Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:42:42 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11849
#KOTW11849
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 19, 2013
கஸ்தூரி & சன்ஸ் குழுமத்தில் இருந்து தி இந்து தமிழ் நாளிதழ் வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4433 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

THE HINDU, THE BUSINESS LINE, FRONTLINE, SPORTSTAR போன்ற ஆங்கில பத்திரிக்கைகளை வெளியிடும் கஸ்தூரி & சன்ஸ் குழுமத்தில் இருந்து தி இந்து என்ற பெயரில் தமிழ் நாளிதழ் - செப்டம்பர் 16, 2013 முதல் வெளிவர துவங்கியுள்ளது. ஆரம்பமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இப்பத்திரிகை நாள்தோறும் அச்சிடப்படும். இப்பத்திரிக்கையின் ஆசிரியராக - ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் கே. அசோகன், கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டார்.

உலகின் பல நாடுகளில் - தொலைக்காட்சி, இணையதளங்களின் வளர்ச்சியால், பத்திரிகைகளின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் - ஆண்டொன்றுக்கு 15% - 18% வளர்ச்சியினை பத்திரிக்கைகள் காண்கின்றன. குறிப்பாக - தமிழ் பத்திரிக்கை உலகம் ஆண்டொன்றுக்கு சுமார் 38 சதவீதம் அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.

தென் இந்திய ஊடகங்கள் - 2011-12ஆம் ஆண்டில், விளம்பரம் மூலம் ரூபாய் 21,190 கோடி வருவாய் ஈட்டினர். இதில் தொலைக்காட்சிகளின் பங்கு 58 சதவீதம் ஆகும். பத்திரிக்கைகளின் பங்கு 29 சதவீதம் ஆகும். இத்துறை ஆண்டொன்றுக்கு 14 சதவீத வளர்ச்சி அடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழக ஆங்கில பத்திரிக்கை சந்தையில் வெகு நாட்களாக முன்னணியில் இருந்த தி இந்து - கடந்த சில ஆண்டுகளாக THE TIMES OF INDIA, DECCAN CHRONICLE போன்ற பத்திரிக்கைகளின் வரவால் - கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் - NDTV தொலைகாட்சி நிறுவனத்தோடு, தி ஹிந்து நாளிதழ் துவக்கிய ஆங்கில சேனலை, சில மாதங்களுக்கு முன் - 15 கோடி ரூபாய்க்கு தினத்தந்தி குழுமத்திற்கு தி ஹிந்து குழுமம் விற்றது.

இந்தச் சூழலில்தான், பல பத்திரிக்கைகள் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் பத்திரிக்கை உலகிற்குள் - தி இந்து - நுழைகிறது.

தி இந்து தமிழ் நாளிதழ் வார நாட்களில் ரூபாய் 3க்கும், வார இறுதியில் ரூபாய் 4க்கும் விற்பனை செய்யப்படும்.

புதிய தி இந்து நாளிதழுக்கு போட்டியாக சந்தையில் சிவந்தி ஆதித்தன் குழுமத்தைச் சார்ந்த தினத்தந்தி, 2005 ஆம் ஆண்டு சன் குழுமத்தால் வாங்கப்பட்ட தினகரன், டி.வி.ராமசுப்பையர் குழுமத்தைச் சார்ந்த தினமலர் ஆகியவை உள்ளன. இம்மூன்று பத்திரிக்கைகளும் இணைந்து நாளொன்றுக்கு 37 லட்சம் பிரதிகள் விற்பனை செய்கின்றன. இதர சிறு பத்திரிக்கைகள் சுமார் 3 லட்ச பிரதிகளை விற்பனை செய்கின்றன.

பத்திரிகைகளை இல்லங்களுக்குக் கொண்டு செல்ல செய்தித் தாள்கள் விற்கும் கடைகளையே தமிழ் நாளிதழ்கள் நம்பியுள்ளன. சுமார் 40 சதவீதம் தமிழ் நாளிதழ்கள் விற்பனை, கடைகள் மூலமாகவே அன்றாடம் நடைபெறுகிறது. ஆங்கில நாளிதழ்களைப் பொருத்த வரை 15 சதவீத விற்பனை மட்டுமே கடைகள் மூலம் நடைபெறுகிறது. மீதி விற்பனை சந்தாதாரர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. கடைகள் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பிரதிக்கும், 80 பைசா லாபம் - முன்னணி தமிழ் நாளிதழ்களால் - கடைகளுக்கு வழங்கப்படுகிறது. இது ஐந்தாண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும். பத்திரிக்கைகளின் பிரதி விலையில் இது 20 சதவீதம் ஆகும்.

தி இந்து நாளிதழ் துவக்கமாக 5 லட்ச பிரதிகளுக்கு மேல் அச்சிட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரதிக்கும் பத்திரிக்கையின் விலையில் 40 சதவீதம் லாபமாக கோரி பல பகுதிகளில் - புதிதாக சந்தைக்கு வந்துள்ள தி இந்து நாளிதழை கடைகள் விற்பனைக்கு வைக்கவில்லை.

கடுமையான போட்டிகள் நிறைந்தது தமிழ் பத்திரிக்கை உலகம். பிற மாநிலங்களில் இந்திய மொழிகளில் பத்திரிக்கைகள் நடத்தும் THE TIMES OF INDIA நாளிதழும் தமிழ் சந்தையில் நுழையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் தி இந்து நாளிதழின் தமிழ் வடிவம், காலூன்றுவது எளிதாக இருக்காது. இருப்பினும், இப்போட்டிகளை எதிர்கொள்ள - அதன் 135 ஆண்டு பாரம்பரியம், சொந்த மாநில அனுபவம் ஆகியன அதற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தி இந்து தமிழ் நாளிதழை இணையத்தில் காண முகவரி - tamil.thehindu.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [19 September 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30187

நேற்று ஊரில் இருந்து வந்திருந்த ஒரு சகோதரர் தமிழ் ஹிந்து நாளிதழை கொண்டு வந்திருந்தார். பார்த்த மாத்திரத்தில் இரண்டு விசயங்கள் புலப்பட்டது.

ஒன்று.. காலையில் எழுந்து அலுவலகம் செல்லும் பரபரப்பில், நாளிதழை ஒரு புரட்டு புரட்டி செய்திகளை அறிவோமே.. அது இதில் நடக்காது. நேரம் எடுத்து, நிதானமாக படித்தால் தான் உண்டு. ஆக, ரிடையார்டு ஆட்கள் வரிக்கு வரி படிப்பார்களே அவர்களுக்கு உகந்தது.

இரண்டு. வார்த்தை பிரயோகங்கள், தினத்தந்தி லெவலுக்கு சிம்பிள் ஆக இல்லை. ஆக, என்ன குட்டிக்கர்ணம் அடித்தாலும் தினத்தந்தி உடைய சர்குலேசனை எட்ட முடியாது.

புது முயற்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம். வாழ்த்துவோம்.

கொடுமை என்னன்னா.. ஈ-பேப்பருக்கு காசாம்.

ஆக மொத்தம் வார இதழ் மாதிரி உள்ளது.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.M.I.Zakariya (chennai) [19 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30198

கண்டிப்பாக தினத்தந்தி லெவெலுக்கு தி ஹிந்து வால் இறங்கி வரமுடியாது தான். ஏனென்றால் " மாறிமாறி கற்பழித்தனர் " உல்லாசமாக இருந்தனர் " போன்ற வார்த்தைகள் படிப்பவர்களுக்கு பரவசம் ஊட்டுமல்லவா அந்த மாதிரி கண்டிப்பாக தி ஹிந்து வில் நாம் எதிர் பார்க்க முடியாது

மதச்சார்பின்மைக்காக கடந்த காலங்களில் தி ஹிந்து உம் அதன் குழுமத்தில் உள்ள பத்திரிகையான frontline உம் நிறையவே மெனக்கட்டு உள்ளன. இதில் வரும் நிறைய செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து நிறைய இஸ்லாமிய பத்திரிகைகள் எழுதி உள்ளன இப்போது நாம் அந்த மாதிரி செய்திகளை தமிழிலேயே படிக்கலாம்

முஸ்லிம்களை சாடி அங்கொன்றும் இங்கொன்றும் செய்திகள் தி ஹிந்துவில் வந்தால் கூட மொத்தத்தில் நடுநிலை இழக்க கூடியவர்கள் அல்லர் நாம் நம்பலாம் . ஆகையால் நாம் தாரளமாக இதை வரவேற்கலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [19 September 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30202

சகோதரரே,

என் கருத்தை திரும்பவும் படித்துப்பாருங்கள்..

" வார்த்தை பிரயோகங்கள், தினத்தந்தி லெவலுக்கு சிம்பிள் ஆக இல்லை ".

தினத்தந்தியின் செய்தியின் லெவல் வேறு, வார்த்தை பிரயோகங்கள் வேறு. நான் குறிப்பிட்டது வார்த்தை பிரயோகங்களை.

ஆக, என்ன தான் ஹை லெவலில் இலக்கன சுதியுடன் எழுதினாலும், படிக்க நன்றாக தான் இருக்கும். அதையே தினம் தினமும் படிக்க நேர்ந்தால் ஒரு அலுப்பு தட்டிவிடும். இதை தான் நான் குறிப்பிட்டு உள்ளேனே தவிர, நீங்கள் நினைக்கும் செய்தியின் தரத்தை அல்ல. புரிந்து இருக்குமே..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [19 September 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 30207

ஒருகாலத்தில் பத்திரிகை (பிரிண்ட் மீடியா ) உலகில் தினத்தந்தி மிகவும் பிரபலமாக இருந்தது. சாதாரண மக்கள் எளிதாக படிக்கும் வகையில் அதன் வடிவமைப்பு மொழியமைப்பு இருந்தது.ஆனால் அதன் செய்தியில் தரமில்லை.வெகுகாலமாக அதில் முன்னேற்றம் ஏற்படவும் இல்லை. எப்பொதும் ஆளும் கட்சி ஆதரவு செய்திகளை தாங்கியே பத்திரிகை வெளிவரும். அரசுக்கு எதிரான அல்லது மக்களை விழிப்படையசெய்யகூடிய செய்திகள் ஒருபோதும் இதில் வந்ததில்லை.

மூன்றாம் நிலையில் இருந்த தினமலர், பரபரப்பான செய்திகளை வெளியிட்டு இரண்டாம் நிலையில் இருந்த தினமணி யையும் தாண்டி முதலிடம் பிடித்தது.

1972 களில் வெளிவந்த பரபரப்பாக செய்திகளை வெளியிட்ட 'அலைஓசை' ' மக்கள் குரல்' போன்ற பத்திரிகைகள் சென்னைக்கு வெளியே அவ்வளாவாக பிரகாசிக்க முடியவில்லை.

இடைப்பட்ட காலத்தில் வந்த ஆதித்தனார் குடும்ப்பத்தின் போட்டி நாளிதழான ' தினகரன்' பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை.பிறகு அது சன் குழுமத்திற்கு கைமாரியபிறகும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. புதிய பத்திரிக்கைகள் பல தமிழில் வெளிவந்தும் , போட்டிகள் அதிகரித்தும் , தினத்தந்தியின் தரத்திலும் சர்குலேஷனிலும் பெரிய மாறுதல் ஒன்றும் இல்லை.

2000 ஆண்டுகளில் வலைதளங்களிலும் செய்தித்தாள்கள் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன. அதிலும் தினத்தந்தி, தினகரன் போன்றவை பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. தினமலர், தினமணி போன்ற மேல்சாதியினரின் நாளிதல்களே நாளிதழ் துறையில் ஆதிக்கம் செலுத்தின..ஆங்கில நாளிதல்களிலும் இதே நிலைதான்.

அதில் விதிவிலக்காக அமைந்ததுதான் "தி ஹிந்து " நாளிதழ். அரசுக்கு ஆதரவான / எதிரான செய்திகள் , அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான/எதிரான செய்திகள் , மத சார்பற்ற நிலைப்பாடு , அரசு மற்றும் அரசியல்கட்சிகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாமை, செய்திகளில் நம்பகத்தன்மை போன்ற கொள்கைகளால் மக்கள்மனதில் முதல் இடம்பிடித்தது.

முதன்முதலில் சென்னையை மையமாக வைத்து ஆங்கில நாளிதழாக துவங்கிய "தி ஹிந்து " புதிய தொழில் நுட்பம். தனி விமானத்தின் மூலம் இந்தியாவில் உள்ள பிற இடங்களுக்கு துரிதமாக சென்றடைவது. .சென்னையில் மட்டுமே அச்சு கோர்த்து பிற இடங்களில் பிரிண்ட் செய்து வெளியிடும் நவீன தொழில் நுட்பம். படிப்படியாக இந்தியா முழுவதும் அதன் எல்லைகளையும் விரிவடைய செய்தது. தற்போது இந்தியா முழுவதிலும் வெளிவரும் ஒரே நாளிதழ்.

முஸ்லிம்களுக்கு ஆதரவான நாளிதழ் என்று சொல்ல முடியாவிட்டாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நாளிதழ் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

இப்போது தமிழில். வாழ்த்துவோம் அதன் பணி சிறக்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. E-Paper விலை
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [21 September 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30234

தம்பி சாளை ஜியாவுத்தின் கவனத்திற்கு,

நீங்கள் குறிப்பட்டது போல் E-Paper -க்கு சந்தா கட்ட வேண்டும். ஆனால் online paper -க்கு காசு கிடயாது. 'the hindu' ஆங்கில பேப்பர் e-paper -க்கும் சந்தா கட்ட வேண்டும். நீங்கள் online paper பார்த்து கொள்ளுங்கள். இது கடந்த 10 வருடமாக உள்ள நடைமுறை.

'The Hindu' வாசகர்கள் எப்போதுமே படித்த மக்கள்தான். அதன் English கொஞ்சம் high standard தான். அதையும் மீறி அதன் நடுநிலை, தவறை சுட்டிக்காட்டுவது, மதசார்பற்ற நிலை, அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலபடுத்துவது ஆகிய அம்சங்களினால்தான் 135 வருடம் தாக்கு பிடித்துள்ளது.

நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழில் தாக்குபிடிக்க வேண்டுமென்றால் அதன் சொல்நடை எளிதாக, பாமரனுக்கும் புரியும்படியும், அதே நேரத்தில் அதன் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமலும் இருக்க வேண்டும். 135 வருடம் அனுபவமுள்ளவர்கள் காலபோக்கில் சரி செய்வார்கள். ஆனால் 'The Hindu' ஆங்கில பேப்பரின் மதசார்பற்ற கொள்கையில் இருந்து தமிழ் 'தி ஹிந்து' மாறாதவரை, நாம் இந்த பத்திரிக்கையை ஆதரிக்க வேண்டும்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved