Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:48:42 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8329
#KOTW8329
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 18, 2012
அரசு நூலக கட்டிட விரிவாக்கத்திற்கென தனிக்குழு நிறுவி கலந்தாலோசனை! பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்க முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2931 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கருகில் இயங்கி வரும் அரசு பொது நூலக கட்டிட விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிதியாதாரத்தைத் திரட்டுவதற்கும், கட்டிட விரிவாக்கம் தொடர்பாக முறையான செயல்திட்டம் வகுப்பதற்குமென “காயல்பட்டினம் கல்வி மேம்பாட்டு திட்டக் குழு” என்ற பெயரில் தனிக்குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் 15.04.2012 அன்று நடைபெற்றது.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நூலக புரவலர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்வது குறித்த செயல்திட்ட விளக்கத்தை ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.

இந்நூலக கட்டிட விரிவாக்கத்திற்கு 14 லட்சம் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்துவதால், செலவுத் தொகையில் பாதி தொகையான ரூபாய் 7 லட்சத்தை அரசு வழங்கும் எனவும், எஞ்சிய 7 லட்சம் தொகைக்கு பொதுமக்கள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இவ்வாறாக திரட்டப்படும் 14 லட்சம் ரூபாயைக் கொண்டு, நமது விருப்பப்படி நாமே நூலக கட்டிடத்தை வடிவமைத்துக் கட்டிட இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் நிதியாதாரத்தைத் திரட்டுவது குறித்து நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது. நிறைவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தனிக்குழு:
காயல்பட்டினம் அரசு பொது நூலக கட்டிட விரிவாக்கப் பணியை செயல்படுத்துவதற்காக காயல்பட்டினம் கல்வி மேம்பாட்டுக் குழு என்ற பெயரில் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், நூலக புரவலருமான ஐ.ஆபிதா தலைமையில் தனிக்குழு அமைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

நகர்மன்ற அங்கத்தினருக்கு நன்றி:
தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் அரசு பொது நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்கு முறையான ஏற்பாடுகளை சுய ஆர்வத்துடன் செய்து தந்தமைக்காக நூலக புரவலரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதாவுக்கும், அவருக்கு ஒத்துழைத்த நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நன்கொடையளித்தோருக்கு நன்றி:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிக்காக தன் பங்களிப்பாக ரூபாய் ஒரூ லட்சம் தருவதாக வாக்களித்துள்ள பொறியாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் மற்றும் ரூபாய் பத்தாயிரம் தருவதாக வாக்களித்துள்ள ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ரிஸ்வான் சங்கத்திற்கு நன்றி:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிகள் நடைபெறும் காலங்களில் நூலகத்தின் அனைத்து நூற்களையும் பாதுகாப்பதற்கும், வாசக சாலைக்கும் - காயல்பட்டினம் புதுப்பள்ளி மஹல்லாவைச் சார்ந்த ரிஸ்வான் சங்கத்தில் தற்காலிகமாக இடவசதி செய்து தருவதாக உறுதியளித்துள்ள அதன் நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

நிதி சேகரிப்பு:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிக்குத் தேவைப்படும் ரூபாய் 7 லட்சம் தொகையை பின்வருமாறு பல வழிகளில் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டது:-

நகர பிரமுகர்களிடம் நிதி சேகரித்தல்:
பொறுப்பு:- ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஹாஜி ஏ.லுக்மான், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாலமுருகன், ஆசிரியர்களான சுலைமான், மு.அப்துல் ரசாக் ஆகியோர்.

வெளியூர் - வெளிநாட்டு பிரமுகர்களிடம் நிதி சேகரிப்பு:
பொறுப்பு:- ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா.

புறநகரின் அனைத்து சமய மக்களிடம் நிதி சேகரிப்பு:
பொறுப்பு:- பாலமுருகன்.

பள்ளி மாணவர்கள் மூலம் குறுநிதி சேகரிப்பு:
பொறுப்பு:- ஆசிரியர்களான மு.அப்துல் ரசாக், சுலைமான், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா.

நன்கொடை ஒப்புகை சீட்டு (பில் புக்) தயாரித்தல்:
பொறுப்பு:- பாலமுருகன்.

கட்டிடப் பணி மேற்பார்வை:
நூலக விரிவாக்கக் கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட,
ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன்,
எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா,
மாஸ்டர் ஷாஹுல் ஹமீத்,
செய்யித் இப்றாஹீம்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்படுகிறது.

நூலக விழிப்புணர்வு:
நகர பொதுமக்களிடம் - குறிப்பாக மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, அது சார்ந்த துறைகளின் உதவியுடன் நூலக விழிப்புணர்வு செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்திடுவது குறித்து நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் தெரிவித்த ஆலோசனையை இக்கூட்டம் ஒருமனதாக அங்கீகரிக்கிறது.

சிவில் சர்வீஸ் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு:
அரசு வேலைகளைப் பெற்றுத் தரும் சிவில் சர்வீஸ் படிப்புகள் குறித்து மாணவ-மாணவியருக்கு போதிய விழிப்புணர்வூட்ட செயல்திட்டம் வகுத்து செயல்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஏன் நமது சொந்தப்பணம்?
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 April 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18362

இப்படியே நாம் நமது பணத்தில் நமதூருக்கு வேண்டிய எல்லாமே செய்துகொண்டிருந்தால், அரசாங்கம் நமக்கு எதற்கு? ஏன் நாம் ஓட்டு போட்டு ஜெயித்த நமது தொகுதி MLA வின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய முடியாதா?

இதை நான் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் இக்கருத்துக்களை பதிவு செய்யவில்லை. ஏன் இப்படித்தான் செய்து கொண்டிருக்க வேண்டுமா என்ற ஆதங்கத்தைத்தான் இங்கே பதிவுசெய்கிறேன்.

இதற்குத்தான் ஒரு தவறான முன்னுதாரணத்தை நாம் ஏற்படுத்திவிடக்கூடாது என்று நாம் அடித்துக்கொண்டது. இனி காயல்பட்டினத்திற்க்கு எது வேண்டும் என்றாலும் அவர்களாகவே செய்யட்டும் என்று அரசு இயந்திரமும் நம்முடைய எரிபொருளைத்தான் எதிர்பார்க்கும்.

அதற்க்கு நாம் தயாரா????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அரசு நூலக கட்டிட விரிவாக்...
posted by Salih (Chennai) [18 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18364

சலீம் காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மக்கள் தாங்கள் விரும்பும் சமூக சொத்துகளை (PUBLIC ASSETS) விரைவாக உருவாக்க ஒரு திட்டமே அரசுடைய தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME). இதற்கு முன்னர் இது நமக்கு நாமே திட்டம் என அழைக்கப்பட்டது. தமிழக அரசு - இதற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் - சில சமூக சொத்துக்களை - மக்களின் பங்களிப்புடன் - விரைவாக உருவாக்கலாம். குறைந்தது மூன்றில் ஒரு பங்கு அரசு மக்களிடம் எதிர்பார்க்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் நிதி (MPLADS)/சட்டசபை உறுப்பினர் நிதி (MLALADS) ஆகியவை மூலம் நம் நகரில் சில திட்டங்கள் நிறைவேறி உள்ளது. உதாரணமாக துளிர் பள்ளிக்கூட சாலைகள். இருப்பினும் - சட்டசபை/பாராளுமன்ற தொகுதிகளில் காயல்பட்டினம் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் - நமது எம்.எல்.ஏ மற்றும் எம்.பீ. களிடம் இருந்து நாம் - நகர திட்டங்களுக்கு - நிதி ஒதுக்கீடு கேட்கலாம்.

இருப்பினும் - ஒரு திட்ட நிதியை (உதாரணமாக எம்.பி. நிதி) மற்றொரு திட்ட நிதி (உதாரணமாக தன்னிறைவு திட்டம்) உடன் இணைக்கமுடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இந்த ஊருக்கு..! தொகுதி M P , மற்றும் M L A கிடையாதா...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [18 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18366

துபாய் காயல் நல மன்றத்தின் துணை தலைவரும் சமூக அக்கறை கொண்ட சிந்தனைவாதியுமான சகோதரர் சாளை சலீம் அவர்களின் ஆதங்கம் சரியானவையே...

இன்று காயல்பட்டிணத்தில் எந்த அரசு திட்டமானாலும் அதில் நமது மக்களின் பணத்தையே குறிக்கோளாக வைத்தே செயல் படுத்தபடுகிறது...

இந்த ஊருக்கு..! தொகுதி M P , மற்றும் M L A கிடையாதா...?

இப்படியே காலம் பொழுதும் எதற்க்கு எடுத்தாலும் அரசு திட்டத்திற்க்கு ஊர் மக்களிடமும் மற்றும் உலக காயல் நல மன்றங்களிடமும் வசூல் செய்வதேயே...! வழக்கமாக கொண்டுள்ளது... எல்லா அமைப்பும்... இது தவிர்க்க பட வேண்டும்... நமது ஊரில் இது ஒரு தொற்று நோயாக பரவி விட்டது...!

தொகுதி M P , மற்றும் M L A இவர்களுக்கு ஒதுக்கும் நிதிகளை இவர்களிடம் கேட்டு பெற முயற்சி எடுக்கவும்..

ஊர் மக்களும் உலக காயல் நல மன்றமும் ஊரில் ஏழை எளிய மக்களுக்கு பட்ட படிப்பு, மருத்துவ உதவி இப்படி பொருளாதரத்தை செலவு செய்ய முன் வருவார்கள்...!

நமக்கு அரசு செய்யவேண்டியதை நமது M P, M L A வை நேரில் பார்த்து செய்ய வலியுறுத்த வேண்டும்...

அணைத்து காயல் நல மன்றங்களும் மற்றும் சமூக அக்கறை கொண்ட நடுநிலை சகோதரர்களும் கொஞ்சம் சிந்திக்கவும்... அதன் மூலம் செயல்படவும்... வசூல் கேட்க வரும் போது இவர்களை செயல்பட வலியுறுத்தவும்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. MLA/MP தொகுதி வளர்ச்சி நிதிகள்!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [18 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18372

அரசு நூலக கட்டிட விரிவாக்கத்திற்காக பாடுபடும் அத்தனை நல்லுலங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இப்பணிக்கான பொதுமக்களின் பங்களிப்பு 50 விழுக்காடுகளுக்கு மேலிருப்பின், பங்களிக்கும் சமூக ஆர்வலர்கள் மூலமே அரசு நூலகத்தை கட்டலாம் என்பதற்க்காக... மொத்த தொகையின் 50 % ஆகிய 7 லட்சத்தை பொதுமக்களிடம் வசூல் செய்வதை விட 1 /3 பங்கு அதாவது 4 .5 லட்சத்தை செலுத்தி அரசை முறைப்படி கட்ட சொல்லலாம். எது நமக்கு குறைந்த பொருச்சுமையை தருகின்றதோ அதுவே எல்லோருக்கும் ஈசியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அதே நேரத்தில், நாமே முன் நின்று கட்டினால் சற்று தரமாக இருக்கும் என்பதனை ஒத்து கொள்கிறேன்...அதற்காக நாம் 2 .5 லட்சம் அதிகமாக வசூல் பண்ணி கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே நமது தலைவி அவர்கள் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வாடகை இடம் மற்றும் நிலம் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மட்டுமன்றி இது போன்று 'தன்னிறைவு திட்டம்' மூலம் இன்னும் பல பணிகள் வருங்காலத்தில் நமதூரில் நிறைவேற்ற படவேண்டிய சூழல் வரலாம். அதற்க்கும் நாம் பொது மக்களிடம் தான் இது போன்று நிற்க வேண்டும். அதில் சிரமம் (பொருட்சுமை) வரலாம்.

அக்டோபர் 23, 2011 அன்று 25 லட்சம் ரூபாய் செலவில் நகர தனவந்தர்களின் அனுசரணையுடன் மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் இலவசமாக அளிக்கப்பட்டது. இப்பொழுது ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வாடகை இடம் மற்றும் நிலம் தேவை என்று வேண்டுகோள் வேறு. இது எத்தனை லட்சம் செலவாகும் என்பது தெரியவில்லை. வாடகை இல்லா கட்டிடம் தரவும் 50 சென்ட் நிலம் ஒதுக்கவும் கோமான் ஜமாஅத் ஒப்புக்கொன்டிருக்கிறார்கள் என்றாலும் இவைகளை எம்.பிக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி அல்லது எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி அல்லது நகராட்சி நிதி (ஒரு வேலை அதக்கான வாய்ப்பு / நிதி இருந்தால்) மூலம் நிறைவேற்ற ஒரு வேளை முயற்சிகள் எடுக்க பட்டதா என்று தெரிய வில்லை.

நல்ல பல திட்டங்களை இந்நிதியை பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சிக்கலாம். அதுவே நம்முடைய முதல் முயற்சியாக இருக்க வேண்டும்.

இது போன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் மக்கள் பண உதவியுடன் தான் அமைய வேண்டுமா??? ஒரு வேளை நமது MLA /MP தொகுதி + நகராட்சி வளர்ச்சி (?) நிதிகள் முழுமையாக பயன்படுத்த பட்டிருந்தால் அல்லது அந்நிதியை பயன்படுத்துவதட்க்கு தகுதியானவைகள் அல்ல என்றால் கூட ஏற்றுகொள்ளலாம். ஆனால் அவைகளே முழுமையாக பயன்படுத்த படவில்லை என்பதே என் ஆதங்கம்.

2009-10 நிதியாண்டில் நமது நாடாளு்மன்ற எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியாகிய 'இரண்டு கோடியில்', நமது MP S. R. ஜெயதுரை அவர்கள் வெறும் 95 லட்சம் மட்டும் தனது தொகுதிக்காக செலவு பண்ணியிருக்கிறார். ஆனால் மற்ற சில எம்.பி (குறிப்பாக கனிமொழி போன்றவர்கள்) ஒதுக்கப்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமாக செலவு செய்து இருக்கிறார்கள். அப்படியென்றால் நமது தொகுதியில் நிறைவேற்ற தகுதியான நல்ல திட்டங்களோ அல்லது தேவை இல்லையா என்று புரிய வில்லை. 2011-12ம் நிதியாண்டிலிருந்து எம்.பிக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தபட்டுள்ளது. 2 கோடியே நம்மால் முழுமையாக (?) செலவழிக்க துப்பில்லையென்றால்... 5 கோடியாக அநேகமாக உறங்கி கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதற்க்கு காரணம் முறையான திட்டங்களோ அல்லது நம்மை போன்ற தேவையுள்ளவர்கள் எம்.பி ஜெயதுரை அவர்கள் வீட்டு கதவை தட்ட வில்லையென்று நினைக்கிறேன்.

அடுத்து, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இந்த ஆண்டில் ரூ.470 கோடி ஒதுக்கீடு. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கிட்டத்தட்ட இரண்டு கோடி கிடைக்கும். அனிதா அவர்கள் இதற்க்கு முன்னர் தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார் அல்லது எவ்வளவு செலவு செய்தார் என்பது தெரிய வில்லை. இருப்பினும் தற்போதைய தொகுதி மேம்பாட்டு நிதியாவது முறையாக முழுமையாக பயன்படுத்த போகிறார்களா என்று தெரிய வில்லை.

நமது எம்.பி மற்றும் எம்எல்ஏ வீட்டுக்கு ஒரு நடை தான் போயிட்டு வாங்களேன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அரசு நூலக கட்டிட விரிவாக்...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [21 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18397

மச்சான் சலீம்,தம்பி சாஜித் ,தம்பி சாளை.முஹம்மத் முஹிதீன் எல்லோருடைய கருத்துக்களையும் வாசித்தேன். முயற்சியாளர்கள் நமது எம்.பி.மற்றும் எம்.எல்.எ போன்றவர்களை சந்தித்தார்களா...எனபது தெரியவில்லை. ஒருவேளை அவர்களின் தொகுதி நிதியில் இதுபோன்ற இனங்களுக்கு செலவு செய்யும் உரிமை உள்ளதா.../என்றும் தெரியவில்லை.ஒரு குறிப்பிட்ட இனங்களுக்குதான் தொகுதி நிதி செலவழிக்கப்பட வேண்டும் என அரசு விதி முறைகள் உள்ளன.

நிறைய எம்.பி கள்,எம்.எல்.எ க்கள் பஸநிழல் குடை கட்டுவதிலும் கிணறு ,ஏரி குளங்கள் தூர் வாருவதர்க்கும்தான் தங்களது தொகுதி நிதியை அதிகமாக செலவழிக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. ஏனெனில் இதில்தான் அவர்களுக்கு நிறைய "கமிஷன் "கிடைக்கிறதாம்.

தம்பி சாளை முஹம்மத் முஹிதீன் கனிமொழியை குறிப்பிடுகிறார். "துக்ளக் "ஆசிரியர் "சோ "அவர் எம்.பி யாக இருந்த போது அவரது எம்.பி நிதியை பயன்படுத்தி நமது பேயன்விளை K A HIGH SHCOOL க்கு இரண்டு வகுப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளார். சோ எங்கே இருக்கிறார். பேயன்விளை ஹைஸ்கூல் எங்கே இருக்கிறது ?இன்றைக்கும் பேயன்விளை ஹை ஸ்கூலுக்கு சென்றால் அந்த வகுப்பறைகளை காணலாம்.

இது தன்னிறைவு திட்டம் என்பதால் பொது மக்களின் பங்களிப்பு வேண்டப்படுகிறது. நூலகம் எனபது இன்று அத்தியாவசியமானது. மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்கு அதன் உதவி மிக மிக அவசியம். நமதூரில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கோ அல்லது குடிநீர் தொட்டிக்கோ அல்லது சாலைவசதிகளை மேம்படுத்தவோ நமஇடமா அரசு நிதி கேட்க்கிறது...?இல்லைதானே....!

எனவே அரசு திட்டங்களின் வகைமுறைகளையும் அதேசமயம் நமது தேவைகளின் அத்தியாவசியங்களையும் ஒருசேர புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved