Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:31:46 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7043
#KOTW7043
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 22, 2011
ரமழான்-1432: காட்டு மகுதூம் பள்ளி இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4517 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது காட்டு மகுதூம் பள்ளி தர்கா. இங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மஹான் ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெயரைக்கொண்டே இப்பகுதி “காட்டு மகுதூம் பள்ளி” என்றழைக்கப்படுகிறது.

இந்த தர்காவையொட்டி மஸ்ஜிதுன் நூர் என்ற பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலில் ரமழான் காலங்களில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ரமழானில் ஏதேனும் ஒரு நாளில் விமரிசையான இஃப்தார் ஏற்பாடுகள் செய்து, காயல்பட்டினம் நகரின் மார்க்க அறிஞர்கள், நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களை அழைத்து உபசரிப்பது காட்டு மகுதூம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வழமையாக செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாண்டும் அதுபோன்று, கடந்த 22.08.2011 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காட்டு மகுதூம் பள்ளியின் நிர்வாக ஆலோசனைக் குழு உறுப்பினரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார்.







ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, ஹாஜி கார்ப்பரேஷன் இஸ்மாஈல், ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், ஹாஜி அம்பலம் மஹ்மூத் நெய்னா, ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும்,

காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







அனைவருக்கும், பேரீத்தம்பழம், தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கி, கறிகஞ்சி, வடை வகைகள், பழ வகைகள், குளிர்பானம், தேனீர் என பல வகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.

பள்ளியின் வரலாறு குறித்த விரிவான தகவலைக் காண இங்கே சொடுக்குக!

களத்தொகுப்பு மற்றும் படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மிக்க பணிவன்புடன் கேட்டு கொள்கின்றோம்
posted by சட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம் ) [23 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7115

அஸ்ஸலாமு அலைக்கும்..

நாம் இது வரை பார்த்து வந்துள்ள ,பார்க்க உள்ள நமதூர் பள்ளிவாசல்களின் நோன்பு துறப்பு காட்சிகளில் மற்றும் நிகழ்வுகளில் இது ஒரு வேறுபட்ட காட்சி என்பதை உள்ளுரிலும்,வெளி இடங்களிலும் இருந்து பார்க்கும் காயல்ர்களுக்கு தெளிவாகும்.ஒரு நெருடலகாவூம் விளங்கும். நம் வீட்டு சொந்த காரியங்களுக்கு அடாப்பு போட்டு நமக்கு தெரிந்த மக்கள்களை மட்டும் அழைத்து செய்யும் நிகழ்வு போன்றது போல் உள்ளது.. இதில் நாம் காணும் காட்சி காயலின் ஒட்டு மொத்த வி. ஐ.பி. களின் ஓன்று கூடல்.

இன்ஷாஅல்லாஹ் இனி வரும் வருடங்களிலாவது நம் ஊரில் உள்ள பாவப்பட்ட ஏழைகளையும் அழைத்து சங்கை செய்யுங்கள் . இந்த இனிய நிகழ்வில் கலந்து கொண்ட மரியாதைக்கும்,மதிப்பிற்கும் உரிய உலமா பெருமக்களும்,மற்றும் தனவந்தர்களும், பெரியவர்களும் இதை நடத்த கூடிய தனிப்பட்ட குடும்ப நபர்களிடம் (நிர்வாகம் என்றாள் அது ஒட்டு மொத்த காயல்பட்டினதிற்க்கும் உரியது,அதில் ஏழையும் வருவார்,பணம் படைத்தவர்களும் வருவார்கள் இது பள்ளி அனைவருக்கும் சொந்தமானதும் கூட) நல்ல முறையில் எடுத்து கூறுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

அன்புடன் வேண்டும் உங்களில் ஒருவன்

சட்னி.செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by vsm ali (kangxi , Jiangmen , China) [23 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7120

இந்த பள்ளி , ஊரில் இருந்து தொலை தூரத்தில் உள்ளது . வருமானம் அதிகம் இல்லாதது. எனது நண்பர் மஹ்மூது நெய்னா அவர்கள்தான் தினமும் வந்து இந்த பள்ளியை அதிக சிரத்தையுடன் கவனித்து கொள்கிறார். நோன்பில் கஞ்சி போட இந்த பள்ளிக்கு அனுசரணைகள் அதிகம் கிடையாது . இருப்பினும் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ஒருநாள் , நம்மில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறார். அந்த நேரத்தில் நீங்கள் குறிப்பிடும் ஏழைகள் , வசதியற்றவர்கள் அங்கு சென்றிருந்தாலும் , அவர்களுக்கும் , அங்கு இவர்களைப்போன்ற மரியாதைதான் கிடைத்திருக்கும். ஆகையால் குறை கூறுவதை தவிர்க்கவும்.

இந்த பள்ளிவாசல் , ஒருசில காலங்களாக அயலூர்க்காரர்களின் நிர்வாகத்தில் , சீரழிந்து , சின்னாபின்னமாகியது. அதற்காக நீங்கள் எப்போதாவது குரல் கொடுத்தது உண்டா ? எனது நண்பர் மஹ்மூது நெய்னா மற்றும் இங்கே அமர்ந்திருக்கும் முக்கிய பிரமுகர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து , பள்ளியை நமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். நீங்கள் குறிப்பிடும் எந்த ஒரு ஏழை பாழை யும் குரல் கொடுக்க வில்லை . இன்ஷா அல்லாஹ் , அடுத்த வருடம் இது போன்ற நிகழ்வுக்கு , நண்பர் மஹ்மூது நெய்னாவிடம் சொல்லி உங்களுக்கும் அழைப்பு விட சொல்கிறேன்.

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [23 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7124

"நம் வீட்டு சொந்த காரியங்களுக்கு அடாப்பு போட்டு நமக்கு தெரிந்த மக்கள்களை மட்டும் அழைத்து செய்யும் நிகழ்வு போன்றது போல் உள்ளது" - சட்னி மீரான் காகா.

போல் தெரிகிறதே தவிரே உறுதியாக சொல்ல முடியாது. அவ்வாறு இருக்க இங்கு அமர்ந்து காட்சி அளிக்கும் அனைவரும் TATA பிர்லா, அம்பானி மட்டும் இல்லை அனைத்து தரப்பினரும் அடங்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by Ibrahim (Hong Kong) [23 August 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 7128

I think you publish only your favourable people message. What's wrong on my posting?

Administrator: We suspect you are not using your real name. At one place, you are calling yourself Muthu and in another - Ibrahim. Hence your comments are not being approved


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by Muthu Ibrahim (Hong Kong) [23 August 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 7136

நான் சில சமயங்களில் அப்படி பயன்படுத்தி இருக்கலாம் .அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இரண்டும் எனக்குரியதுதான். சில சமயங்களில் சுருக்கி எழுதி இருக்கலாம். வரும் காலங்களில் முழு பெயராக அனுப்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.

Administrator: Thanks for your understanding


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by drnoordeen (muscat) [23 August 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 7146

தம்பி சைத் மீரானுக்கு

கருத்துக்களை பதிவு செயும்போது கொஞ்சம் யோசித்து ஆலோசித்து அனுபவும்
அல்லாஹ் உனக்கு தவ்பீகு செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by Muthu Ibrahim (Hong Kong) [23 August 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7149

கருத்துகள் பதியும் போது பிறர் மனம் புண்படாமல் எழுதுவது நல்லது.நல்லவைகளை பாராட்டுங்கள், குறை எப்படி சொல்வது என்பதை ஆராய்வதை தவிறுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by hasbullah (Dubai) [23 August 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7151

அன்புள்ள சகோதரர்களே

செய்யிது மீரான் காக்கா சொன்னது போல எல்லா vip s இதே போன்ற நிகழ்சிகளை ஏற்பாடு செய்து தான் செல்லுவார்கள் பள்ளிக்கு தொழுவதற்கு ஆளில்லாததன் காரணமாக இவர்கள் போய் பள்ளிகளை நிறைப்பார்கள் என்றால் ALLAH விடத்தில் அதிக கூலிகள் கிடைக்கும் மறுமை நாளில்.

எண்ணங்களை அறிபவன் ALLAH ஒருவனே



இதே போன்று ஒரு நாள் ஆறுமுகநேரி ஸ்டேஷன் பள்ளிக்கும் சென்று நடத்தினால் நல்லது.

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by mak.zainulabdeen.member.kaattu mohudoom palli. (kayalpatnam) [23 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7156

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சட்னி செய்யிது மீரான் காக்கா அவர்கள் கூறியதை போல் இது அடாப்பு போட்டு செய்த நிகழ்ச்சி அல்ல. இது நான்கு வருடங்களாக சிறப்பான முறையில் நடைபெறும் நிகழ்ச்சி. அல்லாஹுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி. இதில் நீங்கள் சொன்னமாதிரி பணக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. எல்லாரும் கலந்துகொண்டார்கள்.

ஏன்? பணக்காரர்கள் இப்தார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளகூடாதா?ஏன் இந்த மாதிரி குறை கூறுகிறீர்கள். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான். அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்படிக்கு,காட்டு மொகுதூம் பள்ளி நிர்வாகம் சார்பாக,எம்.ஏ.கே.ஜெயினுல் ஆப்தீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by mohammed ikram (saudi arabia) [23 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7157

நண்பர் சட்னி சயத் மீரான் அவர்களே, நோம்பு விசயத்தில் ஒரு நோம்பாளி என்பவன் அவன் பணக்காரானா அல்லது அவன் ஏழையா என்று அல்லாஹு பார்ப்பதில்லை. அவன் நல்ல முறையில் நோம்பு பிடித்து நல்ல அமல் செய்கின்ரண என்று தான் பார்கிறான். ஒரு நோம்பாலிக்கு நாம் நோம்பு திறக்க அழைத்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நோம்பாளி ஏழையா அல்லது பணக்காரானா என்று பிரித்து பார்க்க வேண்டியது அவசியம் இல்லை,

எல்லா புகழும் வல்ல நாயன் அல்லாஹு ஒருவனுக்கே. அவன் தான் எல்லாம் நன்கு அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. பணக்காரர்களை அழைத்து கெளரவம் செய்யுங்கள் ! பள்ளி வாசலுக்கு நிதியை பெருக்குங்கள்!! கொடுங்கள் !
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [23 August 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7159

பார்ப்பதற்கு ஒரு அழகான நிகழ்வு இது! நகரின் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கெளரவிக்கப்படுகிறார்கள்... மாஷா அல்லாஹ்! தம்பி மஹ்மூத் நெய்னா மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிறந்த செயல் இது... ஏன் தெரியுமா? அங்கே சென்று ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்... எப்படி கிடந்த பள்ளி வாசல்... தர்ஹா கட்டிடங்கள்... பெண்கள் பகுதி இருப்பிடங்கள்... கழிவு உபாதை தளங்கள்..... இன்றைக்கு எப்படி அழகுற கட்டி நிறைவு செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி தருவதோடு மட்டும் அல்லாமல் மக்களுக்கும் எவ்வளவு மன நிறைவை தந்து கொண்டு இருக்கிறது...

இன்னும் தேவைகள் நிறையவே இருக்கிறதே...... அதை யாரையாவது பிடித்து அவர்களின் பொருள் உதவியால் பூர்த்தி செய்யணுமே என்ற ஆதங்கத்திலும் உள்நோக்கில் அல்லது ராஜ தந்திரமாக கூட இருக்கலாமே.... இதுல என்ன உள் அர்த்தம் கற்பிக்கிறது என்றுதான் புரியவில்லை....

ஒரு காலத்தில் சுல்தான் ஹாஜியார் (மர்ஹூம்) அவர்களால் மஸ்ஜிதே நூர் கட்டி கொடுக்கப்பட்டு இன்று அது சிதைந்து விழும் நிலையில் இருந்த ஒரு நிலையை அப்படியே மாற்றி அமைத்து புத்தம் புதிய பள்ளியாக உருவாக்கிய நிர்வாகிகளை மனம் திறந்து வாழ்த்தி துஆ செய்து பாராட்ட முன் வாருங்கள்!

அன்றைக்கு வருகை புரிந்த பணக்காரர்கள் மீதம் உள்ள மராமத்து பணிகளுக்கு நிச்சயமாக அனுசரணை புரிவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை... அந்த இடத்தை பார்வை இட இந்த இப்தார் நிகழ்ச்சி ஒரு கருவியாக இருக்கட்டுமே..... இதில் உள் அர்த்தம் கற்பிக்க ஒன்றுமே இல்லை நண்பர்களே... ஏழைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் அங்கே! வந்தவர்கள் அனைவரும் தனவந்தர்களும் அல்லர்....

என் குடும்பத்தை சார்ந்தவர்களை அழைக்கவில்லையே என்று நான் கோவப்பட்டு இந்த தர்காவுக்கு காசு தரமாட்டேன் என்று சும்மா இருந்தால்..!? நம்மை யாரும் அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று நாம் ஒரு போதும் கருதக்கூடாது.. நாமே இது போன்ற நிகழ்ச்சிகளில் மனம் உவந்து கலந்து கொண்டு நிர்வாகம் செய்பவர்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுமே தவிர குறை கூறி அதை இது போன்ற ஆயிரம் கணக்கான வாசகர் அறியும் வண்ணம் செய்வதும் மிக மிக தவறே...

நாம் என்றுமே விசாலமான தன்மை கொண்டவர்களாக திகழ்வோம். யாருக்கு தெரியும் இப்படி ஒரு நிகழ்வு என்று சொல்லவும் கூடாது... இதை ஒரு கந்தூரி மாத்ரி நடத்தினால் என்ன செலவு ஆகும் என்று நம் அனைவருக்கும் தெரியும் தானே? அதனால் குறிப்பிட்ட நபர்களை அழைத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.... இதில் தவறு ஒன்றும் இல்லை சகோதரர்களே... நல்ல நோக்கில் நடந்த சம்பவம் தானே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தான் பண்பு நண்பர்களே...

இந்த பகுதி கலந்தாய்வு செய்யும் டிஸ்கசன் பகுதி அல்ல தோழர்களே... இந்த செய்தியை பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்ய மட்டுமே.... நாம் அனைவரும் இதை தவறாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே கருதுகிறேன்..... தயவு செய்து ஒன்றை மட்டும் மிக தெளிவாக உணரனும்..... இந்த வலை தளம் நடத்தும் அன்பர்கள் தங்கள் சொந்த செலவிலேயே நம் ஊர் நலன் கருதி செய்கிறார்கள். நகரின் ஒற்றுமையும்... ஊரின் தனித்தன்மையும் பேணி பாதுகாக்கப்படனும் என்ற நல்ல நோக்கில்தான் இதை செய்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் இந்த வலை தளத்துக்கு நாம் ஆதரவு கொடுக்க வேணுமோ அந்த அளவுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அன்புக்குரிய அட்மின் அவர்களே...இனி வரும் காலத்திலாவது இது மாதரியான கருத்துக்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம் என்றும், அப்படியே இது மாதிரியான DISCUSSIONS களை DISCUSSION BOARD இல் நடத்திக்கொள்ள அறிக்கை வெளி இடுமாறு உங்களுக்கு அன்பு வேண்டு கோளையும் இதன் மூலம் விடுக்கிறேன்.

நம் ஒற்றுமை என்றும் தலைத்தோங்குவதற்க்கு இந்த வலை தளம் மென்மேலும் பாடு பட.... இதை இனிதே செயல் படுத்தும் நல்ல நெஞ்சங்களுக்கும் இந்த தருணத்தில் நாம் அனைவரும் துஆ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் ..ஆமீன்!!

அன்புடன்,
K.V.A.T. ஹபீப்
கத்தார்
kvat.habib@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உண்மை கசக்க செய்யும் அதில் நன்மை உள்ளது நண்பரே
posted by சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்) [23 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7160

அஸ்ஸலாமு அலைக்கும்.

காட்டு மொகுதூம் பள்ளி நிர்வாகம் சார்பாக மறுப்பு செய்தி அளித்துள்ள என் அன்பினும் இனிய தம்பி எம்.ஏ.கே.ஜெயினுல் ஆப்தீன் அவர்களே

நீங்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள் காயலில் உள்ள நமது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை பின்பற்ற கூடிய அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பு கொடுத்து இது போன்ற நிகழ்வு உள்ளது என்று அறிவிப்பு செய்திர்களா இல்லை.

கடந்த வார ஜும்மாஹ்வில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து அழைப்பு விடுத்தீர்களா.. இல்லை என்றாள் இந்த புனித நிகழ்வில் இவ்வளவு மக்கள்கள் வந்துள்ளர்களே இவர்களுக்கு எப்படி, யார் மூலம் தெரிந்து வந்தார்கள் என்று சொல்லமுடியுமா.

இதே வலைதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நீங்கள் தலைவராக உள்ள காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற நோன்பு துறப்பு செய்தியும், பட காட்சியும் பார்த்தோம் பரவசம் அடைந்தோம்.

அது உங்கள் தனி பட்ட அமைப்பின் நிகழ்வு அதனை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. அனால் இதுவோ ஒட்டுமொத்த காயலில் உள்ள நமது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை பின்பற்ற கூடிய அனைத்து நபர்களுக்கும் உரியது என்பதை நீங்கள் மறுக்கவோ, மறைக்கவோ மாட்டிர்கள்.

இந்த பள்ளி கடந்த காலங்களில் அந்நியர் அல்ல நம் அருகில் உள்ள உடன்குடி நபரின் கையில் அகப்பட்டு பல காலங்கள் நீதி மன்றங்களில் அலைகழிக்க பட்டு எங்கள் குத்பா பெரிய பள்ளி முஹல்லாக்கு உட்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தினரின் இடை விடாத பெருமுயற்சியாலும், எல்லாவற்றையும் விட மேலாக வல்லோனாம் அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் இன்று நமது கைக்கு வந்தள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இங்கு முதலில் கந்தூரி நடத்துவதற்கு வருடத்திற்கு ஒரு பள்ளி என எங்கள் குத்பா பெரிய பள்ளி முஹல்லாக்கு உட்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தினர் பொறுப்பு எடுத்து செய்து வந்துள்ளோம்.

எங்கள் மொஹிய்தீன் பள்ளி சார்பாக பொறுப்பு எடுத்து நடத்தும் கந்தூரி நிகழ்விலும் நானும் பல, பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து நல்ல முறையில் பங்காற்றி உள்ளதோடு உடன்குடி நபரின் கையில் அகப்பட்டு பல காலங்கள் அலைகழிக்கபட்ட சமயம் உரிமைக்காக உரக்க குரல் கொடுத்தவனில் நானும் ஒருவன் என்பதை மார்த்தட்டி சொல்கின்றேன்.. அல்லாஹ் போதுமானவன்.

இந்த இனிய நிகழ்விற்கு கடந்த 2009ஆம் வருடம் நடைபெற்றபோது என் மரியாதைக்குரிய ராவன்னா அபுல் ஹசன் ஹாஜியார் போவோம் என அழைக்க அவர்களுடன் வந்து கலந்துள்ளேன். அங்கு நடைபெற்ற நிகழ்வும், அதில் கலந்து கொண்ட நபர்களின் முகங்களும் என் மனதில் பசு மரத்து ஆணி போல் பதிவாகி உள்ளது.

அன்று பார்த்த அதே நபர்களை இந்த நிகழ்விலும் பார்க்கவும் (மேலும் இந்த வலை தளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவான செய்திகளை, போடோகளை திரும்பவூம் பாருங்கள் உங்களுக்கு தெளிவாகும், தெரிய வரும்)

இந்த வலை தளத்தில் இன்றும், அன்றும் நடைபெற்று வரும் ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளின் நோன்பு துறப்பு நிகழ்வுகளின் செய்திகளில், போடோகளில் இந்த ஹாஜியார், இந்த நபர்கள் கலந்துகொண்டார்கள் என்ற வாசகம் இல்லாத பொழுது இதில் மட்டும் இவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று வந்துள்ளதும் அறிவீர்கள்.

இதில் கருத்து பதிவு செய்துள்ளவர்கள் என் அன்பிற்குரிய மருத்துவர்.நூருதீன் அவர்கள் உட்பட எல்லோரும் தற்சமயம் காயலில் இல்லை. இதனால் அவர்களுக்கு இதன் உண்மை தெரிய வாய்ப்பில்லை. ஆர்வ மிகுதியால் சம்பந்தம் இல்லாது நண்பரின் பெயரையும் அவராகவே மனதில் நினைத்து எழுதிவிட்டார். இதற்கு தான் சொல்வார்களோ அப்பன் குதிரில் இல்லை என்ற பழமொழி.

வாழ்க அன்பு மாடரடேர்களுக்கு கத்திரி போட வைத்து, அவர்கள் சிவப்பு எழுத்து எழுத வைக்காத கருத்துகளை நாம் பதிவு செய்தால் அதுவே மிக சிறந்தது. முயற்சி செய்வோமாக அல்லாஹ் உதவிடுவான்,

இந்த கருத்து பதிவிற்கு நான் உங்களோடு விவாதம், கருத்து யுத்தம் நடத்துவதர்ககவோ இல்லை. இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நிகழாத வண்ணம் கவனம் செலுத்தவே. இன்ஷாஅல்லாஹ். நம்மை பிறர் குறை குறைவோ, குற்றம் சாட்டவோ நாம் இடமளிக்க வேண்டியதில்லை.

உண்மை கசக்க செய்யும் அதில் நன்மை உள்ளது நண்பரே; இதற்க்கு வைப்போம் முற்று. அவசியம் இருப்பின் நேரில் கருத்துகளை பரிமாறுவோம். இறைவன் நாடினால்.

அல்லாஹ்விற்காக நாம் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் ஒப்பு கொண்டு நற்கூலி தனை இரு உலகிலும் தருவானாக ஆமீன்.

அன்புடன்
சட்னி .செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ், மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்
அலை பேசி 850 8570 955


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by vsm ali (Kangxi , Jiangmen , China) [24 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7168

எல்லோருக்கும் பொது அழைப்பு கொடுக்க , இது ஒன்றும் " ஊர்ச்சாப்பாடு " அல்ல. ஒரு சிறிய நிகழ்வு . ஊரில் உள்ள அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக அழைக்கும் அளவுக்கு வசதியான நிர்வாகம் இல்லை. அதுபோல அளிக்காதவர்கள் என்று யார் வந்தாலும் , அவர்களை விரட்டி அடிக்கப்போவதும் இல்லை .ஆகையால் ,ஊரில் உள்ளவர்கள் தினமும் இப்தாருக்கு இங்கு வர சாத்தியம் இல்லை என்பதால், ஏதாவது ஒரு நாளில் , ஊரின் அனைத்து முஹல்லாவிலும் உள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்து இப்தார் நடத்துவது வழமையான ஒன்றுதான்.

மேலும் , நான் குறிப்பிட்ட நண்பர் மஹ்மூத் நைனா தினமும் இங்கு வந்து பள்ளி, தர்கா மராமத்து வேலைகளை கவனிப்பதை வழமையாக கொண்டுள்ளார். அதுபோல இந்த பள்ளியை அன்னியரிடமிருந்து மீட்க பாடு பட்டவர்களும் அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்கின்றனர். ( நண்பர் மீரான் நான் அந்நியன் என்று குறிப்பிட்டதை ஏதோ வெளிநாட்டவர் என்று நினைத்து விட்டார் போலும். உடன்குடி காரர்களும் அந்நியர்கள்தான் ) வேறு எந்த அப்பனும், சுப்பனும் வந்து , சீரழிந்த இந்த பள்ளியை சீராக்கி வைக்கவில்லை.

தயவு செய்து இனிமேலும் , யாரிடமும் அதிகம் குறை காணாமல் , மன நிறைவோடு இருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அதிகம் பறக்கத் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [24 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7180

"அஸ்ஸலாமு அலைக்கும்."

தமிழ் பேசும் எண்ணற்ற சஹோதரர்ஹள் நமது வலைதளத்தை பார்வை செய்து வருவது அனைவர்ஹளும் அறிந்ததே! அவர்ஹளும் சமயத்தில் கேலி செய்வதுண்டு நம் கருத்து பரிமாற்றத்தை குறிப்பிட்டு என்பதை வருத்தமுடன் தெரியப்படுத்துஹிரேன்.

டாக்டர் நூர்தீன் ஹாஜியார், மஸ்கட் நோன்பு திறப்பு போட்டோ எங்க????? அனுப்புங்கள் சீக்கிரம்.

சூப்பர் இப்ராகிம் ச.ஹ.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ரமழான்-1432: காட்டு மகுதூ...
posted by AbdulKader (Abu Dhabi) [24 August 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7192

அன்புச் சகோதரர்களே... அஸ்ஸலாமு அலைக்கும். வாசகர்களில் பலர் சகோ. வி.எஸ்.எம்.அலீ அவர்களின் கருத்தை ஆமோதிக்கின்றனர். எனவே, இதுகுறித்து சகோ. இப்றாஹீம் இன்னும் விவாதித்து தனது நேரத்தை வீணடிக்காதிருக்கட்டும்!

சகோ. இப்றாஹீம் (சஊதியிலிருந்து) தெரிவித்துள்ளது போல, தமிழ் பேசும், படிக்கும் பல மக்கள் நமது கருத்துக்களைப் பார்வையிட்டு, நம்மைப் பார்த்து எள்ளி நகையாட வாய்ப்புள்ளது.

சகோதரர் கே.வி.ஏ.டி. ஹபீப் அவர்களின் கருத்து மறுத்துப் போன கல் நெஞ்சையும் உருக்கித் திறக்கும் அற்புதமான கருத்து. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved