Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:44 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12359
#KOTW12359
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 18, 2013
நகராட்சி அதிகாரிகள் ஆவணங்களை இணைக்காததால், நவம்பர் 19 நடைபெறவிருந்த கூட்டத்தை நகர்மன்றத் தலைவர் ஒத்திவைத்தார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2665 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நவம்பர் மாத சாதாரண கூட்டத்தை, நவம்பர் 15 நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. அன்று அரசு விடுமுறை என்பதால், அக்கூட்டம் நவம்பர் 19 மாலை 3 மணிக்கு நடைபெறும் என அதிகாரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நகர்மன்றத் தலைவரால் தகவல் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இக்கூட்டம் குறித்த உரிய ஆவணங்களுடன், கூட்டப்பொருளை தயார் செய்ய, நவம்பர் 7 அன்று நகராட்சி ஆணையருக்கு - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கடிதம் எழுதியிருந்தார்.



கூட்டப்பொருளில் இணைக்கப்படவேண்டிய செலவு விபரங்கள் உட்பட பல தகவல்கள் முழுமையாக இணைக்கப்படாததால், நவம்பர் 19 அன்று நடைபெற இருந்த நகர்மன்றக் கூட்டத்தை, நகர்மன்றத் தலைவர் ஒத்திவைத்து, ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர்
ஐ. ஆபிதா சேக்கின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [18 November 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 31531

Checkmate... !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாராட்டுக்கள்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [18 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31532

அல்ஹம்து லில்லாஹ்.

துணிச்சலான நடவடிக்கை. இப்படி தான் முன்னமே இருந்திருக்க வேண்டும். சர், எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமே. அந்த நல்ல நேரம் இதுவாக இருக்கலாம். இது போன்ற துணிச்சலான நடவடிக்கைகளை இனியும் எதிர்பார்ர்தவண்ணம் பாராட்டுக்களுடன்...

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சரியான நடவடிக்கை
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [18 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31535

தலைவி அவர்கள் எடுத்த முடிவு சரியானது. சென்ற செப்டம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தில், செலவுக்கான ஒப்புதலுக்காக கூட்டப்பொருளின் மீது நடந்த விவாதத்தில், தலைவி மற்றும் உறுப்பினர்கள், ஆணையரிடம் ஆவணங்கள் இல்லாததால் அந்த தீர்மானத்தை ஒப்புதல் அளிக்காமல் ஒத்திவைத்தனர்.

மேலும் உறுப்பினர்கள், தலைவிடம் இனி வரும் கூட்டங்களில் செலவுக்கான ஆவணங்கள் இல்லாவிட்டால், ஆவணங்கள் கிடைக்கும் வரை கூட்டபொருளில் வைக்க வேண்டாம் என்றும், ஆவணங்கள் கிடைத்த பின் கூட்டத்தை நடத்தலாம் என்றும் சொன்னார்கள். அந்த அடிப்படையில் தலைவி அவர்கள், இந்த மாத கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார். சரியான நடவடிக்கை.

உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கின்றனர். அதனால் நகரில் நடக்க வேண்டிய பல நல திட்டங்கள் இந்த உறுப்பினர்களால் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது என்று வழமையாக தலைவியின் ஆதரவாளர்கள் கருத்து பதிவு பண்ணுவார்கள். ஆனால், சென்ற அக்டோபர் மாத கூட்டமும் நடைபெறவில்லை, மேலும் இந்த மாத கூட்டம் எப்போது நடைபெறும்? என்று தெரியவில்லை. இதற்கு யார் மீது குறை சொல்ல போகிறார்கள்?

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Salai S Nawas (Singapore) [19 November 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31538

ஹும்ம்ம் ..இதை பார்த்த பின்னரும் எத்தனை பேர் வசை பாட இருக்காங்களோ!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அப்துல் ரசாக் லுக்மான் அவர்களுக்கு பணிவான ஆலோசனைகள்
posted by Hameed Rifai (Jeddah KSA) [19 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31542

சகோதரர் அப்துல் ரசாக் லுக்மான் அவர்களுக்கு சில ஆலோசனை குறிப்புகள்:-

(1) தலைவி பதவியேற்ற புதுசுலயே இப்படி அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்திருந்தால்.....

“அனுபவமற்றவர். அதிகாரிகளுடன் முரண்டு பிடித்து ஊர் நன்மையை கேள்விக்குறியாக்குகிறார்....” என்று சொல்லியிருக்கலாம்.

(2) இது அவங்க எப்பவுமே செய்து வரும் நடவடிக்கைதான் என்றாலும் பக்குவ முதிர்ச்சி காரணமாக எல்லாவற்றையும் ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளவில்லை என்றே நான் அறிந்து வைத்துள்ளேன். எனினும், உங்கள் ஆசைப்படி,

“கவுன்சிலர்கள் எல்லாம் எதிர்த்த பிறகுதான் தலைவி அதிகாரிக்கு லெட்டர் கொடுத்துள்ளார்” என்று சொல்லிவிட்டீர்கள்.

(3) ஒருவேளை இதற்கு அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் மறுப்பு வந்தால்,

“கவுன்சிலர்கள் ஆளுக்கு ஒன்னு சொல்லத்தான் செய்வாங்க... தலைவிக்கு புத்தி எங்கே போனது?” என்று கேட்கலாம்.

(4) நீங்க சொன்னத வச்சி ஒருவேளை மீண்டும் ஏதாவது லெட்டர் கிட்டர் கொடுத்துட்டாங்கன்னா.....

“இதுக்குத்தான் பெரியவங்க ஆலோசனை வேணுங்கிறது! இந்த தலைவிக்குத்தான் அது பிடிக்காதே? ஊருக்கு ஒரு திட்டமும் கைகூடாது இவர் தலைவராக இருக்கும் வரை” என்று சொல்லலாம்.

மாஷாஅல்லாஹ்! ஊரில் அதிமேதாவிகள் பலர் இருக்க, அவங்களோட ஆலோசனைகளையெல்லாம் தலைவி மிஸ் பண்றது கொஞ்சங்கூட சரியில்லீங்க!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஹாமீத் ரிபாயி அவர்களின் ஆலோசனைக்கு நன்றி! நன்றி!
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [19 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31561

தம்பி ஹமீத் ரிபாய் அவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! ஆனால் என்ன, அவர் என் கருத்தையும் கவனமாக படிக்கவில்லை. அதே போல் தலைவி அவர்கள், ஆணையருக்கு எழுதிய கடிதத்தையும் கவனமாக படிக்கவில்லை. தம்பிக்கு கொஞ்சம் கவனச்சிதறல் என்று நினைக்கிறேன்.



தலைவி அவர்கள், கூட்டத்தை ஒத்திவைத்ததை வரவேற்றுத்தானே கருத்து பதிந்தேன். நான், தலைவியை வரவேற்று பதிந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். அல்லது நான், "உறுப்பினர்கள் செப்டம்பர் மாத கூட்டத்தில் சொன்னதன் அடிப்படையில் தலைவி, கூட்டத்தை ஒத்திவைத்தார்" என்று பதிந்தது பிடிக்கவில்லையா? செப்டம்பர் மாத கூட்டத்தில் உறுப்பினர்கள் சொன்னதை, கருத்தாக பதிந்தது பிடிக்கவில்லையா?



(2) "இது அவங்க எப்பவுமே செய்து வரும் நடவடிக்கைதான் என்றாலும் பக்குவ முதிர்ச்சி காரணமாக எல்லாவற்றையும் ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளவில்லை என்றே நான் அறிந்து வைத்துள்ளேன். எனினும், உங்கள் ஆசைப்படி,

“கவுன்சிலர்கள் எல்லாம் எதிர்த்த பிறகுதான் தலைவி அதிகாரிக்கு லெட்டர் கொடுத்துள்ளார்” என்று சொல்லிவிட்டீர்கள். (C&P)

உங்கள் கருத்துப்படி, அவங்க எப்பவுமே செய்து வரும் நடவடிக்கைதான் என்றால், தலைவி அவர்கள் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், "பல மாதங்களாக, பல முறை கேட்டுக்கொண்டப்பின்பும், சமர்பிக்கப்படாமல் இருக்கும் வரவு-செலவு விபரங்களை, அனைத்து ஆதாரங்களுடன் இணைத்து - கூட்டப்பொருளை தயார் செய்யும் படி கேட்டிருந்தேன்" (C&P)

"ஆனால் தங்களிடம் இருந்து தற்போது பெறப்பட்ட நவம்பர் மாத கூட்டப்பொருட்களில் கேட்கப்பட்ட எந்த விபரமும் இணைக்கப்படவில்லை" (C&P)

"அவங்க (தலைவி) எப்பவுமே செய்யும் நடவடிக்கை" என்று நீங்கள் குறிப்பிடுவது, கூட்டத்தை ஒத்திவைத்ததையா? அல்லது ஆணையருக்கு கடிதம் எழுதுவதையா? இப்போது இந்த நியூஸ், தலைவி கூட்டத்தை ஒத்திவைத்தது பற்றித்தான்.

ஆனால் தலைவி அவர்கள், இது வரை "ஆதாரங்கள் இணைக்காததால் கூட்டத்தை ஒத்திவைத்ததாக" தகவல் இல்லை. ஏன் என்றால். தலைவி பல மாதமாக, பல முறை கேட்டும், ஆணையர் ஆதாரங்கள் சமர்பிக்கவில்லை. ஆனால் இந்த மாத கூட்டத்தை மட்டும் தான், செம்படம்பர் கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கூட்டத்தை ஒத்திவைத்தார்கள்.

தம்பிக்கு நிறைய கற்பனை வளம் உள்ளது. வரவேற்கத்தக்க விஷயம். அதை ஆக்கப்பூர்வமாக, செயலாக்கத்தில் கொண்டு வாருங்கள். அதை விட்டுவிட்டு, உங்கள் கற்பனைகளை, அடுத்தவனுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டாம்.

உங்களைப் போல் ஆலோசனை கூறுபவர்களை தலைவி, தனது ஆலோசகர்களாக வைத்துக் கொண்டால், நமது நகராட்சி, மாநிலத்தில் "முதன்மை நகராட்சியாக" வரும் என்பது என் கருத்து.-

சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [19 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31570

வரவு, செலவு பதிவில் இருந்தால்தானே? மேடைக்கு வரும். வார்டு உறுபினர்களின் கருத்து பிளவு குளற்படியினால், நகரமன்ற ஊழியர்கள் கொண்டாட்டம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [20 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31576

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல துணிச்சலான ஒரு செயல் தான் ...இந்த நடவடிக்கை என்றே நாம் மனதார கூறலாம்.......இதற்கும் நம் நகர் மன்ற தலைவி அவர்கள் தான் காரணம் என்று குறை சொல்ல கூட யாரும் தயங்க மாட்டார்கள் ......நம் தலைவி அவர்களின் இந்த முடிவு காலம் தாழ்த்த பட்ட ஒரு செயலோ என்றும் நமக்கு நினைக்க தோன்றுகிறது ....

பொதுவாக துணிச்சலை பாராட்டாவிட்டாலும் கூட பரவா இல்லை....குறை சொல்லாமல் இருந்தாலே நலம் ........நகர் மன்றம் நன்றாக செயல் படும்......அப்படி நம் நகர் மன்றம் செயல் பட்டால் ....நம் ஊருக்குதான் பலன் ...................இல்லை...நமக்குதான் முழு பயன் .

சரி அடுத்த கூட்டத்தில் நமது ஊரின் நலன் கருதி ஒன்றுமையுடன் (தலைவி + உறுப்பினர்கள்) அனைவர்களும் செய்யலாற்றி ....ஊருக்கான பல நல்ல திட்டங்களை செயல் வடிவத்தில் கொண்டு வந்து ....நாம் அனைவர்களும் பலன் பெற வேணும் என்பதே நம் அனைவர்களின் எண்ணமும் ....துவாவும் ......

அது நிறைவேறுமா .................அந்த ....நாள் எப்போது வரும் ....நாம் பொறுமையாகவே .... காத்து இருப்போம்....... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நீங்கள் நடுநிலைவாதி அல்ல..! தலைவியின் ஆதரவாளரே என்று எடுத்து கொள்ளலாமா..?
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31579

உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கின்றனர். அதனால் நகரில் நடக்க வேண்டிய பல நல திட்டங்கள் இந்த உறுப்பினர்களால் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது என்று வழமையாக தலைவியின் ஆதரவாளர்கள் கருத்து பதிவு பண்ணுவார்கள். என்று சகோதரர் சாளை அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் குறிபிடுகிறார்...!

அப்துல் ரஸ்ஸாக் அவர்களே...! இது முன் உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது அனைத்துமே தாங்கள் அறிவீர்கள் அதன் காரணங்கள் என்ன... என்ன...? கூட்டம் நடைபெறும் போது புகை படம் - வீடியோ - மீடியா வர கூடாது, தலைவி எங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார் ஆகையால் அவரின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இனி நாங்கள் இருக்க மாட்டோம், தலைவியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், நகராட்சி மண்டல நிர்வாகம் தலைவியின் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டது ஆகையால் வெளிநடப்பு செய்கிறோம் இப்படி அடுக்கடுக்காக சொல்லி கொண்டே போகலாம்.

இந்த மாதிரி உறுப்பினர்களின் அணைத்து வெளினடப்புக்களுக்கும் நடுநிலைவாதிகள் அனைவர்களும் எதிர்த்தார்கள். பிறகு மேலும் மேலும் வெளிநடப்பு செய்தால் பொது மக்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்புக்கள் தாங்கள் மீது வந்து விடுமோ என்ற எண்ணத்தில் தற்போது பொறுப்போடு கூட்டங்கள் ஒற்றுமையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது நாம் அறிவோம்.

உறுப்பினர்களை காரணம் காட்டி வழமையாக தலைவியின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களால் தான் கூட்டம் நடைபெறாமல் போனது என்று உறுப்பினர்கள் மீது பழி சுமத்தி கருத்து பதிவு பண்ணுவார்கள் என்ற தவறான புரிதல் அடிப்படையில் வாசகம் உள்ளது.

இதுமுன் உறுப்பினர்கள் வெளிநடப்புக்கள் செய்தார்களே அதற்க்கு தாங்கள் அதை ஆதரிதீர்களா...? அல்லது எதிர்த்தீர்களா...? எதிர்த்து இருந்தால் (உங்கள் கருத்து வாசகப்படி) நீங்கள் நடுநிலைவாதி அல்ல..! தலைவியின் ஆதரவாளரே என்று எடுத்து கொள்ளலாமா..? இதோ உங்கள் வாசகம்... கீழே...!

(இந்த உறுப்பினர்களால் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது என்று வழமையாக தலைவியின் ஆதரவாளர்கள் கருத்து பதிவு பண்ணுவார்கள்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved