Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:35:25 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20463
#KOTW20463
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 25, 2018
பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2450 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இதுகுறித்த அம்மன்றத்தின் நிகழ்வறிக்கை:-

துபை காயல் நல மன்றம் நடத்திய 41வது காயலர் சங்கமம்!

தித்திக்கும் திருமறை ஓதும் கிராஅத் போட்டியுடன் காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. காலை 11 மணிக்கு ஆரம்பித்த இப்போட்டியில் மொத்தம் 18 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு தங்களது இனிமையான குரலால் குர்ஆன் வசனங்களை மிக அழகாகவும், தெளிவாகவும் ஓதினார்கள். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒரு பக்கம் காயலர்கள் தங்கள் குடும்பத்துடனும், தனித் தனியாகவும் வருகை தந்து கொண்டிருந்தனர். வரவேற்புக் குழுவினர் மும்முரமாக இயங்கி வருகை தருவோருக்கு சீட்டுகள் வழங்கிக்கொண்டிருந்தனர். காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் உபயத்தில் நவீன மின்னணு இயந்திரங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனால் தாள்களில் எழுதுவது, சரி பார்ப்பது, தகவல்களைப் புதுப்பிப்பது என்ற பணிகள் இலகுவாயின. வருபவர்களின் பிறப்பு வருடத்தை அடையாளமிட்டு அழுத்தினால் அவர்களின் பெயர்கள் உடனடியாக திரையில் வர, ஒரு கிளிக்கில் அவர்களின் பெயரும், அடையாள எண்ணும் கொண்ட அச்சடிக்கப்பட்ட சீட்டை இயந்திரம் தந்து விடும். இதனால் பதிவு செய்யும் நேரம் நிறைய மிச்சமானது.

சூடான சுண்டலும், சுவையான தேனீரும் வந்தவர்களை வரவேற்ற அடுத்த வரவேற்புக் குழு! பரஸ்பரம் சந்திப்புகளும், ஸலாம்களும் பரிமாறப்பட்டு, நலம் விசாரித்த பிறகு அடுத்த கடமையை நிறைவேற்றுவதற்காக காயலர்கள் அருகிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதை நோக்கி விரைந்தனர்.

கடந்த 06.04.2018 வெள்ளிக்கிழமை துபை ஸஃபா பூங்கா இந்தக் கண்கொள்ளா காட்சிகளைப் பதிவு செய்தது. ஆம்! 41வது காயலர் சங்கமம் கண்கொள்ளாக் காட்சியாகவும், மட்டற்ற மகிழ்ச்சியாகவுமே ஒவ்வொரு காயலருக்கும் திகழ்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நீண்ட தூரங்களிலிருந்து வரும் தங்கள் சொந்தங்களை, பந்தங்களை, நண்பர்களைப் பார்க்கும் ஆவல் ஒவ்வொரு காயலரின் முகத்திலும் தென்பட்டது.

ஜும்ஆ தொழுகை முடிந்ததும் காயலர் தின நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ஆலிஜனாப் அபூபக்கர் ஷாதுலி அவர்கள் அழகிய குரலில் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை சிறப்பாக துவக்கி வைத்தார். பின்னர் செயற்குழு உறுப்பினர் சாளை சலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தாயகத்திலிருந்து வருகை புரிந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இக்பால் ஹாஜியார், ரியாத் காயல் நல மன்றத் தலைவர் முஹம்மத் நூஹு ஸாஹிப், அபூபக்கர் ஷாதுலி ஆகியோரையும், அபூதாபி காயல் நல மன்றத் தலைவர் பொறியாளர் மக்பூல் அவர்களையும், திரளாக வருகை தந்த ஆண்கள், பெண்கள், காயல் இளவல்கள் அனைவரையும் அவர் வரவேற்றார். அவரே நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

மன்றத் தலைவரின் தலைமையுரையுடன் நிகழ்ச்சி சூடு பிடித்தது. அவர் தனது உரையில் கூறியதாவது:

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை நாம் கூடுகிறோம். ஒன்று பொதுக்குழுக் கூட்டமாகவும், இன்னொன்று காயலர் தினமாகவும் நடத்தப்படுகிறது. இந்த ஒன்றுகூடல்களில் கிராஅத் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

வருகை தந்தவர்களைப் பதிவு செய்யும் நோக்கம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளவும், வேலை தேடி வந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவுமே. புதிய கருத்துகளையும், ஆலோசனைகளையும் இங்கே வந்திருப்பவர்கள் தர வேண்டும். சந்தா பணம் கொடுக்காதவர்கள் உடனே உரியவர்களிடம் பணம் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அடுத்ததாக புதிதாக வந்தவர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மேடைக்கு வந்து தங்கள் பெயர், தெரு, படிப்பு, வேலை விவரங்களைத் தெரிவித்தனர். வேலை தேடி வந்தவர்கள் தங்கள் துறையைத் தெளிவு படுத்தினார்கள்.

பின்னர் அபூதாபி காயல் நல மன்ற புதிய தலைவர் பொறியாளர் மக்பூல் அவர்கள் உரை நிகழ்த்தினார். “ஐந்து வருடங்களுக்கு முன்பு துபை-அபூதாபி இணைந்து செயல்பட்டோம். தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகிறோம். நமது நோக்கம் நமதூர் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பளிப்பது, கல்வி, மருத்துவ உதவிகள் செய்வது போன்றவையே. பெரிய திட்டங்களை அபூதாபி காயல் நல மன்றம் தனியாக செயல்படுத்த முடியாது. அதற்கு இதர காயல் நல மன்றங்களின் கூட்டு முயற்சி தேவை” என்று அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய மன்றத் தலைவர் அவர்கள் தன் மகன் ஜமீலுக்கு எதிர்வரும் 04.08.2018 அன்று திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அதில் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு, “இந்தத் திருமணத்தை அதிக செலவில்லாமல் நடத்திட திட்டமிட்டுள்ளோம். பொதுவாக திருமணச் செலவுகளைக் குறைக்க வேண்டும். திருமண அழைப்பிதழ்களை அதிக செலவில் அடிக்காமல், வாட்ஸ்அப், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் அனுப்ப வேண்டும். அதிகப்படியான திருமணச் செலவுகளைக் குறைத்து அந்தத் தொகையை வைத்து “திருமண நிதி” (Marriage Fun) என்று ஒன்றை உருவாக்கலாம். அதனை ஏழைகளுக்கு திருமணம் புரிந்திட அளித்து உதவலாம்” என்று ஆலோசனை வழங்கினார்.

அடுத்து பேசிய ரியாத் காயல் நல மன்றத் தலைவர் முஹம்மத் நூஹு அவர்கள், “சஊதியில் இப்படி திறந்தவெளியில் ஒன்று கூட முடியாது. ஆனால் இங்கே இயற்கை அழகு பொருந்திய பூங்காவில் ஒன்று கூடியுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. மன்றத் தலைவர் இளைய தலைமுறையினரின் புதிய சிந்தனைகள், புதுப் புது யோசனைகள் தேவை என்று சொன்னார்கள். அதுமாதிரியான வளர்ச்சிப் பணிகளுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். இக்ரா பணிகளை இலகுவாக்க மென்பொருள் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். நாம் உதவிகள் செய்வது ஒருபுறமிருக்க, அரசு நலத் திட்டங்கள் எத்தனையோ நமது மக்களுக்குத் தெரியாமல் இருக்கின்றன. அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தி அதன் பலன்களை மக்களுக்குக் கிடைக்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் சிறப்பு விருந்தினர் இக்பால் ஹாஜியார் தனது உரையில், “திருமண நேரத்தில் தெருவை அடைக்காமல் மொகுதூம் பள்ளி வளாகத்தில் திருமணம் நடத்துவதற்கு அரங்கம் அமைக்கப்படுகிறது. அதுபோன்று சிறுமியருக்கான மக்தபும் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. “புதிய தலைமுறையினர் முன்வந்து காயல் நல மன்றப் பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டும்” என்று சாளை சலீம் வேண்டுகோள் விடுத்தார்.

உறுப்பினர்கள் நமதூர் நலனுக்கான பல கருத்துகளை நிகழ்ச்சியில் பதிவு செய்தனர்.

செயற்குழு உறுப்பினர் யூனுஸ் அவர்கள் தன் மகளை தன் சகோதரர் புகாரீ காக்கா மகன் திருமணம் முடிப்பதாகவும், எதிர்வரும் 04.08.2018 அன்று நடைபெறும் தங்கள் இல்லத் திருமணத்திற்கு அனைவரும் வந்து கலந்து சிறப்பித்துத் தரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அதனையடுத்து செயற்குழு உறுப்பினர் எஸ்.எல். காஜா அவர்கள் எதிர்வரும் 05.08.2018 அன்று நடைபெறும் தனது இல்லத் திருமணத்திற்கு அனைவரும் வந்து கலந்து சிறப்பித்துத் தரும்படி அழைப்பு விடுத்தார்.

உறுப்பினர் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் காயல் மணம் நிரம்பிய களறிச் சாப்பாடு பரிமாறப்பட்டது. அறுசுவை உணவுண்டு அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. சிறுவர், சிறுமியருக்கான போட்டிகளை சாளை சலீம் குழுவினர் நடத்தினர்.

பெரியோர்களுக்கான வினாடி வினா போட்டியினை செயற்குழு உறுப்பினர் ‘குயிஸ் மாஸ்டர்’ எம்.யூ. ஷேக் நடத்தினார். சாக்குப் போட்டியும் நடைபெற்றது. பின்னர் பந்து கைமாற்றும் போட்டி நடைபெற்றது.

அஸ்ர் இடைவேளையில் தேனீரும், பருப்பு வடையும் பரிமாறப்பட்டன. பின்னர் பரிசளிப்பு விழா ஆரம்பமானது.

முன்னதாக பெண்களுக்கென மொத்தமாக மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆண்களில் காலை 11 மணிக்குள் வந்தோர், ஜும்ஆவுக்கு முன் வந்தோர், ஜும்ஆவுக்குப் பின் வந்தோர் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

பரிசுகளுக்கு அனுசரனை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நிகழ்ச்சியில் நன்றி நவிலப்பட்டது.

அனுசரனை வழங்கியோர்:

தங்க நாணயங்கள்:

1. அரிஸ்டோ ஸ்டார் (ஜே.எஸ்.ஏ. புகாரீ)
2. ஹலி மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ் (சாளை சலீம்)

பரிசுப் பொருட்கள்:

1. டோஷிபா எலிவேட்டர்ஸ் - 1000 திர்ஹம் (விஎஸ்எம் அபூபக்கர்)
2. ஆரியாஸ் நிறுவன பங்குதாரர் பால் முஹம்மத் - 1000 திர்ஹம்
3. V.S.T. ஷேக்னா
2. காழி அலாவுத்தீன்
3. ரியாஸ்
4. எம்.யூ. ஷேக்

நிகழ்ச்சியின் இறுதியாக மன்றச் செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றியுரை நவின்றார். கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்தவர்கள், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தவர்கள், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனங்களை மேற்பார்வை செய்தவர்கள், அகமகிழ்ச்சியுடன் அதிகமாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நீக்கமற நிழற்படங்கள் எடுத்து நீங்கா நினைவுகளை நிலைப்படுத்திய ஸுப்ஹான், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ ‘டி’ பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தந்தவர்கள், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து, அவர்களது தொடர்புகளைப் புதுப்பித்த வரவேற்புக் குழுவைச் சார்ந்த சகோதரர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரனை வழங்கியவர்கள் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

வழமை போன்று யாரையும் எதனையும் எதிர்பார்க்காமல் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து மொத்த நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உறவுகள் பிரியும்பொழுது உள்ளபடியே கவலை வரும். சொந்தங்கள் பிரியும்பொழுது துக்கம் தொண்டையை அடைக்கும். அதே போன்று நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரிய மனமின்றி பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர்.

அனைத்து நிழற்படங்களையும் காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

https://photos.google.com/share/AF1QipOS2XHnBAmmPc_U8ZcLno7qCUKPknKlZbmIz5-WAWIulYvuaVSdxnlIKdjiOJ9KdQ/photo/AF1QipPaOrMEgbMPQgezdiPQ0USYr2VAeqp6PZn0xD4t?key=NXpPQTltYnFOb1JQTzhlcFZQejNOYTNmcWxFbHB3


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாக்கம்:
M.S.அப்துல் ஹமீத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இது என்ன தமிழகமா அமீரகமா
posted by mackie noohuthambi (Dubai) [25 April 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46147

என்னதான் செல்வங்கள் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் கொடுப்பினை வேண்டும் என்று சொல்வார்களே அதுதான் நினைவுக்கு வருகிறது இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும்போது.

எங்களிடம் பணம் இருக்கிறது டிக்கெட், விசா, தங்குமிடம் தூங்குமிடம் பொங்குமிடம் எல்லாம் இருந்தும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாவிட்டால் எதுவும் பயன்தராது என்ற முடிவுக்குத்தான் நாங்கள் வந்தோம்.

6 ஆம் திகதி இப்படி ஒரு நிகழ்ச்சி துபாயில் நடக்கவிருக்கிறது என்று முன்கூட்டியே அறிந்திருந்தோம். ஆனால் கல்வி ஆண்டின் முடிவு எங்கள் பேத்திக்கு 7 ஆம் திகதிதான் இறுதி நாள் பரீட்ச்சை. dubai global village அன்றுதான் முடிவுக்கு வருகிறது. பரீட்சையை முன்கூட்டி நடத்த சொல்ல நாங்கள் என்ன அண்ணா பல்கலைக்க துணை வேந்தரா பணம் வாங்கி கொண்டு பள்ளிகளுக்கு உத்தரவிட? இங்கு 11 ம் திகதிதான் இங்கு வர முடிந்தது.

துபாயில் புகாரி காக்க வீட்டில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலிலும் அபூ தாபியில் நடைபெற்ற அய்மான் சங்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளில் மனோரஞ்சிதமான நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற முடியாமல் பொய் விட்டதே என்ற ஏக்கம் கவலை எங்களை விட்டு இன்னும் மறையவில்லை.

MARRIAGE FUND என்று ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற புகாரி அவர்களின் புதிய யோசனை அற்புதமானது. அதே போல் திருமணங்களை சிக்கனமாக நடத்த வேண்டும் என்ற யோசனையும் வரவேற்பு நிகழ்ச்சி என்று ஒன்றை ஏற்படுத்தி அதனால் தெருக்களை அடைத்து பொது மக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதை தடுக்க மாற்று யோசனைகளை வழங்கி இருப்பதும் வரவேற்கத்தக்கது.

அமீரகத்தில் கருக் கொள்ளும் இந்த எண்ணங்கள் தமிழகத்து வந்ததும் காணாமல் போய் விடுகிறதே என்பதுதான் எனது கவலை இத்தகைய கலை நிகழ்ச்சிகளை நாம் எப்போதாவது தமிழகத்தில் நடத்த முடிகிறதா நமது சொந்த மண்ணில் காயல்பட்டினத்தில் நடத்தி நம் உறவுகளை நட்புகளை பகிர்ந்து கொள்ள முடிகிறதா கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

அதற்கு தடையாக நிற்கும் எல்லா உணர்வுகளை உணர்ச்சிகளையும் கொஞ்சம் தள்ளி வைப்போம் இனி ஒரு விதி செய்வோம். வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 April 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46148

மாஷா அல்லாஹ்.

உங்களின் 41வது காயலர் சங்கமம் நிகழ்வுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

- இது மாதிரியான ஒரு நிகழ்வை எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நாங்களும் அறிந்த காரணத்தால், இந்த நிகழ்வை அருமையாக நடத்தி முடித்த அனைவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

- நாங்களும் இதில் கலந்து கொண்ட உணர்வு உண்டாக்கியது. அதிலும் சுபான் காக்காவுடைய புகைப்பட தொகுப்புக்கள் வழமையான அசத்தல்.

- 25 வருடங்களுக்கு மேலாக பார்க்க முடியாதவர்களை எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, அதிலும் எத்தனை வெள்ளை முடிகள், தோல் சுருக்கங்கள் என்று பளிச் புகைப்படங்களுடன்.

- திருமண வாழ்வை எட்டும் தூரத்தில் இருக்கும் மணமக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பாரக்கல்லாஹ்.

- கடைசி வரை பரிசு பெற்றவர்கள் யார் என்று கூறவே இல்லையே.. தங்க நாணயம் பெற்றவர்கள் யார் என்று அறிய ஆவல்.

- களரிக்கரியில் ஆணம் கூடி விட்டதோ..!

- மின்னணு இயந்திரங்கள் என்றாலே பயந்துகொண்டு இருக்கும் இந்நாளில், உங்கள் மின்னணு இயந்திரம் பிரயோசனமாக இருந்தது என்று அறிந்து பூரிப்பு. ஆடிட்டர் புகாரி காக்கா விற்கு ஒரு தம்ப்ஸ் அப்...

- உங்களின் மக்கள் பணிகள், ஒற்றுமை, சந்தோசம் ஆகியவைகள் தொடர பிராத்திக்கிறேன்.

சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved