலந்து கொள்ளாமல், ஜனாஸா தொழுகை தொழாமல், அந்த மைய்யத்தின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்விற்காக, அவரின் மண்ணறையின் முன்னின்று இறையிடம் துஆ செய்யாமல் இருக்கிறோமே... நம்மைப் போலவே பிறரும் இருந்து விட்டால்..? அப்படியானால் நாம் மரணித்தப் பின்பு, நம்மை தூக்கிச் செல்ல, நமக்காக ஜனாஸா தொழ, நமக்காக பிரார்த்திக்க யார் வருவார்கள்? என்று ஒரு நிமிட நேரம் சிந்திப்பார்களேயானால்?...

எந்தவொரு ஜனாஸாவையும் தவற விட மாட்டார்கள்.

அன்பானவர்களே... அந்த சிறுமியின் மரணம் நமக்குத் தருகின்ற பாடம் என்ன.? மரணம் என்பது வயது வித்தியாசமின்றி யாவரையும் பீடிக்கும் என்பதுதானே....?

டெங்கும், காச நோயும், தொண்டை_அடைப்பான் நோயும் உலா வந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில்,உள்ளூர் வெளியூர் மருத்துவமனைகளில் நம் மக்கள் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் நமது தொண்டை எப்போது அடைக்கும் என்பது யாருக்குத் தெரியும்....?

ஆகவே..நிலையில்லாத இந்த அற்பஉலக வாழ்வின் மாயைகளில் நீங்குவோம்.

வல்லவன் அல்லாஹ்வை அனுதினமும் தொழுது, அவனருள் விழைவோம்.

இறைவா! உன்னிடம் அழைத்துக்கொண்ட அந்த குழந்தையின் மறுமை

வாழ்வை சிறப்பாக்கி வைப்பாயாக. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உனது உயர்வான சுவனத்தில் புகச் செய்வாயாக. பெற்றோருக்காக இறையிடம் துஆ செய்யும் பாக்கியத்தை அந்த குழந்தைக்கு நீ கொடுப்பாயாக.

நன்றி!

ஏ.ஆா்.தாஹா(ART)
03-02-2018


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by nizam (india) [04 February 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45999

Innalillaahi wainaa alainaa rajioon please aviod criticism in death condolence


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [04 February 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46000

انالله وانااليه راجعون.

வல்ல ரஹ்மான் இக்குழந்தையின் பெற்றோருக்கு பொறுமையை கொடுப்பதுடன் இவர்களுக்கு பேர்சொல்லும் வாரிசையும் கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. wafath
posted by HASBULLAH MACKIE (dubai) [05 February 2018]
IP: 151.*.*.* | Comment Reference Number: 46001

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [05 February 2018]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46002

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறைய்யருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

கொடுப்பதிலும் அல்லாஹ்வுக்கு நிகரில்லை,எடுப்பதை தடுப்பதற்கும் சக்திகளில்லை எல்லாம் அவன்செயல் அவன் விருப்பப்படியே எல்லாம் இந்த குடுமபத்தில அவனுக்கு எவ்வளவு விருப்பமோ அவனே அறிவான் இன்ஷா அல்லாஹ் இனி நிறைத்துக்கொடுப்பானாக என்று துஆச்செய்வோம் ஆமீனாக்க அவனே போதுமானவன் ஆமீன்.

அந்தக்குழந்தைகளின் மண்ணறையை பிரகாசமாக்குவான் அவர்களின் பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொறுமையையும், அமைதியையும் கொடுத்து விரைவில் அந்தப்பெற்றோருக்கு மனதிற்கும்,கண்களுக்கும் குளிர்ச்சியான நீண்ட ஆயுளைக்கொண்ட சந்தான விருத்தியைக்கொடுத்தருள்வானாக இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. CONDOLENCE
posted by Shaikna (Abu Dhabi) [06 February 2018]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46003

This incidence is really pathetic.

Her soul rest and peace.

Regards
Shaikna
Abu Dhabi - UAE
Mob. No. 050-5382512


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...c
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [07 February 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46006

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved