Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:17:43 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11850
#KOTW11850
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 19, 2013
சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் கருத்தரங்கம்! காயலர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாவட்ட பிரமுகர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2701 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் குறித்து விளக்குவதற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் சிறுபான்மையின பிரமுகர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-

சிறுபான்மையினருக்காக, தமிழக அரசின் டாம்கோ நிறுவத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவித் திட்டங்கள் குறித்து விளக்குவதற்கான கருத்தரங்கம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள முத்து அரங்கில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாவட்ட அலுவலர் ஆ.சிவகாமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையுரையாற்றினார்.



டாம்கோ கடனுதவித் திட்டங்கள் குறித்த விபரங்களடங்கிய விரிவான கையேட்டை, அதன் மேலாண்மை இயக்குநர் அ.முஹம்மத் அஸ்லம் முதல் பிரதியை வெளியிட, மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.

























அதனைத் தொடர்ந்து, டாம்கோ கடனுதவித் திட்டங்கள் குறித்து மேலாண்மை இயக்குநர் விளக்கிப் பேசினார்.



இக்கருத்தரங்கில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன், டாம்கோ நிறுவன மேலாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் மேடையில் இருந்தனர்.

மாவட்ட தொண்டு நிறுவனங்களின் அங்கத்தினர், வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

காயல்பட்டினத்திலிருந்து, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகி ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், கடையக்குடி தேவாலய பங்குத்தந்தை விக்டர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷம்சுத்தீன், காயல்பட்டினம் நகர்மன்ற 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகி அ.வஹீதா, அவரது கணவர் சின்னத்தம்பி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் அலுவலர் செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் காயல்பட்டினத்திலிருந்து கலந்துகொண்டனர்.



இக்கருத்தரங்கில் பங்கேற்றோர், சிறுபான்மையினருக்கான - அரசின் கடனுதவித் திட்டங்கள் குறித்து பல கேள்விகளைக் கேட்க, டாம்கோ மேலாண்மை இயக்குநர் அ.முஹம்மத் அஸ்லம் அவற்றுக்கு விளக்கமளித்தார்.

கல்விக் கடனுதவி பெறுவதற்காக, மாணவருக்குத் தேவைப்படும் பயில்வுச் சான்றிதழ் (bonofide certificate) குறித்து ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை கேள்வியெழுப்பி விளக்கம் பெற்றார்.

விபரமறியாத சிறு மாணவ-மாணவியருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட வேண்டும் என்ற நியதி குறித்தும், வட்டி அடிப்படையிலான எந்த திட்டமும் இஸ்லாம் மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் வட்டியில்லா கடன் திட்டத்தை முஸ்லிம்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும், இக்கருத்தை தமிழக அரசிடம் பரிந்துரையாக முன்வைக்க வேண்டுமென்றும், இளைஞர் ஐக்கிய முன்னணி பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கூறினார்.



அதற்கு விளக்கமளித்த டாம்கோ மேலாண்மை இயக்குநர், அரசால் வழங்கப்படும் நிதி, விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாகவும், பாதுகாப்புடனும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என்ற நியதி உள்ளதாகக் கூறினார்.



வட்டியில்லா கடனுதவித் திட்டம் குறித்த கேள்விக்கு விடையளித்த அவர், அரசின் சார்பில் என்ன திட்டம் உள்ளதோ அதைப் பற்றி விளக்கவே தாங்கள் வருகை தந்துள்ளதாகக் கூறினார். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by தமீமுல் அன்சாரி ரியாஸ் (அல் அய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ) [19 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30196

அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் (வறஹ்மத்துல்லஹி வபரகத்தஹு)

வட்டி அடிப்படையிலான எந்த திட்டமும் இஸ்லாம் மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் வட்டியில்லா கடன் திட்டத்தை முஸ்லிம்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும், இக்கருத்தை தமிழக அரசிடம் பரிந்துரையாக முன்வைக்க வேண்டுமென்றும், இளைஞர் ஐக்கிய முன்னணி பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கூறினார்.

நான் இந்த செய்தியை படிப்தற்கு முன் நம் காயல் மக்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்று யோசிக்க வைத்தது. நமக்கு தெரியும் இது நம் மக்களுக்கு பயன் தராதது என்று! வட்டி நம் மார்க்கத்தில் இல்லை. அன்பு சகோதரர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கேட்டதுக்கு இணங்க நம் இந்திய அரசாங்கம் நமக்கு இதை பரிசிலனை செய்யாது என்பது நம் அனைவர்களுக்கும் தெரிந்த விசயமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வட்டி செலுத்தாமல் அரசு கடன் பெற முடியுமா?
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [21 September 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 30238

வட்டி - இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. அதை மறுக்க முடியாது.

வாழ்க்கையில் இது ஒரு sensitive matter .

நம் நாடு இஸ்லாமிய நாடு அல்ல.இங்கு அமைவதும் இஸ்லாமிய அரசு அல்ல . அரசு வழங்கும் கடன்களுக்கு வட்டி வாங்கக்கூடாது என்றால் , எந்த அரசும் கடன் வழங்காது. மற்ற மதத்தினருக்கு என்ன விதியோ , அதுவேதான் இஸ்லாமியருக்கும். வட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் கடன் கேட்டு செல்லக்கூடாது. அப்படியானால் நாம் அரசு சலுகைகளை பெற முடியாது.. ஏழைகள் தொழில் உதவிக்கு என்ன செய்வர்? யாரை நாடுவர்? யார் பண உதவி செய்வர்? அரசின் சலுகைகள் நமக்கு கிடைக்காமல் விழலுக்கிரைத்த நீராகிவிடும்.அரசின் திட்டப்படிதான் நாம் வரி (வட்டி ) செலுத்துகிறோம் இஸ்லாமிய அரசு இல்லாத ஒரு நாட்டில். 6% என்பது ஒரு ஒழுங்குமுறை கட்டணம்தான் . சேவை கட்டணம் என்று சொல்லலாம்.வரி என்று கூட சொல்லலாம். அபராதம் என்றுகூட சொல்ல முடியும்.

வாழ்க்கையில் நாம் பல இடங்களில் வட்டியை சந்திக்கிறோம். வங்கிகளில் சேவிங்க்ஸ் கணக்குகளுக்கும் வைப்புதொகைகளுக்கும் வட்டி வரவு வைக்கப்படுகிறது.. இதில் நமக்கு உடன்பாடில்லை என்றால் , நாம் கணக்கெடுத்து , சதகா கொடுத்து விடுகிறோம். பல விஷயங்களில் தாமதமாக செலுத்தும் கட்டணங்களுக்கு அபராதமாக வட்டி கொடுக்கிறோம். மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் , இன்னும் பல அரசு வரி முறைகள் . விற்பனை வரி, வருமான வரி.சொத்து வரி, நம்மை அறியாமலேயே தாமதமாக செலுத்த நேரிடுகிறது. விலைவு . தண்டத்தொகை. கூடுதல் வட்டி, அபராதம். இவைகளை நாம் எவ்வாறு தவிர்ப்பது? எப்படி நாம் விலகுவது.? செலுதித்தானே ஆகவேண்டியதிருக்கிறது! அதுபோன்றுதான் இதுவும்.

2013 ல் ரூபாய் 1 லட்சம் பெறுகிறோம். 5 வருடம் உபயோகிக்கிறோம் . 2018 ம் வருடம் திருப்பிசெலுத்துகிரோம். வட்டி கொடுக்க முடியாது என்றால் , எப்படி நமக்கு அரசு கடன் கொடுக்கும்? 2013ம் ஆண்டு அந்த ரூபாய் 1 லட்சத்தின் மதிப்பென்ன? 2018 ம் ஆண்டு நாம் திருப்பிசெலுத்தும்போது அதன் மதிப்பென்ன? ஒரே மதிப்பா? இல்லையே! குறைந்த மதிப்பு. ரூபாய் மதிப்பில் சரிவு. எனவே நாம் செலுத்தும் இந்த ஒழுங்குமுறை (வட்டி ) கட்டணத்தை , ரூபாய் தேய்மான கட்டணம் என்றுகூட நாம் சொல்லமுடியும்.Compensation for rupee depreciation. இதைதான் நாம் வட்டி என்ற பெயரில் செலுத்துகிறோம்.வட்டி என்று சொல்லாமல் வேறுபெயரில் நாம் அழைத்தால் அது கூடுமானதாக ஆகுமா?

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமிடம் செய்யும் பண பரிமாற்றத்தில் வேண்டுமானால் நாம் இதை (வட்டி என்ற சொல்லை/செயலை ) தடுக்க முடியும். முஸ்லிம் அல்லாதவரிடம் ஒரு முஸ்லிம் செய்யும் பண பரிமாற்ற முறைகளில் நாம் இதை எப்படி தவிர்க்க முடியும்?

சரி. ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவரிடம் பெரும் வட்டியை வேண்டுமானால் எனக்கு வேண்டாம், நான் வட்டி வாங்க மாட்டேன் என நிராகரிக்க முடியும். , முஸ்லிம் அல்லாத நிறுவனம்/ அரசு , ஒரு முஸ்லிமுக்கு கடன் கொடுத்தால், வட்டி தர முடியாது என்றால் எப்படி அது கடன் கொடுக்கும்? பின் முஸ்லிம்கள் எப்படி பொருள் உதவி பெற முடியும்?

எனவே இதற்க்கு ஒரு பரிகாரம் கூறுங்கள். மாற்று வழி சொல்லுங்கள். இதற்காக நான் வட்டியை ஆதரிக்கிறேன் என பொருள் கொள்ள வேண்டாம். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் இஸ்லாமிய வழிமுறைக்கு உட்பட்டு நாம் அரசு சலுகைகள்/ நிதி உதவி பெறுவது எப்படி என்பது போன்ற யோசனைகளை மார்க்கம் தெரிந்த அன்பர்கள் அல்லது ஆலிம்கள் இங்கு எடுத்துச்சொல்லலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved