Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:44:55 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSalih
PlaceChennai
Approved Comments34
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்க புகைப்படம் / கைரேகை / விழித்திரை பதிவு காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ...
posted by Salih (Chennai) [10 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27890

வெளிநாடு வாழ் இந்தியர்கள் - வெளிநாடுகளில் இருந்துகொண்டு ஆதார் அட்டை பெற தற்போது வழியில்லை. இதற்கு காரணம் - ஆதார் எண் வழங்கும் பணியில் முக்கியமானது, கைரேகை பதிவது மற்றும் விழித்திரை பதிவது. இப்பணிகளை நேரடியாகதான் செய்யமுடியும். ஆகவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் விடுமுறையில் நாட்டுக்கு வரும்போது ஆதார் எண் பெறலாம்.

ஆதார் அட்டை வழங்க அங்கீகரிக்கப்பட்ட சில முகாம்கள் நாடு முழுவதும் உள்ளன. அதன் முகவரிகள் - http://www.uidai.gov.in/ இணையதளத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் சில வங்கிகள் மூலமும், சில தபால் நிலையங்கள் மூலமும் சில காலங்கள் ஆதார் எண்கள் வழங்கப்பட்டன. தற்போது அவை நடப்பதாக தெரியவில்லை.

NPR திட்டம் குறித்தும், ஆதார் திட்டம் குறித்தும் சில குழப்பங்கள் நிலவுவதாக தெரிகிறது. இரண்டும் வெவ்வேறு திட்டங்கள்.

NPR திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது. ஆதார் திட்டத்தை மத்திய திட்ட குழு மேற்பார்வையிடுகிறது.

NPR திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவர் குறித்த தகவல்களை - தேசிய பாதுகாப்பு நோக்கில் - சேகரிப்பது. அதனால் இத்திட்டம் முதலாவதாக கடலோர மாநிலங்களில் அமல் செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரும் இத்திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர் பதிவு செய்யப்பட மாட்டார். ஆதார் திட்டத்தின் நோக்கம் ஒவ்வொருவருக்கும் நம்பத்தகுந்த அடையாளம் - 12 எண்கள் - மூலம் வழங்குவது. ஆதார் அட்டை விண்ணப்பதாரர் இந்தியராக இருக்கலாம், வெளிநாட்டவராக இருக்கலாம், மேலும் வெளிநாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம்.

ஆதார் எண் மூலம் வங்கி கணக்குகள் போன்ற சேவைகளை பெற பல அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டிய அவசியம் நீங்கும். மேலும் அரசின் உதவி திட்டங்கள் - ஆதார் எண்ணுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். இது போல் பல அரசு திட்டங்கள் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

NPR திட்டம் மூலம் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டிலும் ஆதார் எண்தான் இருக்கும்.

காயல்பட்டினத்தில் தற்போது நடைபெறவுள்ள முகாம் - ஆதார் எண் வழங்க பிரத்தியேக முகாம் அல்ல. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான முகாம். இரு திட்டத்திலும் (NPR, ஆதார்) ஏறத்தாழ ஒரே தகவல்கள் சேகரிக்கப்படுவதால் - NPR முகாமில் பெறப்படும் தகவலை - அரசு, ஆதார் எண் வழங்கும் அமைப்போடு பகிர்ந்துக்கொண்டு, சரிப்பார்தப்பின், ஒவ்வொருக்கும் ஆதார் எண்ணும் வழங்கிகிறது.

நேரடியாக ஆதார் எண் பெறுவதை விட - இவ்வழி மூலம் ஆதார் எண் பெற காலம் அதிகம் எடுக்கும்.

NPR பதிவுக்கு குறைந்த வயது ஐந்தாகும். இதற்க்கு காரணம் - ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கைரேகை பதிவது கடினம். ஆனால் ஆதார் எண் வழங்க வயது வரம்பு இல்லை. மூன்று வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரரின் கைரேகை/விழிரேகைக்கு பதிலாக பெற்றோர் ஒருவரின் ரேகை எடுத்துக்கொள்ளப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் இவ்வாண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற இரு மாணவர்கள் காயல்பட்டினம் வருகின்றனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salih (Chennai) [19 May 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27463

கல்வியில் தேர்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க பல அம்சங்கள் கூடி அமையவேண்டும். போதிய வசதிகள் கொண்ட நல்ல பள்ளிக்கூடம், திறமைவாய்ந்த ஆசிரியர்கள், ஆர்வம் கொண்ட மாணவர்கள், அரவணைத்து வழிநடத்தும் பெற்றோர்கள், ஊக்குவிக்கும் பொது நல அமைப்புகள். இவை அனைத்தும் கூடி வரும் போதே - ஒரு சமுதாயம், ஒட்டு மொத்தமாக, கல்வியில் வெற்றிகளை காணும். மேலே குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஓர் அம்சம்தான் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி. இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் முழு மாற்றத்தையும் கொண்டு வரமுடியும் என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளர்கள் நினைக்கவும் இல்லை, பிறரிடம் அவ்வாறு எதிர்ப்பார்ப்பு இருப்பின் அது தவறு.

மாநிலத்தின் முதல் மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களும் நாமக்கல் - மாதிரி பள்ளிக்கூடங்களை சார்ந்தவர்களும் அல்ல. இவ்வாண்டு - மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் - மேலூர், செங்கல்பட்டு, ஆவடி, பொன்னேரி போன்ற ஊர்களில் இருந்தும் வந்துள்ளனர். முதல் இடம் பெற்ற ஜெயசூரியா நாமக்கல்லில் படித்தாலும், தினசரி வீட்டில் இருந்து சென்று படித்தவர்.

காயல்பட்டினத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் - நாமக்கல்லில் படிக்காத (எந்த பள்ளிக்கூடத்திலும் ஹாஸ்டலில் தங்கி படிக்காத) பல மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் தினசரி விளையாட்டுக்களில் பங்கேற்றவர்களும் உண்டு. பொழுதுபோக்கிற்கும் சரி, படிப்பிற்கும் சரி போதிய அளவில் நேரங்களை ஒதுக்கியவர்களும் உண்டு.

கடந்த 7 ஆண்டுகளில் மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெற்ற ஏறத்தாழ 50 மாணவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ToppersTalk.com இணையதளத்தில் உள்ளது. அவைகளை படித்தால், பல விதமான மாணவர்களை காணலாம். ஏழை, பணக்காரன், எப்போதும் படிப்பவன், பொழுதுபோக்குக்கும் நேரம் ஒதுக்குபவன் - இவ்வாறு பல விதங்கள்.

சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியின் நோக்கம் - மாணவர்களை ஊக்குவிப்பது தான், ஒரு குறிப்பிட்ட படிப்பு முறையை பரிந்துரைப்பது அல்ல.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலத்தின் முதல் மாணவருக்கு பரிசாக - கடந்த சில ஆண்டுகளாக - ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. அது தவிர - அவர் பெற்றோர்/உறவினருடன் வந்து செல்ல AC ரயில் டிக்கெட், தங்கும் செலவு ஆகியவையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பொறுப்பு ஏற்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கப்படி - காயல் மாணவர் சாதனை புரியும்போது மட்டுமே 75,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாநிலத்தின் முதல் மாணவருக்கு - இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள்கள் எடுத்துக்கூறப்பட்டே, அழைத்தும் வரப்படுகிறார். நகரில் சாதனை மதிப்பெண்ணை பெறும் மாணவருக்கு வழங்கப்படும் 75,000 ரூபாய் ரொக்கப்பரிசு, விருந்தினருக்கு முற்கூட்டியே தெரிவிக்கப்பட்டே அழைப்பு விடப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தூத்துக்குடி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைய உள்ள பாதையின் அதிகாரப்பூர்வ வரைப்படம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Salih (Chennai) [09 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21980

காயல்பட்டின மக்கள் கிழக்கு கடற்கரை சாலை குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது 3 அம்சங்களை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்:

1. காயல்பட்டினம் வழியாக இச்சாலை அமைந்திட தொழில்நுட்ப சாத்திய கூறுகள்

2. இச்சாலை காயல்பட்டினம் வழியாக அமைந்திட அரசின் சம்மதம் கிடைக்க வாய்ப்பு

3. இச்சாலை காயல்பட்டினம் வழியாக அமைவதினால் நன்மை - தீமைகள்

1. காயல்பட்டினம் வழியாக இச்சாலை அமைந்திட தொழில்நுட்ப சாத்திய கூறுகள்

கிழக்கு கடற்கரை சாலை - வடக்கில் உள்ள தூத்துக்குடியில் இருந்து தெற்கு நோக்கி வருகிறது. அச்சாலை - காயல்பட்டினத்திற்கு அருகே வர மூன்று வழிகளே உள்ளன. ஒன்று - கடலோரம். CRZ விதிகள் இதற்கு அனுமதி வழங்காது. அப்படியே வழங்கினாலும் - நகரில் கடலோர தெருக்கள் பாதிக்கப்படும். இரண்டாம் வழி - DCW தொழிற்சாலை வளாகம் வழியாக. இதற்கு DCW சம்மதம் தெரிவித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். கடலில் இருந்து மேற்காக சுமார் 5 கிலோ மீட்டர் வரை அமைந்துள்ள DCW தொழிற்சாலை - தன் வளாகத்திற்குள் இச்சாலை அமைந்திட எவ்வாறு சம்மதிக்கும் என்று தெரியவில்லை. அவ்வாறு அச்சாலை அமைந்தால் அச்சாலைக்கு கிழக்கில் DCW தொழிற்சாலையின் ஒரு பகுதியும், மேற்கில் மற்றொரு பகுதியும் அமையும்! அவ்வாறு அச்சாலை அமைந்தாலும் - இச்சாலை, காயல்பட்டினத்தில் பைபாஸ் சாலைக்கு குறுக்கு பாலம் அமைத்தே தொடரமுடியும். மற்றொரு வழி - ஆத்தூரில் இருந்து தொடரும் இந்த சாலை - தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி வழியாக, அல்லது காயல்பட்டினம் பைபாஸ் சாலை வழியாக தொடர வேண்டும். பை பாஸ் சாலையில் இருந்து தொடரும் போது அங்கு ஒரு மேம்பாலம் அமைத்து, மீண்டும் எல்.எப் சாலையை தொட வேண்டி இருக்கும். அங்கும் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டி இருக்கும்.

மேலும் அதிவேக பயணத்திற்காக அமைக்கப்படும் இந்நெடுஞ்சாலை - குறுகலான சாலை கொண்ட ஆத்தூர் பஜார் வழியாக - எவ்வாறு பல கட்டிடங்கல் இடிப்படாமல், இரு வழிப்பாதையாக தொடர முடியும் என்பது கேள்விக்குறி.

2. இச்சாலை காயல்பட்டினம் வழியாக அமைந்திட அரசின் சம்மதம் கிடைக்க வாய்ப்பு

தமிழக அரசின் தற்போதைய திட்டப்படி - ஆத்தூரில் இருந்து இச்சாலை மேற்கு நோக்கி பிரிகிறது. அவ்வாறு பிரிந்து - ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் ஆகிய ஊர்களை தவிர்த்து - திருசெந்தூரின் தென் மேற்கு பகுதியை அடைகிறது. கிழக்கு நோக்கி அமைந்திருந்தால் DCW தொழிற்சாலை வளாக பிரச்சனை வந்திருக்கும்.

ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரப்பாண்டியப்பட்டினம், திருச்செந்தூர் நகரங்களுக்கு வழியாக இப்பாதை அமையாமல் இருப்பதற்கு காரணம் - முக்கிய சாலைகளில் நெருக்கடியான கட்டிட அமைப்பும், குறுகிய சாலைகளும். ஏற்கானவே இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலை உள்ளது. புதிதாக அமைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலை அதி வேக பயணத்திற்கே. ஆகவே - மக்கள் நெரிச்சல் பகுதிகளை தவிர்த்தே இப்பாதை தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருவாதாக தெரிகிறது. இவ்வேளையில் அரசின் திட்டத்தினை மாத்திட - நியாயமான காரணங்களை நாம் கூற வேண்டி இருக்கும்.

3. இச்சாலை காயல்பட்டினம் வழியாக அமைவதினால் நன்மை - தீமைகள்

இச்சாலை அமைவதினால் உள்ள நன்மைகள் - தூத்துக்குடி மார்க்கத்தில் பயணம் செய்வோர் சில நிமிடங்கள் மிச்சப்படுத்தலாம். அவ்வாறு - நாகர்கோயில் மார்க்கத்தில் செல்வோர் சில நிமிடங்கள் மிச்சப்படுத்தலாம்.

புதிய தொழிற்சாலைகள் ஊருக்கு அருகில் ஏற்படுத்தப்படலாம்.

இச்சாலையை ஒட்டி ரியல் எஸ்டேட் தொழில் மேம்படும். புதிய காலனிகள் உருவாகலாம்.

தீமை என்றால் - வாகனங்களில் அதிகரிப்பால் மாசு உயர்வு, தொழிற்சாலை பொருட்கள் ஏற்றிக்கொண்டு அதி வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கிக்கொண்டால், அதனால் அருகில் உள்ள ஊர்களுக்கு ஆபத்து, கடற்கரை சாலை என்பதால் - சுற்றுலா சம்மந்தப்பட்ட விசயங்களால் (பொழுது போக்கு துறை வளர்ச்சி, ஹோட்டல்கள் அறிமுகம்) - கலாசார மாற்றங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட...
posted by Salih (Chennai) [09 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18762

அரசு வழங்கும் மானியம் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவரை அடைவதில்லை என்பது சரியான வாதமாக தெரியவில்லை. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள கட்டணத்தை ஹஜ் குழு நிர்ணயம் செய்கிறது. அக்கட்டணத்தில் - மக்காவில் தங்குவதற்கான செலவு, மதினாவில் தங்குவதற்கான செலவு, சவுதி நிறுவனங்கள் அரபாத் போன்ற இடங்களில் தங்க/பயணிக்க கேட்கும் தொகை ஆகியவை - அடங்கும். அத்தொகைகள் - சவுதி நிறுவனங்கள் என்ன தொகையை கேட்க்கின்றனவோ, அதனையே - ஹஜ் குழு - பயணியரிடம் இருந்து வாங்கும். ஆனால் விமான டிக்கெட் விசயத்தில் அப்படி அல்ல.

விமான டிக்கெட்டை பொறுத்த வரை - இந்திய ஹஜ் குழு ஒவ்வொரு பயணியரிடம் இருந்து ரூபாய் 12,000 மட்டுமே வாங்குகிறது. அதாவது சென்னையில் இருந்து ஜித்தாஹ் செல்ல, மீண்டும் ஜித்தாவில் இருந்து சென்னை திரும்ப. ஆனால் விமானப்பயணத்திற்கு இவ்வளவுதான் செலவாகுமா?

இது எவ்வாறு சமாளிக்கப்படுகிறது என்றால் - விமான சேவை பொறுப்பை ஏர் இந்தியா நிறுவனம் பார்த்துக்கொள்கிறது. அது ஒவ்வொரு டிக்கெட் விலையை சுமார் 35,000 என நிர்ணயிக்கிறது. இந்திய ஹஜ் குழு - தான் பயணியரிடம் இருந்து பெற்ற 12,000 ரூபாயை டிக்கெட் வகைக்கு ஏர் இந்தியாவிற்கு கொடுக்கிறது. மீதி ரூபாயை - பயணியர் சார்பாக அரசாங்கம் - ஏர் இந்தியாவுக்கு வழங்குகிறது. இது தான் மானியம்.

35,000 சரியான தொகையா என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. 100,000 பயணியருக்கு மேல் ஏற்றிச்செல்ல வாய்ப்பிருக்க - ஏர் இந்தியாவுக்கு நல்ல லாபம் தானே என்ற வாதம் உள்ளது. உலகளவிலான டெண்டர் விட்டால் இதை விட குறைவான தொகைக்கு பயணியரை ஏற்றிச்செல்லலாம் என்ற வாதமும் உண்டு. இதில் ஓர் அளவு உண்மை இருக்கலாம். இருப்பினும் - டிக்கெட் விலை - கண்டிப்பாக 12,000 ரூபாய்க்கு கூடுதலாக தான் இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் - சென்னையில் இருந்து ஜித்தாஹ் செல்லும் விமானம், ஜித்தாவில் இருந்து திரும்பும் போது காலியாக தான் திரும்பும். ஏன் எனில் இது ஒரு சார்டர்ட் விமானம். அது போல - ஹஜ்ஜுக்கு பிறகு பயணியரை திரும்ப கொண்டு வரும்போதும், காலியாக தான் ஜித்தாஹ் சென்றடையும்.

ஆகவே - அனைவரும் பொதுவாக சென்னை - ஜித்தாஹ் மார்க்கத்தில் - டிக்கெட் வகைக்கு செலவு செய்யும் தொகையோடு ஹஜ் குழு மூலம் மேற்கொள்ளும் பயணத்திற்கு ஆகும் டிக்கெட் செலவோடு சமமாக பார்க்கக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசு நூலக கட்டிட விரிவாக்கத்திற்கென தனிக்குழு நிறுவி கலந்தாலோசனை! பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்க முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரசு நூலக கட்டிட விரிவாக்...
posted by Salih (Chennai) [18 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18364

சலீம் காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மக்கள் தாங்கள் விரும்பும் சமூக சொத்துகளை (PUBLIC ASSETS) விரைவாக உருவாக்க ஒரு திட்டமே அரசுடைய தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME). இதற்கு முன்னர் இது நமக்கு நாமே திட்டம் என அழைக்கப்பட்டது. தமிழக அரசு - இதற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் - சில சமூக சொத்துக்களை - மக்களின் பங்களிப்புடன் - விரைவாக உருவாக்கலாம். குறைந்தது மூன்றில் ஒரு பங்கு அரசு மக்களிடம் எதிர்பார்க்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் நிதி (MPLADS)/சட்டசபை உறுப்பினர் நிதி (MLALADS) ஆகியவை மூலம் நம் நகரில் சில திட்டங்கள் நிறைவேறி உள்ளது. உதாரணமாக துளிர் பள்ளிக்கூட சாலைகள். இருப்பினும் - சட்டசபை/பாராளுமன்ற தொகுதிகளில் காயல்பட்டினம் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் - நமது எம்.எல்.ஏ மற்றும் எம்.பீ. களிடம் இருந்து நாம் - நகர திட்டங்களுக்கு - நிதி ஒதுக்கீடு கேட்கலாம்.

இருப்பினும் - ஒரு திட்ட நிதியை (உதாரணமாக எம்.பி. நிதி) மற்றொரு திட்ட நிதி (உதாரணமாக தன்னிறைவு திட்டம்) உடன் இணைக்கமுடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கிழக்கு கடற்கரை சாலை காயல்பட்டினம் வழியே அமைக்கப்பட வேண்டும்! நகர தேமுதிக வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கிழக்கு கடற்கரை சாலை காயல...
posted by Salih (Chennai) [30 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17970

கிழக்கு கடற்க்கரைச் சாலை காயல்பட்டினம் வழியாக அமையாவிட்டால் நாம் ஆறுமுகநேரி சென்று பேரூந்து ஏற வேண்டி இருக்கும் எனக்கூறுவது சரியென தெரியவில்லை. கிழக்கு கடற்க்கரைச் சாலை என்பது நெடுஞ்சாலை (Highway). அது தாண்டி செல்லும் ஊர்களில் இருந்து - அதனுடன் இணைய - இணைப்புச் சாலைகள் வசதி கண்டிப்பாக இருக்கும்.

கிழக்கு கடற்க்கரைச் சாலை காயல்பட்டினம் வழியாக அமைந்தால் நன்மைகள் சில உண்டு. இருப்பினும் சில ஆபத்துக்களும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் சாலை என்பதால் - இப்பாதையில் லாரி போன்ற பெரிய வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் அதி வேக பாதை என்பதால் விபத்துக்களுக்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் - வாகனப்புகை போன்ற பிரச்சனைகளும் நம் நகர் எல்லைக்குள் அதிகரிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலை விரிவாக்கத்தின் விளைவுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்! CFFC கூட்டியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW ஆலை விரிவாக்கத்தின் வ...
posted by Salih (Chennai) [10 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15811

நகர்மன்ற உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மரங்கள் நடுவதால் - CO2 போன்ற நச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால் DCW தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் புற்று நோய் உண்டாக்கக்கூடிய தன்மை கொண்ட VCM போன்ற நச்சுக்களில் இருந்து மரங்கள் நடுவதால் எந்த பயனும் இல்லை.

மேலும் - ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் DCW தொழிற்சாலை - கடந்த ஆண்டு 50 லட்ச ரூபாய் அளவு சமூக சேவை செய்ததாக - நவம்பர் 29 அன்று நடந்த மக்கள் கருத்தாய்வு கூட்டத்தில் தெரிவித்தது.

காயல்பட்டினத்தில் DCW நிறுவனத்தை - சமூக சேவை என்ற பெயரில் - வருடத்திற்கு ஒரு மருத்துவ முகாம், சில நூறு மரக்கன்றுகள், விளையாட்டு போட்டிகளுக்கு சில ஆயிரம் ரூபாய்க்கள் - செலவிட நாம் வைத்தால், தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் பொறுப்பாக தாங்கள் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளதாக DCW விளம்பரம் செய்துகொள்ளும்.

அவர்களுக்கு அதில் லாபம் உண்டு. நமக்கு பெரிய அளவில் ஒன்றும் இல்லை. அவர்கள் செய்யும் சில காரியங்களை (மருத்துவ முகாம்கள், மரக்கன்றுகள் ...) நம்மால் செய்யமுடியாதா?

சட்டப்படி அவர்கள் கட்டவேண்டிய - Professional Tax யை சரியாக கட்டுகிறார்களா? அதனை நாம் கண்காணிக்கவேண்டும்.

சட்டப்படி அவர்கள் கட்டவேண்டிய - Property Tax யை சரியாக கட்டுகிறார்களா? அதனை நாம் கண்காணிக்கவேண்டும்.

சட்டப்படி அவர்கள் கட்டவேண்டிய - Vacant Land Tax யை சரியாக கட்டுகிறார்களா? அதனை நாம் கண்காணிக்கவேண்டும்.

அதன் மூலம் நம் நகராட்சிக்கு கிடைக்கும் வரிகள், நமது உரிமை. அதனை தவிர்த்து - சமூக சேவை என்ற பெயரில் அவர்கள் நடத்தும் நாடகத்தில் - நாம் ஏன் கதாபாத்திரங்களாக ஆக வேண்டும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Salih (Chennai) [30 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12554

[Reply to Comment Reference Number: 12551]

2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் விதிமுறைகள் அடிப்படையில் - சமன் நிலையில் குலுக்கல் முறை அனுஷ்டிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இம்முறை நகர்மன்ற தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் - அவருக்கும் - துணைத் தலைவர் மற்றும் இதர தேர்தல்களில் - வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Salih (Chennai) [30 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12510

துணைத் தலைவருக்கான வாக்கெடுப்பில் நகர்மன்ற தலைவி வாக்களித்தது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நகர்மன்ற தலைவிக்கான வாக்குரிமை அரசினால் வழங்கப்பட்டது. அதனை ரகசியமான முறையில் அவர் துவக்கத்திலேயே பயன்படுத்தி உள்ளார்.

நகர்மன்ற தலைவி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் - இரு வேட்பாளர்களும் தலா 9 வாக்குகள் பெற்றிருந்தால் - சம நிலை ஏற்பட்டிருக்கும். அவ்வேளையில் நகர்மன்ற தலைவியின் வாக்கு (casting vote/tie breaker) தேவைப்பட்டிருக்கும். அச்சூழலில் அவர் வாக்களித்திருந்தால் - அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவசியமற்ற விமர்சனங்கள் வந்திருக்கும். ரகசியமான முறையில் துவக்கத்திலேயே வாக்களித்து - விமர்சனங்களை நகர்மன்ற தலைவி தவிர்த்துள்ளார் என்றே தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாக்குகள் விபரம்
posted by Salih (Chennai) [23 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11892

ஆபிதா அவர்களின் வெற்றிக்கு புறநகர் வாக்குகள் முக்கிய காரணம் என்ற கருத்து சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சகோதரர் செய்யத் அஹ்மத் (ரியாத்) - வாக்குகள் விபரம் கொண்டு - இக்கருத்தினை பதிவு செய்துள்ளார். வாக்குகள் விழுந்துள்ள விபரம்படி அது சரியான வாதமாக தெரியவில்லை.

நமதூர் வார்டுகளை ஏறத்தாழ 100 சதவீதம் இஸ்லாமியர் வார்டுகள் என்றும், 100 சதவீதம் மாற்று சமுதாய வார்டுகள் என்றும், இரண்டு சமுதாயமும் கலந்த வார்டுகள் என்று பிரித்து பார்த்தால் கீழ்க்காணும் விபரங்கள் கிடைக்கிறது.

(1) ஏறத்தாழ 100 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் வார்டுகள்

இந்த பிரிவில் 10 வார்டுகள் அடங்கும்: வார்ட் எண்கள் 2,3,4,5,6,9,10,11,16,17

இதில் ஆபிதா அவர்கள் பெற்ற வாக்கு 3755; மிஸ்ரியா அவர்கள் பெற்ற வாக்கு 3568. ரூத்தம்மல் அவர்கள் பெற்ற வாக்கு 42. இதில் ஆபிதா அவர்களே பெரும்வாரியான வாக்குகள் பெற்றுள்ளார்

(2) ஏறத்தாழ 100 சதவீதம் மாற்று சமுதாயத்தினர் வாழும் வார்டுகள்

இந்த பிரிவில் 2 வார்டுகள் அடங்கும்: வார்ட் எண்கள் 12, 14

இதில் ஆபிதா அவர்கள் பெற்ற வாக்கு 1757; மிஸ்ரியா அவர்கள் பெற்ற வாக்கு 225. ரூத்தம்மல் அவர்கள் பெற்ற வாக்கு 670. இதிலும் ஆபிதா அவர்களே பெரும்வாரியான வாக்குகள் பெற்றுள்ளார்

(3) இரண்டு சமுதாயமும் கலந்து வாழும் வார்டுகள்

இந்த பிரிவில் 6 வார்டுகள் அடங்கும்: வார்ட் எண்கள் 1, 7, 8, 13, 15, 18

ஒவ்வொரு வார்டிலும் வெவ்வேறு சதவீதத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்துள்ளனர். உதாரணமாக வார்ட் 1 இல் - சுமார் 60 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர். வார்ட் 7 இல் - சுமார் 70 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர். வார்ட் 8 இல் - சுமார் 90 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர். வார்ட் 18 இல் - சுமார் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர்.

சராசரியாக - இந்த 6 வார்டுகளிலும் பதிவான வாக்குகளில் 60 சதவீதம் இஸ்லாமியர்கள் வாக்கு என்று எடுத்துக்கொண்டாலும், பதிவான சுமார் 7000 வாக்குகளில், 4200 வாக்குகள் இஸ்லாமியர் வாக்குகள் ஆகும். இந்த 6 வார்டுகளில் மிஸ்ரியா அவர்கள் பெற்ற வாக்கு 1728. இவைகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் வாக்கு என்று எடுத்துக்கொண்டாலும் ஆபிதா அவர்கள் - குறைந்தது இந்த 6 வார்டுகளில் 2500 இஸ்லாமியர் வாக்குகள் பெற்றிருப்பார். ஆபிதா அவர்கள் இந்த 6 வார்டுகளில் பெற்ற மொத்த வாக்கு 4316. இந்த 6 வார்டுகளிலும் ரூத்தம்மால் அவர்கள் பெற்ற வாக்கு 692. இதிலும் ஆபிதா அவர்களே பெரும்வாரியான வாக்குகள் பெற்றுள்ளார்

ஆகவே - ஆபிதா அவர்கள் இஸ்லாமியர் வாக்குகளிலும் பெரும்வாரியான வாக்குகள் பெற்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. வெற்றி வாக்கு வித்தியாசம் - 4000 வாக்குகளுக்கும் கூடுதலாக இருந்தததிற்கு காரணம் - மாற்று சமுதாயத்தினரின் பெருவாரியான வாக்குகள் என்று மட்டும் கூறலாம்.

Administrator: Corrections made


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved