Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:34:16 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12037
#KOTW12037
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 9, 2013
முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக்! முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2895 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், முஸ்லிம் சமுதாயத்தை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கண்ணியத்துடன் வழிநடத்துவதாகவும் முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் பேசியுள்ளார்.

மாநாட்டு நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

அரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடம்பெற்று முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். முஸ்லிம் சமுதாயத்தை இன்று கண்ணியத்தோடு வழி நடத்துகிறார் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில் தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் மனம் திறந்த பாராட்டு தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 05ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.



இம்மாநாட்டில் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் ஏ. செய்யது பட்டாணி வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே.குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மு.க.ஸ்டாலின் உரைச்சுருக்கம் வருமாறு:-

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூடி 12 தீர்மானங்களை நிறைவேற்றி, மாலையில் நடைபெறுகின்ற மாநில மாநாட்டிலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு கருத்தரங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு தலைப்புகளில் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பங்கேற்று அதிலே மிகச்சிறப்பாக உரையாற்றி இருக்கிறீர்கள்.



பேராசிரியர் உரையாற்றும்போது பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் மிகச்சிறப்பான உரையை குறிப்பிட்டு சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. இக்கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், அந்த அற்புதமான உரைகளை கேட்க தவறிவிட்டோமோ என்ற வருத்தம்தான் அது.

என்னை இந்த மாநாட்டிற்கு அழைத்தபோதும், அழைப்பிதழை தந்த சமயத்திலும் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டேன். “06.30 மணிக்கு வாருங்கள்! 08.00 மணிக்கு அனுப்பி விடுகிறோம்...” என்றார்கள். அவர்கள் முற்கூட்டியே வரச்சொல்லியிருந்தால் கருத்தரங்கில் எழுச்சியோடு உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையை கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த மாணவ நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடையில் ஒரு பொருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்ன பொருத்தம் என்றால், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொருளாளரான பி.கே.குஞ்ஞாலி குட்டியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான நானும் கலந்து கொண்டிருப்பதுதான். திட்டமிட்டுத்தான் அழைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

மாநாட்டு தீர்மானங்கள்:

இங்கே 10 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தீர்மானங்கள் இந்த மேடையில் முன்மொழியப்பட்டு, உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தீர்மானங்களை நிறைவேற்றித்தாருங்கள் என்று உணர்வு பூர்வமாக கோரியிருக்கிறீர்கள்.

அத்தீர்மானங்கள் இங்கே முன்மொழியப்பட்டபோது, பேராசிரியர் என்னிடத்திலே சொன்னார்: “ஏதோ நீங்கள் ஆட்சியில் இருப்பதைப் போல இந்த தீர்மானங்களை நாங்கள் எடுத்து சொல்கிறோம்...” என்று இங்கே பேசுகிறபோது கூட அதை எடுத்து சொன்னார்கள். அதை மாற்றிக் கூட சொன்னார்கள். நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மேடையிலேயே அதை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற உறுதிமொழி தந்திருப்பீர்கள் என்றார்கள்.

எனக்கு என்ன உணர்வு எற்படுகிறது என்று கேட்டால், கலைஞர் முதல்வராக, தி.மு.க. ஆட்சியிலே இருந்திருந்தால் இந்த தீர்மானங்களை முன்மொழிய வேண்டிய அவசியமே இருந்திருக்காது, அந்த வாய்ப்பை தமிழக மக்கள் தவற விட்டுவிட்டார்கள். நான் உங்களைக் குறை சொல்லவில்லை. தயவு செய்து யாரும் தவறராக கருதி விடக்கூடாது. தமிழக மக்கள் தவற விட்டுவிட்டார்கள். அதனால் இப்பொழுது வேதனைப்படுகிறார்கள்; வருத்தப்படுகிறார்கள்; துக்கப்படுகிறார்கள்; வெளியிலே சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள்.

உரிமையோடு வரக்கூடியவர்கள்:

முஸ்லிம் மாணவர் பேரவையின் இந்த மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கேரள மாநில தொழில் அமைச்சர் வந்திருக்கிறார். நான் வந்திருக்கிறேன். தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடியவன்தான். தலைவர் கலைஞர் அவர்களாக இருந்தாலும் சரி! திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்களைப் போன்றவர்களாக இருந்தாலும் சரி! நீங்கள் அழைக்கிற போதெல்லாம் வரக்கூடியவர்கள். அதையும் தாண்டி உரிமையோடு சொல்ல வேண்டுமானால் நீங்கள் அழைத்தாலும் அழைக்கவில்லையென்றாலும் உரிமையோடு வரக்கூடியவர்கள் நாங்கள்.

அந்த வகையிலேதான் இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் பெருமையோடு வந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்வாய்ப்பை பெற்றிருக்கின்றேன். அதற்காக முஸ்லிம் மாணவ பேரவை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு, அதையும் தாண்டி பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிமைகளைப் பெற்றுத்தந்த முஸ்லிம் லீக்:

இந்தியத் திருநாடு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் 1906ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்டு, முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மைகளைப் பாதுகாத்து, கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்தது. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கக் கூடிய அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இந்த இயக்கத்தை தலைவராக பொறுப்பேற்று அயராது உழைத்திருக்கக் கூடிய, அந்த உழைப்பை பாடுபட்டிருக்கக் கூடிய அந்த பண்பை சமு தாயத்தின் வளர்ச்சிக்காக குரல்கொடுத்திருக்க கொண்டிருக்கக் கூடிய அந்த உணர்வுகளை எல்லாம் நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இடம்பெற்று, அன்றைக்கே சமுதாயத்திற்காகக் குரல் கொடுத்திருக்கிறார். முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, தனித்தன்மைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கே குரல் கொடுத்திருக்கக் கூடிய அந்த வரலாற்றை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறோம்.

இன்னமும் சிறப்பாக சொல்ல வேண்டும். என்றால், இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இடம் பெற வேண்டும் என்ற பிரச்சினை வந்த நேரத்தில், இலக்கண வளமும், இலக்கிய நயமும் ஒருங்கே அமைய பெற்றிருக்கக்கூடிய என்னுடைய தாய்மொழி தமிழ்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக அமைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.

அப்படிப்பட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி, அவருடைய மறைவுக்குப் பின்னால் மறைந்த பெருமதிப்பிற்குரிய அப்துஸ் ஸமது அவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தி, அவர் மறைவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் சிறப்போடும், கண்ணியத்தோடும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு தலைவர்கள் இடம்பெற்று, இந்த சமுதாயத்திற்கு நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா காலந்தொட்டு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து தோழமை உணர்வோடு, அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்கள் அதே நிலையை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

கலைஞர் தந்த நன்மைகள்:

அந்த உணர்விலேதான் தலைவர் கலைஞர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய பெருமக்களுக்காக எத்தனையோ சாதனைகளை, திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கல்வி வேலை வாய்ப்பு பெறுவதற்காக முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தபோது, அதை நிறைவேற்றித் தந்தார். பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை முஸ்லிம் சமுதாயத்திற்காக வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இதன் காரணமாகத்தான் பொறியியல் கல்லூரியிலும், மருத்துவக் கல்லூரியிலும் முஸ்லிம் மாணவர்கள் ஏராளமானோர் பயிலக்கூடிய வாப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. இதனை நான் பெருமையோடு இங்கே குறிப்பிட முடியும்.

பெண்களுக்கு சொத்திலே பங்களிக்கப்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்காக தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் மிக முக்கியமானது எது என்றால், சொத்திலே பெண்களுக்கு சம உரிமை தந்திட வேண்டும் என்பதுதான். 1929இல் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை, அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு 1989இல் நிறைவேற்றித் தந்தது கலைஞர் தலைமையிலான திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சி.

1969இல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியதும் தி.மு.கழக ஆட்சிதான். 1999இல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 2001இல் காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அந்தப் பணியையும் தொடங்கி வைத்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008இல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்.

இப்படி ஒரு பெரிய பட்டியலை நான் தர முடியும். நேரத்தின் அருமை கருதி நான் சுருக்கமாகவே இவைகளை எடுத்து நான் சொல்லியிருக்கிறேன்.

முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து உருவான தலைவர்கள்:

மாணவச் செல்வங்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டை நடத்துகிறீர்கள். இங்கு உரையாற்றியவர்கள் கூட சொன்னார்கள், ‘பெரியவர்களாகிய நாங்கள் இதில் தலையிடவில்லை; ஒதுங்கிக் கொண்டோம். முழுப் பணியையும் மாணவர்கள் இடத்தில் ஒப்படைத்தோம் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று.

இங்கே உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள், முஸ்லிம் மாணவர் பேரவை 1958லே உருவாக்கப்பட்டது என்று. அந்த அமைப்பிலிருந்து உருவானவர்தான் கேரளாவின் முதல்வர் பதவியிலே அமர்ந்த சி.எச்.முஹம்மது கோயா அவர்கள். அதைப் போன்று இன்றைக்கு மத்தியிலே அமைச்சர் பொறுப்பிலே உள்ள இ.அஹமது அவர்களும் இந்த அமைப்பிலிருந்து உருவானவர்தான். ஏன், இங்கே அமர்ந்திருக் கக்கூடிய கேரள தொழில்துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டியும் இந்த அமைப்பில் இருந்து உருவானவர்தான்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்தில் முஸ்லிம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் இன்று இயக்கத்தை நடத்தக்கூடிய கண்ணியத்திற்குரிய அய்யா காதர் மொகிதீன் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவைகளை எல்லாம் நான் இங்கு எடுத்துச்சொல்வதற்கு என்ன காரணம் என்றால், வரக்கூடிய தலைமுறையினரான மாணவச் செல்வங்கள் எழுச்சியோடு மாநாட்டை நடத்துவது மட்டுமல்ல, தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல, இங்கே பேசுகின்ற உரைகக்ளை கண்ணுங்கருத்துமாகக் கேட்பது மட்டுமல்ல, நாட்டினுடைய நிலைமைகளை நினைத்து பார்த்து இங்கு சொல்லப் படக்கூடிய கருத்துக்களை ஏற்று செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதை மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எதையும் என்று சொன்னால் எதைச் செய்ய வேண்டுமோ அதை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நாம் கம்ப்யூட்டரின் முன்னேற்றத்தைக் கண்டு கொண்டு இருக்கிறோம். இன்று மாணவர்களின், இளைஞர்களின் வாழ்வில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதை மறுத்திட முடியாது.

ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி என்பது வேண்டும் ஒரு நாடு வளர வேண்டுமானால் விஞ்ஞான வளர்ச்சி தேவை. விஞ்ஞான வளர்ச்சி சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. விஞ்ஞான வளர்ச்சியால்தான் செல்போன் உருவானாது. அந்த செல்போன்கள்தான் கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர்களையே காட்டிக் கொடுத்தது. அந்த வளர்ச்சி தேவையில்லை.

மாணவர் போராட்டம்:

1967இல் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு எது காரணம் என்று சொன்னால் மாணவர் அமைப்புதான். 1937-38ஆம் ஆண்டிலே இந்தி திணிப்பை எதிர்த்து போராடிக்கூடிய மொழிபோர் தொடங்கப்பட்டபோது, அதன் உச்சகட்டமாக அது 1962இல்தான் வெடித்தது. திணிக்கப்படக்கூடிய இந்தியை எதிர்க்க வேண்டும். நம்முடைய தாய்மொழி அழகு தமிழ் மொழியைக் காப்பற்றிட வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்கிறது.

இந்தப் போராட்டம் உச்சகட்டத்தை அடைகிறது. தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு காராகிரகத்தில் அடைக்கப்படுகிறார்கள். அண்ணா சிறையில் அடைக்கப்படுகிறார். தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பல தலைவர்கள் இப்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அப்போது தமிழகத்தில் இருந்த இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.

எங்கு பார்த்தாலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சிதம்பரம் நகர் வீதியிலே ஒன்று சேர்ந்து ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அவர்களின் வலது கையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வண்ணக்கொடி. இடது கரத்தில் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என எழுதப்பட்ட அட்டை அதைத் தாங்கி முழங்கி வருகிறார்கள்.

அப்போது கோட்டையில் அமைர்ந்திருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உத்தரவிடுகிறார்கள். இந்தியை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும், தமிழ் வாழ்க என எவனாவது வாய் திறந்து சொன்னாலும் அவனை எல்லாம் காக்கை குருவிகளைச் சுட்டு தள்ளுவதைப் போல் சுட்டுத் தள்ளுங்கள். என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதற்குக் கட்டுப்பட்டு காவல் துறையினர் செயல்படுகிறார்கள். காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதை போல் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

அப்படி சுடப்பட்ட நேரத்தில், அந்த மாணவர் பட்டாளத்துக்கு தலைமை ஏற்று நடத்திய ஒரு மாணவன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவன். அவன் யார் என்று கேட்டால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீசார் பெற்றெடுத்த செல்வன் அவன் பெயர் ராஜேந்திரன். நீங்கள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு சென்றால் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குள்ளே ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலைதான் ராஜேந்திரனுடைய சிலை.

இன்னும் பெருமையுடன் சொல்கிறேன் அவன் படித்த பல்கலைக் கழகத்திலே இருக்கிறது உலகத்திலேயே எந்த பல்கலைகழகத்திலும் படித்த மாணவனுக்கு சிலை கிடையாது. ஆனால் சிதம்பரத்தில் இருக்கக் கூடிய அண்ணாமலை பல்கலை கழகத்தில் இருக்கிறது. அவன் ஏன் சிலையாக மாறியிருக்கிறான் என்றால், அந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வந்தபோது போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறான். அவன் நெஞ்சிலே குண்டு பாய்கிறது. அவன் கீழே சாய்கிறான் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான். அவனை பெற்றெடுத்த பெற்றோர்கள் ஒரு போலீசார் குடும்பம்.

அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மாணவர்கள் முயற்சிக்கிறார்கள். அவன் தடுக்கிறான். நியாயமாக அவன் என்ன சொல்லியிருக்க வேண்டும், என் தாய், தந்தையரைப் பார்க்க வேண்டும்! என் உறவினர்களைப் பார்க்க வேண்டும் என்று. ஆனால் அவன் கடைசி நேரத்தில் கூட நான் படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்று கூட சொல்லவில்லை. அந்தக் கடைசி நேரத்தில் கூட அவன் முழங்கிய முழக்கம் எது என்று சொன்னால், இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று அந்த முழக்கத்தோடுதான் உயிர் பிரிந்தது.

ஆக, அந்த உணர்வு மாணவர், இளைஞர்கள் இடத்தில் இருக்கிறதா என்றால் அது குறைந்து கொண்டிருக்கிறது. நமக்காக இல்லையென்றாலும், நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காக உங்களைப் போன்ற மாணவர்கள், இளைஞர்கள் முன்வந்தால்தான் ஒரு புத்துணர்ச்சியை, மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அதை ஏற்படுத்துவதற்கு உறுதி எடுக்கின்ற முயற்சியிலேதான் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த உணர்வோடுதான் நானும் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்கள் தீர்மானங்கள் வெற்றி பெற தலைவர் கலைஞரோடு சேர்ந்து நானும் ஒத்துழைப்பேன் என உறுதி கூறுகிறேன்.


இவ்வாறி தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில இணைச்செயலாளர் முஹம்மது அல் அமீன் நன்றி கூறினார்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு குறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah ) [09 October 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 30604

1969இல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படு த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியதும் தி.மு.கழக ஆட்சிதான். 1999இல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 2001இல் காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அந்தப் பணியையும் தொடங்கி வைத்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008இல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்

தந்தையும் தனயனும் இந்த பட்டியலை தான் தலைமுறை தலைமுறையாய் வாசித்து கொண்டு இருக்கிறீர்கள்!! மேலே சொன்ன லிஸ்ட் இல் இருந்து எந்த முஸ்லிம் பயனடைந்தார்கள் என்று சேர்ந்து சொல்லுங்கள்!!! சரி சந்தடி சாக்லே விண்ணபித்த அனைவருக்கும் ஹஜ் அனுமதி என்று சொல்லிட்டீங்களே கழக ஆட்சி சவுதியிலும் நடந்ததா !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாசக்கார நண்பர்!
posted by kavimagan (doha...qatar) [09 October 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30608

தோழர் சீனாஷ் அவர்கள், ஸ்டாலின் அவர்கள் பேசியதில் இருந்து இரண்டு விஷயங்களை (மறதியால்) குறிப்பிடாமல் விட்டு விட்டார்.

முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தது மற்றும் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது....

அதனையும் குறிப்பிட்டு இதனால் பயன் அடைந்த முஸ்லிம்கள் யாரேனும் உண்டா? என்று கேட்டாலும் கேட்பார்.... கலைஞர் மீது அவ்வளவு பாசம் அவருக்கு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தலைவர்களுக்கு மணிமண்டபம் முக்கியமல்ல...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30610

சகோதரர் Cnash அவர்களின் கருத்துக்கு உடன் படுகிறேன்...

தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாலும் சிறுபான்மை தலைவர்களின் பெயர்களை சாலைகளுக்கும் - கட்டிடங்களுக்கும் பெயர் சூட்டுவதாலும் முஸ்லீம்கள் வாழ்வுரிமை பெற்று விட்டார்களா...! என்னடா கொடுமை....!

அணைத்து அரசியல்வாதிகளும் அரசு வேலைவாய்ப்பில் முஸ்லீம்களை இன்னும் பின்தங்க வைக்கப்பட்டபடியே நடத்துகிறார்கள்... தேவைக்கு பயன்படுத்தப்படும் ஒரே கட்சி சிறுபான்மை கட்சி அது முஸ்லீம் லீக் கட்சி ஓன்றுதான்..!

தேர்தல் நேரத்தில் கடைசியாக வெற்றி பெற மாற்று சூழல் தி மு க க்கு தேவைப்பட்டால் அது மதவாத பி ஜ பி உடனும் சேரும்... முன்பு நடந்ததை மக்கள் மறந்துவிடவா போகிறார்கள்...!

அண்ணன் பி ஜ அவர்களின் சிறுபான்மை இட ஒதுக்கீடு உரையாடல் நினைவுக்கு வந்து போகிறது...

தலைவர்களுக்கு மணிமண்டபம் முக்கியமல்ல...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இப்படி சொல்லி சொல்லியே நமது மக்களை பின்னுக்கு தள்ளியது தான் மிச்சம்.
posted by syed ahamed (chennai ) [09 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30612

கலைஞர் காயிதேமில்லத் அவர்களின் தம்பியும் அல்ல. எனக்கு பின் எனது சமுதாய பாதுகாவலர் கலைஞர் என்று காயிதே மில்லத் அவர்கள் சொல்லவும் இல்லை....

இப்படி சொல்லி சொல்லியே நமது மக்களை பின்னுக்கு தள்ளியது தான் மிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இதெல்லாம் அரசியல்லே சகஜம்பா
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [09 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30613

என்ன சீனா பாய், எங்க ஆட்சியலதான் ஹஜ்ஜுக்கு விமானத்துல கூட்டிகிட்டு போனோம், கலைஜர் சொல்லிதான் ஜித்தா ஏற்போட்டுல இருந்து மக்காவுக்கு பஸ்ல கூட்டிகிட்டு போராங்க... இப்படியெல்லாம் சொன்னாலும் தி மு க மேலுள்ள பக்தில அதையும் நம்புவாக. நீங்க போயி இதெல்லாம் பெரிசு படுத்துகிறீர்களே?

இதெல்லாம் அரசியல்லே சகஜம்பா

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Cnash (Makkah) [10 October 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 30626

பச்சை திரையை கண்ணில் கட்டி கொண்டு மஞ்சள் துண்டுடன் புது உறவு துவங்கி இருக்கும் கவிமகனாருக்கு முதலில் வாழ்த்துக்கள்!!

அன்று உங்களுக்கு வேஷத்தலைவராக தெரிந்து இன்று பச்சை கண்ணாடி அணிந்த உடன் பாச தலைவராக மாறி இருக்கும் தலைவரின் தளபதி சொன்ன இட ஒதுக்கிடுக்கு பிரச்சனைக்கு அன்று சொன்ன பதிலையே உங்களுக்கு சமர்ப்பணம் செய்யும் நாள் வரும் என்று எதிர்பார்க்க வில்லை

ஓர் அழகான வீட்டை துப்புரவு செய்து, வண்ணம் பூசி, அலங்கரித்து, அந்த வீட்டு வாயிற்படி மீது, அழுகிய குப்பையை கொட்டி வைத்தது போல், இனத்துரோகி கருணாநிதியை மேடையில் ஏற்றி, நாறும் குப்பைக்கு நறுமணம் என்று பட்டம் வேறு அளித்திதிருப்பதை மனசாட்சி உள்ள எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று நம்புகிறேன்.

எந்த மேடையில் ஏறினாலும் வாக்குறுதி என்ற பெயரில், அல்வா கொடுப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. பாரதீய ஜனதா உடனான இவர்களது காதல் முறிந்து போனது பதவிச் சண்டயாலேயன்றி, அடிக்கடி இவர் காற்றிலே பறக்க விடுகின்ற கொள்கையினால் அல்ல என்பதை, நாட்டு நடப்புகளை அவதானிக்கின்ற எல்லா நண்பர்களும் அறிவார்கள்.

இடஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்திலே, மறைந்த தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் கோரிக்கை வைத்த போது, அவரைக் கடிந்து கருணாநிதி உரைத்த துரோக வார்த்தைகள் சட்டமன்றக் குறிப்பிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது தோழர்களே!

பிற்காலத்தில் லத்தீப் அவர்களை கொண்டே, தாய்சபையை இரண்டாகப் பிளந்து தந்தை சபையையும் உருவாக்கிய கயமையின் மொத்த உருவத்திற்குப் பாராட்டும் பட்டமும் தந்திருப்பத்தின் பின்னணி பேராசியருக்கே வெளிச்சம். எனதருமைத் தாய்சபையே! கருணாநிதியின் கயமைப் பிடிக்குள் சிக்காமல், காய்தே மில்லத் அவர்களின் கண்ணியமிக்க வழியில், இனியேனும் நடைபோட, என்னைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள். கருத்து உபயம் கவிமகன் (அன்றும் - இன்றும் )

நாள் : December 13, 2010 தகவல்: Kayalpatnam .com

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5262

உங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மறுநாளே ஏற்காடு இடைதேர்தலுக்கு பிஜேபி க்கு ஆதரவு கடிதம் எழுதி இருக்கிறார்.!!!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved