Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:49:02 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13143
#KOTW13143
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 3, 2014
நகர்மன்ற வங்கி கணக்குகள் [பாகம் 2]: மாயமான குடிநீர் விநியோக கணக்குகள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4246 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 1 காண இங்கு அழுத்தவும்

----------------------------------------------------

தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களுக்கான தணிக்கை துறை கையேடு (THE TAMIL NADU LOCAL FUND AUDIT DEPARTMENT MANUAL) - ஒவ்வொரு நகராட்சியும், குறைந்தது REVENUE FUND, WATER TAX COLLECTION FUND, EDUCATION TAX FUND என்ற தலைப்புகளில் வெவ்வேறு கணக்குகளை பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கிறது.





நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள 13 வங்கி கணக்குகளில் இரண்டு - குடிநீர் விநியோகம் சம்பந்தப்பட்டவையாக தெரிகிறது. அவை - (காயல்பட்டினம் கிளை) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள இரண்டு கணக்குகள் (கணக்கு எண்கள் 1039 மற்றும் 1125).

அந்த கணக்குகளை விபரமாக பார்ப்பதற்கு முன்னர், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காயல்பட்டினம் நகராட்சியில் - குடிநீர் விநியோகம் வகைக்கு - தோராயமாக வரவு - செலவு எவ்வளவு இருக்கவேண்டும் என காணலாம்.

காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 8000 இணைப்புகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. முறைகேடாக வழங்கப்பட்டு, கணக்கில் இல்லாத இணைப்புகள் நூற்றுக்கணக்கில் உள்ளது என கூறப்பட்டாலும், இந்த செய்தியின் ஆய்வுக்கு - 8000 இணைப்புகளே உள்ளது என எடுத்துக்கொள்வோம். இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவரும் - மாதம் 50 ரூபாய் என, ஆண்டுக்கு 600 ரூபாய் - குடிநீர் வரியாக செலுத்தவேண்டும். 8000 இணைப்புகள் உள்ள நகராட்சியில் இவ்வகையில் மட்டும் - ஆண்டு வரியாக 48 லட்ச ரூபாய் (8000 x 600) வசூல் செய்யப்படவேண்டும்.

மேலும் - புதிய இணைப்புகள் ஒவ்வொன்றுக்கும், வைப்புதொகையாக 5100 ரூபாய் பெறப்படுகிறது. மேலும் செண்டேஜ் தொகை எனவும் - தகுதிக்கேற்ப பெறப்படுகிறது.



ஆண்டுக்கு புதிதாக குறைந்தது 100 இணைப்புகள் வழங்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், சுமார் 7 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட வேண்டும். ஆக மொத்தம் - குறைந்தது, ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய், குடிநீர் விநியோக கணக்கில் வரவு இருக்கவேண்டும்.

காயல்பட்டினத்திற்கான குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேல ஆத்தூரில் பராமரிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வருகிறது. 1997ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் தற்போதைய திட்டப்படி, சுமார் 20,30,000 லிட்டர் குடிநீர் தினசரி காயல்பட்டினத்திற்கு வழங்கப்படுகிறது.





வழங்கப்படும் குடிநீர் வகைக்காக - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து 1000 லிட்டர் குடிநீருக்கு ரூபாய் 4.50 என வசூல் செய்கிறது. இது - ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் ([20,30,000/1000] x 4.50 x 365) என வருகிறது. காயல்பட்டினம் நகராட்சிக்கு என குடிநீர் வழங்க மேல ஆத்தூரில் உள்ள மின் இணைப்புகளுக்கான கட்டணங்களை மின் வாரியத்தில் நேரடியாக செலுத்தியது போக மீதி தொகையை காயல்பட்டினம் நகராட்சி - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

மேலே காணப்பட்ட தகவல்கள் பின்னணியில் காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்காக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பராமரிக்கப்படும் இரு வங்கி கணக்குகளை காண்போம். இவ்விரு வங்கி கணக்கிலும் - நகர்மன்றத் தலைவர் வெளியிட்டுள்ள விபரங்களின் காலகட்டம் மார்ச் 1, 2012 முதல் அக்டோபர் 31, 2013 வரையிலானது.

(1) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு எண் 1039



இந்த வங்கி கணக்கில் - பார்வையில் உள்ள காலகட்டத்தில், வட்டி மூலமாக ரூபாய் 6723 வரவு உள்ளது. வேறு எந்த பணமும் இந்த வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இறுப்பாக 80,889 ரூபாய், 80 பைசா உள்ளது.

(2) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு எண் 1125







இந்த வங்கி கணக்கில், பார்வையில் உள்ள தகவல்கள்படி, 2011-12 நிதியாண்டின் மார்ச் 2012 மாத விபரங்கள் மட்டும் உள்ளன. ஆகவே இதில் இருந்து - மார்ச் 2012 நிறைவில் - 56,60,470 ரூபாய் இந்த வங்கி கணக்கில் இருந்தது என்ற தகவல் மட்டுமே பெறமுடிகிறது.

2012-13 ஆண்டுக்கான விபரங்கள் - 12 மாதங்களுக்கு - உள்ளன. 2012-13 காலகட்டத்தில், 20,89,526 ரூபாய் இந்த வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது. இந்த வங்கி கணக்கில் தான் முழுமையாக குடிநீர் வசூல் தொகை செலுத்தப்படுகிறது என்றால் - இந்த தொகை 50 லட்ச ரூபாய்க்கும் மேலே இருக்கவேண்டும். அப்படியென்றால் - குடிநீர் வரி, நகராட்சியில் 40 சதவீதம் அளவில் தான் வசூல் ஆகிறதா? அல்லது குடிநீர் விநியோக வகைக்கு வேறு வங்கி கணக்குகள் பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இதே காலகட்டத்தில் மூன்று காசோலைகள் மூலம் 37 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட 37 லட்ச ரூபாய் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கான தொகையாக இருக்கலாம்.

2012-13 நிதியாண்டின் 12 மாதங்களில் இவ்வங்கி கணக்கில் சுமார் 20 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் - 2013-14 நிதியாண்டின் 6 மாதங்களில், இவ்வங்கி கணக்கில் 1,07,868 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 55 லட்ச ரூபாய் வசூல் ஆகவேண்டிய வகையில் 6 மாதங்களில் 1 லட்ச ரூபாய் தான் வசூலாகியதா? வசூல் செய்யப்பட்ட தொகை, வேறு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தால், ஏன் குடிநீர் விநியோக வகைக்கு, ஒரே காலகட்டத்தில் பல வங்கி கணக்குகள்?

குடிநீர் இணைப்புகளுக்கான தொகையை நகராட்சியின் ஊழியர்கள் பொது மக்களிடம் வசூல் செய்து, நகராட்சிக்கு செலுத்தாமலேயே - முறையற்ற வகையில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதாக சமீபத்தில் வெளியான தகவல்களின் உண்மை நிலை - குடிநீர் விநியோக வங்கி கணக்கில் மறைந்து கிடக்கிறது என மேலோட்டமாக பார்க்கும் போது ஐயம் எழுகிறது.

[தொடரும் ...]

----------------------------------------------------

பாகம் 1 காண இங்கு அழுத்தவும்

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 1:00 pm / 03.03.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தோண்ட தோண்ட பூதம் கிளம்புகிறது.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [03 March 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33482

தலைவி அவர்களின், இந்த செயல் மிகவும் அருமை. பாராட்டப்பட வேண்டியது. நகராட்சியில், பெருச்சாளிகள் (இல்லை பூதம்) ஆட்சி இருந்தது.

இந்த மேட்டரை, விலாவாரியாக தந்த இந்த இணையதளத்துக்கும் நன்றி. இப்போது இருக்கும் ஆதாரங்களை வைத்து என்ன, என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? ஏனென்றால், இந்த கணக்குகளை சரிபார்க்க , தணிக்கை அதிகாரிகள் இருப்பார்களே? அவர்களிடமும், இந்த தகவல்களை, நம் நகராட்சி அதிகாரிகள் கொடுக்கவில்லையா?

4-5 மாதங்களுக்கு முன், நம் நகராட்சி பணம் கையாடல் பண்ணியதாக, சில ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதே? அப்போதும் இந்த தணிக்கை அதிகாரிகளுக்கு, வங்கி விபரங்கள் தெரிவிக்கப் படவில்லையா?

கிடைத்த தகவல்கள் இவ்வளவு. இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பது........?

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohideen (Jeddah) [03 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33487

அட்மின் அவர்களே,

தயவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள செய்தியை போட வேண்டாம். இல்லை ஊழல் நடக்கிறது என்று உங்களுக்கு திட்ட வட்டமாக தெரிகிறது என்றால் ஆதாரத்துடன் போடுங்கள். சந்தேகம் என்ற வார்தையை நீக்கிருங்கள்.

கருத்து எழுதுபவர்கள் ஆயிரம் போடுவார்கள். ஆனால் செய்தியை வெளியிடுபவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் போடாமல் ஆதாரத்துடன் போட வேண்டும். இதில் ஏதாவது தவறு என்று சொல்லுங்கல், திருத்தி கொள்கிறேன்.

[Administrator: ஆவணங்கள் அடிப்படையில் - அவசியமானதும், உறுதி செய்யப்பட்டதுமான தகவல்கள் மட்டுமே - செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. யூகங்கள் அடிப்படையில் அல்ல!]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வங்கி கணக்கில் வரவு என்ன என்ன என்பது போன்ற தகவல்களும் நம்மில் எவருக்கும் தெரிவதில்லை.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [03 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33488

நகராட்சியின் வசூல் மையத்தில் தினமும் பல வகைக்காக பொதுமக்களிடமிருந்து வசூலாகும் பணத்தை முறையாக அன்றைய தினமே நகராட்சி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வரவு வைக்க படுகிறதா என்ற தகவல்களையும் மேலும் 30 நாள் - ஒரு மாதம் முடிவடைந்த பிறகு தேதி வாரியாக ஸ்டேட்மென்ட் பெறுவதை நாம் வழமையாக நம் பார்வைக்கு பெற்று கொண்டு இருப்போமானால் இனி கடந்து போக கூடிய காலத்தின் நமது வரி பணத்தின் வங்கி கணக்குகளை முறைப்படுத்தலாம்..

நகராட்சியில் தினமும் வசூலாகும் லட்சத்திற்கும் குறைவான நமது வரிப்பணம் எத்தனை நாட்களுக்கு - எத்தனை வாரங்களுக்கு பிறகு வங்கியில் செலுத்தபடுகிறது - அது வரை யார் யார் கையில் புழக்கத்தில் உள்ளது.? என்ன நடக்கிறது..? என்ற தகவல் நம்மில் எவருக்கும் தெரிவதில்லை... கவலையான விசியம்.!

மேலும் மத்திய - மாநில அரசுகளிடமிருந்து நமது நகராட்சியின் வங்கி கணக்கில் வரவு என்ன என்ன என்பது போன்ற தகவல்களும் நம்மில் எவருக்கும் தெரிவதில்லை.

செலவு தான் சில தெரிகின்றன வரவு தெரிவதில்லை..

தற்போது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் திருமதி ஆபிதா சேக் அவர்களின் பதவி காலத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு விழிப்புணர்வும் - நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தும் முறையை பிறகு வரும் நகர்மன்ற தலைமைக்கும் - பொதுமக்களுக்கும் ஒரு வெளிப்படை ட்ரையல் மட்டும் நடப்பதாக உணர முடிகின்றது..

இது முன் செய்யல்ப்பட்ட நிர்வாகத்தில் இப்படி ஒரு வெளிப்படை தன்மை கொண்ட மக்கள் வரி பணத்தின் வரவு - செலவு வங்கி கணக்குகள் இடம் பெறவில்லை..

இனி அடுத்து வரக்கூடிய 2016 தலைமை இன்ஷா அல்லாஹ் வேறு ஒருவர் இது மாதிரி வெளிப்படை நிர்வாகம் ஓரளவு தரலாம்... பிறகு போக போக மக்களின் எதிர்பார்ப்பு சரி செய்யப்படலாம்.. இன்ஷா அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohideen (Jeddah) [03 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33491

பணம் வேறு வங்கியில் டெபொசிட் செய்ய பட்டதா என்று தெரியபடுத்தவும். 7,8,9 ஆகிய மாதங்களில் 2012 ஆம் வருடம் ஒன்னும் டெபொசிட் பண்ணின மாதிரி தெரிய வில்லையே. ( ஜூலை மாதத்தில் குறைவு)

மேலும் ஒரு சிறிய சந்தேகம். the date is not in the sequence 28.09.12 next 30.03.12 the 20.08.13.....but the balance is cummulative. இது எப்படி என்று தெரிய வில்லை

[Administrator: 30.3.2013 என்பது 30.3.2012 என்று பதிவாகியிருப்பதாக தெரிகிறது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohideen (Jeddah) [04 March 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33503

Admin,

Then where is the deposits ( Cash ) from Aug 2012 to Sep 2013. either they have deposited in another account or something is there. if they deposited in another account then publish that account also.

[Administrator: நகராட்சி வங்கி கணக்குகள் குறித்து அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. தொடர்ந்து பார்க்கவும்]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohideen (Jeddah) [04 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33515

அட்மின்,

ஜூலை 2012 முதல் செப்டம்பர் 2013 வரை வங்கியில் பணம் செலுத்த பட வில்லை ( குறிப்பிட்ட ஒரு 8 transaction தவிர ) அப்படி என்றால் கண்டிப்பாக பணம் மற்றுமொரு வங்கியில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் ( இது என்னுடைய யூகமே ஏன் என்றால் ஒரு வருடம் பணம் வங்கியில் செலுத்த படாமல் இருக்காது )

//// நகராட்சி வங்கி கணக்குகள் குறித்து அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. தொடர்ந்து பார்க்கவும்]//// C & P

தாங்கள் இப்பொழுதுதான் தகவலை சேகரிக்கிறீர்கள் அப்படி இருக்கையில் எதை வைத்து calculation பன்னுநீர்கள் தெரியபடுத்தவும்.

[Administrator: தங்களின் முந்தைய கருத்து பதிவில் (Comment Reference Number: 33503) தாங்கள் பதிவு செய்த கருத்தான //if they deposited in another account then publish that account also// என்பதற்கு தான் அந்த பதில் வழங்கப்பட்டது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohideen (Jeddah) [05 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33520

அட்மின்

நான் கூறியதும் வங்கி கணக்கை பற்றியதே. வேறு வங்கியில் பணம் செலுத்தப்பட்டதா இல்லையா, எவ்வுளவும் பணம் இருப்பில் உள்ளது என்று தெரியாமல் நீங்கள் இவ்வுளவு தான் வசூல் செய்ய பட்டது என்று கூறி இருக்கிறீர்கள். அதை தான் கேட்டேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (3/3/2014) [Views - 1912; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved