Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:24:35 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13875
#KOTW13875
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 6, 2014
உலக சுற்றுச்சூழல் நாள்: நகராட்சியின் சார்பில் அரசு மருத்துவமனை, ரெட் ஸ்டார் நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்களில் மரம் நடு நிகழ்ச்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2655 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜூன் 05 அன்று உலக சுற்றுச்சூழல் நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சி சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகம், அப்பா பள்ளித் தெரு - ரெட் ஸ்டார் சங்கம் அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி வளாகம் ஆகிய இடங்களில் மரங்கள் நடும் நிகழ்ச்சிகள், ஜூன் 05ஆம் நாள் வியாழக்கிழமையன்று நடைபெற்றன.

அன்று 11.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வரும் கித்மத் சேவா சங்க நிறுவனர் ஹாஜி எம்.எம்.பக்ரீன் முன்னிலை வகித்து, மரங்களை எடுத்துக்கொடுக்க, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மரத்தை நட்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.



அவரைத் தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்களான கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள் மரங்களை நட்டு, நீரூற்றினர்.







அன்று 16.30 மணியளவில், அப்பாபள்ளித் தெரு - ரெட் ஸ்டார் சங்கம் அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன், நிகழ்விடம் அமைந்துள்ள 09ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், நகராட்சி ஆணையாளர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகரமைப்புத் திட்டப் பணிகள் ஆய்வாளர் அறிவுடைநம்பி, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உள்ளிட்டோர் மரங்களை நட்டு நீரூற்றினர்.















செய்தி & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்

படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மரம் நட்டுவது முக்கியமல்ல அம்மரத்தை பராமரித்து நீர் ஒற்றுவதே மிக முக்கியம்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [07 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35207

வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...!

மரம் நட்டுவது முக்கியமல்ல அம்மரத்தை பராமரித்து நீர் ஒற்றுவதே மிக முக்கியம்.. இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் உலக சுற்றுச்சூழல் நாளில் இன்று வைத்த மரத்தின் வளர்ச்சியை காண்போம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் இல்லை அதன் அருகில் மரமாவது நடுகிறார்களே நன்றி
posted by mackie noohuthambi (chennai) [07 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35208

ரெட் ஸ்டார் வளாகத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியாகட்டும் மொகுதூம் பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியாகட்டும் இங்கெல்லாம் தண்ணீர் எப்போதும் நிரப்பப் படவில்லை. பல ஆண்டுகளாக அவை வெறும் தொட்டிகளாகவே இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர் வந்தார், சூளுரைத்து சென்றார்.. ஒன்றும் நடக்க வில்லை.

இப்போது நீர்தேக்க தொட்டி அருகே மரங்கள் நடுகிறார்கள். இதற்கு தேவையான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்.. ஏற்கெனவே மொகுதூம் பள்ளி நீர்தேக்க தொட்டி அருகில் மரம் நடு விழா மிக விமரிசையாக நடந்தது, நானும் அதில் கலந்து கொண்டேன். அதன் பிறகு அந்த மரங்கள் வளர்ந்ததா, பூ பூத்ததா நிழல் கொடுத்ததா பட்டுப் போனதா என்று யாரும் கவனிக்கவில்லை (இதில் நானும் குற்றவாளிதான்).

சுற்று சூழல் பசுமை தாயகம் என்றெல்லாம் விளம்பரங்கள் நிறைய இருக்கின்றன. அதுபோல் இதுவும் இருக்குமா அல்லது, கண்ணியம் மிக்க பக்ரின் ஹாஜி அவர்கள் தனது தள்ளாத வயதிலும் இங்கு வந்து மரம் நடுவது பலனளிக்குமா, அல்லது பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று போய்விடுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

நகர் மன்றம் இதில் அக்கறை செலுத்தினால் இந்த மரம் நடும் நிகழ்ச்சி நல்ல பலனை தரும்.

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று மக்களை உசுப்பிவிட்டு வெற்றிக் கனியை பறித்த புரட்சி தலைவியின் வழி நின்று நகரமன்ற தலைவி இதை செய்வார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [10 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35227

இந்த உலக சுற்றுசூழல் நாள், நகரமக்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், வாழ்வோம் என்றும் இயற்கை தனை போற்றி மரங்களுடன் கூடிய சூழலில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஓ... அப்ப இங்கதானோ??? (?!)  (7/6/2014) [Views - 7179; Comments - 10]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved