Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:38:54 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14342
#KOTW14342
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014
துளிர் பள்ளியில் சுதந்திர தின விழா! வெளிநாடு வாழ் காயலர்களும் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3146 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இம்மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், அன்று காலை 10.00 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

பள்ளி செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தலைமை தாங்கினார். இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலாளர் பி.எம்.ரஃபீக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றினார்.



பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். துளிர் பள்ளி நலனுக்காக உடலாலும், பொருளாலும் ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.



துபை காயல் நல மன்ற உறுப்பினர் முனவ்வர் ஷக்காஃப், துளிர் பள்ளியின் சிறப்புக் குழந்தைகளுக்கு இனிப்பும், குளிர்பானமும் வழங்கினார். பின்னர், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.





இவ்விழாவில் சிறப்பழைப்பாராக சில நிமிடங்கள் பங்கேற்ற ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



துளிர் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.



நிகழ்ச்சியின் நிறைவில், காவாலங்கா சார்பில், துளிர் பள்ளிக்கு ப்ளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

நடப்பாண்டு சுதந்திர தின விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

துளிர் பள்ளியின் சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...துளிர்க்கிறது ஒரு புதிய கூட்டணி
posted by mackie noohuthambi (chennai) [20 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36529

கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் வெளிவந்த பராசக்தியில் ஒரு வசனம்..."வாழைபழத்தை திருடியதற்காக உன் கன்னத்தில் அடித்தாளே அவளை நான் பாராட்டுகிறேன், அவள்தான் உன் கண்ணை திறந்தவள்"..

திடீர் விசுவரூபம் எடுத்ததுபோல் திரு சமஸ் அவர்கள் காயல்பட்டினத்துக்குள் புகுந்து, "இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?" என்ற கேள்வியை - தமிழக மக்கள் உளங்களில் ஊடுருவி நிற்கும் - தி ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டு காயல்பட்டண மக்களின் மரண ஓலத்தை வெளிப்படுத்தி, இன்று முன்னாள் இந்திய வனப் பணி அலுவலர் திருச்சி வ.சுந்தர ராஜு அவர்களின் கவனத்தையும் கவர்ந்து, தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எங்கும் பற்றி எரியும் தீயாக பரவி நிற்க செய்திருக்கிறார்..

திரு சமஸ் அவர்கள் துளிர் கேளரங்கின் குளிரூட்டப்பட்ட அறையில் காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் திடீர் என்று தோன்றி இந்த கருத்துக்களை வெளியிட்ட போது, மெய் சிலிர்த்து விட்டோம். நாயாய் கத்துகிறோம், கூட்டம் போடுகிறோம், மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம், காயல்பட்டினத்தின் கண்ணீர் கதை இந்த அரசின் காதுகளுக்கு எட்ட வில்லையே என்று ஏங்கி கொண்டிருந்தவர்களுக்கு, காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றவனின் கூக்குரலை கேட்டு கைதூக்கிவிட வந்த ஆபத்பாந்தவன் போல் திரு சமஸ் அவர்கள் இன்று உயர்ந்து நிற்கிறார். அவர் மட்டும் நீர் நிலம் வளம் என்று ஒரு தொடரை எழுத நீதி கேட்டு நெடிய பயணம் வந்திருக்கா விட்டால், காயல்பட்டினத்தில் நீறு பூத்த நெருப்பாக இருந்த புற்று நோய் செய்தி இன்று தமிழகமெங்கும் பேசப்பட்டிருக்குமா?

நன்றி வாழ்த்துக்கள். மத்தியில் ஆளும் "மோடி"க்கும் மாநிலத்தை ஆளும் "லேடி"க்கும் இந்த செய்தி இப்போது சென்றடைந்து இருக்கும்.

துளிர் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கொடியேற்றி வைக்கும் காவாலங்கா செயலாளர் ரபீக அவர்கள் இன்று கொழும்பில் இருந்திருந்தால் அங்கேயும் "இந்தியா ஹவுஸ்" சென்று இந்திய தூதரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பார். அவர் மட்டுமா செல்வார், காயல்பட்டின மக்கள் எல்லோரையும் அழைத்து சென்று அவருக்கு அறிமுகப் படுத்துவார்.

சமஸ் - ரபீக் - ஷைக்னா கூட்டணியுடன் வழக்கறிஞர் அப்துல் காதர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் ஒரு புதிய கூட்டணி துளிர்க்கிறது என்பதை காட்டுகிறது. இது துளிருக்கும் சிறப்பு, இந்த ஊருக்கும் சிறப்பு, அதுவும் நம் நாட்டின் சுதந்திர தினத்தில் ஒன்று கூடியிருப்பது எதிர்காலத்தில் காயல்பட்டினத்தின் சரித்திரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

துபாய் இளைய தலைமுறை நாயகன் சக்காப் அவர்களை நான் முதல் முறையாக ஜனசேவா அறிமுக கூட்டத்தில் சந்தித்தேன். என்னமாய் கேள்விகள் கேட்கிறார்.

"ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை -

முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே -
உரிமைகளை பெறுவதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே"

...ஆக்கப் பூர்வமான கேள்விகள் சமுதாயத்தில் நல்ல விளைவுகளை மாற்றங்களை ஏற்படுத்தும். அவருக்கும் வாழ்த்துக்கள். .

சுதந்திரத்தைப்பற்றி கீதாஞ்சலியின் நாயகன் ரபீந்திர நாத் தாகூர் சொல்வார்:

"WHERE THERE IS NO FEAR, INTO THAT HEAVEN OF FREEDOM, FATHER, LET MY COUNTRY AWAKE". இதுதான் உண்மையான சுதந்திரம்.அது கிடைத்துவிட்டதா?

IT IS A MILLION DOLLAR QUESTION!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36532

வேறு எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் கிடைக்கும் திருப்தியை விட, அதிகம் கிடைப்பது துளிர் நிகழ்ச்சியில் தான். அது உங்களுக்கும் கிடைத்து இருக்குமே..!

தங்கள் கொடுத்த உணவு என்ன உணவு என்பது அவர்களுக்கு தெரியாது,நீங்கள் கொடுத்த பானம் குளிரா, சூடா, நீங்கள் யார்- தெரியாது? என்ன நிகழ்ச்சி- தெரியாது?

ஆனால், அந்த நச்சத்திரங்கள் நீங்கள் கொடுத்த உணவை வாயில் வைத்ததும் ஒரு சிலிர்ப்புடன் உடலை குலுக்கி உங்களை பார்க்கும் பாருங்கள்.. அஹா.. அது தான் ஆயிரம் துஆக்களுக்கு ( பிராத்தனை) நிகர்.

இந்த குழந்தைகளை துளிர் பள்ளிக்கூடம் அதன் பின்பு வீட்டில் சிறை வைத்து விடுகிறார்கள். வெளியில் அழைத்து செல்லவோ, விசேஷங்கள், நல்ல நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு அழைத்து செல்லவோ பெற்றோர்கள் விரும்பவது இல்லை. காரணம் மன சங்கடம் அல்லது பிறருக்கு சங்கடம் என்று.

திருமண விருந்து என்றால் வீட்டில் இருப்பவர்கள் அனைவர்களும் சென்று விடுகிறார்கள், இந்த குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு உணவை கொடுத்து விடுகிறார்கள். ஊர் முழுவதும் அறுசுவை உணவுகளை புசிக்க, இந்த குழந்தைகள் மட்டும் சதா உணவை சாப்பிடுகிறது. இவர்கள் செய்த பாவம் தான் என்ன.?

பெற்றோர்களே, இவர்களை விசேஷங்கள், விருந்துகளுக்கு அழைத்து செல்லுங்கள்.

விசேஷங்கள் நடத்துபவர்களே, நீங்கள் பரிமாறும் உணவுகளை, உங்களின் வட்டாரத்தில் இருக்கும் இந்த குழந்தைகளுக்கும் அனுப்பி வையுங்கள்.

விருந்து சாப்பிட்டுவிட்டு அது சரியில்லை, இது சரியில்லை, சோறு குழைந்து விட்டது, சிட்டியில் ஒரே எலும்பு, ஒரு கறி கூட இல்லை, காரம் அதிகம், ஒரு தண்ணீர் பாக்கட் அதிகம் கொடுத்தால் குறைந்தா போய் விடுவானுவோ என்று புலம்பிக்கொண்டு வருபவர்கள் சிறந்தவர்களா?

எதுவுமே அறியாமல் ஒரு வாய் உணவு உள்ளே சென்றதும் பூரிப்புடனும், சிலிர்ப்புடனும், சிரித்து, மனதில் சந்தோசத்துடன் துஆ செய்யும் இந்த சிறப்பு குழந்தைகள் சிறந்தவர்களா?

விடுமுறையில் ஊருக்கு செல்லுபவர்கள் துளிர் பள்ளிக்கு செல்லுங்கள். கூடவே அவர்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு சென்று, அவர்களுக்கு கொடுத்து திருப்திபடுத்தி, திருப்திபடுங்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

வல்ல ரஹ்மான் இந்த குழந்தைகளுக்கு நல்ல வழியை காட்டுவானாக. பெற்றோர்களுக்கு நல்ல பொறுமையையும் மன நிம்மதியையும் தருவானாக.

இந்த துளிருக்காக பாடுபடும் அனைவர்களின் நல்ல எண்ணங்களை அங்கீகரிப்பானாக.!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved