Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:50:18 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12437
#KOTW12437
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 29, 2013
அரசு சான்றிதழ்களை பெற விண்ணப்பங்களை காயல்பட்டினத்திலேயே சமர்ப்பிக்க இடம் தேர்வு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3540 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களை பெற பொது மக்கள், பொதுவாக திருசெந்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்தை நாடுவது வழக்கம். காயல்பட்டினத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலும் சில சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம் என்ற வசதியும் உள்ளது. இருப்பினும் - இவ்வழிகள் மூலம் சான்றிதழ்களை பெற காலதாமதம் ஆவது உண்டு.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் - சமீபத்தில் இச்சான்றிதழ்களை அரசு அலுவலகங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்களின் மூலமும் பெறலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து ஆறுமுகநேரி போன்ற ஊர்களில் வங்கிகள் இச்சேவையை வழங்க முன்வந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளில் ஒரு நகராட்சியான காயல்பட்டினத்திலும் இச்சேவை அறிமுகம் செய்யப்படவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS யை செப்டம்பர் மாதம் சந்தித்த நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தரும்படி மாவட்ட ஆட்சியர் அவ்வேளையில் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து - செப்டம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தில் பொருள் எண் 68 ஆக, இவ்விசயம் குறித்த நகர்மன்றத் தலைவரின் கடிதம் இடம்பெற்றது. நகர்மன்றத் துணைத் தலைவர் மும்பை மொஹிதீன் என்ற எஸ்.எம். மொஹிதீன் தவிர - கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் (தீர்மானம் எண் 598) நிறைவேற்றப்பட்டது.



தீர்மான நகல் மாவட்ட ஆட்சியற்கு அனுப்பப்பட்டதை அடுத்து - நேற்று (நவம்பர் 28) - தூத்துக்குடி மாவட்ட கேபிள் தொலைகாட்சி சம்பந்தமான சிறப்பு தாசில்தார் ராமசாமி, இச்சேவையை காயல்பட்டினத்தில் துவக்க தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இடத்தை பார்வையிட்டார். இதற்கு முன்னர் குடிநீர் கட்டணம் வசூல் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த பார்வையிடப்பட்ட இந்த அறையில், சிறு பராமரிப்பு பணிகளை உடனடியாக நிறைவு செய்தால் - இச்சேவையை காயல்பட்டினத்தில் விரைவில் துவக்கலாம் என்றும் அவர் கூறினார்.



இந்நிகழ்வின் போது நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர், 6வது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் மொஹிதீன், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.





புகைப்படங்களில் உதவி:
எம்.ஜஹாங்கிர்

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:55 pm / 29.11.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்கேயோ இடிக்குதே....?
posted by ராபியா மணாளன். (காயல்பட்டினம்.) [29 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31727

நகர்மன்றத் துணைத் தலைவர் மும்பை மொஹிதீன் என்ற எஸ்.எம். மொஹிதீன் தவிர - கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் (தீர்மானம் எண் 598) நிறைவேற்றப்பட்டது.C&P

ஊர்லெயே இப்படி ஒரு வசதி இருந்தா நம்ம அலைச்சல் மிச்சம் தானே? அப்புறம் ஏன் துணைத்தலைவர் ஆதரவு தெரிவிக்கவில்லை?

நல்ல திட்டங்கள் நாசமாப்போவதற்கு வரட்டு கௌரவம்தான் எனில் அந்த வரட்டு கௌரவம் நாசமாப்போகட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மக்களுக்காக உதவுங்கள்
posted by Mohamed Omar(Babu) (Chennai) [29 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31728

அஸ்ஸலாமு அலைக்கும்

அரசு சான்றிதழ்களை பெறுவதற்காக நமது ஊர் மக்கள் அருகிலிருக்கும் ஊர்களுக்கு எவ்வளவு சிரமத்துடன் சென்று வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் நமது நகர்மன்ற தலைவி நம் மக்களின் சிரமத்தை போக்கும் விதமாக நமது ஊரிலேயே சான்றிதழை பெறுவதற்கு வழிவகுத்து தந்தற்குகும், அந்த தீர்மானத்தை ஆதரித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை.

ஆனால் நமது துணை தலைவர் மக்களின் தேவைகளுக்கான தீர்மானத்தை எதிர்த்து நடப்பது வேதனையே, நாங்கள் உங்களை எங்களின் தேவைக்காக உழைக்கவே தேர்வு செய்து இருக்கின்றோம் . மக்களுக்காக உண்மையாக உழையுங்கள்.மற்றவருக்காக அல்ல. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

இந்த சான்றிதழ் பெறுகின்ற சேவை உடனடியாக நமது நகரில் செயல்பட துடங்கினால் மக்களின் சிரமம் குறையும்.

வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31729

மக்களின் சிரமத்தை புரிந்து கொண்டு அதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கி ஊருக்கு உள்ளேயே இந்த வசதியை பெற்று தந்த (துணை தலைவரை தவிர்த்து) அணைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் - நகர்மன்ற மக்கள் தலைவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...!

இது போன்று மக்கள் நன்மைக்காக எல்லா விசியங்களிலும் செயல் படுங்கள் நகர் மக்களின் பாராட்டுகளை பெறுங்கள்..!

துணை தலைவர் ஏன் இந்த நல்ல வசதியை நகருக்குள் வர கூடாது என எதிர்த்தார்...? அவரின் வார்டு மக்களும் அவர் சார்ந்து இருக்கும் ஜமாஅதார்களும் அவரிடம் விளக்கம் கேட்பது கடமையல்லவா...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [29 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31734

மக்கள் நலன் கருதி நகரில் இடம் தேர்வு செய்ய முன்மொழிந்த நகரமன்ற தலைவி, மற்றும் துணைநின்ற வார்டு உறுபினர்களை பாராட்டி மகிழ்கிறேன், இடம் ok தான், ஆனால் நுழைவாசல் அளவு காணாது மாற்றி வாசல் அமைக்க நகரமன்றத்தை கேட்டுகொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [30 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31735

அஸ்ஸலாமு அலைக்கும்

நம்தலைவி அவைகளை தான் ....முதலில் பாராட்டனும் நல்ல முயற்ச்சி இம் முயற்ச்சியை மிக துரிதமாக செயல் வடிவமாக்கினால் சால சிறந்தது .....



இந்த நல்ல செயலை நமது ஊருக்கு கொண்டு வந்து ...நம் பொது மக்களின் சிரமத்தை நீக்கிய நம்தலைவி & நம் உறுப்பினர்கள் ( நம் துணை தலைவர் அவர்களை தவிர ) யாவர்களையும் மனதார பாராட்டுகிறோம் ......

தங்கள் யாவர்களின் இது போன்ற ஒற்றுமை நமது ஊருக்கான அனைத்து பல நல்ல காரியங்களிலும் நீங்காள் யாவர்களும் ஒன்றாக கை கோர்த்து செயல் பட வேணும் என்பதே பொது மக்களாகிய எங்களின் விருப்பம்........நடக்கும் என்றும் நம்புகிறோம்......

இக் கூட்டத்தை நம் துணை தலைவர் அவர்கள் ஏன் ?? புறகனித்தார்கள் ....?? பொது மக்களின் நலனில் இவருக்கு ..அக்கறை இல்லையா ..?? இல்லை அவர்களை தேர்வு செய்த தொகுதி மக்களின் நலனில் அக்கறை இல்லையா ..?? தலைவி அவர்கள் கொண்டு வந்து செயலாக்குகிற திட்டத்தாலா ..?? இவர் எதிர்க்கிறார் ..?? ஒன்றுமே புரிய வில்லை ??

தயவு செய்து ஊர் மக்களுக்கு நல்லது நடக்குகிறது ஓன்று என்றால் ....நீங்கள் தங்களின் ,, கோபங்கள் ,, வெறுப்புக்கள் ,, மனஸ்தாபங்கள் ,, இவை .. யாவையும் கொஞ்சம் ஓரம் கட்டி வையுங்கள் .....சார் .... நாங்கள் உங்களை எதற்கு தேர்வு செய்தோம் ...நீங்கள் கொஞ்சம் தனிமையில் நிதானமாகவே யோசிக்கவும் ....

நமது ஊரில் நிறைய வீடுகளில் ஆண் துணையே இல்லாமல் இருப்பவர்களும் அதிகம் உண்டு ,, வயதான ஆண் ,, பெண்கள் ,,இருப்பவர்களும் அதிகம் உண்டு ....இவர்களின் கஷ்டத்தை போக்கிய உங்கள் யாவர்களுக்கும் கண்டிப்பாகவே ....இவர்களின் ..மனம் உகந்த ..துவா '' உண்டு ....

இத் திட்டம் ஆறுமுகநேரியில் துவங்க பட்டு ...தற்போது நடமுறையில் செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .......

நல்ல திறமையும் ,, நல்ல சுறுசுறுப்பும் ,,உள்ள ஆற்றல் மிக்க.. நாம் நம் தலைவி அவர்களை ( நம்பினால் ) செயல் பட விட்டால் .. நமது ஊருக்கு இன்னும் பல திட்டங்களை செயல் வடிவமாக்குவார்கள்.......இதில் சந்தேகம் இல்லை ..

>> மக்களின் நலனில் முழு அக்கறை கொன்ட .. நம் தலைவி அவர்களின் இது போன்ற நல்ல செயல்கள் ஊர் மக்களுக்காக தொடரட்டும் <<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எதிர்ப்பதின் உண்மைகாரணம் என்ன?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [01 December 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31760

நகரமன்ற தலைவி முதல் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் இத்திட்டம் நிறைவேறியதற்கு அனைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!

இது நல்லதிட்டம் இல்லை அல்லது மக்களுக்கு பயன்தராது என்ற அடிப்படையில் இத்திட்டத்தை துணைத்தலைவர் எதிர்ப்பாரேயானால், அதற்குறிய உண்மையான காரணத்தை ஊர்மக்களுக்கு தெரியபடுத்தட்டும்!

சும்மா உப்பு சப்பில்லாத காரணமாக இருந்தால், அதை இந்த ஊர்மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள், உங்கள் உள்ளம் உள்நோக்கம் கொண்டதுதான் என்ற முடிவுக்குதான் வருவார்கள் என்பதை தெரிவிக்கிறேன்!

ஊர் பிரஜை என்ற முறையில் மன்ற துணைத்தலைவரை நான் கேட்டுவிட்டேன், இனி அந்த வார்டு மக்களும், அவரின் ஜமாத்தும் கட்டாயம் விளக்கம் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் ஆரோக்கியமான அணுகுமுறையை அந்தந்த வார்டும், ஜமாத்தும் பின்பற்றுகிறார்கள் என்ற முன்மாதரி மற்றைய ஜமாதார்களுக்கும் பரவிட எதுவாக இருக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by CADER (JAIPUR) [02 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31778

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம்தலைவி அவர்களைத்தான் முதலில் பாராட்டனும் நல்ல முயற்ச்சி இம் முயற்ச்சியை மிக துரிதமாக செயல் வடிவமாக்கினால் சால சிறந்தது .....

இந்த நல்ல செயலை நமது ஊருக்கு கொண்டு வந்து ...நம் பொது மக்களின் சிரமத்தை நீக்கிய நம்தலைவி & நம் உறுப்பினர்கள் ( நம் துணை தலைவர் அவர்களை தவிர ) யாவர்களையும் மனதார பாராட்டுகிறோம் ......

தங்கள் யாவர்களின் இது போன்ற ஒற்றுமை நமது ஊருக்கான அனைத்து பல நல்ல காரியங்களிலும் நீங்காள் யாவர்களும் ஒன்றாக கை கோர்த்து செயல் பட வேணும் என்பதே பொது மக்களாகிய எங்களின் விருப்பம்........நடக்கும் என்றும் நம்புகிறோம்......

நமது ஊரில் நிறைய வீடுகளில் ஆண் துணையே இல்லாமல் இருப்பவர்களும் அதிகம் உண்டு ,, வயதான ஆண் ,, பெண்கள் ,,இருப்பவர்களும் அதிகம் உண்டு ....இவர்களின் கஷ்டத்தை போக்கிய உங்கள் யாவர்களுக்கும் கண்டிப்பாகவே ....இவர்களின் ..மனம் உகந்த ..துவா '' உண்டு ....

நல்ல திறமையும் ,, நல்ல சுறுசுறுப்பும் ,,உள்ள ஆற்றல் மிக்க.. நாம் நம் தலைவி அவர்களை செயல் பட விட்டால் .. நமது ஊருக்கு இன்னும் பல திட்டங்களை செயல் வடிவமாக்குவார்கள்....... இதில் சந்தேகம் இல்லை ..

மக்களின் நலனில் முழு அக்கறை கொன்ட .. நம் தலைவி அவர்களின் இது போன்ற நல்ல செயல்கள் ஊர் மக்களுக்காக தொடரட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved