Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:20:33 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13156
#KOTW13156
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 4, 2014
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்திட பெறப்பட்ட கோரிக்கை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது: முதல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2708 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணியை முதலில் இறுதி செய்த அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததும், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.



இந்த நிலையில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக மார்ச் 3–ந் தேதி முதல் ஏப்ரல் 5–ந் தேதி வரை, 16 நாட்கள் 19 தொகுதிகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி தனது சூறாவளி பிரசாரத்தை கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கினார். இதற்காக சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் அவர் புறப்பட்டார். பின்னர் ‘ஐ.என்.எஸ். அடையார்’ ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்த ஜெயலலிதா, அங்கு தயார் நிலையில் இருந்த ஹெலிகாப்டரில் ஏறி காஞ்சீபுரம் புறப்பட்டார்.



காஞ்சீபுரத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக காஞ்சீபுரம்–செங்கல்பட்டு சாலையில் உள்ள நத்தப்பேட்டை என்னும் ஊரில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஹெலிகாப்டரில் இறங்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு காரில் வந்தார்.

மாலை 4.44 மணிக்கு மேடைக்கு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா காஞ்சீபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பேசினார்.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசுகையில் -

தற்போது, தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரை கிடைக்கப் பெற்றவுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று ஜெயலலிதா கூறினார்.

முழு உரையையும் காண இங்கு அழுத்தவும்.

அவரின் பேச்சிலிருந்து முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

குடும்ப ஆட்சியை அகற்றி

‘‘2011–ம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை மலர வைக்கவேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதல்–அமைச்சர் ஆக்கினீர்கள்.

அதேபோல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை எல்லாம் நேரில் சந்தித்து விடுப்பதற்காகவே நான் இங்கு வந்து இருக்கிறேன். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தூக்கி எறிய வேண்டும்

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947–ம் ஆண்டு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. 1947–ம் ஆண்டு எந்த தியாகத்தை செய்தாவது இந்த நாட்டை சூறையாடிய, நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் இருந்தார்கள்.

அதே மன நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது உங்கள் மனங்களில் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக்கூடாது என்ற மன நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி

நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்த தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம்பெறும்.

முதன்மை மாநிலமாக

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், தமிழகத்திற்கு தேவையானவற்றை பெறவேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமையை அ.தி.மு.க.வுக்கு நீங்கள் வழங்க வேண்டும். வழங்குவீர்களா? (வழங்குவோம் என பலத்த கரகோஷம்)

உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப்பெறும் போது, இந்திய நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும்; இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்; அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும்; தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை சிரமமின்றி மேற்கொள்ளவும்;

இனப்படுகொலை

இலங்கை போரின் போது இனப்படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழியவும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்க வழிவகை செய்யவும்; தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்கவும்; சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஆக்கவும்; சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்; வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கவும்; 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரவும், இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும்,

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணய கொள்கையை மாற்றவும், பெட்ரோலிய பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையானதாக இருக்கவும்; தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல ஒரு வாய்ப்பினை நீங்கள் நிச்சயம் நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

‘‘வளமான வல்லரசு, வலிமையான நல்லரசு’’ என்ற நிலையை பாரதம் எய்த ‘‘தரணி போற்றும் தன்னிகரில்லா மாநிலம்’’ என்ற பெருமையை தமிழகம் அடைந்திட, வருகின்ற மக்களவை தேர்தலில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு எம்.ஜி.ஆர். கண்ட வெற்றி சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து அவரை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களின் நலனுக்காக

உங்கள் வாக்கை தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துங்கள். இந்திய திருநாட்டை காப்பாற்றுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’’


இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

புகைப்படங்கள்:
தி இந்து

தகவல்:
தினத்தந்தி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அது ஒரு வசீலா தான்!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [04 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33505

எது எப்படியோ,

முஸ்லீம் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்திய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் போராட்டத்தை அல்லாஹு இதற்க்கு ஒரு வசீலாவாக ஆக்கி வைத்துள்ளான்.

சொல்லப்பட்டது போல பின்னர் இட ஒதுக்கீட்டை அதிகபடுத்தி தந்தால் அதன் வெற்றி கட்சி வெறிஅற்ற முஸ்லீம் மக்களை சாரும். எல்லா புகழும் அல்லாஹுவுக்கே.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by farook (ksa) [04 March 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33506

ஆணையத்தின் பரிந்துரை இன்னும் 1 - 2 வாரத்தில் கிடைக்குமா ? இதை ஆறு மாசம் முன்னாடியே செய்து இருந்தால் பரிந்துரை வந்து, நீங்களும் ஆணை போட்டு இருப்பீர்கள் . மறந்து விட்டர்கள் போல் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உண்மை முஸ்லிம் இனியும் ஏமாறத் தயாராக இல்லை!...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33510

யார் காதில் பூ சுற்றுகிறார் முதல்வர்.அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி அவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்,எப்பொழுது செய்கிறார்களோ அது அவர்களுக்கே தெரியும்!ஒருவேளை அவர்கள் பரிந்துரைத்தால், அதை பரிசீலனை செய்து முடிவாக ஒருவேளை சட்டமாக நிறைவேறும் காலம் வரு மேயானால்,அக் காலம் வருவதற்குள் இந்த தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலும் வந்துவிடும்!

எல்லாவற்றிக்கும் மேலாக இன்னும் 10 அல்லது 15 நாட்க்களுக்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள்,அதன் பின்னர் எந்த கொள்கை முடிவு வேலைகளும் செய்யக்கூடாது. இது முதல்வருக்கு தரியாதா என்ன?

ஏதோ நேற்றுதான் நாம் இட ஒதிக்கீடு கேட்க்கிறோம் என்று நினைகிறாரா? ஆட்சி கட்டிலில் ஏறிய அன்று முதல் அழுதழுது கேட்க்கிறேமே,காதில் விழவில்லையா? செய்யணும் என்று மனசு வைத்தால் எப்பொழுதே 3 வருடங்களுக்கு முன்னரே செய்திருக்கலாமே.

இடஒதிகீடுபற்றி ஒரு சிறு சாதாரண செய்திகூட சொல்லாமல்,ஏன் உங்கள் தேர்தல் அறிக்கையிலும் கூட ஒரு வார்த்தை சொல்லாமல்,இப்பொழுது ஓட்டு கேட்கும் நேரத்தில்,மேடையில் பச்சை பிளைக்க்கி பலூன் காட்டி ஏமாற்றுவது போல் இருக்கிறது உங்கள் பேச்சு. ஏமாற நாங்கள் தயாராக இல்லை!

இதேபோலத்தான் ஒரு தேர்தலில்,சிறுபான்மை நல ஆணையத்தின் அலுவலக சேவையின் முடிவு தேதியின் கடைசி நாளன்று,அதை புதுபித்து விட்டு இதோ நான் இந்த ஆணையத்தின் காலத்தை புதுபித்து விட்டேன். சிறுபான்மையருக்கு இட ஓதிக்கீடு சலுகை கிடைக்கக்கூடிய முயற்ச்சியில் இறங்கிவிட்டேன் ஆகவே முஸ்லிம் சமுதாயமே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தன் 5 வருட ஆட்சிக்காலத்தில் ஒன்றுமே செய்யாமல் தேர்தல் நேரத்தில் அன்று நடித்த அதே நாடகம் தான் இன்றும் அரங்கேறி இருக்கிறது!

புதிப்பித்த அந்த ஆணையத்தின் நகலை கையில் வைத்துக்கொண்டுதான் ஒரு முஸ்லிம் அமைப்பு அம்மாவிற்காக அல்லும், பகலும் உழைத்து ஓட்டு சேகரித்தார்கள்,உண்மையல்லாத போலித்தனத்தை அறிந்த அல்லாஹ் அன்று அவர்களுக்கு தோல்வியை தழுவ வைத்தான்!

ஆகவே உண்மை முஸ்லிம்கள் இனியும் ஏமாறத் தயாராக இல்லை!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved