Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:55:42 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12442
#KOTW12442
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 30, 2013
டிசம்பர் 2 முதல் சென்னையில் மீண்டும் 2 மணிநேர மின்வெட்டு! எந்தெந்த பகுதியில் எப்போது என்ற விபரம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2432 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை காரணாக சென்னையில் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 2) முதல் 2 மணி நேர மின்வெட்டு அமல் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் மின்வெட்டு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மின் பயன்பாடும் குறையவில்லை.

இந்த காரணங்களால் தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையைத் தவிர பிற இடங்களில் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க சென்னையில் மீண்டும் மின்வெட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டால், வெளியூர்களில் மின்வெட்டு 4 மணி நேரமாகக் குறையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2,300 மெகா வாட் பற்றாக்குறை:

தமிழகத்தில் இப்போது மின் பற்றாக்குறை 2,300 மெகா வாட் அளவுக்கு மேல் உள்ளது. மின் தேவை இப்போது 12,118 மெகா வாட் என்ற அளவில் உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) நிலவரப்படி அதிகபட்ச மின் உற்பத்தி 9,736 மெகாவாட் என்ற அளவிலேயே உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தினமும் 2,000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்கும் அளவுக்கு மின் வெட்டு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

5 மாதங்களுக்குப் பின்...

கடும் மின் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் பல மாதங்கள் மின் வெட்டு அமலில் இருந்து வந்தது. சென்னையில் 2 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 7 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு, பாதிக்கப்பட்டிருந்த அனல் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தது, புதிய திட்டங்களில் மின் உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் மின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்தது.

இதன் காரணமாக சென்னையில் அமலில் இருந்த 2 மணி நேர மின்வெட்டு கடந்த ஜூலை மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் பிற மாவட்டங்களிலும் படிப்படியாக மின் வெட்டு குறைக்கப்பட்டது.

ஆனால், காற்றாலை மின் உற்பத்தி முழுவதுமாக நின்றது, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மீண்டும் மின் வெட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் மற்றும் இடங்களின் விவரம்:

காலை 8 மணி முதல் 10 மணி வரை:

புரசைவாக்கம் (பகுதி), தேனாம்பேட்டை (பகுதி), அண்ணாசாலை (பகுதி), கதீட்ரல் சாலை (பகுதி), தியாகராயநகர், பாண்டிபஜார், தெற்கு உஸ்மான் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யூ, கிரீன்வேஸ் சாலை, ராணி மெய்யம்மை டவர், ஸ்ரீவாசா அவென்யூ, கிரீம்ஸ் சாலை (பகுதி), ஒயிட்ஸ்சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை, எத்திராஜ் சாலை, காமராஜர் சாலை, மயிலாப்பூர், பூக்கடை, பாரிமுனை, எஸ்பிளனேடு, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லட்சுமிபுரம், செம்பியம் (பகுதி).

மணலி, வியாசர்பாடி (தொழிற்பேட்டை), ஜி.எஸ்.டி.சாலை (பகுதி), நேரு நகர், கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், கடப்பேரி, மெப்ஸ் பகுதி, கிழக்குக் கடற்கரை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, போரூர், ஆற்காடு சாலை (பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி (தொழிற்பேட்டை), நெல்சன் மாணிக்கம் சாலை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), சூளைமேடு (பகுதி), பாடி (பகுதி), கொரட்டூர், கோயம்பேடு மார்க்கெட், சின்மயாநகர், நடேசன் நகர், பாண்டேஸ்வரம் பகுதி, புழல், செங்குன்றம் (பகுதி), சோத்து பெரும்பேடு.

காலை 10 மணி முதல் 12 மணி வரை:

அண்ணாசாலை (பகுதி), ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, சைதாப்பேட்டை, சி.ஐ.டி. நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை சாலை, லாயிட்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, ஒயிட்ஸ் சாலை, வடபெரும்பாக்கம், மணலி, டி.எச். சாலை (பகுதி), பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.கே.எம். காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, திருவொற்றியூர், கோட்டூர்புரம், டர்ன்புல்ஸ் சாலை, கஸ்தூரிபாய் நகர், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், பல்லாவரம், போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பெரும்பாக்கம், திருமுடிவாக்கம், கீழ்கட்டளை, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், விஜயநகர், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டீஸ்வரம்.

அண்ணாநகர் (பகுதி), கே.ஜி.சாலை, புதிய ஆவடி சாலை, மேடவாக்கம் டேங் சாலை, வானகரம், மதுரவாயல், முகப்பேர் கிழக்கு, பட்டாபிராம், திருநின்றவூர் (பகுதி), திருவள்ளூர் நெடுஞ்சாலை, செங்குன்றம், திருவேற்காடு, அண்ணாநகர் (பகுதி).

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை:

ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (பகுதி), லஸ் (பகுதி), இந்திராநகர் (பகுதி), மயிலாப்பூர் (பகுதி), பெல்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம், காமராஜ் சாலை, மந்தைவெளிப் பகுதி, சென்னை உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் தெரு, ஏழுகிணறு, மண்ணடி, அண்ணாசாலை (பகுதி), ஸ்பர்டேங்க் சாலை, எழும்பூர் (பகுதி), நுங்கம்பாக்கம் (பகுதி), மகாலிங்கபுரம், காம்தார்நகர், திருமலைப்பிள்ளை சாலை, தியாகராய நகர் (பகுதி), மேற்கு மாம்பலம், மேட்லி சாலை, ஜூப்ளி சாலை, அசோக்நகர் (பகுதி).

கே.கே.நகர் (பகுதி), எண்ணூர், தண்டையார்பேட்டை, மாத்தூர், வில்லிவாக்கம் சிட்கோ, ஆர்.கே. நகர், கோவூர், குன்றத்தூர், மாங்காடு, கெருகம்பாக்கம், குமணன்சாவடி, பூந்தமல்லி, நூம்பல், காடுவெட்டி, புதுதாங்கல், ஆளுநர் மாளிகை, பரங்கிமலை, ஆதம்பாக்கம் (பகுதி), மீனம்பாக்கம், துரைப்பாக்கம், ஆவடி (பகுதி), ஆவடி டாங்கி தொழிற்சாலை, திருமுல்லைவாயல் (பகுதி), சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), அம்பத்தூர், பட்டரவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (பகுதி).

பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை:

சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை (பகுதி), புதுப்பேட்டை, எழும்பூர் (பகுதி), சிம்சன், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செகரேட்டரியட் காலனி, பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), அண்ணாசாலை (பகுதி), எஸ்.எம். நகர், கே.பி.தாசன் நகர், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் தியாகராய நகர் (பகுதி), எல்டாம்ஸ் சாலை, பெரியமேடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (பகுதி), கதீட்ரல் சாலை (பகுதி), ஜி.என்.செட்டி சாலை (பகுதி), கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட்டை, அமீர் மஹால், பாரதிசாலை (பகுதி), தங்கசாலை, கொண்டித்தோப்பு, ஜகதாபுரம், பெரம்பூர் (பகுதி), கொளத்தூர் (பகுதி), அயனாவரம், வில்லிவாக்கம், ஐ.சி.எஃப், ராயபுரம் (பகுதி), ஆலந்தூர், கே.கே. நகர் (பகுதி), கிண்டி (பகுதி), எம்.ஜி.ஆர். நகர், மேற்கு மாம்பலம் (பகுதி), அசோக்நகர் (பகுதி), பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி, தாம்பரம், இந்திராநகர், பூந்தமல்லி (பகுதி), நாசரேத்பேட்டை, நங்கநல்லூர் (பகுதி), ஆதம்பாக்கம் (பகுதி), விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி, ஆற்காடு சாலை (பகுதி), பெசன்ட் நகர், அண்ணாநகர் (பகுதி), ஷெனாய் நகர், டி.பி.சத்திரம், அயப்பாக்கம், மகாலிங்கபுரம் (பகுதி), சின்மயா நகர், ஜெகந்நாத நகர், நூறடி சாலை, கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், திருமங்கலம்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை:

கல்லூரி சாலை, கிரீம்ஸ் சாலை(பகுதி), எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), புரசைவாக்கம் (பகுதி), எம்.எம்.டி.ஏ. காலனி (பகுதி).

என்.எஸ்.சி. போஸ் சாலை, மயிலாப்பூர் (பகுதி), லஸ் (பகுதி),லோட்டஸ் காலனி, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை, தியாகராய நகர் (பகுதி), சி.ஐ.டி. நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (பகுதி), ஜாபர்கான்பேட்டை, கே.கே. நகர் (பகுதி), சைதாப்பேட்டை மேற்கு, கொடுங்கையூர், எஸ்பிளனேடு (பகுதி), ராயபுரம் (பகுதி), மாதவரம், திரு.வி.க. நகர், வியாசர்பாடி (பகுதி), சுங்கச்சாவடி, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கிண்டி தொழிற்பேட்டை, சூளைமேடு (பகுதி), கோடம்பாக்கம், வடபழனி, அசோக்நகர் (பகுதி), டிரஸ்ட்புரம், மடிப்பாக்கம், பெருங்களத்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், சிருசேரி எஸ்டேட், இந்திராநகர் (பகுதி), கலாஷேத்ரா காலனி, அவ்வை நகர், கணபதி நகர், பாலவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை (பகுதி), முகப்பேர், திருமங்கலம் (பகுதி), நொளம்பூர், பாடி.


தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [30 November 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 31738

மத்திய அரசுவின் கண்காணிப்பில் இயங்கிவரும் கல்பாக்கம், நீலகிரி அனுஆலையின் நுட்பகோளாறின் ஏதிரோளிதான் இந்த மின்வெட்டு,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அரிய ஆராய்ச்சியாளர்!
posted by kavimagan (doha...qatar) [30 November 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31742

பி.எஸ்.அப்துல் காதர்......நம்பி விட்டோம் உங்கள் கண்டுபிடிப்பை.... உங்களுக்குப் பின்னால் சில காக்கா மார்களும் பல்வேறு கண்டுபிடிப்போடு வருவார்கள்.....இன்ஷா அல்லாஹ் அதையும் நம்புவதற்குக் காத்திருக்கிறோம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கேப்பையில் நெய் வடிகிறதாம்...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [30 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31743

நேற்று ஏர்க்காடு தேர்தல் பிரசாரத்தில் புரட்சித்தலைவி, அம்மா அவர்கள் மத்திய அரசுதான் மின்சாரம் விஷியத்தில் பலி வாங்குகிறது அதற்க்கு தி மு க வும் துணை போகிறது என்ற பெரிய புளுகு அணுகுண்டை பாமர மக்கள் மீது அள்ளி வீசி இருக்கிறார்.!

வாதத்திற்காக இப்பேச்சு உண்மையென்று வைத்துக் கொண்டாலும் ,காங்கரஸ் ஆட்சி செய்யாத ஏனய மாநிலங்கள் அனைத்தும் இருளில் அல்லவா மூழ்கி கிடக்க வேண்டும். தன் தோழமை கட்சியான தி .மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகம் மின்பகையில்லா மின்மிகை மாநிலமாக அல்லவா மின்னி இருக்க வேண்டும்!

கேப்பையில் நெய்வடிகிரதாம் சொல்கிறார், புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
முஹம்மது ஆதம் சுல்தான்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Seyed Mohamed (Bangkok) [30 November 2013]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 31744

சென்னை IT City பக்கம் பவர் கட் உண்டா
அமைச்சர்கள் குடி இருப்பு பகுதியல் பவர் கட் உண்டா
சும்மா சென்னை சொன்ன எப்படி

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [30 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31745

அஸ்ஸலாமு அலைக்கும்

சென்னையில் பவர்கட் என்பதால் மற்ற ஊர்களில் பவர் கட் குறைய வாய்ப்பு ஏற்படலாம் ......அந்த அதிகாரி அவர்கின் கணிப்பு நியாயமானதே ...... நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஏற்காடு தொகுதியில் சொன்ன வார்த்தை முற்றிலும் சரியானதே ....நம் மத்திய அரசாங்கம் மனது வைத்தால் தான் தமிழகத்தில் ஓரளவு '' மின் பற்றா ' குறையை நம் தமிழக முதல்வர் சமாளிக்க முடியும்..... மத்திய அரசு ஏன் ?? தமிழகத்தை இப்படி புறகனிக்கிறது........மத்திய அரசு ..தமிழக மக்களை கொஞ்சம் என்ன வேண்டும் ....

இந்த பவர்கட் நிலைமை நீடிக்குமேயானால் ..அடுத்து வரகூடிய MP தேர்தலில் மத்திய அரசுக்கு ....தமிழக மக்களின் வரவேற்ப்பு ....எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு புரியலாம் ....

பொது மக்களுக்கு முக்கியமானது ....ஓன்று என்றால் அது மின்சாரம் தானே ....அதுதான் தேர்தல் நேரத்தில் பொது மக்களால் சரியானதோர் .... தீர்ப்பு .... சொல்லும் ....அரசியல் கட்சிகளும் புரிந்து நடந்தால் சரிதான் ....

இப்போதைய சூழ் நிலைமைகளில் சென்னையில் பொது மக்கள் ....முக்கியஸ்தர்கள் குடியிருப்பு பகுதியில் ....தங்கி இருந்தால் இந்த '' பவர்கட் '' பிரச்சனையில் இருந்து தப்பிக்க சான்சு உண்டு ....காரணம் பொது மக்களாகிய நாம் தேர்வு செய்து MP / MLA .....க்கள் என்று அனுப்பப்பட்டவர்களும் ..+.. நம்மால் ( பொது மக்களால் ) நேசிக்க கூடியவர்களும் அல்லவா ......தமாசு

நம் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் துணிச்சல் மிக்க அதிரடியான ஒருசில நடவடிக்கையால் ... இந்த பவர்கட் .. பிரச்சனைக்கு நிச்சயமாக ஒரு மாற்றம் தமிழகத்தில் வரலாம் ....என்கிற ஒரு நம்பிக்கையும் நமக்கு உண்டு ....நம் எதிர் பார்ப்பு வினாகாது ......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பாவப்பட்ட தமிழக மக்கள்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [01 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31756

இப்போதாவது தமிழக அரசுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தமிழக மக்கள் (சென்னையை தவிர) மீது கொஞ்சம் கரிசனம் வந்ததே என்று வேண்டுமானால் ஆறுதல்படலாம். ஆதம் சுல்தான் காக்கா அவர்கள் பதிந்தது போல், மத்திய அரசு, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மட்டுமே காழ்புணர்சியுடன் பார்க்கவில்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்(ஓரிரு மாநிலங்கள் தவிர) மின்பற்றாக்குறை மாநிலங்கள்தான். காங்கிரஸ் ஆளும், தலைநகர் தில்லி கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.

சென்னை, தமிழகத்தின் தலைநகராக இருக்கலாம். அதற்காக தமிழக மக்கள், நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும்போது, சென்னைவாசிகள் மட்டும், ஏசி அறையில் சந்தோசமாக இருக்கின்றனர். தற்போதுதான் சென்னையில் 2 மணிநேர மின்வெட்டு, அதுவும் காலை 8 மணி முதல், மாலை 6 மணி வரை என்று அறிவித்துள்ளனர். ஆனால் பாவப்பட்ட நமக்கு, அதிகாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை, 8-10 மணி நேர மின்வெட்டு. தமிழகத்துக்கும், சென்னையை போல், பகல் நேரங்களில், மின்வெட்டை வைத்துக் கொள்ளலாமே.

நம் திராவிட கட்சிகள், முன்பு ஒரு கோஷம் போடுவார்கள். "வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது" என்று. இப்போ நாம்(சென்னையை தவிர) போடவேண்டிய கோஷம், "சென்னை வாழ்கிறது. தமிழகம் இருளில் மூழ்கி கிடக்கிறது"

அ.தி.மு.க. அனுதாபிகள் வேண்டுமானால், தங்களின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை சொல்வது போல், அந்த காரணம், இந்த காரணம் என்று சொல்லலாம். நம் முதல்வர் அவர்கள், இனிமேலாவது மத்திய அரசை குறை சொல்லாமல், மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved