Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:06:18 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8418
#KOTW8418
Increase Font Size Decrease Font Size
புதன், மே 9, 2012
ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை படிப்படியாக 10 ஆண்டுக்குள் நிறுத்தவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3760 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை படிப்படியாக குறைத்து முற்றிலும் நீக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை (மே 9) மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ரஞ்சனபிரகாஷ் தேசாய் ஆகியோரைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் கூறியதாவது:

2011-ம் ஆண்டு ரூ.685 கோடி ஹஜ் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. குரான் படி பார்த்தால் கூட மானியம் வழங்கப்படக் கூடாது. இந்தத் தொகையை முஸ்லிம்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியிருக்கலாம். இப்போது ஒரு ஹஜ் பயணிக்கு ரூ. 38 ஆயிரத்தை விமானப் பயணக் கட்டணமாக மத்திய அரசு தருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.25 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த 10 ஆண்டுக் காலத்துக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து முற்றிலும் நீக்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்த அமர்வு ஆணையிடுகிறது. இதற்கேற்றபடி இன்றிலிருந்தே மானியத் தொகையைக் குறைத்து 10 ஆண்டுகளுக்குள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு பாடுபட வேண்டும்.

ஹஜ் பயணத்துக்காக ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்கள் பயணத்துக்குப் பின்னாலிருக்கும் பொருளாதாரம் குறித்துத் தெரியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஹஜ் பயணிகளுடன் அரசுப் பிரதிநிதிகளை அனுப்புவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஹஜ் பெருநாளை முன்னிட்டு சவூதி அரேபியாவுடன் தங்கள் நல்லெண்ணத்தை காட்டும் இந்திய மக்களின் சிந்தனை பாராட்டுக்குரியது. ஆனால், அதேநேரத்தில் இத்தனை பேரை அங்கு அனுப்புவதன் மூலம் நோக்கம் நிறைவேறியதா என்பதைக் காணத் தவறி விட்டோம்.

எனவே, ஹஜ் நல்லெண்ண தூதுக் குழுவை அனுப்பும் வழக்கம் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபிய அரசுக்கு ஹஜ் நல்லெண்ணச் செய்தியைத் தெரிவிக்க ஒரு தலைவரையோ அல்லது துணைத் தலைவர் ஒருவரையோ அனுப்பினால் போதுமானது. ஆனால், இப்போது 27 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நபரே பல முறை நல்லெண்ண தூதுக் குழுவில் இடம்பெறுவதும் நிகழ்ந்துள்ளது.


இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தகவல்:
தினமணி

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்கு அரசு மானியத்தை எதிர்பார்க்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி - காயல்பட்டணம்.காம் - டிசம்பர் 8, 2006 இல், The Subsidy for Haj Pilgrimage என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டிருந்தது. அதனை காண இங்கு அழுத்தவும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18751

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குழப்பமாக உள்ளது.

நான் இதுபற்றி சிலநிமிடங்களுக்கு முன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அப்சல் பாய் அவர்களிடம் கேட்டேன். இது முற்றிலும் அரசில்யல் உள்நோக்கத்துடன் செய்யப்படுகிறது. ஹாஜிகள் எந்தவகையிலும் இந்த பணத்தை அனுபவிக்கவில்லை. முற்றிலும் ஏர் இந்தியாவுக்கு இந்த மானியம் அளிக்கப்படுகிறது. பலமுறை இது பற்றி தெளிவாக அறிக்கை விட்டிருக்கிறோம். எனவே இந்த மானியம் 10 வருஷம் என்ன இன்றைக்கே நிர்பாட்டினாலும் ஹாஜிகளுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

இது துவேஷத்தை ஏற்படுத்த இந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உச்ச நீதிமன்றத்திலும் அரசு தரப்பிலும் செய்யப்படும் சதியாக தெரிகிறது.எனவே நமதூரிலுள்ள இனைய தளங்கள் இதுபற்றி ஹஜ் கமிட்டியுடன் தொடர்புகொண்டு ஒரு விளக்கமான தலையங்கத்தை எழுதி, மக்கள் விழிப்புணர்ச்சி அடைய செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வசதியுள்ளவர்களுக்குத் தானே வாய்ப்பும் ,கடமையும்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [09 May 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18752

முன்னொரு காலத்தில் ஹஜ் யாத்திரைக்காக நம்மவர் பெரும்பாலானோர் மும்பையிலிருந்து கப்பலில் பயணித்து வந்தனர்.இதனால் கால தாமதம், கடல் நோய்,எனப் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் அரசாங்கம் ஜித்தாவுக்கு கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது.நடுத்தர மக்கள் விமானங்களில் அதிக தொகை கொடுத்து பயணிக்க இயலாமல் போகவே அரசாங்கம் டிக்கெட் வகைக்காக மானியம் வழங்கி ஓரளவுக்கு ஹாஜிகளின் சுமையைக் குறத்தது. இதுவே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது

இந் நிலையில் சங்பரிவார் மற்ரும் முஸ்லிம் விரோத அமைப்புகள் இந்து புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பலவகை போராட்டங்களில் குதித்தது. எது எப்படியோ? வசதி படைத்தவர்களுக்கும்,கடன் சுமை இல்லாதவர்களுக்கும், உடல் பலம் படைத்தவர்க்கும் தான் ஹஜ் கடமை! இப்பல்லாம் ஹஜ்,உம்ரா செல்வது தன் பெருமையை வெளிப்படுத்துவதற்காகவே எனத் தோன்றுகின்றது.

அரசு மானியத்தைக் குறைத்தலும், நிறுத்தினாலும் ஹஜ் யாத்திரைக்குச் செல்வோர்ரி எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவத்தில்லை. காரணம் ஹாஜிகள் ஏழையாக மாட்டார்கள் எனும் மெய்யான புனித வேதத்தின் வரிகள் ஒருபோதும் பொய்ப்பத்திலை!

-ஹிஜாஸ் மைந்தன். புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [09 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18754

இதில் விபரமறியாத நம்மவர்களே உயர் நீதி மன்றத்தோடு கைகோர்த்திருப்பது வியப்பாகவே உள்ளது. இப்படிதான் முன்பு சங்பரிவார் கூட்டம், மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவர்கள் கூட சென்று வர உதவியாக இருந்த கப்பல் போக்கு வரத்தை நிறுத்தியது.

மத சார்பற்ற நம் நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையே அனைவரும் அவரவர் உரிமைகளை அனுபவிப்பது தான். இங்கு மற்ற மதத்தவரின் புனித ஸ்தலங்களுக்கு எல்லாவிதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித கடமையை நிறைவேற்ற புனித மக்கா வரும் ஹாஜிகளுக்கு அரசாங்கத்துக்கு சொந்தமான போக்குவரத்தில் சில சௌகரியங்களை செய்கிறது. அவ்வளவுதான். மற்றபடி அணைத்து செலவும் ஹாஜி தன் சொந்த செலவிலேயே செய்கிறான். செலுத்துகிறான்.

இங்கு பல மாநிலங்களிலிருந்து கடை நிலை தொழிலாளி முதல் உயர் மட்ட முதலாளி வரை ஹஜ் கமிட்டியின் இந்த ஏற்பாட்டாலேயே ஒன்றாக பார்க்க முடிகிறது.

வேண்டுமானால் ஒரு முறை மட்டுமே கடமை, எனவே மறுமுறை இந்தியன் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்யாதவர்களுக்கு தான் முன்னுரிமை என சில கட்டுப்பாடுகளை மார்கத்திற்கு உட்பட்டு செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட...
posted by M.N Seyed Ahmed Buhari (Chennai(Mannady)) [09 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18756

அஸ்ஸலாமு அழைக்கும்..

இதில் ஒருவர் முஸ்லிம்களுக்கு சதகமாஹா கருத்து எழுதுகிறார்...
மற்ற ஒருவர் முஸ்லிம்களுக்கு பாதகமா கருத்து எழுதுகிறார்...
இதில் நமது நிலைப்பாடு என்ன?
தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட...
posted by Salih (Chennai) [09 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18762

அரசு வழங்கும் மானியம் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவரை அடைவதில்லை என்பது சரியான வாதமாக தெரியவில்லை. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள கட்டணத்தை ஹஜ் குழு நிர்ணயம் செய்கிறது. அக்கட்டணத்தில் - மக்காவில் தங்குவதற்கான செலவு, மதினாவில் தங்குவதற்கான செலவு, சவுதி நிறுவனங்கள் அரபாத் போன்ற இடங்களில் தங்க/பயணிக்க கேட்கும் தொகை ஆகியவை - அடங்கும். அத்தொகைகள் - சவுதி நிறுவனங்கள் என்ன தொகையை கேட்க்கின்றனவோ, அதனையே - ஹஜ் குழு - பயணியரிடம் இருந்து வாங்கும். ஆனால் விமான டிக்கெட் விசயத்தில் அப்படி அல்ல.

விமான டிக்கெட்டை பொறுத்த வரை - இந்திய ஹஜ் குழு ஒவ்வொரு பயணியரிடம் இருந்து ரூபாய் 12,000 மட்டுமே வாங்குகிறது. அதாவது சென்னையில் இருந்து ஜித்தாஹ் செல்ல, மீண்டும் ஜித்தாவில் இருந்து சென்னை திரும்ப. ஆனால் விமானப்பயணத்திற்கு இவ்வளவுதான் செலவாகுமா?

இது எவ்வாறு சமாளிக்கப்படுகிறது என்றால் - விமான சேவை பொறுப்பை ஏர் இந்தியா நிறுவனம் பார்த்துக்கொள்கிறது. அது ஒவ்வொரு டிக்கெட் விலையை சுமார் 35,000 என நிர்ணயிக்கிறது. இந்திய ஹஜ் குழு - தான் பயணியரிடம் இருந்து பெற்ற 12,000 ரூபாயை டிக்கெட் வகைக்கு ஏர் இந்தியாவிற்கு கொடுக்கிறது. மீதி ரூபாயை - பயணியர் சார்பாக அரசாங்கம் - ஏர் இந்தியாவுக்கு வழங்குகிறது. இது தான் மானியம்.

35,000 சரியான தொகையா என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. 100,000 பயணியருக்கு மேல் ஏற்றிச்செல்ல வாய்ப்பிருக்க - ஏர் இந்தியாவுக்கு நல்ல லாபம் தானே என்ற வாதம் உள்ளது. உலகளவிலான டெண்டர் விட்டால் இதை விட குறைவான தொகைக்கு பயணியரை ஏற்றிச்செல்லலாம் என்ற வாதமும் உண்டு. இதில் ஓர் அளவு உண்மை இருக்கலாம். இருப்பினும் - டிக்கெட் விலை - கண்டிப்பாக 12,000 ரூபாய்க்கு கூடுதலாக தான் இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் - சென்னையில் இருந்து ஜித்தாஹ் செல்லும் விமானம், ஜித்தாவில் இருந்து திரும்பும் போது காலியாக தான் திரும்பும். ஏன் எனில் இது ஒரு சார்டர்ட் விமானம். அது போல - ஹஜ்ஜுக்கு பிறகு பயணியரை திரும்ப கொண்டு வரும்போதும், காலியாக தான் ஜித்தாஹ் சென்றடையும்.

ஆகவே - அனைவரும் பொதுவாக சென்னை - ஜித்தாஹ் மார்க்கத்தில் - டிக்கெட் வகைக்கு செலவு செய்யும் தொகையோடு ஹஜ் குழு மூலம் மேற்கொள்ளும் பயணத்திற்கு ஆகும் டிக்கெட் செலவோடு சமமாக பார்க்கக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. உண்மையான முஸ்லிம்களுக்கு .
posted by Mohamed Adam Sultan (kayal patnam) [11 May 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18781

அருமை முஸ்லிம் மாந்தர்கள் ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்திருக்ககூடும் என்றே நினைக்கிறன்.

ஹஜ் கடமை என்றால் என்ன? நமக்கிருக்கும் எல்லா சக்தியையும் நம்மால் தீர்க்கமாக உறுதிபண்ணிய பிறகுதான் இப்ப புனித பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு மார்க்க உண்மை. இதை எல்லா மார்க்க ஆலிம்களும் அணுவளவும் பிசகாமல் தங்கள்(Fத்வா) தீர்ப்பில் சொல்லிருக்கிறார்கள்

நம் சக்தியில் சிறிதளவு குறைந்தாலும் அதனால் ஐந்தாவது கடமையாகிய புனித ஹஜ்ஜை நிறைவேற்றாவிட்டால் அலாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.

இப்படி மார்க்கம் நமக்கு வழிகாட்டிருக்கும்போது வேறு ஒரு வழியில் சலுகை கிடைக்கிறது என்று எந்தவழி என்று பார்க்காமல் எவர் தரும் சலுகை என்று அலசாமல் இனாம் என்றவுடன் இப்புனித மார்க்க கடமையை நிறைவேற்ற அச் சலுகையை நிறைவேற்றுவதென்பது அப்புனித கடமையை முற்றிலும் புரியாத பாமரதன்மையாகதான் இருக்கும் என்பதில் இரு கருத்தில்லை.

பலமதத்தவர்கள் வாழும் இந்தநாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் சிறய தொகையை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் கடமையாற்ற பலபேர் பிரச்னைகளுக்கிடையில் ஏதோ பிச்சை போடுவதை போல் போட்டுவிட்டு அதை பம்பட்டம் அடித்து அனைவரும் தெரியவேண்டும் என்று விளம்பரம் செய்கிறது இந்த அரசாங்கம்.

இவ்வளவு அவமானங்களுக்கிடையில் அந்த பெருவாரியான மாற்றுமத மக்கள் அரசாங்க பணத்தில் சிறிதளவை பெற்று இப்புண்ணிய கடமையை ஒரு பூரண முஸ்லிம் நிறைவேற்ற முன்வர வேண்டுமா?

பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவே தேவை இல்லை உடனே பத்து நிமடத்திலேய இத் தீர்ப்பை நிறைவேற்றினால் நிம்மதியடைவார்கள் முழுமையான மார்க்கத்தை பேணும் முஸ்லிம்கள்.

ஒவ்வொரு வருடமும் ஹஜ்மக்களின் அரசாங்க பிரதிநிதி என்று செல்லும் அரசியல்வாதிக்கு பல்லாயிரகணக்கான பணத்தை செலவு செய்து அனுப்பிவைக்கிறார்கள். அவரும் சென்று செலவு செய்துவிட்டு வருகிறார் . இங்கு வந்த பின்னர் அவர் வாழ்கை முறையோ,

அல்லாஹ் காப்பாற்றுவான் அதை எழுதவே என் கை கூசுகிறது.வாசகர்களே யூகித்து கொள்ளுங்கள் . ஆக இந்த ஹஜ் விஷியத்தில் அரசாங்கத்தில் ஆரம்பத்திலேயே அடிப்படை கோளாறு .

நம் அரசாங்கம் இவ் விசியத்தில் முஸ்லிம் களுக்கு ஒரு நேர்மையான நன்மை பயக்கும் சலுகை செய்ய வேண்டும் என்று நினைத்தால்,

சென்னை லிருந்து ஜித்தாவிற்கு மற்றய நாட்டு விமான கட்டணம் (சௌதி அரேபியா)போல் வசூலித்தால் போதுமானது. air india விமான கட்டணம் பலமடங்கு மற்ற நாட்டு விமான கட்டணத்தை விட அதிகம்.

ஆகவே இந்தநேர்மையான கட்டண நடவடிக்கையே முஸ்லிம் மக்களுக்கு செய்கின்ற சலுகையாக முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved