Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:56:12 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8337
#KOTW8337
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 23, 2012
அடிப்படை வசதிக் குறைவுகளுக்கு தீர்வு கோரி பாஸ் நகர் பொதுமக்கள் உண்ணா நோன்பு! குளிர்பானம் கொடுத்து நகர்மன்றத் தலைவர் நிறைவுபடுத்தினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3450 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சீரற்ற குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பின்மை, சுகாதாரப் பணியில் குறைபாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளுக்கு விரைந்து தீர்வு தரக்கோரி காயல்பட்டினம் 14ஆவது வார்டு பாஸ் நகர் பொதுமக்கள் நேற்று காலை 10.00 மணியளவில் உண்ணா நோன்பிருந்தனர்.



காந்தி மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலவைர் ஆர்.பாஸ்கர் தலைமை தாங்கினார். அதன் மாவட்ட செயலாளர் கே.அலாய்வாஸ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்றுப் பேசினார். முன்னாள் இராணுவ வீரர் என்.க்ரிஸ்டோஃபர் உண்ணா நோன்பின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். எம்.ஷாகுல் ஹமீத் உண்ணா நோன்பைத் துவக்கி வைத்தார்.

காந்தி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஜி.பி.எஸ்.கார்த்திக், அதன் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.சிவசுப்பிரமணியம், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் எம்.ராமசுந்தரம், ஆழ்வார் திருநகரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், டி.சாந்தம், எம்.ரவி, ஆர்.முத்து கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆழ்வார் திருநகரி ஒன்றிய மாணவரணி செயலாளர் எம்.ராம்குமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் காயல்பட்டினம் பாஸ் நகர், எல்.ஆர்.நகர் பகுதிகளைச் சேர்ந்த - பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இப்பகுதியில் பொதுமக்கள் உண்ணா நோன்பிருப்பதைக் கேள்வியுற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நண்பகல் 12.00 மணியளவில் அவ்விடம் சென்று அவர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை என்றும், தெரு விளக்குகள் பராமரிக்கப் படவில்லை என்றும், குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாரம் ஒருமுறை மட்டுமே வருவதாகவும், அரைகுறையாக பணிகளை முடித்துவிட்டு விரைந்து சென்றுவிடுவதாகவும் அப்போது பொதுமக்கள் தெரிவித்தனர்.



பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், இதுபோன்ற போராட்டங்களை அறிவிப்பதற்கு முன் தனக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என்று கூறினார்.

அப்பகுதியில் மட்டுமின்றி, நகர் முழுக்க நிலவி வரும் குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீண்ட காலமாக நிலவி வரும் இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகர பொதுமக்கள் - அவர்கள் எந்தப் பகுதியைச் சார்ந்தவராயினும் அவர்களின் அடிப்படை வசதிகளுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் தான் மிகவும் கவனத்துடன் இருப்பதாகவும், முறையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்பும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையில் தேவையற்ற கால தாமதம் செய்யப்பட்டால், துறை நடவடிக்கைகளுக்காக மேலதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பொதுமக்களுடன் தானும் இணைந்து போராடப் போவதாகவும், எனவே உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். நகர்மன்றத் தலைவரின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பாஸ் நகர் பொதுமக்கள் தங்கள் உண்ணா நோன்பை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். போராட்டத் தலைவர் ஆர்.பாஸ்கருக்கு நகர்மன்றத் தலைவர் குளிர்பானம் வழங்கி உண்ணா நோன்பு போராட்டத்தை முடித்து வைத்தார்.



இந்நிகழ்வின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, கே.ஜமால் ஆகியோர் உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அடிப்படை வசதிக் குறைவுகளு...
posted by Mohamed Adam Sultan (kayal patnam) [23 April 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18422

புறநகர் ஓட்டால்தான் ஆபிதா அவர்கள் வெற்றிபெற்றார், ஆகவே புறநகருக்கு முதலில் வசதிகள் செய்துகொடுத்த பின்னர்தான் மிச்சமீதி கவனத்தை ஊர்பக்கம் மாற்றான் பிள்ளையை பார்ப்பதுபோல் பாவிப்பார் என்ற பொய் குற்றச்சாட்டை பொடியாக்கி இருக்கிறது இவ் உண்ணாவிரத செய்தி.

முதன் முதலில் உண்ணாவிரத போராட்டம் புறப்படுவதே புறநகர்பகுதியில் இருந்துதான்.

வீண் பழி வெகுதூரம் பயணிப்பதில்லை
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆயிரத்தில் ஒருத்தியம்மா...நீ...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.) [23 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18428

நன்பகல் 12 மணி, உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அளவிற்குத் தன் தாக்கத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் சூரியனையும் பொருட்படுத்தாமல் நகர்மன்றத் தலைவி ஆபிதா மற்றும் சில உறுப்பினர்கள் புறநகர் பகுதிகளில் சேரும் கழிவுகளை திடக்கழிவு மேலான்மை ஆய்வாளருடன் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர் எனும் செய்தி நம் செல்லுக்கு வரவே, கல்யாணக் களறி சோற்றைக் கைகழுவியபடி துளிர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள ரோடு வழியாக பப்பரப்பள்ளியம்மன் கோவிலுக்கு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தோம்.

ஒதுங்கக் கூட ஓர் நிழல் இல்லாமல் சூரிய வெப்பத்தில் தொப்பு தொப்பாக நனைந்து கொண்டு அவர்கள் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். ஆபிதா அவர்களின் செல் ஃபோன் சினுங்கி ஓர் செய்தியை அறிவித்தது. பாஸ்நகரில் ஏதோ ஒர் அமைப்புடன் பொதுமக்களும் உண்ணாவிரதம் இருப்பதாக. கேள்விப்பட்ட உடனேயே அங்கிருந்து பாஸ்நகர் நோக்கி விரைந்தார் தலைவி.

ஒரு தாய்க்கு உள்ள கனிவோடு அம் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன். முதலில் நீங்கள் ஏதாவது சாப்பிடுங்கள் என உரிமையுடன், தாம் கொண்டுவந்த குளிபானத்தை அருகிலுள்ள வீடுகளில் கிளாஸ் வாங்கி வந்து அதைத் தன் கைபட ஊற்றிக் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ஆபிதா.

இனி இது போன்று போராட்டங்களை நடத்து போது எனக்கு தயவு செய்து அறிவியுங்கள். என் அலுவலகமும், இருப்பிடமும் உங்களுக்கான குறைகளைத் தீர்க்க எப்போதும் திறந்தே இருக்கும் என உறுதியளித்தார்.

இங்கு நான் ஆபிதா புராணம் பாட வரவில்லை! மாறாக நம் தலைவியின் ஆர்வம் மற்று சேவையைத்தான் சொல்ல வருகின்றேன். பின்னர் லெட்சுமிபுரம் எல்.ஆர்.நகருக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்து. சிங்கித்துறை நோக்கி பயணித்தார்.

பம்பரம் போன்று சுழன்று வரும் நகர்மன்றத் தலைவி சாட்டையையும் தன் கைவசமே வைத்திருப்பது தான் சில வேட்டைக்காரர்களால் ஜீரனிக்க முடியவில்லை! எது? எப்படியோ? இவர் ஒரு பொருப்புள்ள தலைவிதான் என்பதில் சந்தேகமில்லை!

-ஹிஜாஸ் மைந்தன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புறநகர் மக்களை தாங்கள் புறம் தள்ளினால் இனி அதன் புயல் நகர்மன்றம் வரை வரும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [23 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18437

புறம் தள்ளாதே... புறம் தள்ளாதே... புறநகரை புறம் தள்ளாதே... நகர்மன்ற தலைவியே... புறநகர் மக்களை புறம் தள்ளாதே...புறம் தள்ளாதே... புறம் தள்ளாதே...

புறநகர் மக்களை தாங்கள் புறம் தள்ளினால் இனி அதன் புயல் நகர்மன்றம் வரை வரும்...

சிறுத்தைகளை சீண்டி பார்க்காதே...! சிறுத்தைகள் சீறி நகர்மன்றம் வரும் முன் நகர் மன்றமே.. சீரிய அடிப்படை வசதிகளை செய்து கொடு... புறம் தள்ளாதே... புறம் தள்ளாதே... நகர் மன்றமே...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அடிப்படை வசதிக் குறைவுகளு...
posted by MOHAMED HASSAN (DAMMAM) [23 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18438

மாஷா அல்லாஹ்.இப்படி ஒரு ஊர் தலைவியா.அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதுக்கு சொன்னவனனுக்கு இந்த சேவை ஒரு படிப்பினை.தொடரட்டும் உங்கள் சேவை.அதில் மூலம் வளரட்டும் நம் காயல் மாநகரம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அடிப்படை வசதிக் குறைவுகளு...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [23 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18452

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம் பகுதி மக்களின் அடிப்படை வசதிக் குறைவுகளுக்கு தீர்வு கோரி பாஸ் நகர் .தலைவர்கள் உண்ணா நோன்பு. இருப்பதை அறிந்து.நமது நகர்மன்றத் தலைவி அவர்கள் நேரில் உச்சி வெயிலில் சென்று அப்பகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து.நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் . தேவையற்ற கால தாமதம் செய்யப்பட்டால், பொதுமக்களுடன் தானும் இணைந்து போராடப் போவதாகவும். கூறி உள்ள இந்த தலைவி அவர்களை நினைத்து நாம் பெருமை படத்தான் வேண்டும். நம் ஊர் மக்கள் நல்லதோர் சேர்மனை தான் தேர்வு செய்து உள்ளார்கள்.

நம் நகர்மன்றத் தலைவி அவர்கள் கூறியது போல். இதுபோன்ற போராட்டங்களை அறிவிப்பதற்கு முன் நம் தலைவி அவர்களுக்கு தகவல் தெரிவித்து இருந்தாள் நன்றாக இருந்து இருக்கும்.சரி எல்லாம் நன்றாக நடக்கும்.நம் தலைவி நேரில் ஈடு பட்டு இருபதால் விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்.

இந்நிகழ்வின்போது,நமது நகர்மன்ற உறுப்பினர்களான V.M.S.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, K.V.A.T.முத்து ஹாஜரா, கே.ஜமால் ஆகியோர்கள் உடன் சென்று செயல் பட்டதை நினைக்கும் போது மனதுக்கு சந்தோசம்தான்.இந்த தடவை நம் மக்கள் நல்ல திறமையான வர்களைதான் தேர்வு செய்து உள்ளார்கள் .

ஆமா K.V.A.T.முத்து ஹாஜரா அவர்களை பற்றி நிறையாக நல்ல செய்திகளாக மக்கள் பாராட்டும் படி கேள்வி பட்டு வருகிறோம் .மாஷா அல்லாஹ் இவரை தேர்வு செய்த தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் .சந்தேகம் இல்லை. காரணம் இவர்கள் தம் தொகுதி மட்டும் இல்லாமல் மற்ற தொகுதிகளுக்கும் நம் தலைவி அவர்களுடன் சென்று பாரா பச்சம் இன்றி செயல் ஆற்றி வருவதாக கேள்வி பட்டு வருகிறோம்.பாராட்டுவதுடன்.நாம் இவர்களின் ஹக்கில் துவா கேட்டு வருவோமாக ஆமீன். இவர்களின் நல்ல சேவைகள் மேலும் தொடர வாழ்த்துவோமாக.ஆமீன்

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அடிப்படை வசதிக் குறைவுகளு...
posted by Mohideen (Jeddah) [24 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18463

மக்கள் நல்ல நகர்மன்ற தலைவரை தான் தேர்த்து எடுத்து இருக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் இதமழை!  (24/4/2012) [Views - 2589; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved