Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:13 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12729
#KOTW12729
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 8, 2014
தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘மெகா’ அங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்விகள் அளிப்பு! 238 கேள்விகள் முழு விபரம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 10954 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியிடம் 238 கேள்விகள் ‘மெகா’ அங்கத்தினரால் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அக்டோபர் 25ஆம் நாள் – தகவலறியும் உரிமை நாளாகும். அதனை முன்னிட்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாளன்று, காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், அதன் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், “நகராட்சிப் பணிகளில் பொதுமக்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடிவமைத்து, அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்குத் திரளாகச் சென்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்கேள்விகளை நகராட்சி தகவல் அலுவலரிடம் அளிக்க” தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இம்மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில், ‘மெகா’ அங்கத்தினர் சுமார் 30 பேர் - அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சாளை நவாஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு சென்று, பொது தகவல் அலுவலரான நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் 238 கேள்விகளை துறை வாரியாகப் பிரித்து, தனித்தனி உறைகளிலிட்ட கேள்விகளை சமர்ப்பித்து, அவற்றுக்கான ஒப்புகை முத்திரையைப் பெற்று வந்தனர்.



தகவலறியும் உரிமை சட்டத்தின் படி, வரும் பிப்ரவரி மாதம் 06ஆம் தேதிக்குள் இக்கேள்விகளுக்கு நகராட்சி விடையளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படாவிடில், மேல் முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையரிடம் மேல் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் அவரது விடையும் கிடைக்கப்பெறாவிடில், கேள்விகளை சமர்ப்பித்த அனைவரையும் ஒருங்கிணைத்து, சென்னையிலுள்ள - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திடம் முறையிட திட்ட ‘மெகா’ திட்டமிட்டுள்ளது.

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-


































இவ்வாறு, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்

மற்றும்
M.A.புகாரீ (48)


[செய்தி திருத்தப்பட்டது @ 11:40 / 23.01.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by TM.RAHMATHULLAH (Kayalpatnam) [09 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32332

கேள்விகள் சரியானதாக இருந்தாலும் பதில்களும் சரியாத்தான் கிடைக்கும் . ஆனால் கிணறுவெட்ட பூதம் கிளம்பவும் செய்யும் என்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தகவலறியும் உரிமை சட்டம்
posted by HAFIL AMEER. A (DUBAI) [09 January 2014]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 32335

மாஷா அல்லாஹ். அருமையான முயற்சி. மெகா வின் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். காலத்திற்கும், நமது ஊர் மக்களுக்கும் தேவையான தவல்களை கோரியிருக்கிறது நமது மெகா. இன்ஷா அல்லாஹ் கோரிய தவல்கள் தக்க பதிலுடன் சரியான தேதிக்கு முன்னர் கிடைக்கும் என்று நம்புவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [09 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32336

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது '' மெகா '' பொது அமைப்பினின் இந்த செயல் திட்டம் .தற்போதைக்கு நமது ஊருக்கு .கண்டிப்பாகவே தேவையான ஒரு நல்ல செயல் வடிவம் தான் ...

நமது ''மெகா '' அமைப்பின் இக்கேள்விக்கு கண்டிப்பான முறையில் தங்களோடு சேர்ந்து பொது மக்களாகிய எங்களுக்கும் கூடிய விரைவில் நம் நகர் மன்றத்தின் மூலம் நல்லதோர் பதில் கிடைக்கும் என்றே நாங்கள் எதிர் பார்க்கிறோம் .......இல்லை காத்து இருக்கிறோம் ......

நமக்கு நல்லதோர் '' பதில்'' கிடைக்க வில்லை என்றால் .தங்களின் அடுத்த கட்ட செயல் திட்டத்துக்கு நம் ஊர் அனைத்து பொது மக்களும் தங்கள் அமைப்போடு முழுமையான முறையில் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.....நம் ஊருக்கு நல்லது ஒற்று நடக்கிறது என்றால் பொது மக்கள் துணை நிற்க தயங்கவே மாட்டார்கள் என்பது குறிப்பிட தக்கது ......

நம் நகர் மன்றதின் . மீதம் இருக்க கூடிய நாட்களில் நம் ஊர் நகர் மன்றதின் பல நல்ல செயல் திட்டங்கள் நமக்கு ( பொது மக்களுக்கு ) அமைய வேணும் .என்பது தான் அனைவர்களின் நல்ல எண்ணம் .....பாதி வருடங்கள் பொது மக்களாகிய நமக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களும் நிறை வராமல் போய் இருப்பது நமது துர்பாக்கியமே என்றும் கூறலாம்.....

தங்களின் இந்த செயல் வடிவத்தின் மூலம் பொது மக்களுக்கு நல்லது நடந்தால் சிறப்பே ..... நம் மக்களின் கனவு நினைவாகும்....

தங்களின் இந்த அனைத்து கேள்விகளையும் ஒரு சின்ன நோட்டிஸ் மூலம் நம் ஊர் பொது மக்களுக்கு தாங்கள் தெரிய படுத்தினால் ...ஊர் பொது மக்களும் அறிந்து கொள்ளலாமே.....

தங்களின் அனைத்து கேள்விகளும் முற்றிலும் நியாயமானதே ......பொருத்து இருக்கிறோம் நம் நகர் மன்றதின் நல்லதோர் பதிலுக்கும் ..+.. நல்லதோர் செயல் திட்டத்துக்கும் தான் .....

>> தொடரட்டும் இது போன்ற தங்களின் பல நல்ல செயல்கள் <<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 January 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32337

அருமை அருமை..! இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா.!

உறுப்பினர்களுக்கும் தலைவிக்கும் நடுவில் நடைபெற்ற, இரண்டு ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை நினைத்து தான் மனது வருந்துகின்றது.

இவர்களுக்குள் அடித்துக்கொண்டு ஒரு காரியமும் நடைபெறாமல் இருக்க, பல காரியங்கள் கேட்க ஆள் இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளன.

ஒத்துமையாக இருந்து இருந்தால் எவ்வளவு நல்ல காரியங்களை சாதித்து இருக்கலாம். ஹைர். எல்லாம் நன்மைக்கே.

அனைத்து கேள்விகளையும் உன்னிப்பாக படித்து முடித்ததும், தலை சுத்தி விட்டன. கல்லூரி எக்ஸாம்-க்கு கூட இப்படி உன்னிப்பாக படிக்கவில்லை.

இப்படி அமரக்கூடிய அனைத்து இடங்களிலும் ஆப்பை கூர் தீட்டி வைத்து விட்டீர்களே.! மெகா விற்க்கு பல நட்சத்திர பாராட்டுக்கள்.

கூடுதலாக, நகராட்சியில் வேலை பார்ப்பவர்கள் எத்தனை வருடங்களுக்கு, வேறு ஊருகளுக்கு டிரான்ஸ்பர் பண்ணப்படுவார்கள். நம் நகராட்சியில் தாத்தா, மகன், பேரன் என்று தலை முறை தலைமுறையாக வேலை பார்த்து வருகிறார்களே. அது எப்படி.?

தெருவுக்கு ஒரு சங்கம் ஆரம்பித்து, ஒரு சேவையும் செய்யாமல், பாசாது மடமாக ஆக்கிவருகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு, இந்த செய்தி ஒரு சிறிய சமர்ப்பணம்.

தொடரட்டும் உங்களை சாட்டை சுற்று, தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள்.தொடரட்டும் வல்ல ரஹ்மானிடம் நன்மைகளை அள்ளும் செயல்கள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஸ்ஸ...ப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே!
posted by Mauroof (Dubai) [09 January 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32338

238 கேள்விக்கணைகளையும் முழுவதுமாகப் படித்து முடிக்கவே அதுவும் பல கேள்விகள் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே வித்தியாசமாகக் கொண்டிருந்ததால் அவைகளை பல முறை படிக்க வேண்டியதாகிவிட்டது.

30 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என சட்டம் சொல்வது சரி. ஆனால் காலாண்டு, அரையாண்டு, முழுவாண்டுத் தேர்வு என இல்லாது பல ஆண்டுத் தேர்வுகளுக்கான வினாக்களை இப்படி ஒரேடியாக கேட்டுவிட்டீர்களே!

கேள்வி எண்: 40 மற்றும் 69 சற்றே இடிக்கிறது.

தகவல் அலுவலர் மட்டுமல்ல, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒன்று கூடி போர்க்கால அடிப்படையில் பதில் கூறிட/ஆவணங்களின் நகல்களைத் (ஒளிப்படிப்பொறிகளைத்) தந்திட முயன்றாலும் 30 நாட்களில் சத்தியமாக சாத்தியமில்லை.

‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ அரசுப் பதிவு செய்யப்பட்டு விட்டதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Kaleel Raman (chennai) [09 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32340

"மெகா" கேள்விகள் !!!

ஆணையரிடம் முறையிடவும், சென்னையில் மேல் முறையுடு செய்யவும் தயாராக இருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நாம் கேள்வி கேட்காத வரை....! நமது உரிமை நசுக்கப்படும்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32342

வெளிநாட்டில் இருந்து கொண்டே இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல்களை பெறமுடியுமா ? என என்னிடம் நேரில் ஒரு காயலர் ஒரு மாதம் முன் கேள்வி எழுப்பினார். மேலும் அது தெரிந்தால் தேவையான தகவல்களை தெரிய படுத்துமாறும் கேட்டு கொண்டார். அந்த சகோதரருக்கு தேவையான தகவலகளை கொடுத்து விட்டேன். இனி அவருக்கு தேவையான கேள்விகளை RTI தகவல் மூலம் அவர் வெளிநாட்டில் இருந்தபடியே அவருக்கு பயனளிக்கும்...!

மேலும் பல சகோதரர்கள் http://www.voiceofindian.org/ இந்த லிங்கை அழுத்தி தகவல் பெற்று கொள்ளவும்...! "அச்சம் அகல சட்டம் அறிவோம்" (WE VOICE OF INDIAN DOES NOT COLLECT MEMBERSHIP FEES, DONATIONS, FEES FOR OUR SERVICES,etc…)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...ஒனுமே புரியலை ...
posted by NETCOM BUHARI (CHENNAI) [09 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32343

இவ்வளவு நாளாக ஏன் இந்த கேள்விகள் எழுப்ப படவில்லை, ஏன் இதுக்கு முன் இருதவர்களுக்கு இது போண்டா விஷயம் தெரியாமல் போய் விட்டதா? ஒனுமே புரிய வில்லை,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வெளியூரில் இருக்கும் நான் உங்கள் மூலம் பல தகவலை எதிர்பார்க்கிறேன்.
posted by syed ahamed (chennai ) [10 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32354

மிக தெளிவான ஆக்கபூர்வமான தகவல்களை கேள்வியாக கேட்டுள்ளீர்கள் மெகா அமைப்பினர்களுக்கு பாராட்டுக்கள்.. மெகாவின் ஆக்கபூர்வான செயல்களுக்கு என்றும் நான் உட்பட நமதூர் மக்கள் கைகோர்ப்போம் அதில் சந்தேகம் வேண்டாம்.

மேலும் மிக முக்கியமாக உங்கள் அடுத்த கட்ட தகவல் நமது நகரின் மின்சார வாரியத்தின் அலுவலகம் நோக்கி இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து - புதிய மின் இணைப்புக்காக மக்களை சிரமப்படுத்தும் காரியம் நமது மின்சார அலுவகலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது. புதிய மின் இணைப்புக்கு வீட்டு தீர்வை சரி கொடுக்கலாம். அதையும் வாங்கி விட்டு பின் வீட்டு பத்திரத்தை நேரில் கொண்டு வா விண்ணப்பிக்கும் வீட்டின் முதியவரை நேரில் அழைத்து வா எனவும் அராஜகம் நடக்கிறது..

இதற்கெல்லாம் யாரும் ஏன் எதற்கு என கேள்வி எழுப்பாததே காரணம். புதிய மின் இணைப்புக்கு எது எது சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டத்தில் என்ன உள்ளது அதை நகர் மக்கள் யாரும் அறியாமல் இருப்பதாலேயே அங்கு இது மாதிரி அட்டூழியம் தலை தூக்குகிறது.. இது போன்று மற்ற அணைத்து விசியங்களிலும் நமது மின் வாரியத்தில் நீடிக்கிறது. உதாரனத்திற்க்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பத்திலிருந்து பழுதான பழைய வயர்களை மாற்றி புதிய வயர் மாற்றுதல், வீட்டில் பழுது பார்த்து கட்டிட்டம் கட்ட அதற்க்கு விதிமுறைகள் என்ன என்ன இப்படி பல தகவல்கள் தெரியாததால் இந்த மின் வாரியம் நமதூர் மக்களை மிகவும் கஷ்டப்படுத்துகிறது.

ஆகையால் மெகா அமைப்பினர்களே விரைவில் இது சம்பந்தமாக மக்களுக்கு நற்சேவை செய்யுங்கள் என எதிர்பார்க்கிறோம். ஒரு தனி மனிதன் நேரில் கேள்வி கேட்டால் அவனுக்கு பதில் சரியாக கிடைபதில்லை.

மெகாவின் 3 வது தகவல் பெறும் கட்டம் வீ ஓ அலுவலகமாக இருக்கட்டும்.

எங்கள் கருத்து ஆலோசனைகள் மெகா உங்களால் ஏற்று கொள்ள படுகிறதா என்பதை இதன் மூலம் காண்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mohideen (Jeddah) [10 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32361

இங்கு கேட்க பட்டு இருக்கும் பல கேள்வி தேவை இல்லாதது தான். 500 கேள்வி கேட்பது முக்கியம் இல்லை. 10 கேள்வி கேட்டாலும் பயனுள்ள கேள்வியாக இருந்தால் நல்லது. மற்றபடி சில நல்ல கேள்விகளும் உள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மெச்சலின் மிளிர்ச்சியில்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [11 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32382

ஒரு சிலர் என்னை முறைக்கும் அளவிற்கு "மெகா"வை . மெச்சிவிட்டேன் முந்திய காலங்களில்.அந்த மெச்சலின் மென்மையும் மெருகும் முனை அளவுகூட மெலிய வில்லை! மாஷா அல்லாஹ்!

அது சரி, வருடத்திற்கு 365 நாட்கள். விடுமுறை நாட்கள் கழித்து போக மற்றைய நாட்களில் உங்களுக்கு( நமக்கு) விளக்கம்தர உட்க்கார்ந்தாலும் வருடம் முழுவதும் முடியாதே!

சில முக்கியமான 25 கேள்விகளை தேர்வு செய்து கொடுத்து அதற்க்குறிய தகவல் கிடைத்தவுடன் அடுத்த 25 என்று நாம் தொடருவோமேயானால் நமக்கு விளக்கம் கிடைப்பது மட்டுமல்ல அதற்குறிய நடவடிக்கையை நாம் எடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும்!

இப்படி ஒட்டு மொத்தமாக கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் இந்த ஜென்மத்தில் கிடைப்பது கஷ்டம்! மேலும், மேலும் அவர்களை நெருக்கினால் நான் இல்லை சாமி என்னை விட்டுடுங்க என்று வெருண்டோடவும் வழிவகுத்து விடும் என ஐய்யப்படுகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ASHIK RAHMAN (Mikhwa AL BAHA K.S.A) [22 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32623

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கும் இந்த நேரத்தில் இத்தனை கேள்விகளுக்கு காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் இடம் இருந்து பதில் கிடைக்குமா ? மெகா உக்கு ? பொறுத்து இருந்து பார்போம் .நல்லது நடக்கட்டும் ஊழல் ஒழியட்டும் நாடு செழிக்கட்டும் .உங்கள் முயற்ச்சி வெற்றி பெறட்டும் .நீதி வெல்லும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. தகவல் உரிமை சட்டம்
posted by balasubramanian (chennai) [22 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32642

தோழர்களுக்கு இனிய வணக்கம்

உங்களது முயற்சிக்கு இந்தியன் குரல் அமைப்பின் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

தகவல் உரிமை சட்டம் 2012 ஆம் திருத்தம் மற்றும் அதற்க்கு முந்திய சில திருத்தங்களின் அடிப்படியிலும் உச்ச நீதிமன்ற ஆணைகளின் அடிப்படையிலும் சில தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்

1 தகவல் உரிமை சட்டத்தில் தகவல் மட்டுமே கேட்கலாம் . கேள்வி, கோரிக்கை, புகார், ஆலோசனையாக மனுக்களில் இருக்க கூடாது

2 500 வார்த்தைகள் மிகாமல் விண்ணப்பம் இருத்தல் வேண்டும் இவைகளை மீறி விண்ணப்பம் இருந்தால் தகவல் தரலாம் தராமலும் இருக்கலாம் அவ்வாறு தகவல் தராத பட்சத்தில் நீங்கள் எடுக்கும் மேல் நடவடிக்கைகள் தோற்கும்

ஆகவே தோழர்களே தகவல் மனுக்களுக்கு பதில் வரவில்லையெனில் நீங்கள் மீண்டும் புதிதாக மேலே குறிப்பிட்டவாறு சரியாக மனுக்களை தயார் செய்து அனுப்பி தகவல் வரவில்லை எனில் அதன் பின் மேல்முறையீடு செய்வதே சிறப்பு

உங்கள் பகுதியில் தகவல் சட்டத்தை முறையாக பயன்படுத்திட உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதுடன் இந்த சட்டத்தை எப்படி பயன்படுத்துவது

தகவல் சட்டத்தைப் பயன்படுத்தி தனி மனிதன் இலஞ்சம் கொடுக்காமல் அரசுப் பயன்களைப் பெறுவது எப்படி போன்ற பயிற்சிகளை தகவல் உரிமை சட்டம் நன்கு அறிந்தவர்கள் மூலம் பயிற்சி அளித்தீர்கள் என்றால் அதைவிட மிகச் சிறப்பான பனி என்று வேறு ஒன்றும் இருக்காது

உதவிக்கும் சந்தேகங்களுக்கும் இந்தியன் குரல் இலவச உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்

மகிழ்வுடன்
பாலசுப்ரமணியன்
9444305581
இந்தியன் குரல்

தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம் நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை

சாதனை ;

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 10000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற வழி காட்டியுள்ளோம். கல்விக்கடன் குறித்து முக்கிய தினசரி பத்திரிகைகள் வார இதழ்களில் இந்தியன் குரல் கல்விக்கடன் உதவி குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன

1.5 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி செய்துள்ளோம்

கடமையை செய்ய லஞ்சம் கேட்ட, போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் கைது செய்ய நடவடிக்கை உதவி

உயர் அலுவலர்களால் நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தண்டனை, பணப்பயன் நிவாரணம் பெற உதவி செய்துள்ளோம்

10000 இக்கும் மேற்ப்பட்ட முதியோர் மற்றும் திருமண உதவி கிடைத்திட உதவி

கல்விக்கடன், அநியாயமாக இழந்த சொத்துக்கள், பட்டா, சிட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும அட்டை, மின் இணைப்பு, ஓய்வுகாலப் பணப்பயன்கள், உயர் அலுவலர்கள் பழிவாங்கல், தேவையற்ற இடமாறுதல், ஊழல் கனிமத் திருட்டு போன்ற எல்லாவற்றுக்கும்

சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு

எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்

இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்

இந்த சமுதாயம் என்னை வளர்த்தது கல்வி கொடுத்தது வாய்ப்பும் வசதியும் வாழ்வும் கொடுத்தது. இந்த சமுதாயத்தில் இருந்து நான் பெற்ற கடனை திரும்ப செலுத்த துவங்கி விட்டேன் நான் இறப்பதற்கு முன் முழு கடனையும் திரும்ப அடைத்திடல் வேண்டும் என்பதே எனது நோக்கம் ஆகும் - பாலசுப்ரமணியன் நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!

www.facebook.com/myvoiceofindianorg

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN
(0) 91 9443489976(M.Sivaraj)
(0) 91 9444305581(E.Balasubramanian)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கேள்விகள் பிரித்தே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன!
posted by S.K.Salih (Kayalpatnam) [23 January 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32651

திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் த.அ.உரிமை சட்டத்தின் விதிமுறைகள் சிலவற்றை நம் கவனத்திற்குத் தந்துள்ளார். அதன் சட்ட விதிமுறைகள் படி, இந்த 238 கேள்விகளும் துறை வாரியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி உறைகளில் இடப்பட்டு, மொத்தமாகச் சென்ற 30 பேரும் தனித்தனியாகவே அவற்றைப் பொதுத் தகவல் அலுவலரிடம் சமர்ப்பித்து, ஒப்புகை பெற்று வந்தனர்.

செய்தியில் விடுபட்ட அத்தகவல் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA)
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர் சாரல்!  (8/1/2014) [Views - 2416; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved