Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:26:12 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12231
#KOTW12231
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 2, 2013
KCGC சார்பில், ‘தி மெஸேஜ்’ஆங்கிலப் படக்காட்சியுடன் பெருநாள் ஒன்றுகூடல்! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2788 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், ‘தி மெஸேஜ்’ ஆங்கிலப் படக்காட்சியுடன் ஈத்மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. சென்வை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

ஈத்மிலன் - பெருநாள் ஒன்றுகூடல்:

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் அவன் திருப்பொருத்தம் நாடி வாழ்ந்திடும் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.

புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த படி, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) ஈத்மிலன் நிகழ்ச்சியான ‘தி மெசேஜ்’ திரைப்படத்துடன் கூடிய மார்க்க சொற்பொழிவு கூட்டம், அல்லாஹ்வின் மாபெருங்கிருபையால், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 07.00 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

காயலர்கள் வருகை:

மக்ரிப் தொழுகைக்கு முன்பாகவே காயலர்கள் திரையரங்கு நோக்கி குடும்பத்துடன் சாரி சாரியாக சங்கமிக்கத் துவங்கினர்.



தொழுகை நிறைவேற்றம்:

ஆண்கள் அருகிலுள்ள ராஹத் பிளாஸாவின் 4ஆவது தளத்தில் உள்ள தொழுமிடத்திலும், பெண்கள் திரையரங்கின் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியிலும் மக்ரிப் தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.

அரங்க இருக்கையமைப்புகள்:

தொடர்ந்து, திரையரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த KCGCயின் தன்னார்வத் தொண்டர்களிடம் நுழைவுச்சீட்டைக் காண்பித்து ஒவ்வொருவராக அரங்கினுள் சென்றனர். அரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் A முதல் H வரிசை வரை ஆண்களுக்கென்றும், J முதல் கடைசி வரை பெண்களுக்கென்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கை அமைப்புப்படி, முறையே ஆண்களும் பெண்களும் அமரத் தொடங்கினர். அரங்கிற்குள் நுழைந்தவர்களுக்கு தண்ணீர் புட்டிகள் வழங்கப்பட்டன. சரியாக 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின.





மேடை நிகழ்ச்சிகள் துவக்கம்:

தி மெசேஜ் படம் திரையிடுவதற்கு முன்பாக, ஈத்மிலன் நிகழ்ச்சி துவங்கியது. மிகச் சுருக்கமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் KCGCயின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் இறைமறை ஓதி துவக்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.

அடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவாற்ற வந்திருந்த மவ்லவீ யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹீ, KCGCயின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், துணைத்தலைவர் ஸ்மார்ட் அப்துல் காதிர், செயற்குழு உறுப்பினர் எஸ்.இப்னு சுவூத் ஆகியோரை மேடையில் வந்தமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை ஏற்று மேடையில் அமர்ந்தனர்.

செயலர் உரை:

பின்னர் ஈத்மிலனில் கலந்துகொள்ள வந்தவர்கள் வரவேற்கப்பட்ட பின், KCGCயின் கடந்தகால நிகழ்வுகள் மற்றும் சேவைகள் குறித்து சிறிய விளக்கத்தை அதன் செயலாளர் வழங்கினார்.

சென்னை வாழ் காயலர்களுக்கு, KCGCயில் இணைந்து உடல் உழைப்பு, அறிவாற்றல் மற்றும் தேவைப்படும் பொருளாதார உதவிகளில் பணியாற்ற முன்வருமாறு அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த காயலர்களுல் உறுப்பினராக இணைய விரும்பும் ஆண்கள் KCGCயின் செயற்குழு உறுப்பினரான நெட்காம் புஹாரியிடம் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆண்டுச் சந்தா ரூ.500ஐ வழங்கி இணைந்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.

தலைவர் உரை:

அதனைத் தொடர்ந்து KCGCயின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், அதே போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சில நிமிடங்கள் உரையாற்றினார்.

சிறப்பழைப்பாளர் உரை:

அடுத்து, சிறப்பழைப்பாளர் மவ்லவீ யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹீ, “குடும்ப உறவுகளும், அதற்குத் தேவையான செயல்களும்” என்ற தலைப்பில் தகுந்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்களுடன் கருத்துச் செறிவுள்ள - தற்காலத்திற்கு மிகவும் பயனுள்ள சொற்பொழிவை நிகழ்த்தினார்.

‘தி மெஸேஜ்’ படம் குறித்து அறிமுகவுரை:

பின்னர் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தி மெசேஜ்’ திரைப்படம் குறித்த சுருக்கமான தகவல்களை எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வழங்கியதோடு படத்தில் வரும் நடிகர்களை நடிகர்களாகவே காணவேண்டும் என்றும், உண்மையான நபித்தோழர்களாக அவர்களைப் புரிந்து கொள்ளாமல் - அதில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுமே வரலாற்றை ஒட்டியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும், அந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லோர்களாவர் என்றும் கூறினார்.

அத்துடன் இப்படத்தின் தமிழ் ஒலிசேர்க்கையை (Dubbing) தயாரித்து வழங்கிய - மாஸ் கம்யூனிகேஷன் உரிமையாளரும் KCGCயின் உறுப்பினருமாகிய முஹம்மத் தம்பி அரங்கில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.



‘தி மெஸேஜ்’ படம் திரையிடல்:

தொடர்ந்து, 3 மணி நேரம் ஓடும் அளவுள்ள தி மெசேஜ் திரைப்படத்தின் சுருக்கப்பட்ட (Abridged) 1.30 மணி நேர தமிழ் ஒலிசேர்க்கை காட்சிகள் அரங்கில் திரையிடப்பட்டன.

மொத்தம் 250 இருக்கைகள் கொண்ட அரங்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 230க்கும் அதிகமானோர் அமர்ந்து, இப்படத்தை மன மகிழ்வுடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணமாக தனி நபர் ஒருவருக்கு ரூ.100 என வசூலிக்கப்பட்டது. முஸ்லிமல்லாத சில நண்பர்கள் தாம் இப்படத்தைக் காண்பதற்காக விருப்பத்துடன் வந்துள்ளதாக கூறியதையடுத்து நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சிற்றுண்டி:

படத்தின் நடுவே இடைவேளையிடப்பட்டு, அந்நேரத்தில் தேனீர், சமோசா மற்றும் சிறியோருக்கான குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.



காயலர்கள் சந்திப்பு:

காட்சிகள் முடிந்ததும், வெளியில் வந்த காயலர்கள் தமது உறவினர்களைக் கண்ட மகிழ்ச்சியில் சிறிது நேரம் அளவளாவிய பின் அவரவர் இல்லம் நோக்கித் திரும்பினர்.



இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, KCGCயின் செயற்குழு உறுப்பினர்களான ஆடிட்டர் ரிஃபாய் (தலைவர்), எஸ்.இப்னு சுவூத், குளம் முஹம்மத் தம்பி (பொருளாளர்), ஸ்மார்ட் அப்துல் காதிர், பல்லாக் சுலைமான் (துணைச் செயலாளர்), சொளுக்கு முஹம்மத் நூஹ், நெட்காம் புகாரீ, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (செயலாளர்) மற்றும் அதன் உறுப்பினர்களான மாஸ் கம்யூனிகேஷன் முஹம்மத் தம்பி, கிதுரு முஹ்யித்தீன் ஆகியோர் செய்திருந்தனர்.


இவ்வாறு, KCGC செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள்:
குளம் முஹம்மத் தம்பி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved