Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:49:25 PM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10831
#KOTW10831
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 19, 2013
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் இவ்வாண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற இரு மாணவர்கள் காயல்பட்டினம் வருகின்றனர்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3314 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்வி சங்கம் ஆகியவை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் - காயல்பட்டினத்தில் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை (MEET THE STATE TOPPER) நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் - பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் - மாநில அளவில் முதல் இடம் பெறும் மாணவர் பங்கேற்று, காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் இருந்து நடப்பு கல்வியாண்டில் அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் நிறைவுற்ற கல்வியாண்டில், அரசு பொது தேர்வுகளில், காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் பயின்று நகரளவில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

தொடர்ந்து 8வது ஆண்டாக - ஜூன் மாதம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் (1200 க்கு) 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். ஜெயசூரியா மற்றும் அதே மதிப்பெண்ணை பெற்று மாநிலத்தின் முதல் இடம் பெற்ற கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.அபினேஷ் ஆகியோரும் - காயல்பட்டினம் வருகை தரவுள்ளனர்.

சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் வெளியிடப்படும்.

மாநில முதல் மாணவர் எஸ்.ஜெயசூர்யா ...



இடது புறத்திலிருந்து இரண்டாவதாக உள்ளவர் மாணவர் எஸ்.ஜெயசூரியா. திருச்செங்கோட்டில் அவர் குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட படம். இவரின் தந்தை 9 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு செயல்புரிய முடியாமல் உள்ளார். மாணவர் ஜெயசூரியா, MBBS பயின்று, அதன் பின்னர் MS (Ortho) பயில திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில முதல் மாணவர் எஸ். அபினேஷ் ...



திண்டுக்கல்லில் அவர் குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட படம். இவரின் தந்தை வங்கியில் பணிபுரிகிறார். இவரின் தாயார் பள்ளி ஆசிரியை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Siqhiao) [19 May 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 27449

ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்ச்சிதான் . முதல் மாணவர் என்ற அந்த வெளியூர்காரர் வருவார் . ஆலோசனைகள் சொல்வார் . ஆனால் நமக்குமட்டும் , " முதல் மாணவர் " என்ற கனவு எட்டாக்கனிதான் .

நமதூருக்கு வரும் அந்த " முதல் மாணவர் " இப்படி பேசுவார்,

"நான் இரண்டு வருடமாக TV பார்கவில்லை . எங்கள் வீட்டில் TV யும் இல்லை . குடும்ப விழாக்களுக்கும் , பொது நிகழ்சிகள் , விழாக்களுக்கு நாங்கள் செல்வதும் இல்லை , எங்கள் பெற்றோர்கள் எங்களை அழைத்து செல்வதும் இல்லை . எங்கள் வீட்டிலும் , பள்ளியிலும் நாங்கள் படிப்பதர்கேற்ற அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தார்கள் . பெற்றோர்கள் எங்களது படிப்பிற்காக தங்களது பெரும்பாலான நேரங்களை எங்களுக்காக ஒதுக்கினார்கள் . இவ்வாறான சூழ்நிலையில் படித்து , நாங்கள் முதல் மாணவராக வந்திருக்கிறோம் என்பார்கள் "

நமதூரில் இவையெல்லாம் சாத்தியமா ?

சில சமயங்களில் , நமதூர் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் மாணவராக வருகிறார் . அந்த வகையில் நாம் சற்று ஆறுதலும் , சந்தோசமும் அடைய வேண்டியதுதான் . ஒருமுறை LK பள்ளி மாணவர் , இந்த முறை நமதூரின் கமலாவதி பள்ளி மாணவி .

"சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை " என்ற நிகழ்ச்சியை நடத்துவதைவிட , " சிந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை உருவாக்க " என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் , மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ahamed Mustafa (Kayalpatnam) [19 May 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27453

I agree with the above comment. Don't think such functions add much value to the students. Normally State toppers and that too from such schools in Namakkal are trained to mug up the whole book. They end up getting huge marks. They do not pose as good examples for the students to bring out their skills. marks are only to enter the so called Medical & Engineering colleges as the Indian curriculum is built on the more marks, the better colleges. So a students IQ or brilliance can't be judged by the amount of marks he/ she scores, instead on the overall Intelligence level in whatever field one's chooses to study & excel in that.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [19 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27457

vilak SMA சகோதரரின் கருத்துக்களோடு நானும் ஒருங்கிணைகிறேன்! நமது மாணாக்கள் முயன்றால் முடியாதது அல்ல!

12 வருடங்களாக நமது பள்ளி ஆசிரியர்கள் சொல்லாத ரகசியத்தையா நம்மாநில முதல் மாணவர் சொல்லப் போகிறார்!.

சிரமத்தோடு முயற்சியும்,சிந்தனையோடு செயலாற்றலும் இருந்தால் இமயமலை பாரம்கூட இலவம் பஞ்சுபோல் ஆகிவிடும்!

நம் மாணாக்கள் மனசு வைத்தால் மான்களை போல் துள்ளிப்பாய்ந்து முதல் நிலையில் மின்னலாம்,அப்படிப்பட்ட ஆற்றலும் அல்லாஹ்வின் அனுக்கிரகமும் அவர்களிடம் அண்டிக்கிடக்கறது, கிண்டி வெளியஎடுங்கள் எமதருமை மாணவ மணிகளே!

முதல் மாணவர்களுக்கு மரியாதைகலந்த வாழ்த்துக்கள் சொல்ல வரவழையுங்கள்! அது நமதூருக்கு பெருமை சேர்க்கும்,அதே நேரத்தில்,நம்மாநிலதின் முதல்மாணவனுக்கு ரூபாய் 500 ம், நமதூர் முதல் மாணவனுக்கு ரூபாய் 75,000 ம் அதே மேடையில் கொடுக்கப்படுகின்ற,அந்த பாகுபாடான, அடுத்தவர்கள் முகம்சுழித்து, மன வருடலடிக்கும் நிகழ்ச்சியை தயவு செய்து அந்த மேடையில் அரங்கேற்ற வேண்டாமென என் தாழ்மையான கருத்தாக கூறுகிறேன்!

என் கருத்தை கடுகளவேனும் ஏற்பதும், எடுத்தெறிவதும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களின் நடுநிலை கண்ணோட்டதைப் பொருத்தது!! அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!.

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [19 May 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27458

There are two types of audiences for programs like "Meet the Toppers"

1. The Kayal Students who attend the program, and interact with the toppers. At least some of them get inspired / motivated. Please remember this: The student audience is different every year.

2. Those who watch/read about these programs as News Item. We may get bored due to the repetitive nature of advices. But, Boring is the nature of most Good Things. The 10 Commandments remain the same, the Quranic advices remain the same, the formula for success remain the same (the means should / will vary according to times). Just because we are in 21st century, the success doesn't go to the lazy bums, or those cram the studies 2 weeks before the final exams..

I don't like the means adopted at Namakkal Schools for scoring high marks. Yet, we can learn a few things (like Systematic study) from them.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Cnash (Makkah) [19 May 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27459

முதலிடம் பெற்ற இந்த நாமக்கல் பண்ணை வளர்ப்பு மாணவர்களின் இன்றைய பேட்டி வேண்டுமானால், நன்றாக படித்தோம், ஆசிரியர்களின் ஊக்கம், கடின உழைப்பு இப்படி எழுது கொடுத்ததை போல் பேசலாம் ...ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அவர்களின் உண்மை நிலையையும் மனநிலையையும் ஒவ்வொரு தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஊடகங்கள் வழியாகவும் வெளிகொணர்ந்து அந்த இந்த சிறைச்சாலை பள்ளிக்கூடங்களின் நிலைமையை உலகிற்கு உணர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு மாணவர்களை சித்திரவதை செய்து படிக்கவைத்து முதல்வனாக வரும் வியாபார தந்திரம் நமக்கும் தேவையா இதை சொல்லி தர அவர்களை இங்கு வரவழைக்கத்தான் வேண்டுமா?

இந்த மனநிலை நமதூர் பெற்றோரிடமும் இன்று ஊடுருவி வருகிறது, நாமக்கல் பள்ளிகூடங்களுக்கு 2 வருட குத்தகைக்கு பிள்ளைகளை அனுப்பி டாக்டர் ஆக்க வேண்டும் என்ற நிலை இன்று பரவலாக நம் பெண்களிடம் பரவி வருகிறது.. இது போன்ற பள்ளிகூட முதலிட மாணவர்களை கொண்டுவருவது இதை மேலும் அதிகபடுத்தும், இவரை போல நாமும் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பது ஆரோக்கியமான நிலை , இது போன்ற பள்ளி கூடத்தில் சேர்த்து நம் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும் என்று நினைப்பது அபத்தத்தின் உச்ச கட்டம்,

இது போன்ற வியாபார கூடங்களை நடத்துவரின் நோக்கமும் அதுதான், அது நிறைவேற இந்நிகழ்ச்சி ஒரு துணையாக மாறி விட கூடாது என்பது ஆதங்கம்... இன்று அநேக வீடுகளின் இந்த நோய் ஆரம்பித்து விட்டது, LKG இல் இருந்தே தங்கள் பிள்ளைகளை சித்திரவதை செய்ய ஆரம்பித்து விட்டார்கள், புத்தகம், பள்ளிக்கூடம், டியுசன் என்று பிள்ளைகளுக்கு எந்த உடல் ரீதியாக பயிற்சிகளை மறந்து .மன ரீதியான நெருக்கடியை சிறு வயதில் இருந்து கொடுத்து வருவதை கண்டுகொண்டு வருகிறோம். மற்ற பிள்ளைகளை ஒப்பீடு செய்து தங்கள் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி பிள்ளைகள் படிக்கவில்லை என்று பெற்றோர்களும் குறிப்பாக தாய்மார்கள் , பெற்றோகளின் புத்தக திணிப்பால் குழந்தைகளும் மனரீதியான பதிப்புக்கு ஆளாகி வருகின்றனர் இந்த நிலை கலையபடவேண்டும்!! மனரீதியான எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்குவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Siqhiao) [19 May 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 27461

சகோதரர்கள் CNash , MM Ibrahim , Ahamed Mustafa ....

நீங்கள் எழுதியது சரிதான் . காரணம் , கல்லூரி சேர்கை விதிமுறைகள் , மதிப்பெண் எவ்வளவு என்றுதான் பார்கிறதே தவிர , மாணவனின் IQ எப்படியென்று பார்ப்பதில்லை . இதன் காரணமாகத்தான் , ஒருசில பள்ளிகளில் , அதிக மதிப்பெண் என்பதை மட்டுமே குறிக்கோளாய் வைத்து , அதை செய்தும் காட்டுகின்றனர் . இதை தவறென்று சொல்வதற்கில்லை . நமதூர் பள்ளிகளும் இதையே செய்கின்றனர் . ஆனால் நமதூர் மாணவர்களால் இந்த Mug up வேலையைக்கூட ஒழுங்காக செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் உள்ளது .

சகோதரர் ஆதம் சுல்தான் சொன்னதுபோல 5000 ரூபாய் , 75000 ரூபாய் உண்மையில் நெருடலான் விஷயம் . ஒரு சிறப்பு அழைப்பாலரை மேடையில் அமர வைத்து , அவரை அவமதிப்பதுபோல்தான் உள்ளது . மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம் என்று சொல்லி , இதுபோன்ற நிகழ்சிகளை நடத்துவது சரிதானா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நம் ஊர் மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் ஓர் நல்ல நிகழ்ச்சிதான்
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [19 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27462

சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை (MEET THE STATE TOPPER ) நிகழ்ச்சி நம் ஊர் மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் ஓர் நல்ல நிகழ்ச்சிதான். நம் மாணவர்கள் திறனை வளர்க்க உதவும் ஒரு கலந்துரையாடல். மற்றபடி மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றித்தான் நம் மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி போன்ற, அதைவிடவும் தரமான பள்ளிகள் நமது வட்டாரத்திலும் உள்ளன.குறிப்பாக சொல்லவேண்டுமெனில் பாளையம்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் பள்ளி , பெல் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் இதே தகுதி நிலையில் உள்ள பள்ளிகள்தான்.

வித்யா விகாஸ் பள்ளியில் படிக்கும் செலவைவிட இப்பள்ளிகளில் செலவு குறைவுதான். நம் பிள்ளைகளை போய் பார்த்து பராமரிப்பதும் சுலபம்தான். வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் செலவு மிக மிக அதிகம். அங்கு சென்று நம் பிள்ளைகளை போய் பார்த்து பராமரிப்பதும் மிகவும் சிரமமான விஷயம் .அம்மாதிரி பெரும் செலவு செய்து படிக்க வைக்கும் பொருளாதார நிலையில் நம் மக்களில் பெரும்பான்மையோர் இல்லை.

ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் பெல் மெட்ரிகுலேசன் பள்ளிகளைவிடவும் நமதூரில் உள்ள கமாலாவதி CBSE பள்ளி ஒன்றும் தரத்தில் குறைந்தது இல்லை. செலவும் குறைவு. ஹாஸ்டல் செலவும் கிடையாது. வீட்டிலிருந்தே சென்று வர முடியும். பிள்ளைகளை பராமரிப்பதும் சுலபம். நமது கலாசாரத்திலும் அதே சமயம் பிற கலாசார மாணவர்களிடமும் இணைந்து பழகும் மனப்பக்குவமும் நம் மாணவர்களுக்கு கிடைக்கும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Salih (Chennai) [19 May 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27463

கல்வியில் தேர்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க பல அம்சங்கள் கூடி அமையவேண்டும். போதிய வசதிகள் கொண்ட நல்ல பள்ளிக்கூடம், திறமைவாய்ந்த ஆசிரியர்கள், ஆர்வம் கொண்ட மாணவர்கள், அரவணைத்து வழிநடத்தும் பெற்றோர்கள், ஊக்குவிக்கும் பொது நல அமைப்புகள். இவை அனைத்தும் கூடி வரும் போதே - ஒரு சமுதாயம், ஒட்டு மொத்தமாக, கல்வியில் வெற்றிகளை காணும். மேலே குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஓர் அம்சம்தான் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி. இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் முழு மாற்றத்தையும் கொண்டு வரமுடியும் என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளர்கள் நினைக்கவும் இல்லை, பிறரிடம் அவ்வாறு எதிர்ப்பார்ப்பு இருப்பின் அது தவறு.

மாநிலத்தின் முதல் மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களும் நாமக்கல் - மாதிரி பள்ளிக்கூடங்களை சார்ந்தவர்களும் அல்ல. இவ்வாண்டு - மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் - மேலூர், செங்கல்பட்டு, ஆவடி, பொன்னேரி போன்ற ஊர்களில் இருந்தும் வந்துள்ளனர். முதல் இடம் பெற்ற ஜெயசூரியா நாமக்கல்லில் படித்தாலும், தினசரி வீட்டில் இருந்து சென்று படித்தவர்.

காயல்பட்டினத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் - நாமக்கல்லில் படிக்காத (எந்த பள்ளிக்கூடத்திலும் ஹாஸ்டலில் தங்கி படிக்காத) பல மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் தினசரி விளையாட்டுக்களில் பங்கேற்றவர்களும் உண்டு. பொழுதுபோக்கிற்கும் சரி, படிப்பிற்கும் சரி போதிய அளவில் நேரங்களை ஒதுக்கியவர்களும் உண்டு.

கடந்த 7 ஆண்டுகளில் மாநிலத்தின் முதல் மூன்று இடங்களை பெற்ற ஏறத்தாழ 50 மாணவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ToppersTalk.com இணையதளத்தில் உள்ளது. அவைகளை படித்தால், பல விதமான மாணவர்களை காணலாம். ஏழை, பணக்காரன், எப்போதும் படிப்பவன், பொழுதுபோக்குக்கும் நேரம் ஒதுக்குபவன் - இவ்வாறு பல விதங்கள்.

சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியின் நோக்கம் - மாணவர்களை ஊக்குவிப்பது தான், ஒரு குறிப்பிட்ட படிப்பு முறையை பரிந்துரைப்பது அல்ல.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலத்தின் முதல் மாணவருக்கு பரிசாக - கடந்த சில ஆண்டுகளாக - ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. அது தவிர - அவர் பெற்றோர்/உறவினருடன் வந்து செல்ல AC ரயில் டிக்கெட், தங்கும் செலவு ஆகியவையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பொறுப்பு ஏற்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கப்படி - காயல் மாணவர் சாதனை புரியும்போது மட்டுமே 75,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாநிலத்தின் முதல் மாணவருக்கு - இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள்கள் எடுத்துக்கூறப்பட்டே, அழைத்தும் வரப்படுகிறார். நகரில் சாதனை மதிப்பெண்ணை பெறும் மாணவருக்கு வழங்கப்படும் 75,000 ரூபாய் ரொக்கப்பரிசு, விருந்தினருக்கு முற்கூட்டியே தெரிவிக்கப்பட்டே அழைப்பு விடப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by BAZULHAMEED (DUBAI) [19 May 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27468

I hope Brother Salih's comments on the subject clarified the purpose of the program. I plead to all the community members not to discourage people who have dedicated themselves towards the development and progress of our community in various aspects. Sitting somewhere and posting messages are very easy, but to do physically something for the betterment of the community is not so easy!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. என்னத்த கண்ணையா....ஸ்டைல்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [19 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27469

இந் நிகழ்ச்சியில் நான் இரு முறை பங்கெடுத்துள்ளேன். நம் மாணவ கண்மணிகளுக்கு ஏற்படும் உற்சாகம், ஊக்கம், பெற்றோர்களின் சந்தேகம், கலந்துரையாடல் மூல பல்வேறு தெளிவுகள் கிடைக்கின்றன. கூட்டமும் அலை மோதும்.

நாமும் இது போன்று ஒரு நாள் மேடையில் மேன்மை படுத்தப்பட வேண்டும் என்ற ஆவல் நம் மாணவர்களுக்கு உந்துதலாக இருக்கும். இது போன்ற நுகழ்ச்சிகள் நடப்பதால்தான் இன்று நம்தூரின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. இதில் ஏன் நாம் வேண்டாத வெறுப்பாக சிலாகித்துக் கொள்ள வேண்டும்? நன்மையை நாடி செய்யும் சேவை இது என சந்தோஷப்படுவதுதானே முறை! அதை தவிர்த்து சங்கடப்படுவதில் யாருக்கு என்ன நட்டம்?

-ராபியா மணாளன்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. welcome
posted by syedahmed (GZ, China) [19 May 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 27470

We congratulate whole heartedly that the state toppers perfomed in peak level , and that such functions add much and more value to the students those who are dreaming at same level.

We must encourage these toppers and they are not trained to mug up the whole book, but they shows their efficiency with their IQ level, and did perform the grand success in the examinations.

It is sure that the students' IQ or brilliance can be judged by the amount of marks and this is the good examples for the students to bring out their skills, sincerity and sharp intelligence.

Mug up students never become state toppers and their ambition is only how to promote, and not eager to get any procurement. But, these IQ students entirely differ from them. IQ students knows the planning how to fetch the top most level in the theme of education from their cute brilliance performance

. They make the planning how to match the pros and cons solidly before they are facing the examination. Hello toppers, welcome to our kayalpatnam, and share your view of thoughts and put forth the advises to the current +2 students to make the way of success. Best wishes for yours bright future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by O.A.NAZEER AHMED (chennai;) [19 May 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27472

மாணவர்ஹளை ஊக்கபடுதவேண்டும் என்ற ஒரே காரணதித்கஹா மட்டுமே இந்த நிஹளச்சி தொடர்ந்து nadatha படுஹிராது.. அதனால் மாணவர்ஹளிடையே ஒரு ஊக்கமும் ஏற்பட்டு உள்ளது மறுக்கமுடியாது..

நமதூர் மாணவர் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதுதான் நமது nokkamaha இருப்பதால் அதிஹ தொஹை அறிவித்து இருப்பதிலும் நிச்சயம் தவறில்லை.. நல்ல நோக்கதிட்கஹா நடத்தப்படும் இம்மாதிரி நிஹல்சிஹளை நாம் மனதார பாராட்ட வேண்டும்.. அதுதான் நிஹல்சிஹளை நடத்துவோருக்கு நாம் கொடுக்கும் மரியதையஹா இருக்கும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved