Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:08:25 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8333
#KOTW8333
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 20, 2012
நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட நகராட்சி சாதாரண கூட்டத்தில் தீர்மானம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5426 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டத்தில், நகராட்சி பழைய கட்டிடத்தை இடித்தகற்றி, புதிய கட்டிடம் கட்ட தீர்மானமியற்றப்பட்டுள்ளது. கூட்ட விபரங்கள் பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம், 17.04.2012 அன்று காலை 10.30 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில், நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.







இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் முன்வைக்கப்பட்டன:-



நகராட்சிக்கு புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கான செலவு மதிப்பீடு குறித்து வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.



கடைசியாக அறிவிக்கப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டமை குறித்து 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு விளக்கம் கேட்டார். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, ஏலம் குறித்த அறிவிப்பு - அரசு சட்ட விதிகளின்படி குறித்த கால அவகாசத்தில் அறிவிக்கப்படவில்லை என்று கூறி தான் ஆட்சேபித்ததாகவும், அதற்குப் பிறகு, ஆணையர் ஏலத்தை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஏலத்தை நிறுத்தியதைக் காரணங்காட்டி சிலர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தான் அறிவதாக 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவிக்க, “அது அவரவர் உரிமை... வழக்கு போட்டால் பார்த்துக்கொள்ளலாம்” என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.

“இப்படி இலகுவாகச் சொல்லிவிட்டு நழுவி விடக்கூடாது... கடைசியில் நகராட்சி அதிகாரிகளும், அலுவலர்களும்தான் வழக்குக்காக அலைகின்றனர்... உங்களால் அலைய முடியுமா?” என்று உறுப்பினர் சுகு கேள்வியெழுப்ப, நகராட்சி மூலம் முறையான அனுமதி தந்தால் ஒரு வழக்கென்ன, அனைத்து வழக்குகளையும் சந்திக்க ஆயத்தமாக உள்ளதாக உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.



விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.



இப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எவை என நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் கேள்வியெழுப்பினர்.

அரசுப்பதிவு செய்யப்பட்ட - காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் இதுகுறித்து ஏற்கனவே மன்றத்திற்கு கடிதம் அளித்துள்ளதாகவும், இப்பணியை மேற்கொள்ள - நகரின் அனைத்துப்பகுதி மக்களை உள்ளடக்கிய அவ்வமைப்பையே தேர்ந்தெடுக்கலாம் என்றும் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தெரிவித்தார்.

அது அவசியமற்றது என்றும், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையை அணுகி இப்பணிகளை மேற்கொள்ளச் செய்யலாம் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆட்சேபித்தார்.

ஏற்கனவே பழைய மன்றத்தின்போது சிலர் இப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டதாகவும், ஊர் மக்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும், எனவே, நமதூரில் ஆள் இருக்க வேறிடங்களில் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கடற்கரையில் தூய்மைப்பணி செய்தபோது, அப்பணியை காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கமே ஒருங்கிணைத்ததாகவும், பொதுமக்கள் அதற்கு முழு ஆதரவளித்ததாகவும், அவையனைத்தையும் தான் நேரில் அவதானித்ததாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.

“நமதூரைச் சார்ந்தவர்கள் என்றால் இப்பணியை ஒப்படைப்பதில் ஆட்சேபணையில்லை” என இறுதியில் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.



இப்பொருள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஒன்றுமில்லாத குடிசை வீடுகளுக்கு 200 ரூபாய் வரை தீர்வைக் கட்டணம் வருவதாகவும், பல மாடிகளைக் கொண்ட வீடுகளுக்கு அதை விட மிகவும் சொற்பத் தொகையே தீர்வைக்கட்டணமாகக் கேட்கப்படுவதாகவும், எனவே மறு அளவீட்டின் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, கணினி மென்பொருள் மூலமே இக்கட்டணங்கள் வரையறுக்கப்படுவதாகவும், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கட்டிடங்கள், தொழிற்சாலைப் பகுதி, வணிகப் பகுதி, குடியிருப்புப் பகுதி என 3 மண்டலங்களாக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே தீர்வைக்கட்டணங்களை நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

விவாதங்களுக்குப் பின், முறையீடு பெறப்படும் பகுதிகளில் மட்டும் அளவீடு செய்து தீர்வைக் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யலாமென்றும், அனைத்து வீடுகளையும் அளவீடு செய்வதென்பது தற்கால சூழலில் நடைமுறை சாத்தியமற்றது என்றும் உறுப்பினர்கள் ஒருமித்து கருத்து தெரிவித்தனர்.



இப்பொருள் குறித்து சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் சில விளக்கங்கள் கேட்க வேண்டுமென 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார். அது ஏற்கப்பட்டதையடுத்து, சில கேள்விகளை அவரிடம் எழுப்பி, அவரது விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.





விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.



விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.



காலிமனைக்கு வரி வசூலிக்கும் திட்டம் எங்குமே இல்லை என்றும், சென்னை மாநகராட்சியில் தனக்குச் சொந்தமான காலி மனைக்குக் கூட தீர்வை எதுவும் கேட்கப்படவில்லை என்றும், இது தேவையற்ற ஒன்று என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.

வீடு கட்ட வரைபட முன்னனுமதி (ப்ளான் அப்ரூவல்) பெறும்போது, கட்டப்படும் வீட்டிற்காக ஆவணங்களில் காண்பிக்கப்படும் நிலத்தில் வீடு கட்டியது போக எஞ்சிய நிலத்திற்கு மட்டுமே காலி மனை என்று வரி வசூலிக்கும் நடைமுறை இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தாலே போதுமானது என்றும் உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.



விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.



விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.



நகரின் தற்காலச் சூழலைப் பொருத்த வரை இவ்விஷயத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வர இயலாது என்றும், எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் சட்ட விதிகளை அமைத்துக் கொள்ளலாம் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.



விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.



கூட்டத் துளிகள்...

தகவல் கொடுத்தது யார்?
கூட்டத்தின் துவக்கமே காரசாரமாக இருந்தது... இணையதளமொன்றில், நகர தெரு விளக்குகள் தொடர்பான தொகுப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், இச்செயல் கண்ணியமிக்க முன்னாள் நகர்மன்றத் தலைவரை அவமதிக்கும் செயல் என்றும் கூறி, இதற்கான தகவல்கள் எங்கிருந்து சென்றது என்றும் கேள்வியெழுப்பினார் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு.

அடுத்து பேசிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், அச்செய்தித் தொகுப்பை தான் முழுமையாகப் படித்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கணக்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில் தவறான தகவல்கள் இருப்பின், அவ்விணையதளத்திடம்தான் கேட்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இறுதியில் கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இக்கூட்டம் தொடர்பான பொருள்கள் குறித்து மட்டும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்குமாறும், இதர விஷயங்கள் குறித்து அது தொடர்பானவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறும் தெரிவித்தார்.



கிணற்றுக்கு மூடி:
பொருள் எண் 03 குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் தினமும் பலர் அலங்கோலமான உடைகளுடன் குளித்துக்கொண்டிருப்பதாகவும், எனவே அதை மூடியமைத்து பாதுகாத்திட வேண்டுமென்றும் கோரிக்கையெழுப்பினார் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன்.

அவரையடுத்து கருத்து தெரிவித்த 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, பேருந்து நிலைய வளாகத்தில் கட்டண கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளதைப் போல கட்டண குளியலறையும் அமைத்துவிட்டால், அதை குத்தகைக்கு எடுப்போர் இதுபோன்று குளிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

நிரூபித்தால் பதவி விலக தயார்!
நகராட்சிப் பகுதியில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளுக்குப் பகரமாக அவசர அடிப்படையில் வாங்கி வைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளில் சிலவற்றை, 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் முறையின்றி அவரது வார்டுக்கு எடுத்துச் சென்றதாக நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் குற்றஞ்சாட்டினார்.

அதனை மறுத்துப் பேசிய உறுப்பினர் ஏ.லுக்மான், நகர்மன்ற உறுப்பினர்கள் தம் கைகளில் தெரு விளக்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் போக்கு சரியானதல்ல என தான் பொறுப்பேற்ற காலம் முதல் ஆட்சேபித்து வருவதாகவும், அவ்வாறிருக்கும் தனக்கு தெரு விளக்குகளை எடுத்துச் செல்ல எந்த அவசியமும் இல்லையென்றும் தெரிவித்தார். “நான் அவ்வாறு எடுத்துச் சென்றதாக நிரூபித்தால் பதவி விலக தயார்! இல்லையென்றால் நீங்கள் பதவி விலக தயாரா?” என்று அவர் துணைத்தலைவரை நோக்கி கேள்வியெழுப்பினார்.



அதனையடுத்து, துணைத்தலைவர் தான் முன்வைத்த குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

நடைபாதை வணிகர்களுக்கு முறையான அனுமதி:
பொருள் எண் 07 குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், நடைபாதையில் வணிகம் செய்வோருக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கட்டணமெதுவுமின்றி முறையான அனுமதி (லைசென்ஸ்) வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், முறையாக தொழில் வரி செலுத்தி கடை வைத்துள்ளவர்களுக்கு தங்கள் கடைகளுக்கு முன்புறம் ஒரு கூரை அமைக்கக் கூட தடை விதிக்கப்படும் அதே நேரத்தில் எந்தக் கட்டணமும் செலுத்தாதவர்களுக்கு இவ்வாறு செய்வதை ஏற்க இயலாது என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய நகர்மன்றத் தலைவர், நடைபாதையில் தள்ளுவண்டி மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் போன்றோருக்கு அனுமதி வழங்குவது குறித்தே பேசப்படுவதாகத் தெரிவித்தார்.

குத்தகைப் பணம் செலுத்தாதோர் மீது நடவடிக்கை:
பல ஆண்டுகளாக ஆடறுப்புத் தொட்டிக்கு குத்தகைப் பணம் செலுத்தாமலிப்போர் மீது நகராட்சியின் நடவடிக்கை என்ன என்று 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் கேள்வியெழுப்பினார்.

அவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பிவிட்டு, அவர்களின் உரிமத்தை தள்ளுபடி செய்யலாம் என ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி தெரிவித்தார்.

பிரச்சினைகள் வரும்...
பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, “இதையெல்லாம் செய்தால் பிரச்சினை வரும்” என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, “இரண்டு நகர்மன்றத்தைப் பார்த்த தங்களைப் போன்ற தைரியசாலிகள் இருக்கையில், பிரச்சினைகள் குறித்து ஏன் பயப்பட வேண்டும்?” என்று கேட்டார்.

அடுத்து பேசிய உறுப்பினர் சுகு, “இதுபோன்ற நடவடிக்கைகள் எங்குமே வெற்றிகரமாக நடைபெற்றதில்லை” என்றார்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், “எங்கு நடைபெற்றாலென்ன? நடைபெறாவிட்டால் என்ன? இங்கு நாம் நடத்திக்காட்டுவோம்...” என்றார்.

துவா செய்ங்க!
“இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க... துவா செய்யுங்க” என்று நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார்.

அடுத்து பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், யாரும் வருகிறார்கள், போகிறார்கள் என்பதற்காக நாம் நேர்மையை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை...” என்று தெரிவித்தார்.

தடுக்காதீங்க!
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கூட்டரங்கிற்கு வெளிப்புறத்தில் பார்வையாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் கூட்டத்தைப் பார்வையிடாதவாறு கூட்டரங்கின் சாளரத்தை (ஜன்னல்) 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் அடிக்கடி மூடிக்கொண்டிருந்தார்.

ஒருமுறை அவ்வாறு செய்கையில், அவரை அவ்வாறு செய்யாதிருக்கக் கேட்டுக்கொண்ட 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, “பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்வையிட சட்டத்தில் அனுமதியுண்டு” என்றார்.

இவ்வாறாக, கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. நகராட்சியின் அடுத்த கூட்டம் 26.04.2012 அன்று நடைபெறுமென இறுதியில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மீடியாக்கள் ஓய்வதில்லை....!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.) [20 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18380

முன்பெல்லாம் நகராட்சியில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி எவ்வித தகவல்களும் பொதுமக்களுக்கு கிடைத்ததில்லை. நம் இணையதளத்தின் உதவியால் அங்கு நடப்பவைகள் யாவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பளிச்சென்று தெரிகின்றது.

இது பல உறுப்பினர்களுக்கு தலைவலியாகவே இருந்தாலும், நேர்மையாக செயல் பட்டு வரும் தலைவியும், இன்னும் சில உறுப்பினர்களுக்கும் நகராட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் இணையதளங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்குச் சென்றடைவதில் மகிழ்ச்சியே!

ஒரு குண்டூசி விழுந்தால் கூட கண்டுபிடிக்கும் அளவிற்கு இத்தளம் கண்காணித்து வருவது பெருமையாக உள்ளது. சாடுவோர் சாடட்டும்! சாட்டை உங்கள் கையில் சும்மா சுழற்றி விளாசுங்க...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [20 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18381

மாஷா அல்லாஹ். இது இது இதத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம். இப்படி வெளிப்படையாக நல்லாட்சி நடப்பதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

முக்கியமாக, பொருள் எண் 4 பற்றி எடுக்கப்பட்டுள்ள முடிவானது சமூகத்தையும் கால சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள நல்ல ஒரு முடிவு. தயவுசெய்து DCW ஐ இதில் பங்கு கொள்ளச்செய்ய வேண்டாம். பின்னர் வேண்டாத வம்பை நாமே விலைக்கு வாங்கியதாக ஆயிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இப்போது நமது மக்கள் ரெம்ப தெளிவாகவே இருக்கிறார்கள்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [20 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18383

இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க... துஆ செய்யுங்க” என்று நகர்மன்ற துணைத்தலைவர் தெரிவித்த செய்தி நூறு சதவீதம் உண்மை.. உண்மை... இதில் எந்த சந்தேகமும் கிடையாது...!

முன் இருந்த நகராட்சி நடப்பு காலத்தில் நமது காயல்பட்டிணம் நகராட்சியில் பணி செய்ய போட்டா போட்டி இருந்தது இது உண்மை... இப்போதுள்ள நகராட்சியில் ஆளை விட்டால் போதும் ஐயா என்கிற அளவுக்கு மக்கள் விழிப்புணர்வு பெற்று பல கேள்விகள் கேட்டு விட்டார்கள்...! கேட்டுகொண்டே இருக்கிறார்கள்...!

இந்த கேள்வி அனைத்தும் அவருக்கு சங்கடமாகவும்.. தான் எதிர்பார்த்து இங்கு வந்தது இந்த நகராட்சியில் பலிக்க மாட்டுகிறதே.. இந்த நகராட்சியில் காலம் தள்ள முடியாது என்று இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகலாம்...! நகர்மன்ற துணைத்தலைவர் சொல்வது உண்மைதான்..

இப்போது நமது மக்கள் ரெம்ப தெளிவாகவே இருக்கிறார்கள்.. எதில் தெளிவு என்று கேட்காதீர்கள்... புரிகிறவர்களுக்கு நல்லாவே புரியும்... அதான் ட்ரான்ஸ்ஃபர் வாங்க காரணம்...!

காலம் என்றுமே ஓரே மாதிரி இருக்காது...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [20 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18384

இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க... துஆ செய்யுங்க” என்று நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கூறுவதின் உள்நோக்கம் என்ன? பத்திரிகையாளரை நகரமன்றம் வரவிடாமல் தடுப்பது.

முந்தைய நமதூர் நகராட்சியில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி எவ்வித தகவல்களும் நமதூர் மக்களுக்கு கிடைத்ததில்லை. பல தவறுகள், ஊழல் மலிந்த முந்தைய நகராச்சி வார்டு உறுப்பினர் துணையுடன் அலுவலர்கள் கைகோர்த்து இருந்தனர். இம்முறை எந்த தவறுகளும் நடக்காது இருக்க நமதூர் இணையதளத்தினர் கழுகு கண்பர்வையாக நகராச்சி முன் வளம் வருவதை கண்டே அலுவலர்கள் பணியிடம் மாட்டம் காண விரும்பலாம்.

ஊழலுக்கு துணைபோகும் வார்டு உறுப்பினர்.,அலுவலகர்களுக்கு வருத்தமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [20 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18385

வெளிப்படை நிர்வாகம் என்று வெளியில் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இவ்வளவு நிதர்சனமாகக் காணும்போது உண்மையில் காயல்பட்டினம் எனது ஊர் என்பதை நினைத்து இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

இதைக் கூட தலைவிக்கு ஜால்ரா என்று சொல்ல சிலர் வரத்தான் செய்வார்கள். வேறு என்ன செய்ய? அவர்களுக்குத் தேவையெல்லாம் ஊரில் நல்ல காரசாரமா ஏதாச்சும் நடந்துகிட்டே இருக்கனும்.

அது சரி... ஒரு பக்கம் ஊர் நன்மைக்காக தலைவியும் சில நல்ல உறுப்பினர்களும் சென்னைக்கும், பல இடங்களுக்கும் போயி மாய்ந்து மாய்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்க, மறுபக்கம் “அதெல்லாம் ஒன்..............னும் நடக்காது... நாங்க சொல்ல வேண்டிய எடத்துல சொல்லி அவங்க கேட்டதையெல்லாம் கொடுக்க வேணாம்னு சொல்லிட்டோம்”ன்னு ஊர் அக்கறையுடன் பேசியதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.

இப்படியும் கீழ்த்தரமான சிந்தனை கூட (பணம் இருக்கிறது என்பதற்காக) ஒருவருக்கு வருமா? மல்லாக்கப் படுத்துட்டு துப்பினால் யார் மேல விழும் துப்பானி?

நானறிந்த வரை ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். ஊர் நன்மைக்கு என்னென்ன செய்யனுமோ அதைச் செய்ய இந்த தலைவி தன் பொறுப்பைப் பயன்படுத்தத் தவற மாட்டாங்க என்று அவர்களின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அதே நேரத்தில் (தலைவி நல்ல பெயர் வாங்கி விடக்கூடாது என்று கங்கனங்கட்டி அலைந்து) அக்காரியங்கள் நடக்காமல் இருக்க முனைப்புடன் செயல்படுவோர் செய்யும் இக்காரியங்களால் தலைவிக்கு எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. காயல்பட்டினத்தைச் சார்ந்த அனைவருக்கும்தான் அது பாதிப்பாக முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எது எப்படியோ, இந்த மனுஷி யாரையும் அவ்வளவு ஈஸியா திருட்டுச் சம்பாத்தியம் செய்ய விட மாட்டாங்க என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியுது.

ஊர் எக்கேடு கெட்டா எனக்கென்ன? எனக்குத் தேவை என் கவுரவம்-ன்னு நினைக்கிறவங்களை நான் என்ன செய்ய முடியும்? நீங்கதான் என்ன செய்ய முடியும்? எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by kithuru mohamed abbas (Dammam) [20 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18387

அஸ்ஸலாமு அழைக்கும்

நமதூர் நகராட்சியின் சாதாரண கூட்டத்தின் செய்திகளையும் புகைப்படங்களையும் பார்த்து விபரங்களை அறிந்தேன் சந்தோசமாக இருக்கின்றது.

அடுத்த கூட்டத்தில் நடக்கும் சில முக்கியமான செய்திகளை (வீடியோ காட்சிகளை) வீடியோ கிளிப்பை லிங்க் செய்தால் கூட்டத்தை நேரில் பார்த்த மாதிரி இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அய்யோ... வடை போச்சே... !!!
posted by S.A.Muhammad Ali - Velli (Dubai) [20 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18389

மதிப்பிற்குரிய காயல் மக்களே! கண்டு கொள்ளுங்கள். இனம் கண்டு கொள்ளுங்கள். தங்களுடைய வளத்தை பெருக்க முடியவில்லையே என்று ஓலம் விடும் குள்ள நரிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். துரோகிகளின் சுயநலத்தால் எதிரிகள் வெற்றி பெற தான் செய்வார்கள்.

இனிமேல் நாம் இங்கே கடை விரிக்க முடியாது, நமது பருப்பு இங்கே வேகாது என்று அதிகாரிகளும் ஓட்டம் பிடிக்க வேண்டும், அரசியல்வாதிகளும் நமக்கு இங்கே வேலை இல்லை என்று தேர்தலில் நிக்காமல் ஓட வேண்டும்.

எத்தனை இடர் வந்தாலும் எம் நிலை மாற மாட்டோம் என்று மக்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள, நேர்மையுடன் பணியாற்றும் உறுப்பினர்களுக்கு ஈருலகிலும் இறைவன் ரஹ்மத் செய்வானாக.

உண்மை நிலவரம் வெளி கொண்டு வந்த வலை தளத்திற்கு கோடானு கோடி நன்றி.

நகர்மன்ற கூட்டத்தை நேரடி ஒலிபரப்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [20 April 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18390

ஒரு அழகான விவாதங்களும், விளக்கங்களும். அனைத்தும் ஊரின் நன்மைக்கே ! நகர்நல மன்ற தலைவர்,உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஊர் நலனில் அக்கறை இல்லாதவர்கள், இடைஞ்சல் பேர்வழிகள், தானும் செய்யாமல் ,பிறரை செய்ய விடாதவர்கள், அடுத்தவர்கள் செய்தால் தனது வறட்டு கௌரவம் என்னாகும் என என்னும் சுயநலவாதிகள் என இவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவராக இருந்தாலும் ,ஊர்நலம் ,பொதுநல மோசடிபேர்வளிகளை அடையாளம் கண்டு அவர்களை இனம்கண்டு , தனிமை படுத்தவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [21 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18391

அட ஹாமித் ரிபாய், இது என்னாப்பா நீ ஒரு புது குண்ட தூக்கி போடுறே. மேட்டர் என்னன்னு தெளிவா சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்ல. கொஞ்சம் டீட்டைலாத்தான் சொல்லேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [21 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18393

நல்ல திட்டம் - புதிய கட்டிடம் அதுவும் கண்ணாடி பில்டிங். மாஷா அல்லாஹ். இந்த பில்டிங் கட்டுவதற்கு ஒரு கோடி - பூனைக்கு மணி கட்டுவது யார்? state government or central government ஓர் நமது ஊர் panchayat.

எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அடுத்த ஆட்சி வரும் பொழுது புதிய பில்டிங்கை மாட்டு கொட்டகையாக மாற்றி விடமாட்டார்களே.

இதையும் கவனத்தில் கொண்டு பிளான் பண்ணினால் நன்னா இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [21 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18396

சட்டமன்ற நிகழ்வுகளை இப்போது தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்புகிறார்களே....அதை காண்பது போல இருந்தது நமது நகராட்சி கூட்ட நிகழ்வுகளில் இந்த இணையதள தொகுப்பு. நண்பர் லுக்மான் அவர்களின் எதிர் சவால் மிக அருமை. அதை அவரின் வார்த்தைகளை விட அந்த அட்டகாசாமான படமே நிரூபித்தது.

நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் போது அது நமதூர் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இப்போதெல்லாம் புகழ்பெற்ற ஊர்களில் அமையும் அரசு கட்டிடங்கள் (குறிப்பாக ரயில்வேநிலையம் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள்) இவை போன்றவைகள் அந்தந்த ஊரின் வெகு மக்கள் கலாச்சாரத்தை முன்னிறுத்தியே வடிவமைக்கப்படுகின்றன. அது போல நமதூரிலும் புதிய நகராட்சி கட்டிடம் வடிவமைக்கப்பட வேண்டும் .இதில் எந்த தவறும் இல்லை. எனவே அதற்க்கான "ப்ளான்"தயாராகும் போது நகராட்சி உறுப்பினர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Kader K.M (Dubai) [21 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18400

எப்பு......இதுவா சாதாரண கூட்டம் ? பாராட்டுக்கள் இணையதளம்! வாழ்த்துக்கள் நகர்மன்ற தலைவி !! வாழ்க நல் உள்ளம் கொண்ட சில நகர்மன்ற உறுப்பினர்கள்!!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டர்கள். உறுப்பினர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு உறுப்பினர் பாணியிலேயே பதில் சொன்ன தலைவிக்கு வாழ்த்துக்கள் ! தங்களின் நிர்வாக திறமை வெளிப்படுகின்றது.

காயலர்கள்தனே களரி சாப்பாடு போட்டால் போதும் என்று எண்ணியவர்களுக்கு,மிளகாய் தொக்குடன் கூடிய சுடு சாதமும்,வெண்ணீரும்! சும்மா.....அதிருதில்லே???

சகோதரனே!இந்த விவாதத்தினை உற்று நோக்கினால் நமது ஊர் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பது புரிந்துவிடும்! சிந்திப்போம்!செயல்படுவோம்!!

DCW ???? எங்களவச்சி காமெடி கீமடி ஒன்னும் பண்ணலியே??? போங்க சார் அம்மகிட்ட சொல்லி complan குடிச்சிட்டு வாங்க !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Mohideen (Jeddah) [21 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18402

நல்ல அருமையான திட்டம். வீடியோ லிங்க் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [21 April 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18403

புதிய கட்டிடடம் கட்டும்பொழுது உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் வசிதிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நகராட்சி நடவடிக்கைகளை பொதுமக்கள் (வசதியுடன்) அமர்ந்து அவதானிக்கும் பொருட்டு கட்டப்படுவது அவசியம் அல்லது காலத்தின் கட்டாயம் என்பது உணரப்படவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Salai.Mohamed Mohideen (USA) [21 April 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 18404

“இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க... துவா செய்யுங்க”. எதனால் பணியாற்ற பிடிக்காமல் என்று கொஞ்சம் விரிவா / தெளிவா சொல்லுங்க சார்.

ஊழல் எதுவும் பண்ண முடிய வில்லையே என்பதற்க்காக 'ட்ரான்ஸ்ஃபர்' என்ற option நம் கவுன்சிலர்களுக்கு இல்லாததினால் , அவர்களில் எவரும் பதவி விலகி... 'நல்லவர்களுக்கு' வழிவிடும் ஐடியா எதுவும் இருக்கிறதா???

நல்லவர்கள் மட்டும் பணியாற்றட்டும்... மற்றவர்கள் 'விடை' பெறட்டும் என்று எல்லோரும் துஆ செய்கின்றார்கள் என்பதனை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

எதோ தங்கள் அரசியல் கட்சி பொதுக்குழு கூட்டம் (வீட்டு விசேசம்) நடப்பது போல, ஜன்னலை சாத்துங்கள் என்று கூறும் நம்ப கவுன்சிலர்களா அக்கூட்டத்தை வீடியோ எடுத்து இணைய தளங்களில் 'போட' அனுமதிக்க போகின்றார்கள்???

ஏற்கனவே தலைவி மீதும், 'இவர்கள்' மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணை ஊத்திக்கொண்டு திரியும்... நம் மீடியா மீதும் பயங்கர 'காண்டில்' கூட இருப்பார்கள். யாருக்கு தெரியும்... 'எளவு காத்த கிளி போல' எப்படா வாய்ப்பு கிடைக்கும் இவர்களை யெல்லாம் பலி வாங்கலாம் / ஒழித்து கட்டலாம் என்று சூழ்ச்சி கூட செய்து கொண்டிருப்பார்கள்.

போன தடவை (அல்லது முந்திய கவுன்சிலர்கள்) மாதிரி இந்த தடவை நம்மால் 'நிறைய' சம்பாதிக்க முடியவில்லையே என்ற ஒரு ஏக்கம் ஒரு சிலருக்கு (?)இருக்கலாம். என்னதான் இவர்கள் கூப்பாடு போட்டாலும், பண பலம் உள்ள ஒரு சிலரின் ஆசிர்வாதம் (blessings ), தங்களுக்கு இருக்கும் வரை 'தங்களை' யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதையில் இருக்கும் இவர்களை... விபரம் தெரிந்த அன்பர்கள் வேணுமென்றால் இங்கே அடையாளம் காட்ட தயங்கலாம்... ஆனால் 'காலம்' அவர்கள் யார் அவர்களை ஆட்டுவிக்கும் சக்தி எது / யார் என்பதனை மக்களுக்கு நிச்சயம் இனம் காட்டும். ஒரு வேளை பூலோகம் விட்டாலும் மேலோகம் இவர்களை விட்டுவிடவா போகின்றது?

அது என்னமோ தெரியவில்லை. இந்த நகராட்சி தேர்தல் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எதோ ஒரு பண பலம் நல்லவர்களையும் தீய வழியில் அழைத்து செல்ல பயன்படுத்தபடுகின்றது என்பதனை மட்டும் பல கமனட்களின் வாயிலாக உணர முடிகின்றது.

வல்ல இறைவன் ஒரு குடும்பத்தில் 'ஒருவருக்கு' மட்டும் அதிக பணத்தை 'அளக்கிறான்' என்றால், அவரை கொண்டு அவருடைய குடும்பம் முன்னேறவும் அவருடைய உற்றார் உறவினர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக. அது போல், ஊரில் ஒரு சிலருக்கு மட்டும் வல்ல ரஹ்மான் நல்லதொரு பரக்கத்தை அதிக செல்வத்தை தந்திருக்கிறான் என்றால்... அவர்களை கொண்டு அவர்கள் குடும்பமும், முஹல்லாவாசிகளும் அது போல ஊர் மக்களுக்கும் தங்களால் முடிந்த நன்மையை செய்வதகாகத்தான். ஊருக்கு / ஊர் மக்களுக்கு நன்மை செய்ய முடிய வில்லை என்றாலும் கூட பரவா இல்லை... தீமைக்கு ரப்பு தந்த செல்வத்தை உரமாக்காதீர்கள். ரப்பு தந்த அளவிலா செல்வத்திட்க்கும் மறுமையில் கேள்வி கணக்கு இருக்கிறது என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து நடப்போமாக!!

இறுதியாக....நகர தெரு விளக்குகள் ஊழல் விசயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைதான் என்ன???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [21 April 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18405

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கண்டிப்பாக தேவைதான். நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பற்றதை துரிதமாக செயல் பட்டால் நல்லது தானே .........

நமது ஊர் பேருந்து நிலையத்திற் அருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் தினமும் பலர் அலங்கோலமான உடைகளுடன் குளித்துக் கொண்டிருப்பதாகவும், எனவே அதை மூடியமைத்து பாதுகாத்திட வேண்டுமென்றும் கோரிக்கையெழுப்பினார் எங்கள் வார்டு உறுப்பினர் ஜனாப் .A.K..முஹம்மத் முஹ்யித்தீன். அவர்களின் இந்த கோரிக்கை ரொம்பவும் அவசியமானது தான்.துரிதமாக செயல் படுத்த வேண்டும்.காரணம் பஸ் ஸ்டாண்ட் ஆக இருபதால் பெண்கள் அதிகம் வந்து போய் இருப்பார்கள் அல்லவா ??

ஓன்று மூடி அமைப்பது அல்லது.அருமை .உறுப்பினர் ரெங்கநாதன் அவர்கள் கூறியது போன்று கட்டண கழிப்பறையாக மாற்றுவதுதான் சரியானது. நம் மேடம் ஆபிதா அவர்கள் யோசித்து கவனம் செலுத்தவும்.

நம் :நகராட்சின் மன்ற கூட்டத்தை நாம் நேரில் பார்ப்பது போன்று இருந்தது. நண்பர் ஓருவர் கூறியது போன்று நகராட்சின் மன்ற கூட்டத்தை வீடியோ கிளிப் செய்தாள் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா. நம் தலைவி அவர்கள் யோசிக்கவும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:பாராட்டும் போது பாராட்டுவோம்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [21 April 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 18406

சட்டமன்ற நிகழ்வுகளை இப்போது தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்புகிறார்களே....அதை காண்பது போல இருந்தது நமது நகராட்சி கூட்ட நிகழ்வுகளில் இந்த இணையதள தொகுப்பு. நண்பர் லுக்மான் அவர்களின் எதிர் சவால் மிக அருமை. அதை அவரின் வார்த்தைகளை விட அந்த அட்டகாசாமான படமே நிரூபித்தது.(capy &pa ste )

லுக்மான் காகா மட்டுமா அசத்தினார்? தம்பி ஜகாங்கீர்,M S சம்சுத்தீன்,அது ஏன் ஊர் பஞ்சாயத்து தலைவி கூட அசத்தினார்!அதெல்லாம் இருக்கட்டும் ,தம்பி சுகு கூட நல்ல பல கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுக்கொண்டார்! இதையெல்லாம் விட காயல் இணைய தளம் நேரடியாக நம்மை இணைத்து காட்டியது!

பாராட்டும் போது எல்லோரையும் நிச்சயம் பாராட்டுவோம்! சுஹைப் காக்கா நீங்கள் அருமையான ஒரு கருத்து ஒன்றை இப்ப உள்ள மக்களுக்கு சொல்லி இருக்கின்றீர்கள்! அதுதான் நம் ஊர் பழமை மாறாத கட்டிடம் (பஞ்சாயத்து) வேண்டும் என்று! SUPER கருத்து காக்கா!

இப்பல்லாம் நவீன காலத்து பச்சோந்திகள் எங்க காக்கா, பழமையை நினைக்கிறது? புதுசு புதுசா கலரை மாற்றும் இந்த பச்சோந்திகள் போல், காலத்துக்கு ஏற்றமாதிரி தனது மூதாதையர் காட்டிய வழியில் நின்று மாறிக்கொண்டே இருக்குது.காக்கா!

ஒரு உண்மையை சொல்லட்டா காக்கா! இப்பல்லாம் . வீட்டை ஜெய்பூர் ஆக்கி ஊரை, பழமை மாறாமல் இருக்கச் சொல்லும் ஒரு கூட்டமும் இங்கே உண்டு காக்கா! நாம்தான் பழமை மாறாமல் இருக்கணும் காக்கா! துஆ செய்வோம்! காக்கா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [22 April 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 18409

அஸ்ஸலாமு அழைக்கும்,

கொஞ்ச நாலா நான் கமெண்ட்ஸ் கொடுக்கவில்லை

காராணம் ஏன் இந்த வீண் வம்புடூ இருந்து விட்டேன் பாவம் இந்த அட்மின் கொஞ்ச நாலா பிரச்னை யிருக்கும் போல ,

எனக்கு மெயில் வருது இபோ எல்லாம் கமெண்ட்ஸ் ,

அப்புறம் நம்ம நகராட்சி உறுப்பினர் ஒருவர் சொல்லுகிறார் பிரச்னை வரும்டூ , அடுத்து நாம துணை தலைவர் சொல்லுகிறார் எல்லோரும் இடம் மாற்றம் பற்று விட்டு சென்று விடுவர் என்று ,

இதையல்லாம் படிக்கும் பொழுது துணை தலைவர் , உறுப்பினர் எல்லாம் வளைந்து குடுப்பார்கள் போல தெய்ரிகின்றது , இது உங்கள் பணம் , உங்கள் ஊரின் பணம் , பாது காத்து கொள்ளுங்கள் ,

நாங்கள் எல்லாம் நம்பிகையோடு இருகிறோம் நேர்மையாக நடப்பீர்கள் என்று , ஒவொரு வார்டு மெம்பரும் முன்பு போல இல்லை , சட்டையை ஈழுத்து கேள்வி கேட்பார்கள் , கேள்வி கேட்க ஒவொரு வார்டு மெம்பருக்கும் அதிகாரம் இருகின்றது ,

விட்டால் நீதி மன்றத்துக்கு கூட ஈழுத்து வீடுவர்கள் பொது நல வழக்கு போட்டு ,

எங்களுக்கு தேவை நேர்மையான ஆட்சி

இப்படிக்கு

Seyed Mohamed Sayna
Kayla Ikiya Mandram (KIM) Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [22 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18410

தம்பி உமர் அனஸ் உங்கள் பாராட்டுக்கு நன்றி....

ஆனால் எனது கருத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பழைமை என்றால் அந்த காலத்து பனங்கட்டை கொளுக்கி ஓடு பழைய சுண்ணாம்பு வெள்ளை அடித்த கட்டிடம் என்று பொருள் அல்ல. நீங்கள் அதைத்தான் ஒரு வேளை பழைமை என்று நினைக்கிறீர்களோ...என்னவோ... என்கிற கருத்தில்தான் நான் இதை இங்கு எழுதுகிறேன்.

நான் சொல்லவருவது என்னவென்றால் இப்போது நாகூர் ரயில் நிலையம் முகலாயர் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அங்குள்ள கோயில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. நம்ம திருநெல்வேலி ரயில் நிலையம் கூட இந்துக்கள் பாணி கட்டிட அமைப்பில் இருப்பதை நாம் கூர்ந்து நோக்கினால் அவதானிக்கலாம்.

அதுபோலவே நமதூர் முஸ்லிம் பெருமக்கள் செறிந்து வாழும் ஊர் ஆகையால் கட்டிட வெளித்தோற்றம் முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் என்பதே எனது எண்ணம். மற்றபடி கட்டிடம் எல்லா நவீன வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

உங்கள் கருத்தும் இதுவாக இருக்கும் பட்சத்தில் எனது கருத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Mohamed Adam Sultan (kayal patnam) [22 April 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18412

படம்பார்த்து கதை சொல் என்று சின்னபிள்ளைகளுக்கு புரியும்படி விளக்குவோமே,அதுபோல் நகரட்சியையே நம் முன்னால் நிறுத்தி நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தந்த, தகவல் துறை சிங்கம் kayalpatnam .com க்கு என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்!

உண்மையை உரித்து காட்டிஇருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் தூயபணி .உண்மைபணிக்கு உங்களுடன் ஒத்துழைக்க என்போன்ற ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். keep it up.

இதுவரை நேர்மையாக பணியற்றிகொண்டிருக்கும் ஒரு வார்டு உறுப்பினரை பார்த்து ,பொருளை கையில் எடுத்து சென்றீர்கள் என்ற,அபாண்டகுற்றச்சாட்டை, ஆதாரமில்லாமல் கூற, அவர் எதிர் சவால் விட்டவுடன் அந்த நிமிடமே அவுட்டாகி அவமானமடைந்து அமர்கின்ற அருமையான காட்சிகளை காணக்கூடிய பாக்கியத்தை பெற்றுள்ளோம்!.

இப்படியே இந்த நகராட்சி சென்றால் பெரும்பாலோர் போய் விடுவார்கள் என்றவுடன், பொறுப்பாக பணிபுரிந்து பணிக்கூலியை மட்டும் பெரும் நல்லவர்கள் மட்டும் இருந்தால் போதும் என்ற நெத்தியடிபதிலால் பேதலித்தவர், எப்படி போனாலும் கேட்டை போட்டு விடுகிறார்களே என்ற எரிச்சலை அவரின் புகைபடம் அப்பட்டமாக சொல்லாமல் சொல்லியது.

என்னதான் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கவனித்தாலும், கடப்பாறையை விழுங்கி கசாயம் குடிக்கும் கைதேர்ந்தவர்களின் கதை சில நேரங்களில் அரங்கேறி விடுகிறது.

அந்த அவல நிலை அகல,அத்தீய கரைபடியாவண்ணம்,படராவண்ணம் அல்லாஹ் காப்பாற்றுவானாக.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [23 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18427

அடுத்த முறை வீடியோ பதிவு செய்யலாமே? எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. கேட்க மறந்தவை....
posted by Salai. Mohamed Mohideen (USA) [23 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18455

தெரு விளக்குகள் தொடர்பான தொகுப்புச் செய்திக்கு... 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு 'பொய்யான குற்ற சாட்டு' என்கின்றார். பொய்யான குற்ற சாட்டு என்று சம்பந்த பட்டவர்கள் வாயை திறக்கா விட்டாலும் சம்பந்த மில்லாத (?) இவர் ஒருத்தராவது (முந்தைய நகர் மன்றத்தில் அங்கம் பெற்றிருந்தவர்கள் இங்கே அமைதியாக இருந்தாலும்) ஒரு பேச்சுக்காவது இது ஒரு 'பொய்யான குற்ற சாட்டு' என்றதில் ஒரு சிறிய சந்தோசம்.

அவ்வளவு உறுதியாக கூறுவதை பார்த்தால்... அவரை கொஞ்சம் பேட்டி எடுத்து நமது இணைய தளம் இங்கே பப்ளிஷ் பண்ணலாம். அநேகமாக பூற்றிசல் போல கிளம்பியிருக்கும் அடுத்தடுத்த பல ஊழல்களை எல்லாம் இங்கே படித்து விட்டு, அடுத்த கூட்டத்தில் இது மாதிரி 'பொய்யான குற்ற சாட்டு' என்பாரோ அல்லது வேலியில் போன ஓணானை ...... என்று நினைத்துக் கொள்வாரோ பொறுத்திருந்து பார்போம்.

" இறுதியில் கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இக்கூட்டம் தொடர்பான பொருள்கள் குறித்து மட்டும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்குமாறும், இதர விஷயங்கள் குறித்து அது தொடர்பானவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறும் தெரிவித்தார்"

கழுவிய மீனில் நழுவிய மீனாக... அழகாக நழுவி விட்டாரோ அல்லது முந்தைய நகர்மன்றத்தில் நடந்துள்ளது என்பதினால் இதில் அவர் தலையிட முடியாதோ என்று தெரிய வில்லை.

இருப்பினும் இது தொடர்பானவர்கள் யார்... அது தொடர்பான அலுவலரோ (அப்போதைய தலைவரோ/ நிர்வாக அதிகாரியோ) 'தாங்களே' முன் வந்து இதற்க்கு விளக்கம் அளித்தால் மிக நன்றாக இருக்கும். செய்வார்களா... வரும் ஆனால் வராது என்கிறீர்களா அதுவும் சரிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகராட்சிக்கு புதிய கட்டிட...
posted by Mohamed Salih (Kayalpatnam) [24 April 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 18460

பொருள் என் 4 குறித்த முடிவு வரவற்கதக்கது..

என் மனமார்ந்த நன்றிகள் ..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் இதமழை!  (24/4/2012) [Views - 2589; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved