Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:50:22 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13160
#KOTW13160
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 4, 2014
திமுக தொகுதிப் பங்கீடு: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3025 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.



முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து காதர் மொய்தீன் கூறுகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திருநெல்வேலி, வேலூர், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய ஊர்களில் ஏதேனும் 2 தொகுதிகளில் சீட் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது, ஆனால் திமுக 1 தொகுதி ஒதுக்கியுள்ளது என்றார்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏணி சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் ஒதுக்கப்பட்ட தொகுதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

தகவல்:
தி இந்து

[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 9:15 / 05.04.2014]

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [04 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33511

அஸ்ஸலாமு அழைக்கும் ,

பாவம் முஸ்லிம் லீக் இந்த நிலைக்கு போய் கொண்டு இருந்தால் கட்சி இருக்குமா அல்லது இப்படிதான் இருக்குமா என்று நினைக்க தோன்றுகிறது .

இந்த மஞ்சள் துண்டுக்கு கூட ஒன்று கொடுக்க மனசு இல்லை முஸ்லிம் லீக்கிற்கும் ஒன்று கூட வாங்குவதற்கு வக்கும் இல்லை திராணியும் இல்லை .

மனித நேய மக்கள் கட்சிக்கு என்ன நிலை என்று இனிதான் அறிய வரும் முதல் முறையாக கூட்டணி என்பதால் அவர்களுக்கும் ஒன்றுதான் என்று தோனுகிறது. முஸ்லிம் லீக் என்பது மற்ற கட்சிகளுக்கு போடு கத்தரிக்காய் போல ஆகி விட்டது .

நம்முடைய ஓட்டு 38 தொகுதிகளிலும் அவர்களுக்கு வேண்டும் ஆனால் நமக்கு இரண்டுதான் கொடுப்பார்கள் திராவிட முன்னற்ற கழகத்துக்கு இந்த முஸ்லிம் சமுதாயம் செய்த தியாகத்தை போல் எந்த சமுதாயமும் செய்து இருக்காது அதற்கு இந்த மஞ்சள் துண்டின் விசுவாசம் தான் இந்த தொகுதி ஒதுக்கீடு முஸ்லிம் மக்களை போல ஒரு ஈனா . வானா இந்த நாட்டில் இருக்க மாட்டார்கள் நம்முடைய ஒற்றுமை இன்மை தான் அவர்களை இந்த நினைப்புக்கு தள்ளுகிறது .

நம் சமுதாய மக்கள் ஒரு குடைகீழ் இருந்து பிரியாமல் நின்றால் குறைந்தது 5 தொகுதிகளை கட்டாயம் வாங்க முடியும் இந்த தமிழக + பாண்டி ( 40 ) .

இந்த நிலைக்கு கூட இந்திய பாகிஸ்தான் பிரிவினைதான் காரணம் என்று சொன்னால் நம்மில் சிலர் சிரிப்பார்கள் ஆனால் நல்ல அறிவுபூர்வமாக சிந்திதால் அரசியல் , வரலாறு , புவியல் போன்ற காரணிகளை இணைத்து ஆராய்ந்தால் நமக்கு கண்டிப்பாக அது உண்மை என்பதை நாம் அறியலாம் .

குறிப்பு : இந்தியாவின் மக்கள் தொகை - 138 கோடி பாகிஸ்தானின் மக்கள் தொகை - 20.5 கோடி பங்களாதேஷ் மக்கள் தொகை - 19.25 கோடி

நம் நாட்டின் பிரிவினைக்கு முக்கிய காரணம் இந்துத்துவ சக்திகள்தான் முழு முதல் காரணம் . அவர்கள் 50 ஆண்டுக்கு பின் ( சூழலை கிரகித்து ) நடப்பதை உணர்ந்து தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்த விளைவுதான் இந்த பிரிவினைகளுக்கு மூல காரணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...திருநெல்வேலி கைகொடுக்குமா ?
posted by mackie noohuthambi (chennai) [04 March 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33512

கடைசியாக கிடைத்த தகவல்படி வேலூர் கலைஞருக்கு உடன்பாடில்லை. ராமநாதபுரம் பேராசிரியருக்கு உடன்பாடில்லை.மயிலாடுதுறை மனித நேயத்துக்கு எதிர்பார்க்கப் படுகிறது. நெல்லை முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஏணி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்று திருப்திபட்டுக் கொண்டாலும் நெல்லை, முஸ்லிம் லீக்கை நாடாளு மன்றத்துக்கு அனுப்புமா என்ற சந்தேகம் எழுகிறது.

காயிதே மில்லத் பிறந்த ஊர் பேட்டை - மேலப்பாளையம் முஸ்லிம்கள் கோட்டை என்று நினைத்தாலும் காயல்பட்டினம் இல்லாத ஒரு அபூ நவாஸ் கோட்டை தான் நெல்லை. அதிமுகவுக்கு உள்ள செல்வாக்கு முஸ்லிம் லீக்கை பந்தாடி விடுமோ என்ற பயம் வருகிறது.

கலைஞருக்கு வாழ்விலும் தாழ்விலும் கூட நின்று உதவி செய்யும் முஸ்லிம் லீக் - அது விரும்பும் தொகுதியை கொடுத்து அவர்களை மனம் குளிர செய்திருக்க வேண்டாமா..110 விதியை வைத்து ஆட்சி நடத்தும் அம்மா செய்வதுபோல், குறளோவிய நாயகன் வள்ளுவன் தன் 110 இல் சொல்லியபடி "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..." என்பதை சற்று நினைத்துப் பார்க்க தவறியதேன்."தேறான் தெளிவும் தெளிவுற்றான் கண் ஐயுறலும் தீரா இடும்பை தரும்" .. ஆறுவது சினம் மாறுவது மனம் அறியாத சிறுவனா நீ, தமிழின தலைவா!

மனம் கனக்கிறது...அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தவறு நம் பக்கம் தான்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [04 March 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33514

அஸ்ஸலாமு அழைக்கும்,

நிச்சயம் தவறு நம் பக்கம் தான் . முஸ்லீம் லீகின் தலைவர் அல்லது அந்த கட்சி மிகவும் உறுதியாகவும் , இறுதியாகவும் கூடுதல் தொதிகளை கேட்டு உரிமையுடன் பெற்று இருக்க வேண்டும் . நமது உரிமையை நாம் போராடி தான் பெற்று ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம் .

"அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் " இது பழமொழி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [04 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33516

காயல் மகபூப் அவர்கள் நெல்லை தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் என்று எதிர்பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. 0 - 1 தேர்தல் முடிவிற்கு பிறகு புரியும்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33517

தருவதை வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பதே தி மு காவின் மனநிலை.. மீறி பேசினால் எதுவுமில்லை என்ற மனநிலையும் இருக்கலாம்..! என்ன செய்ய..! ஆரம்பத்திலிருந்தே முஸ்லீம் லீக் தி மு க - அ தி மு க இரு கட்சிகளிடமும் மென்மையாகவே நடப்பபதால் தான் இந்த நிலை.. கொஞ்சம் உறுதியோடு நடந்து கொண்டால் கூடுதலாக 1 சீட்டு எதிர்பார்க்கலாம்..

ம ம க வை பாருங்கள் கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆனது அவர்களுக்கும் 1 சீட்டு - பல வருட பராம்பரியமான முஸ்லீம் கட்சிக்கும் 1 சீட்டு யோசிக்க வேண்டி உள்ளது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சுய பரிசோதனை
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [05 March 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33521

சகோதரர் AHMAD SULAIMAN அவர்களுக்கு

நமது சமூகத்தின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு யஹூதிகள், நஸ்ரானிகள் மற்றும் இந்துத்வா வாதிகள் காரணம் இல்லை. தமிழ் நாட்டில் 29+ முஸ்லிம் அமைப்புகள் உருவாக அவர்கள் காரணம் இல்லை. சிரியாவில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு அவர்கள் காரணம் இல்லை. பாகிஸ்தானில் 65 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இல்லை.

Official statistics released by the Federal Education Ministry of Pakistan give a desperate picture of education for all, especially for girls. The overall literacy rate is 46 per cent, while only 26 per cent of girls are literate. Independent sources and educational experts, however, are skeptical. They place the overall literacy rate at 26 per cent and the rate for girls and women at 12 per cent, contending that the higher figures include people who can handle little more than a signature.

http://www.unesco.org/education/efa/know_sharing/grassroots_stories/pakistan_2.shtml


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நம் மண்ணின் மைந்தர் நாடாளு மன்ற உறுப்பினர்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33527

அன்பு நண்பர் காயல்மகபூபே,முஸ்.லீக் சீட்டு தங்களுக்கு கிடைக்குமானால்,அளவிலா ஆனந்தம் அடைபவர்களில் இந்த ஆதம் சுல்தானும் ஒருவன்,அதிலும் நெல்லையில் நின்றால் ஊருடன் நெருங்கி நிற்ப்பதுபோல் ஒர் உணர்வு. ஒட்டு மொத்த முஸ்லிம்களும் மகிழக்கூடிய உன்னத வெற்றியை நீ அடைந்திட வல்லோனை வேண்டுகிறேன்!

உன் வெற்றிக்கு ஒத்துழைக்க உன்னருகில் வர நாடுகிறேன் நெடியோனாம்,வல்ல இறையோனும் அந்த வாய்ப்புக்கு வழி திறக்கனும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [05 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33529

அஸ்ஸலாமு அழைக்கும் ,

சகோதரர் சையது இப்ராகிம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் தங்களுடைய கருத்தை தவறு என்று கூற வரவில்லை ஆனால்.

நம்முடைய இந்த அவல நிலைக்கு பெருபாளும் மற்றவர்கள் காரணம் இல்லை என்பதை கண்டிப்பாக நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் .

ஆனால் அந்த சிறிய அளவில் மற்றவர்கள் செய்யும் தீங்கு இந்த சமுதாயத்தை பெரிய அளவில் பாதிக்கிறது என்பதுதான் யதார்த்தம் அதில் நாம் இன்னும் அறியாமை யாகதான் இருகிறோம் .

அவைகளை போக்க நம் சமுதாய கட்சிகள் , அமைப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கம் தான் இந்த பதிவு தவிர நம் சமுதாயம் ஒற்றுமையாக உள்ளதா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான் என் பதில் அது நம்முடைய உள்ள விவகாரம் .

முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாகதான் இருந்தாக வேண்டும் அதில் மாற்றம் இல்லை . ஆனால் சமுக , அரசியல் விவகாரங்களில் நம் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் லீக் தன்னுடைய கடமைகளை துரிதமாக அரசியல் நுட்பத்துடன் செய்யவில்லை என்பதுதான் என் கருத்து.

முஸ்லிம் லீக் ஸ்திரத்தன்மையுடன் இருந்து இருந்தால் நமக்கு இந்த மஞ்சள் துண்டிடம் நாம் இப்படி மண்டி போடும் அவல நிலை இருந்திருக்காது .

முஸ்லிம் லீக் கலத்தில் இறங்கி பெரும்பாலான பணிகளை செய்ய தவறியதால்தான் இத்தனை சிறு சிறு முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் தோன்ற காரணமாக அமைந்தது .

சமுதாயம் ஒற்றுமையாக இருந்தால் அது போதும் அதை தவிர இந்த சமுதாயத்துக்கு வேறு நாதி இல்லை என்பதை நாம் அறிந்தால் போதும் .

சகோதரர் சையது இப்ராகிம் அவர்களின் கருத்து பரிமாற்றத்துக்கு மிகவும் நன்றி ...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved