Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:17:43 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14197
#KOTW14197
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 27, 2014
நோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3280 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகின் எந்தப் பகுதியிலிருந்து தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றாலும், அதனடிப்படையில் நோன்பு துவக்கம், பெருநாளை தீர்மானித்தல் என்று காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டு நோன்புப் பெருநாள் அறிவிப்பு பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-

பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், நாளை - 28.07.2014 நோன்புப் பெருநாள் என்பதை அறியத் தருகிறோம். நாளை காலை 07.15 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடைபெறும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) வெளியிடப்பட்ட நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நோண்பு பெருநாள் வாழுத்துக்கள்.
posted by Moosa Sahib (Kayalpatnam) [27 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36134

நோன்பு பெருநாள் வாழுத்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சர்வதேச பிறையா? சஊதி பிறையா?
posted by saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [28 July 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36135

இந்திய நேரப்படி மாலை 4 மணியளவிலேயே பிஜி (Fiji ) மற்றும் சில கீழ்திசை நாடுகளில் பிறை தென்பட்டதாக செய்திகள் வந்ததே? அது இந்த அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகத்திற்கு தெரியாதா? சஊதியில் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அறிவிக்க வேண்டுமா?

ஏனென்றால், இந்த பள்ளியில் இஷா தொழுகைக்கு பின்னர், தராவீஹ் தொழுகையும் நடைபெற்றதே? உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை ஏற்றுகொள்வோம் என்று சொன்னால், மக்ரிப் தொழுத உடனேயே அறிவித்திருக்க வேண்டியதுதானே?

நாங்கள் சஊதியில் பிறை அறிவித்தால்தான் நாங்கள் அறிவிப்போம் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே?

வழமை போல், இந்த வருடமும் நமதூரில் மூன்று பெருநாள். என்ன, சில குடும்பங்களில் (ஒரே வீட்டில்) இரண்டு பெருநாள்.

என்று தான் நமதூரில் சந்தோசமாக ஒரே பெருநாள் வருமோ? வல்ல அல்லாஹ்வே அறிந்தவன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Respect
posted by ahamed mustafa (Dubai) [28 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36137

If we stop commenting negatively & respect others decision that can be the biggest unity attained. People celebrating Eid on different dates have their own justifications what they deem right. And these days the people who have multiple Eid in their own family are not much concerned on this, They are used to this. Only the general public from outside make several hues & cries.

What matters for us if the takers of the moon follow Saudi Arabia or Sattankulam. For them they deem it important & correct. It is between them & Allah. So no point in arguing the fact where the moon came from or in which continent it is sighted.

Let us try to respect others decision & abstain from comments that can hurt their path or belief. They may be or may not be right. But then they definitely do not interfere in what others do. It will be appreciated to leave them alone..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அவரவர் உரிமை.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [28 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36141

அவரவர் கொள்கை படி, நோன்பு மற்றும் பெருநாள் கொண்டாடட்டும். அது அவர்களின் உரிமையும் கூட. அந்த முடிவு அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ளது.

இவர்கள் செய்தது சரியா? தப்பா? என்ற விவாதத்துக்குள் வரவில்லை. நான் சுட்டிக்காட்டியது, உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு, பிஜி மற்றும் கீழ்த்திசை நாடுகளில் தென்பட்ட பிறையை ஏற்காமல், சஊதி அறிவித்த பின்னர் அறிவித்ததை தான்.

நாங்கள், "சஊதி பிறை பார்த்ததாக அறிவித்தால் மட்டுமே நோன்பு மற்றும் பெருநாளை அறிவிப்போம்" என்று சொன்னால், யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.

ஒரே குடும்பத்தில் பல பெருநாள் கொண்டாடி சந்தோஷத்தை தொலைத்த ஒரு சகோதரர், இதே இணையத்தில் பதிந்த கருத்தை வைத்தே என் பதிவும் இருந்தது.

நம்முடைய நல்அமல்களை வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பெருநாள்
posted by பாளையம் சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [29 July 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36150

ஆதாரப்பூர்வமான தகவல் எங்கிருந்து வருகிறதோ அதன் அடிப்படையில்தான் பெருநாள் அறிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு கேரள மாநிலம் காப்பாடு என்ற ஊரில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல் வந்த உடன் பெருநாள் அறிவித்தார்கள்.

அது சரி, சவுதி அறிவித்தால் அதற்கு மாற்றமாகத்தான் நோன்பு வைப்போம், பெருநாள் கொண்டாடுவோம் என்று நீங்கள் அறிவித்து விட்டு போக வேண்டியதுதானே? அது அருகில் இருக்கும் இலங்கையில் பிறை பார்த்தாலும் கூட!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பிறையை பார்த்தவர்களை பொய்யர்களாக ஆக்காதீர்கள்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [30 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36153

சகோதரர் பாளையம் சதக்கத்துல்லாஹ் அவர்களின் கருத்தை பார்த்தால், பிஜி மற்றும் சில கீழ்த்திசை நாடுகளில் பிறையை பார்த்து அந்தந்த நாடுகளில் பெருநாள் அறிவித்தது ஆதராபூர்வமான தகவல் இல்லையா? செய்த தவறை மறைக்க, பிறையை கண்ணால் பார்த்தவர்களை பொய்யர்களாக ஆக்காதீர்கள்.

"சவுதி அறிவித்தால் அதற்கு மாற்றமாகத்தான் நோன்பு வைப்போம், பெருநாள் கொண்டாடுவோம் என்று நீங்கள் அறிவித்து விட்டு போக வேண்டியதுதானே?" (C&P)

'உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் நோன்பு மற்றும் பெருநாள் அனுஷ்டிப்போம் என்ற கொள்கையில் உள்ளவர்கள் நாங்கள் இல்லை'. அந்தந்த பகுதியில் பிறை பார்த்து நோன்பு & பெருநாளை அனுஷ்டிப்பவர்கள். இவர்கள் தான் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அறிவித்துவிட்டு சஊதியை மட்டும் பின்பற்றுகின்றனர்.

பிறையில் சஊதியை ஆதாரப்பூர்வமானதாக ஏற்று கொண்டவர்கள், 2004 அல்லது 2005 -ம் ஆண்டு ஹஜ்ஜு பெருநாள் என்று அறிவித்த பின்னர் 3-4 நாட்கள் கழித்து பெருநாள் தினத்தை மாற்றினார்கள்.

அதே போல், முஹர்ரம் (1433) மாதம் என்று துவங்குகிறது? News ID # 7672 என்ற செய்திக்கு மக்கி நூஹு தம்பி காக்கா பதிந்த கருத்து, "சவுதி அரேபியா 10 நாளைக்கு பிறகு நாங்கள் கண்ட பிறை தப்பா போய்விட்டது என்று சமீபத்தில் சர்வதேச பிறையை நம்பி நோன்பு பிடித்தவர்களை கதி கலங்க செய்தார்கள்". கருத்து# 14294.

அந்த வருட ஆஷுரா நோன்பு பற்றிய இந்த நிவாகத்தின் "டிசம்பர் 05, 06 (திங்கள், செவ்வாய்) தேதிகள் முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்றும், அந்நாளில் ஆஷூறா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்றும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது". News ID # 7658

இந்த இரு நிகழ்வுகளும் ரமலானை சார்ந்த நோன்பு & பெருநாள் இல்லை. அதனால் தப்பித்தது. ரமலானை சார்ந்ததாக இருந்திதிருந்தால், முடிந்து போன அமல்களின் நிலை என்ன?

இந்த இரு நிகழ்வுகளிலும் சவூதி முதலில் அறிவித்தது, ஆதாரப்பூர்வமானதுதானா? முதலில் அறிவித்தது ஆதாரப்பூர்வமானது என்றால், ஏன் மாற்றினார்கள்? அதை பின்பற்றி இந்த நிர்வாகமும் மாற்றியதே?

நாங்கள் சவுதியை மட்டும் தான் பின்பற்றுவோம், மற்ற எந்த நாட்டையும் பின்பற்ற மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். அப்படி அறிவித்தால், இவர்களின் கொள்கை இதுதான் என்று யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பெருநாள்
posted by சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) [30 July 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36156

சர்வதேச பிறையை நீங்கள் பின்பற்றவில்லை என்கிறீர்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை இலங்கையில் பிறை பார்த்தால் நம் ஊரில் பெருநாள் கொண்டாடிணோமா இல்லையா? இப்பொழுது என்ன புதிய மார்க்க சட்டம் வந்துள்ளதால், இலங்கையில் பிறை பார்த்தாலும் புறக்கணிக்கிறீர்கள்? விளக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved