Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:10:26 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8416
#KOTW8416
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 8, 2012
அமீரக துபாய் காயல் நற்பணி மன்றத்தலைவர் ஜித்தா காயல் நலமன்றத்தினருடன் மக்கா மற்றும் ஜித்தாவில் சந்திப்பு!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 3588 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புனித உம்ரா கடமையை நிறைவேற்ற குடும்பத்துடன் மக்கா வந்திருந்த அய்க்கியஅரபு அமீரக துபாய் கா.ந.ம.தலைவர் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ.புஹாரீ அவர்கள், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரை சந்திக்கவேண்டுமென்ற அவரது ஆர்வ மேலீட்டால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் அமர்வு சென்ற 27.04.2012 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் மக்காவிலும், 29.04.2012 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் ஜித்தாவிலும் நடந்தேறியது.

மக்கா அமர்வு:

மக்கா வாழ் காயல் சகோதரர்கள் மற்றும் அவர்களில் குடும்பத்தினர் அனைவர்களையும் ஒருசேர சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை பரிமாற வேண்டும் என்ற ஆவலின் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்களின் தனிப்பட்ட ஏற்பாட்டில் மக்கா உம்முல் குரா முகர்ரிம் ஹோட்டல் - கலந்தாய்வரங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் மக்கா வாழ் காயல் சஹோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்வுக்கு சகோ. பொறியாளர் பஷீர் தலைமை தாங்கினார். காயல் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் துணை தலைவர் டாக்டர். ஜியாத் அபூபக்கர் மற்றும் செயலாளர் சகோ. செய்யத் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சகோ. ஹாஜா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். சகோ. செய்யத் இபுராஹீம் மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆற்றி வரும் பணிகள் குறித்து சுருக்கமாக உரையாற்றினார்.



மதிப்புரை வழங்கிய ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்கள் நம் காயல் மக்களின் ஒற்றுமை, குணநலன்கள் மற்றும் உதவி புரியும் மனப்பான்மை குறித்து அழகாக விளக்கி பேசினார். இந்த பண்பும் எண்ணமும் தொன்று தொட்டு நம் உள்ளங்களின் பல தலைமுறையாய் வேருன்றி துளிர்த்து வருவதாகவும், அதே குணங்களும் வரவேற்று விருந்தோம்பும் பண்பும் இங்குள்ள மக்களின் மனதில் உள்ளதை தான் ஒவ்வொரு மக்கா வருகையின் போதும் காண்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.



மேலும், நமதூர் மக்களின் நம்பிக்கை, நேர்மையான பண்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர் இந்த பண்புகளால் தான் பல நிறுவனங்களில் தலைமை பதவியும், நம்பிக்கைக்குரிய பொறுப்புகளும் நமதூர் மக்களை நாடி வருவதாக எடுத்துரைத்தார். மேலும் நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும், மன்றத்தில் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் நல்ல பல கருத்துகளையும் ஆலோசனைகளையும் சொல்லி தனது உரையை நிறைவு செய்து, இந்த புனித தலத்தில் அனைவர்களையும் ஒருங்கே சந்தித்த மகிழ்ச்சியை பரிமாரிகொண்டார்.



பின்னர் மக்கள் வாழ் கயலர்களின் சார்பின் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்க பட்டு, கப்பாரா உடன் சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது. மக்கா வாழ் சகோதர்கள் சார்பில் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க பட்டது . பின்னர் வந்திருந்தோர் அனைவருக்கும் ஆடிட்டர் சகோ, ஜே.எஸ்.எ. புஹாரி அவர்களின் ஏற்பாட்டில் அருசுவைமிக்க பபே உணவு உம்முல் குரா முகர்ரிம் ஹோட்டல் - உணவகத்தில் பரிமாறப்பட்டது.



ஜித்தா அமர்வு:

இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறிய இச்சந்திப்பு நிகழ்ச்சி ஜித்தா காயல் நற்பணி மன்றத்தலைவர் சகோ,குளம் அஹ்மது முஹ்யித்தீன் தலைமையில், மன்றத் துணைத்தலைவர் மருத்துவர் சகோ,முஹம்மது ஜியாது அவரது புதல்வன் முஹ்லிஸ் ஜியாது இறைமறை ஓத ஆரம்பமானது.



நம் குறுகியகால அழைப்பினை அன்புடன் ஏற்று அலுவல் முடித்து ஓய்வை தவிர்த்து சிரமம் எடுத்து இங்கு வந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் மனதார வரவேற்கிறேன் என்றார் சகோ,குளம் அஹ்மது முஹ்யித்தீன்.மேலும், நம் அமீரக துபாய் கா.ந.ம.தலைவர் சகோ ஆடிட்டர் ஜே.எஸ்.எ.புஹாரீ அவர்கள் நம்மையெல்லாம் சந்திக்க வேண்டும், அமர்ந்து கருத்துக்கள் பரிமாற வேண்டும், மன்றப்பணிகள் குறித்து அறிய வேண்டும், நம் நகர் நலன் குறித்து கலந்துரையாட வேண்டும் என்ற அவரது மேலான ஆவலே இத்திடீர் சந்திப்புக்கு / அமர்வுக்கு காரணமென்றும், ஆகவே நமது கருத்துக்கள், கேள்விகள், செய்திகளை இங்கு சமர்பிக்கலாம் என்றும், அவரது கருத்துக்களையும் நாம் கேட்டறியலாம் என்றும் கூறி அமர்ந்தார்.



தொடர்ந்து, தம் கருத்துக்களை தர வந்த சகோஆடிட்டர் ,ஜே.எஸ்.எ.புஹாரீஅவர்கள், அமீரக காயல் நற்பணி மன்றத்தோற்றம், அது ஆற்றிவரும் தொய்வில்லா சேவை, நம் மக்களின் இன்றையத்தேவை, நாம் இனி முற்படுத்த வேண்டிய பணிகள், நம் நகர் கேட்கும் தொலை நோக்கு திட்டங்கள் எவை? அதன் செயலாக்கங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? போன்ற பல்வேறு செய்திகளை அழகாக எடுத்துச்சொன்னார்.

மேலும், நம் மன்றம் மூலம் நம் நகர் துயர் துடைக்க எவ்வழிகளெல்லாம் உள்ளனவோ அனைத்தையும் ஆராய்ந்து துடிப்புடன் செயல்பட நாம் தயாராக இருக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார். மேலும், அமீரக மன்றத்தின் மூலம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட சில அறிய சேவைகளை கோடிட்டார். ஜித்தா நற்பணி மன்றத்தால் ஆரம்பிக்கப்பட்டு அமைதியாக தனது பணியை செவ்வனே செய்து வரும் "இக்ரஃ" கல்வி அமைப்பை வெகுவாக புகழ்ந்த அவர், அதன் தோற்றம் மற்றும் இயக்கம் பற்றி மேலும் ஆவலுடன் கேட்டு தெரிந்து கொண்டார். அதன் வெற்றிக்கு காரணமான ஜித்தா நற்பணி மன்றத்தையும் அதன் நிர்வாகிகளையும் வெகுவாக பாராட்டினார். அது போன்று மருத்துவத்திற்கும் ஒரு அமைப்பு தேவை என்ற தனது கருத்தையும் ஆழமாக பதித்தார்.



இது குறித்த எம் மன்ற நிலைபாட்டை நாங்கள் ஏற்கனவே தீர்மானமாக அறிவித்துவிட்டோம்; அதாவது, "கல்விக்கென்று ஒரு 'இக்ரஃ' இருப்பது போல் மருத்துவத்திற்கென்று ஒரு அமைப்பு உருவாக்கி அதன் மூலம் மருத்துவ பணிகளை செய்யலாம், அதனால் DUPLICATION வருவதை தவிர்க்கலாம். இன்னும் பல மருத்துவ தேவைகளையும் இணைந்து செய்யலாம் என்றார் சகோ,குளம் அஹ்மது முஹ்யித்தீன்.



தொடர்ந்து பேசிய அமீரக துபாய் கா.ந.ம. தலைவர், நம் மன்றங்கள் மருத்துவ, கல்வி சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், அதற்காக நாம் நமது பணிகளில் நமது குடும்ப பெண்களுக்கும் பங்களிப்பை கொடுத்து அவர்களையும் நகரில் களப்பணிகளாற்ற ஆர்வமூட்ட வேண்டுமென்றும், மகளிர் கல்லூரி,மகளிர் பள்ளி, துளிர் அரங்கம் போன்ற பொது உள்ளரங்குகளில் நடைபெறும் நகர் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நம் பெண்களையும் கலந்து கொள்ளச்செய்து அவர்களின் கருத்துக்களையும் பெறவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அவர்களிடம் பெறப்படும் செய்திளை ஆய்ந்து அதற்கொரு தெளிவை கொடுத்தால், அவர்கள் மேலும் உற்சாகமாக பணியாற்ற முன்வருவார்கள் என்றும் கூறினார்கள்.

மேலும், நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் சந்தாக்களே முதுகெலும்பு என்ற அவர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சந்தா வரவை உயர்த்தும் வழிகளை தேட வேண்டுமென்றும், அதற்காக நமது சகோதரர்களை நேரில் சென்று சந்தித்து நம் மன்றத்தின் நிறை, குறைகளை கேட்டுத்தெரிவதோடு சந்தாவின் அவசியம் குறித்தும் எடுத்துச்சொல்லி அவர்களின் மனதை வென்றெடுக்க வேண்டுமென்றார். நாம் நல்ல காரியங்களின் பக்கம் எவ்வளவு அதிகமாக பயணிக்கிறோமோ அதை விட அதிக வேகத்தில் அல்லாஹ்வின் உதவியும் நம்மை நோக்கி பயணிக்கும் என்று கூறி தனது சீரிய கருத்துக்களையும், சிறந்த ஆலோசனைகளையும் தந்து அமர்ந்தார்.

மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திகொண்டனர். பலர் அருமையான கருத்துக்களையும், அற்புத ஆலோசனைகளையும் எடுத்து வைத்தனர். சில உறுப்பினர்கள் ஐயங்களுக்கு தெளிவையும் பெற்றனர். இந்த சந்திப்பு நல்ல பயனுள்ளதாகவும், இந்தக்கலந்துரையாடல் மூலம் பல அரிய செய்திகள் அறிய முடிந்ததென்றும், இதன் மூலம் தமது கருத்துக்களை தாராளமாக பகிர முடிந்ததென்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டனர்.

இரவு 09:௦௦ மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வு 10:30 மணிக்கு சகோ.ஹுமாயூன் கபீர் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது. அமீரக கா.ந.ம. தலைவரின் அணுசரனையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை சகோ,சட்னி.செய்யது மீரான் மற்றும் பிரபு நூர்தீன் நெய்னா சிறப்பாக செய்திருந்தார்கள.அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்,

எஸ்.ஹெச்.அப்துல் காதர்
அரபி ஷுஅய்ப் மற்றும்,
மொகுதூம் முஹம்மது (சீனா),



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அமீரக துபாய் காயல் நற்பணி...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [08 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18742

கல்விக்காக ஒரு இக்ரா அமைப்பு ஊரில் இயங்குவது போல் மருத்துவத்திற்கும் ஒரு அமைப்பு தேவை என்ற தனது கருத்தை தொலைநோக்கு சிந்தனைவாதி மதிப்புக்குரிய ஜே.எஸ்.எ. புஹாரி காக்கா அவர்கள் ஆழமாக பதித்துள்ளது அது பாராட்டுக்குரியது..

தொலைநோக்கு சிந்தனைவாதி ஜே.எஸ்.எ. புஹாரி காக்கா அவர்கள் சொல்வது போல் அப்படி ஒரு மருத்துவ அமைப்பு நடைமுறை படுத்தப்பட்டால் தற்போது செயல்பட்டு வரும் மைக்ரோ காயல் அமைப்பு மூலம் அணைத்து உலக காயல் நல மன்றங்களும் இணைந்து செயல்பட்டால் மிக நன்று - இது எனது கருத்து..

ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க வளைகுடாவிலும் இன்னும் பல பிரதேசங்களிலும் பணியாற்றி தனது உழைப்பை ஊர் மக்களுக்காக (நன்மையின் பக்கம்) சேவை செய்ய தூண்டி எடுத்துரைத்து வரும் மற்றும் சேவை ஆற்றி வரும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் வல்ல இறைவனின் அருளும் அவனின் பரக்கத்தும் மற்றும் சாந்தியும் (அமைதி) உண்டாகட்டுமாக... ஆமின்.. ஆமின்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அருமையான ஒன்றுகூடலும்,ஆகப்பூர்வமான செயல் திட்டங்களும்....!!!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [08 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18744

அருமையான ஒன்றுகூடலும், ஆகப்பூர்வமான செயல் திட்டங்களும், அழகிய எண்ணங்களும் இச் சங்கமத்தின் வாயிலாக நிறைவேறியுள்ளது. நிறைவேறவும் உள்ளது. அமீரக துபாய் காயல் நற்பணி மன்றத்தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஜித்தாவைத் தலைமையகமாகக் கொண்டு மக்காவில் உள்ள காயலர்கள் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இனி போகிற போக்கைப் பார்த்தால் மக்கா காயல் நற்பணி மன்றம் MKWA என ஆரம்பித்தாலும் ஆரம்பிச்சுடுவாங்க போலிருக்கு! காரணம் கனிசமான காயலர்கள் இப்போது மக்காவில் உள்ளனர்.

ஹலோ! சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். உடனே அருமை நண்பர் சட்னி மீரான் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவிடப் போறாரு! நாங்க எப்பவும் ஜித்தாவோடு இணைந்து தான் செயல் படுவோம்.

-ஹிஜாஸ் மைந்தன். புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மைக்ரோ காயல் ..!!!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [09 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18755

சகோ. ஆடிட்டர் புஹாரி காக்கா அவர்களுக்கு மில்லியன் பாராட்டுக்கள், கூடவே கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்.

உம்ரா வந்தோமா, கிரிகைகளை எல்லாம் செய்தோமா, நல்ல ரெஸ்ட் எடுத்தோமா, நல்ல சாப்பிட்டோமா, கடை கடையாய் சென்று சாமான்கள் வாங்கினோமா என்று இருக்காமால், நம் சகோதரர்களை சந்திக்கனும், அவர்களுடன் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளனும், ஊர் நன்மைக்காக பல திட்டங்களை செய்யணும் என்ற இந்த நல்ல உணர்வுகளுக்காக தான் அவர்களை பாராட்டி கமெண்ட்ஸ் அடிக்க கை துரு துருக்கின்றது.

தற்போது எந்த காயல் நலமன்றதிற்க்கும் கல்விக்கு என்று எந்த விண்ணப்பமும் வருவது இல்லை.காரணம் வலுவான " இக்ரஃ " என்ற அமைப்பு இருப்பதால். ஏன், வீடுகளில் யாராவது கல்விக்கு என்று உதவி கேட்டால், நம் பெண்மணிகள் உடனே இக்ரஃ விற்கு சென்று விண்ணப்பம் கொடுங்கள் என்று கூறி விடுகிறார்கள், காரணம் விழிப்புணர்வு.

ஆனால் இந்த விழிப்புணர்வு மருத்துவ உதவியில் இல்லை. மருத்துவ உதவி தேவை என்றால், உடனே பெறுனர் விலாசம் காலியாக ஒரு மனு டைப் பண்ணி, அதை 20 காப்பி எடுத்து, பெறுனர் அட்ரசில் ஒவ்வொரு காயல் நலமன்ற விலாசத்தை எழுதி அனுப்பிவிடுகிறார்கள்.

* இந்த நலமன்றம் உதவி செய்யும் என்று இவர்கள் இருந்து விடுகிறார்கள், இவர்கள் செய்வார்கள் என்று அவர்கள் இருந்து விடுகிறார்கள்.

• அல்லது, இவ்வளவு தொகை நம்மால் கொடுக்க முடியாது என்று கம்… என்று மனுவை கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.

• இல்லை, அனைத்து மன்றங்களும் உதவி செய்து அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக பணம் கிடைத்து, மற்ற பயனாளிகளுக்கு கிடைக்காமல் ஆகிவிடுகின்றது.

ஆகவே மருத்துவத்திற்கும் ஒருங்கிணைந்த ஒரு அமைப்பு கண்டிப்பாக தேவை. பல சமயங்களில் அரசாங்க காப்பீடு திட்டத்திலே அனைத்தையும் சாதித்து விடலாம். ஆக, நம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வை கொண்டு வரனும், கல்விக்கு மாதிரி.

இந்த மருத்துவ உதவிக்கு, தற்போது “மைக்ரோ காயல்” என்று ஒரு அமைப்பை நம் சகோதரர்கள் உருவாக்கி, அருமையாக உதவி வருகிறார்கள். அந்த அமைப்பை அனைத்து காயல் நலமன்றங்களும் அங்கீகரித்து, ஒரு வலு உள்ள அமைப்பாக உருவாக்கலாமே.

அதிகம் ஒன்றும் கஷ்டம் இல்லை. இனி எந்த மருத்துவ உதவியாக இருந்தாலும் இந்த மைக்ரோ காயல் என்ற அமைப்புக்கு தான் அனுப்பனும்.

நல மன்றத்திற்கு வரும் விண்ணப்பங்களை மைக்ரோ காயலுக்கு அனுப்பி, உங்களுடைய உதவித்தொகை எவ்வளவு அங்கீகரித்து உள்ளீர்களோ அதையும் அனுப்பினால், பற்றாக்குறை உள்ள தொகைகளை மற்ற நல மன்றமோ, நல் உள்ளங்களோ நிவர்த்தி செய்வார்கள்.

ஒருங்கிணைந்த சேவை, துரித நடவடிக்கை, DUPLICATION வருவதை தவிர்த்தல் போன்ற விசயங்களை கருத்தில் கொண்டு இருக்கும் அமைப்பான மைக்ரோ காயலை பயன் படுத்தலாமே..!!

வறுமை இல்லாத, கல்வி அறிவு மேம்பட்ட, நோய்கள் இல்லாத, பசுமை காயலை சீக்கிரம் உருவாக்க வல்ல ரஹ்மான் துணை புரிவானாக.. இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் நடக்கும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒருகினைந்த மருத்துவ அமைப்பு
posted by செய்யது ஹசன் (அல்-கோபார்) [09 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18764

ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு இன்றைய தேதியில் மிகவும் இன்றியமையானதாக உள்ளது. சுமார் பன்னிரெண்டு மாதங்களுக்கு மேலாக நாம் இதனை பேசிக்கொண்டுதான் உள்ளோம். இன்ஷாஅல்லாஹ் சீக்கிரம் யாரவது பூனைக்கு மணி கெட்டதான் வேணும். அந்த ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பிடம் முழுமையாக மைக்ரோகாயலை ஒப்படைக்கவும் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அமீரக துபாய் காயல் நற்பணி...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [10 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18768

அன்பு நண்பர் சாளை-ஜியாவுத்தீன் அவர்களின் இந்த யோசனை மிகவும் பயனுள்ளதாகத் தெரிகின்றது. கல்விக்கு எப்படி இஃராவோ? அது போல் மருத்துவத்திற்கென ஓர் நல்ல அமைப்பை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் நண்பர் கூறியது போல் சில தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்துக் கொண்டு பரவலாக பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகளை அவரவர் தேவைக்குரிய தொகையை நிர்ணயித்து பல மன்றங்களின் உதவியால் வழங்க வாய்ப்புள்ளது. இதற்கு ஒத்துழைக்க உலகளாவிய எல்லாக் காயல் நல மன்றங்களும் முன் வர வேண்டும்.

தம்மாம் காயல் நல மன்றத்தின் மூலம் அனைத்து மன்றங்களுக்கும் இந்த யோசனையை எழுத்து மூலம் எடுத்துச் செல்லலாமே? நீங்கள் இதற்கோர் துரும்பை போடுங்கள் மற்றவர்கள் துடுப்போடும், துடிப்போடும் வந்து சேர்வார்கள்.

ஆக மொத்தத்தில் வறுமைக் கடலில் தத்தளித்து தடுமாறும் ஏழை,எளியவர் கரைசேர ஒரு நல்ல வாய்ப்பாக இது அமையும்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved