Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:20:20 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20757
#KOTW20757
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 20, 2018
எதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே...! “நடப்பது என்ன?” குழுமம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதைத் தொடர்ந்து குழுமம் அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1964 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சுமார் 5 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை அடிப்படையாக் கொண்டு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், “நடப்பது என்ன?” குழுமத்தை விமர்சித்தும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்திற்குச் செலவழிக்க – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தடையாக இருந்ததாகவும் பேசியிருந்தார்.

அதற்குப் பிறகு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு செய்தியறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-

எதிர்பார்ப்பது தவறா அண்ணாச்சி அவர்களே...?

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

நமதூர் காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நமதூர் காயல்பட்டினத்திற்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இதுவரை செலவழித்துள்ள தொகை விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று – பொதுமக்கள் பார்வைக்காக நமது “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, 14.07.2018. சனிக்கிழமை மாலையில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா அண்ணாச்சி அவர்கள், தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காயல்பட்டினத்திற்குச் செலவழிக்க – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்கள் தடையாக இருந்ததாகக் கூறியது கேட்டு உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தோம்.



கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி கண்ட – நமதூரின் ஜனநாயக விரோத அமைப்பும், நிலபுரபுத்துவவாதிகளும், அதிகாரவர்க்கமும் – தாம் கண்ட தோல்வி தாளாமல் இத்தனை நாட்களாக என்ன சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்களோ அதுவே அண்ணாச்சி அவர்களின் வாயிலிருந்தும் வெளிப்படும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.

உண்மை என்னவெனில், அண்ணாச்சி அவர்கள் இதுவரை காயல்பட்டினத்திற்குச் செலவு செய்ததிலேயே நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களது பொறுப்புக் காலத்தில்தான் கூடுதலாக செலவழித்திருக்கிறார். அவர் தடையாக இருந்திருந்தால் கூடுதலாகச் செலவழித்திருக்க வாய்ப்பில்லையே...?

ஐ.ஆபிதா ஷேக் அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன் 2011 – 2012 பருவத்தில் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சிறு தொகையைக் கூட செலவு செய்யவில்லை.

அப்படியானால், அப்போதைய நகர்மன்றத் தலைவர் தடுத்தார்களா...?

ஐ.ஆபிதா ஷேக் அவர்களது பொறுப்புக் காலம் முடிந்த பிறகு 2016 – 2017 காலகட்டத்தில் – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக அவர் பெற்ற 2 கோடி ரூபாய் மொத்தத் தொகையில் அவர் செலவழித்ததோ வெறும் 1 லட்சம் மட்டுமே!

இக்காலகட்டத்தில் தடுப்பதற்கு நகர்மன்றத் தலைவரே இல்லையே...?

ஆக, தடுக்க யாருமில்லாத இப்பருவத்தில் செலவிட்டதோ மிகக் குறைவு!

தடுத்தாரா, இல்லையா என தெரிவிக்கப்படாத வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களது பொறுப்புக் காலத்தில் ஒரு ரூபாயும் செலவிடவில்லை!!

யார் தடுத்ததாகக் கூறப்பட்டதோ அந்த ஐ.ஆபிதா ஷேக் அவர்களது பொறுப்புக் காலத்தில்தான் இதுவரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் செலவழித்ததிலேயே கூடுதல் தொகையைச் (rs.45,90,750) செலவழித்திருக்கிறார். அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மரியாதைக்குரிய அண்ணாச்சி அவர்களே!

எங்கள் “நடப்பது என்ன?” குழுமத்தைப் பொருத்த வரை எந்த அரசியல் கட்சியையோ, அரசியல்வாதிகளையோ, அமைப்புகளையோ தேவையின்றி விமர்சித்துக் குளிர்காய வேண்டிய எந்த அவசியத்திலும் இல்லை. அதுபோல, அவர்கள் செய்யும் நல்லவற்றைப் பாராட்டுவதிலும் எந்தத் தயக்கமும் எங்களுக்கில்லை.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக, 14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட எங்கள் ஊருக்கு – நிறைய செய்யாவிட்டால் கூட பரவாயில்லை... குறைந்தபட்சம் - இருக்கும் வாக்காளர் சதவிகித அளவுக்கேனும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செலவழித்திருக்கலாமே என நாங்கள் எதிர்பார்த்தது தவறா அண்ணாச்சி அவர்களே...?

அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இதே காயல்பட்டினத்திற்குத் தாங்கள் வாக்கு சேகரிக்க வரும்போது, இந்த ஊருக்குச் செய்ய வேண்டிய - எஞ்சிய சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கான நலத்திட்டப் பணிகளைச் செய்து முடித்து, முகமலர்ச்சியுடன் உரிமையோடு வாக்கு கேட்க வருவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையோடு...

நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: ஜூலை 15, 2018; 4:45 pm]
[#NEPR/2018071501]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நலத்திட்ட நாயகன்
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 July 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46221

காயல்பட்டினம் மக்களால் நலத்திட்ட நாயகன் என்று புகழப்படும் அனிதா அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் அதிமுகவில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் அவரே சட்டமன்ற உறுப்பினராக வரும் வாய்ப்புக்கள் உள்ளன. காயல்பட்டினம் மக்களின் வாக்கு வாங்கி அவர்களுக்கு நல்லவிதம் கைகூடி வருகிறது.

தகவல் உரிமை சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் அரசே தன்னுடைய வலுவை இழந்து வெறும் 44 உறுப்பினர்களை பெற்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக வரும் அந்தஸ்த்தைக் கூட இழந்தது ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

கலைஞரின் தம்பி இப்படி ஆதங்கப் பட்டு நடப்பதென்ன குழுமத்தின் தகவலை கேட்டு கவலைப் பட்டிருக்க தேவை இல்லை. கலைஞர் அவர்களின் தம்பிமார்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது குணங்களையும் எதிர்மறையான கருத்துகளையும் நேர்மறையாக எப்படி அணுகி சட்டமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் நிருபர்களின் பேட்டியையும் எப்படி நகைச்சுவையுடன் சமாளித்தார் என்பதை எல்லாம் ''தெற்கிலிருந்து ஒரு சூரியன்'' என்ற ஒரு புத்தகத்தை படித்தபோது நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதே நகைச்சுவையுடன் இந்த விஷயத்தை அனிதா அவர்கள் அணுகி பதில் சொல்லிவிட்டு ஊதி விட்டு போய் இருக்கலாம்.

அனிதா அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து காயல்பட்டினத்துக்கு இன்னும் செலவு செய்ய வேண்டியது உள்ளது என்பதைத்தான் நடப்பதென்ன குழுமம் சுட்டிக் காட்டி இருக்கிறது. இதை வரவேற்று நான் உங்க வீட்டு பிள்ளை தொடர்ந்து உங்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவேன் சட்டமன்ற நிதியிலிருந்து மட்டுமல்ல எனது சொந்த கை காசையும் போட்டு செலவு செய்வேன் நான் அதற்கு கடமைப் பட்டிருக்கிறேன்.என்று சொல்லி இருந்தால் மக்கள் விண்ணை பிளக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி அவர்களை வாழ்த்தி இருப்பார்கள்.

''எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு''.

''செல்லுமிடத்து சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்''

என்ற இரண்டு குறள்களையும் குறளோவிய நாயகனின் தம்பி மறக்கலாமா....

மீண்டும் வாருங்கள் நல்லாட்சி தாருங்கள் காயல்பட்டினம் உங்கள் நலத்திட்டங்களால் இன்னும் பயனடைய நீங்கள் நீடூழி வாழ வேண்டும். என்று கலைஞரின் 96 ஆண்டு பிறந்தநாள் விழாவில் உங்களை வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Shaikna Lebbai KMT (Qatar) [21 July 2018]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 46223

மிகவும் அருமை.

எத்தனை நாளைக்குத்தான் அண்ணாச்சி ஏமாற்றுவார் நமது ஊர் மக்களை????

ஊர் மக்கள் அனைவரும் உணரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved