Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:13 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameகே எஸ் முகமத் ஷூஐப்
Placeகாயல்பட்டினம்.
Approved Comments39
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
39
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
எழுத்து மேடை: ப்ளாக் பெல்ட் நோம்பாளி! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [01 July 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41197

நோன்பு மாதத்திற்க்கேற்ற மிக நல்ல கட்டுரை. தம்பி சாலிகுககு நமது பாராட்டுக்கள்.

நல்ல பழக்க வழக்கங்கள்,நன்மையான செயல்கள்,பிறருக்கு தீங்கிழைக்காமை,நல்லதே எண்ணுதல், நல்லவையே பேசுதல் எனபது எப்போதும் நமக்கு வேண்டிய ஓன்று. ஆனால்..நோன்பு மாதம் என்ற ஒன்றை அதற்காக ஒதுக்கி கட்டம் கட்டி ,அப்போது மட்டும் நன்மை செய்தால் போதுமானது...எனபது ஒரு வழக்கம் நம்மிடையே உள்ளது. இது தவறான நிலைப்பாடாகும்.

அதனால்தான் ஐவேளை தொழாதவர்களும் கூட தராவீஹ் என்னும் இரவுத் தொழுகையை தொழ பள்ளிவாசலில் வரிசை கட்டி நிற்கின்றனர்.

மனிதவாழ்வு தேவைகளாலும், பழக்க வழக்கங்களாலும் நிரம்பிக் கிடக்கிறது...

உணவு உண்ணுதலும், வீடு கூடலும் தேவை மட்டுமே. ஆனால் புகை பிடிப்பதும், வெற்றிலை போன்ற லாகிரி வஸ்த்துக்களை பயன் படுத்துவதும் ,தொலைக் காட்சியில் மூழ்கிக் கிடப்பதும் பழக்க வழக்கங்கள். தேவையைக் கட்டுப்படுத்தி விடலாம். பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமம்.

இங்கு கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருக்கும் அந்த பீடி புகைக்கும் சகோதரர் மூன்று நாளைக்கு வேண்டுமானாலும் உணவின்றி பட்டினி கிடப்பார். ஆனால் ஒருவேளை புகைக்காமல் அவரால் முடியாது. தேவைகளை பழக்க வழக்கங்கள் ஓரம் கட்டும் நிகழ்வுகள் இப்படித்தான் துவங்குகின்றன.

தம்பி ஸாலிஹ் வீட்டில் தினசரி பொறித்த ஐட்டங்கள் இல்லையோ..என்னவோ...ரொம்பவும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எனக்குத் தெரிந்து அவர் இதுபோன்ற உணவுகளின் மீது ஆர்வம் குறைந்தவர்.

ஆனால் ..என்னதான் விலங்கு காட்சி சாலையில் வளர்க்கப்பட்டாலும்.... நினைவில் காடுள்ள மிருகம் இருப்பதைப்போல..... என்னதான் இயற்க்கை உணவு, அது,இது என்று பேசினாலும்... காயலானுக்கு வடையும், வாடாவும், சமோசாவும், கட்லட்டும் சோத்து வாடாவும் இருந்தால்தான்...அது நோன்பு....

அதைத் தின்ன மாட்டோம் என்று சொல்பவர்கள் பண்ணுவது வெறும் வீம்பு...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பாரம்பரியத்தை பேணிக்காக்கிறதா சஹன் சாப்பாடு? [ஆக்கம் - வி.எஸ்.எம்.அலீ (Vilack SMA)] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல் பட்டினம்...) [21 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39726

விருந்து சஹனில் பாரம்பர்யம் எதுவும் மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. எல்லாம் சிற்சில நடைமுறை மாற்றங்கள்தான். எந்த ஒரு நீண்ட பாரம்பரிய தொடர்புகளிலும் ,அவ்வக்கால நடைமுறை மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை. இவைகளை ஏற்றுக்கொண்டால்தான் அந்தப் பாரம்பரியமும் நீடித்து வாழும்.

உதாரணமாக ,செம்பு தாலம் கிடைத்தால் மட்டுமே நான் வலிமா விருந்து வைப்பேன் என்றால், இப்போது செம்பு தாலத்துக்கு எங்கே போவது...?

தாலத்திலும் விருந்து வைக்கலாம். அல்லது அருகருகே அமர்ந்து சாப்பிடும்படியாகவும் தனித்தனி தட்டுக்கள்,அல்லது வாழை இலைகளையும் வசதி போல பயன் படுத்திக் கொள்ளலாம். எதுவும் தவறில்லை என்பதே எனது கருத்து. எல்லாவற்றிலும் அருகருகே அமர்ந்துதான் சாப்பிடுகிறோம்...இங்கேயும் சமத்துவம் பேணப்படவே செய்கிறது.

இங்கே யாரோ ஒரு நண்பர் அருகருகே நின்று தொழும் போது மட்டும் தோற்று நோய் பரவாதா...?என்று கேட்டிருந்தார். பரவலாம். பரவாமலும் இருக்கலாம். எனினும் சாப்பிடும் ஒரு நிகழ்வு மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் சற்றே தனித்த ஓன்று. அதிலும் சுத்தம்,சுகாதாரம் நோய்த்தொற்று போன்றவைகள் குறித்து அதீத விழிப்புணர்ச்சி பெருகி நிற்கும் காலமிது. எனவே இணையாக சாப்பிட வரும் ஒருவரிடம் சுத்தம் இல்லையெனில் அவரோடு சகனில் அமரவில்லைஎனில்...அது சமத்துவம் மறுக்கும் செயல் என்று தவறாக நினைக்கக்கூடாது.

தம்பி எஸ் கே கூறிய சாப்பிட்டுவிட்டு கை துடைக்க டிஷ்யூ பேப்பர் அவசியம் கொடுக்க வேண்டும். இதில் எனக்குத் தனித்த அனுபவமே உண்டு.

ஏனெனில் ,நான் இதுபோன்ற விருந்துக்குப் போகும்போது ,நியூஸ் பேப்பரைக் கிழித்தால் அது சரியாக வராது என்பதால், என்னிடம் கிடக்கும் பழைய ஜூனியர்விகடன், ரிப்போர்டர் வார இதழ்களின் நடுப்பக்கத்தைத்தான் லேசாக அலுக்காமல் கிழித்துச் செல்வேன். அந்த நடுப்பக்கங்களில் தவறாமல், நமது சினிமா அம்மணிகளின் படம்தான் இருக்கும்.

எனக்கு ஒ கே...என்னோடு இருப்பவருக்கு அதைக் கொடுத்தால், அவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்.

எனவே தம்பி எஸ் கே வின் யோசனையை கல்யாண வீட்டார் அமுல்படுத்தி என்போன்ற குஞ்சு -குளுவான்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாகர்கோவிலில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில், காயலரின் படத்திற்குப் பரிசு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [10 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39555

ஒளி ஓவியரின் வண்ணப்படங்கள் எல்லாமும் மிக அருமை. ஆசாமியிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விட்டால் இதயத்தில் உள்ளவற்றையே படம் பிடித்து விடுவார்.

எல்லோருக்கும் இரண்டு கண்கள்.இவருக்கு மூன்றாவதும் ஒரு கண் உண்டு. அது அவரது கையிலுள்ள காமிரா.

வாழ்த்துக்கள். மென்மேலும் பல சிறப்புக்கள் உங்களை வந்து சேரும் இன்ஷா அல்லாஹ்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam.) [04 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39468

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரது கடையில் நான் மக்ரிப் நேரங்களில் சூடான பஜ்ஜியும் சுவையான தேநீரும் அருந்தியதுண்டு. எல்லோரும் தொழில்தான் செய்கின்றனர் என்றாலும், அவற்றில் முத்திரை பதிப்பவர்கள் சிலரே... அவர்களில் அன்னாரும் ஒருவர்.

அன்னாரது மக்பிரத்துக்காக நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டி நிற்ப்போம்...ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: டாக்டர் ஃபீஸ் வேண்டாம்! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப். (காயல்பட்டினம். ) [12 February 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39241

ஹா...ஹா...ஸாலிஹ்... மரணிக்காமலே மனித வாய் பிளக்கும்.... நல்ல உதாரணம். நீண்ட நேர ஜும்மா உரைகளில் நான் உட்பட - பலருக்கும் இந்த "வாய் பிளக்கும் '( அதாவது தூக்கம் ) துயரம் வந்துருகிறது.

தமிழில் "சொல் வலை வேட்டுவன் " என்று ஒரு இலக்கியச் சொல் உண்டு. அதாவது சொல்லையே வலையாக வீசி மனிதர்களை வேட்டையாடுவது. எனபது இதன் பொருள். தம்பி ஸாலிஹ் குறிப்பிடும் ஹீலர் பாஸ்கர் இந்த ரகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஹீலர் பாஸ்கர் அவர்களின் நிகழ்வுக்குச் சென்று விட்டு தம்பி ஸாலிஹ் மீண்டும் நாங்கள் இருந்த நந்தனம் புத்தகக் காட்சிக்கே வந்தார். அவரது கையில் தடிமனான ஒரு புத்தகம் இருந்தது. புத்தகக் காட்சிக்கே இவர் வெளியிலிருந்து ஒரு புத்தகத்தோடு வருகிறாரே.... என்ன புத்தகம்... என்று வாங்கிப் பார்த்தேன். ஹீலர் பாஸ்கர் அவர்களின் செவி வழி தொடு சிகிச்சை குறித்த புத்தகம்தான். சிறிது நேரம் அதை வாங்கி புரட்டியும் பார்த்தேன். புத்தகக் காட்சியில் "இலக்கியப் பித்து " பிடித்து திரிந்ததால் ,அதிகமும் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதுபோன்ற வித்தியாசமான சோதனை முயற்சிகளில் தம்பி சாலிஹும், தம்பி சாளை. பஷீரும் ஆர்வமுள்ளவர்கள். உடலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். என்போன்றவர்களால்.... அது முடியாது போனாலும்.... அவர்களாவது செய்கிறார்களே... என்று ஆர்வமுடன் அவர்கள் செய்வதைப் பார்த்திருப்பேன்.

தம்பி ஸாலிஹ் தனது முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப். (காயல்பட்டினம். ) [01 October 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 37566

"காயல் நம்மாழ்வார் 'என்றழைக்கப்படும் என் எஸ் இ மாமா அவர்கள் குறித்த இந்த பதிவு மிக அருமை. அன்னாரது அந்த இயற்க்கை உணவு கடை திறக்கப்பட்டபோதே நான் சென்று பார்த்திருக்கிறேன். மிக நல்ல முயற்சி.

வியாபாரம் மட்டுமேயல்ல...தான் விரும்பித் தேர்ந்துகொண்ட இந்த முயற்சியில் எல்லோரும் இணைந்துகொண்டால் அது நல்லது...உடல் ஆரோக்கியம்...என்ற அன்னாரது சிந்தனையில் எனக்கு எப்போதும் உடன்பாடே.

எல்லோருக்கும் எதுவோ ஓன்று பிடிக்கும். ஆனால் பிழைப்புக்காக வேறு ஏதோ தொழில் செய்வார்கள். ஆனால் மாமா அவர்கள் தனக்குப் பிடித்த ஒன்றையே தனது தொழிலாக மட்டுமல்ல வாழ்க்கையின் நோக்கமாகவும் மாற்றிக்கொண்டவர்.

அவர் மூலம் இந்த இயற்க்கை உணவு முறை நமது மக்களின் பழக்கங்களுள் ஒன்றாக ஆகுமானால் ...அதுவே அன்னாரின் சீரிய முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஸ்மைல் ப்ளீஸ்...! [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப். (காயல்பட்டினம்.) [19 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36522

ஸாலிஹ்.....உண்மையாகவே புரியவில்லையா ...?அல்லது என்னை மீண்டும் ஒருமுறை அதைச் சொல்ல வைத்துப்பார்க்க ஆசையா ...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒருதலைக் காதல்! (?!) [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [10 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35876

கட்டுரையாளரின் ஆதங்கம் நமக்குப் புரிகிறது. வெள்ளைக் கஞ்சி மிகவும் ருசியானது. இன்னும் சொல்லப்போனால் கஞ்சி என்பதன் முழு அர்த்தமே ..வெள்ளைக் கஞ்சிதான்.

நாம்தான் எதிலுமே காரமும், இறைச்சியும் சேர்த்துப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.

அண்மையில் முகநூலில் ஒரு தகவல் படித்தேன். காயல்பட்டினம் கஞ்சி குறித்து அதில் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அதுக்கு விமர்சனம் எழுதிய இன்னொரு வெளியூர் நண்பர் ...

"இந்தக் காயல்பட்டனத்துக்காரர்களின் சமையல் எல்லாமே ருசிதான். ஆனால் அவுங்க பிரியாணியில் தண்ணீர் ஊற்றி அதைக் கறிக்கஞ்சி என்று சொல்வதைத்தான் நம்பமுடியவில்லை .."என்று எழுதியிருந்தார்.

படித்ததுமே சிரித்துவிட்டேன்.

என்ன செய்வது ...? கறிக்கஞ்சிக்கு ஏங்கியது ஒரு காலம். அதில் ஒரு சிறிய துண்டு இறைச்சி கிடந்தாலும் குடிப்பவன் அதிருஷ்டசாலி .எனது சிட்டியில் பெரிய கறித்துண்டு கிடந்துச்சு ...என்று சொல்லி ..சொல்லியே ..பெருமைப்பட்டதும் ஒரு காலம். இப்போ ப்ராய்லர் கோழி இறைச்சி அறிமுகமான பிறகு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

முருங்கைக்கீரையும் கிடைக்கவில்லை. சட்னியும் இல்லாது ஒழிந்தது.

பள்ளிவாசல்களிலேயே பப்சும், ரோலும் கஞ்சிக்கு சைடு -டிஷ் ஆக கொடுக்கும் இந்தக் காலத்தில் வெள்ளைக் கஞ்சிக்கு எங்கும் சாலிஹைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவை முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [02 July 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35732

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரை பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையைக் கொண்டும் ,எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல் ரஹ்மான் ஜித்தாவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [19 June 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 35508

அருமைச் சகோதரர் அவர்களின் மறைவு மனம் கலங்கச் செய்கிறது. முன்பு ஒருமுறை ரியாத் பாண்டா சூப்பர் மார்க்கெட்டில் அவரோடு உரையாடியது ஞாபகம் வருகிறது.

அதிர்ந்து கூட பேசாத இனிய நண்பர்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அன்னாரது குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையைக் கொண்டு உபதேசம் செய்வோம் ...

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
39
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved