Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:32:49 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14348
#KOTW14348
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 21, 2014
டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4666 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நீர், நிலம், வனம் என்ற தலைப்பில் - தமிழக கடலோரத்து பிரச்சனைகள் குறித்து தி இந்து தமிழ் நாளிதழில், அப்பத்திரிக்கையின் மூத்த எழுத்தாளரான சமஸ் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அவ்வரிசையில் - 26வது பாகமாக - காயல்பட்டினத்தில் பெரிய அளவில் புற்று நோய்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா? என்ற தலைப்பில் சமஸ் எழுதிய கட்டுரை ஆகஸ்ட் 14 அன்று வெளிவந்தது.

27வது பாகமாக - இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? என்ற தலைப்பில், DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சமஸ் எழுதிய கட்டுரை - ஆகஸ்ட் 18 அன்று வெளிவந்தது.

ஆகஸ்ட் 18 கட்டுரை தொடர்பாக DCW தொழிற்சாலையின் நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) ஆர்.ஜெயக்குமார் வழங்கிய விளக்க கடிதம் - தி இந்து நாளிதளின் இப்படிக்கு இவர்கள் என்ற வாசகர் கடிதம் பகுதியில் இன்று வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆலை விளக்கம்

இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? கட்டுரையில் வெளியான தகவல்கள் குறித்து எங்கள் விளக்கம்:

டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை.

மேலும், உலகத் தரக் கொள்கையான மறு சுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கையைக் கடைபிடிப்பதுடன், அதிநவீனத் தொழில்நுட்பம் வாய்ந்த நேனோ மற்றும் மாறுநிலை சவ்வூடு பரவுதல் மற்றும் பூஜ்ய நிலைக் கழிவு நீர் வெளியேறும் ஆலையாக எங்கள் ஆலை திகழ்கிறது. மேலும், இவ்வாறு சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது.

கட்டுரையோடு வெளியான சில படங்கள் எங்கள் நிறுவனத்தை எதிர்ப்பவர்களால் எடுக்கப்பட்டவை.

அதே போல், சுற்றியுள்ள பகுதியில் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளன என்று குறை கூறுபவர்களுக்கு, டி.சி.டபிள்யூ நிறுவனம் எந்த வழியிலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

- இரா.ஜெயக்குமார், நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்), டி.சி.டபிள்யூ ஆலை, சாஹூபுரம், தூத்துக்குடி மாவட்டம்


தி இந்து (ஆகஸ்ட் 21, 2014 பதிப்பு)



[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 12:50 pm / 21.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நீங்கள் என்ன சாதாரண ஆளா
posted by mackie noohuthambi (chennai) [21 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36541

சமஸ் அவர்கள் என்ன சாதாரண ஆளா, உங்களிடம் "something " வாங்கி இந்த கட்டுரை எழுதியதை மாற்றி சொல்வதற்கு. ஹிந்து பத்திரிக்கையின் உயர்வே அதன் நம்பகத்தன்மைதான். காய்தல் உவத்தல் இன்றி செய்திகளை தருவதுதான். ஏதாவது தவறு ஏற்பட்டால் அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அந்த நாளிதழ் குழுவுக்கு உண்டு. இந்த செய்தி திருவாளர் இரா.ஜெயக் குமார் அவர்களுக்கும் தெரியும்,

"செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சகர் வலையினில் வீழ்ந்தானடா வஞ்சகன் கண்ணனடா" என்று பாரதம் சொல்வது ஜெயகுமார் அவர்களுக்கு புரியாதா ...அந்த இருட்டும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும்...உண்மை ஒரு நாள் வெளிவரும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

இன்று நேற்று தோன்றியதல்ல இந்து பத்திரிக்கை. என்ன துணிச்சல் இருந்தால் "இந்து" என்று பத்திரிக்கைக்கு பெயர் வைத்திருப்பார்கள். முஸ்லிம்கள் அப்போதே கொதித்து எழுந்திருப்பார்கள், கிறிஸ்தவர்கள் குதித்து ஓலமிட்டிருப்பார்கள். பார்ப்பனர்கள் பத்திரிக்கை என்று திராவிட கட்சிகள் ஒப்பாரி வைத்திருப்பார்கள்.ஆனால் நடந்தது என்ன, எல்லோரும் அதை படிப்பதை தங்கள் காலைக் கடன்களில் ஒன்றாக அன்றும் நினைத்தார்கள் இன்றும் நினைக்கிறார்கள். பணம் வாங்கி கொண்டு பிணம் தின்னும் மனித கழுகுகள் அல்ல இந்து பத்திரிக்கை.

கோடான கோடிகளை சம்பாத்தியம் செய்து கொண்டீர்கள்...கொள்ளை அடித்தீர்கள் என்று சொல்வது அநாகரிகம். ஆனால் இப்போது சாகுபுரத்தின் பின்புறம் ஒரு மயான புரம் உருவாகி இருக்கிறதே, அதற்கு யார் காரணம்.

கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர்கள் வேறு யாருமல்ல இதே மண்ணில் பிறந்த எட்டப்பன்தான் . உங்கள் வேஷம் கலைந்து போகும்.. நீல சாயம் வெளுத்து போகும். அப்போது இதே நிறுவனம் உங்களை காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளும். அப்போதும் உங்களை மன்னித்து உங்களுக்கு வாழ்வளிக்க ஓடோடி வரும் இந்த கருணை உள்ளம் கொண்ட காயல்பட்டினம்.

இப்போதே உங்களை திருத்திக் கொள்ளுங்கள். உண்மை நிலையை உணருங்கள். எங்கள் மக்கள் பிணங்களின் மீது தான் உங்கள் ஆலை அமைய வேண்டும் என்றால் குறித்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலையின் அழிவின் ஆரம்பமும் அதன் கல்லறையும் இங்கேதான் கட்டப்படும்.அதன் அடியிலே எழுதப்படும்

"இங்கே சமாதி கொண்டுள்ளது காயல்பட்டின மக்களை சமாதியாக்கிய பெரும் நிறுவனம் DCW ".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நம் காயல்பதியை காத்து காவல் புரிவானாக! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36544

அந்த நச்சு ஆலையை பல வழிகளும் எதிர்ப்போம் அதில் எந்த இருகருத்தும் இல்லை,அதே நேரம் அது நம்மூரை அடியோடு தரைமட்டமாக்கி மயானமாக்கிவிடும் என்ற அளவிற்கு நம் பலகீனமும் போகவேண்டாம்,நம்மைக்காக்கும் நமமிறைவனின் நம்பிக்கையிலும் எந்த சஞ்சலமோ சந்தேகமோ ஏற்பட வேண்டாம்!

இப்பொழுது என்ன அந்த ஆலை "இந்து"அறிக்கையை மறுத்திருக்கிறது அவ்வளவுதானே, இது அந்த ஆலை மட்டுமல்ல எந்த்த ஆலையும் மறுக்கத்தான் செய்யும்,அந்த மறுப்புக்கு முதுகெலும்பு முறியும் வண்ணம் நாம் ஆதாரங்களை தூக்கி எறியவேண்டும்,அதுதான் நமது கடமை மட்டுமல்ல அந்த ஆலையை எதிர்த்து கருத்தெழுதும் அனைத்து ஊடகங்களின் கடமையாகும்!

வல்ல அல்லாஹ்வின் உதவியால் நாம் ஒரே அணியில் திரண்டு தொடர் எதிர்ப்பில் திகளுவோமேயானால் இந்த ஆலை என்ன எத ஒரு ராட்சஷ ஆலையைக்கூட இலவம் பஞ்சாய் ஊதித்தள்ளி வெற்றியடைந்திடலாம்!

கண்ணியமும், கருணையும்,கொடைத்தன்மையும்,இளகிய இதயங்களும் இபாததுக்களும் நிறைந்துள்ள நம்மூரை எந்த தீய சக்தியாலும் அழித்துவிட முடியாது,எல்லாம் வல்ல அல்லாஹ் நம் காயல்பதியை கோடானகோடி வருடங்கள் காத்து காவல் புரிவானாக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by netcom buhari (chennai) [21 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36545

பச்சை பொய், முழு பூசணி காய்யை சோத்தில் மறைக்க முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. DCW -Waste Disposal
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [21 August 2014]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 36546

COPY AND PASTE

டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை.

Then Why our sea water colour become changing.. . Sir you are the management representative of DCW (Disposal of Chemical and Waste), so what can we expect from you.. Sir..

Do you have guts to file the case against such news paper..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by L.A.K.BUHARY (Hong Kong) [21 August 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36547

இது போன்ற அல்லது வேறு எவ்வகை அபாயகரமான வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை, நம் நாட்டிற்குட்பட்ட பகுதியான அதிலும் மக்கள் தொகையில் சிறிதளவே வசிக்கும் பகுதிகளான அந்தமான் நிகோபார் தீவுகள், அதிலும் மக்கள் வசிப்பிடத்திலிருந்து கணிசமான சுற்றளவு தொலைவில் அமையபெற்ற இன்ன பிற பகுதிகள் அல்லது மக்கள் வசிக்காத (uninhabited )சிற்சில தீவுகள் போன்றதொரு நிலங்களில் நிறுவலாம்.

அரசு நிர்வாகங்களும் அதை அமுல்படுத்துவதோடு,எவ்வாறு வெளிநாட்டு நிறுவனகளுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறதோ அதை போலவே இவற்றுக்கும் அறிவித்து அப்பகுதியில்,முறைப்படி கழிவுகள் அகற்றும் நிலையிலும், பாதுகாப்பாக தொழில் அமையப்பெறுவதை ஊக்கப்படுத்தலாம் .

அதை விடுத்து மக்கள் அடர்த்தியான வசிப்பிடங்களின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு, அதனால் பாதிப்பு ஏற்படுமாயின்,அது இந்த அளவுக்கு நிரூபணம் ஆக்கப்பட்ட நிலையை கண்டறிந்த பின்னும் அதை பொருட்படுதாமலிருப்பது கடமை தவறிய நிலையை தான் குறிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மக்கள் நலனுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப்பிரதிநிதிகள் தலையிட்டு ஓர் நல்ல முடிவை தருவர் என்று இறைவனை பிரார்த்தித்து நம்பிக்கை கொள்வோமாக..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பொய் உங்களை விரைவில் கொள்ளும்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [22 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36549

1) கட்டுரையோடு வெளியான சில படங்கள் எங்கள் நிறுவனத்தை எதிர்ப்பவர்களால் எடுக்கப்பட்டவை.. CP

சரி ஐயா.. உங்கள் நிறுவனத்தை ஆதரிப்பவர்களால் அவர்களின் துணையோடு உங்கள் நிறுவனத்தின் உட்பகுதில் நீங்கள் என்ன மறுசுழற்சி / என்ன சுத்தரிப்பு செய்கிறீர்கள் என்பதை அறிய குறிப்பாக இந்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை உங்கள் தொழிற்சாலையின் உள்ளே அனுமதிப்பீர்களா...?

உங்கள் தொழிற்சாலையின் இரசாயன கழிவுகளை தொழிற்சாலையின் பின் புறம் உள்ள நீரோடை வழியாக கடலில் கலக்க செய்ய JCP இயந்திரம் மூலம் பாத்தி வெட்டி விட்டீர்களே..! அது எதற்கு..? ஏன் என்ற விளக்கம் தர முடியுமா..?

முழு பூசணிகாயை சோற்றில் எப்படி ஐயா மறைக்க முடியும்...! நீங்கள் இந்து பத்திரிக்கைக்கு வாசகர் பகுதியில் விளக்கம் கொடுத்தால் மக்கள் அதை நம்பும் என்று உங்களுக்கு யார்..? ஐயா ஆலோசனை சொல்லி தந்தது..!

2) டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை.. CP

கொம்புதுரையின் அடர்ந்த காட்டு பகுதியில் தினமும் கூலிக்கு 15 - 20 வேலையாட்களை வைத்து மண்வெட்டி சகிதம் அரசு புறம்போக்கு நிலத்தில் குடில் போட்டு அங்கு என்ன திருவிழா பந்தலுக்கா கால் ஊண்ட பள்ளம் தோண்டுகிறார்கள்...!

ஐயா..! - இரா.ஜெயக்குமார் அவர்களே..! அங்கு கொம்புதுறை கடல் அலை பகுதியில் நீங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கும் கூலிக்காரர்களிடம் (வாக்குமூலம் பதிவு) அணைத்து விபரங்களையும் நான் கேட்டுக்கொண்டேன்..! அவர்களது மனது கள்ளகபடமில்லாத மனது..!

மேலும் கொம்புதுரை / சிங்கதுரை பகுதி மீனவ சகோதரர்கள் தொழிலுக்கு கடலில் செல்லும் போது இரசாயன கழிவுகளால் அவர்களின் உடம்புகளில் / தேகங்களில் / தோல்கள் பாதிக்கப்பட்டு பல பேர் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்களே..! காரணம்..! அவை அனைத்தும் உங்கள் இரசாயன கழிவுகளாலேயே..! பல பேர் புற்று நோயாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்..!

பாதிக்கப்பட்டோர்களின் சாபம் விரைவில் உங்களின் நிர்வாகத்திற்கு வந்து அடையும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊடகத்துறையின் பலம்..
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [22 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36550

திரு.சமஸ் அவர்களின் கட்டுரைக்கு முன்பும் சில பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில் இந்த நச்சு ஆலையின் அயோக்கியதனம் வெளிவந்தது. அப்போதெல்லாம் மறுப்பு அறிக்கை கொடுக்காதவர்கள், இந்தியாவின் முக்கியமான, நம்பகத்தன்மை கொண்ட பத்திரிகையில், அதுவும் அந்த பத்திரிக்கையின் மூத்த பத்திரிகையாளர் கட்டுரை எழுதியதும் மறுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

திரு.சமஸ் அவர்கள் அந்த பத்திரிகையில், சுற்றுசூழல் மாசு குறித்து ஒரு தொடர் எழுதி வருகிறார். இந்த நச்சு ஆலை மட்டுமல்லாது, தமிழக கடலோரங்களில் நடக்கும் எல்லா சுற்றுசூழல் மாசு குறித்தும் எழுதி வருகிறார். அதனால், இந்த தொடருக்கு, சுற்றுசூழல் ஆர்வலகர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு, எங்கே தமிழகம் முழுவதும் தெரிந்து விடுமோ? என்ற பயத்தில் இந்த மறுப்பு அறிக்கை.

திரு.சமஸ் அவர்கள், தான் சேகரித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு, உங்கள் தரப்பு ஆதாரங்களை வெளியிட, உங்கள் ஆலை நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டபோது, தங்கள் பெயரைக்கூட கூட தெரிவிக்காமல், தொடர்பை துண்டித்தது ஏன்? உங்கள் அதிகாரப்பூர்வமான மின்அஞ்சலில் தொடர்பு கொள்ள மின்அஞ்சல் அனுப்பினால், அது bounce ஆகிவிட்டது என்று தனது கட்டுரையில் தெரிவித்துள்ளாரே? ஏன் உங்கள் நிர்வாகத்துக்கு இந்த பயம்?

இப்போதும் ஒன்றும் குடி மூழ்கி போகவில்லை. அவரை நீங்கள் அழைத்து, உங்கள் தரப்பை ஆதாரங்களை கொடுத்தால், அவர் கண்டிப்பாக வெளியிடுவார். ஏன் என்றால், அவர்களின் பத்திரிக்கையின் தரம் அப்படி. ஆனால் நீங்கள் அழைக்க மாட்டீர்கள். உங்களால், அவர் வெளியிட்ட ஆதரங்களை மறுக்க முடியாது.

சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. DCW ஜெய ஹுமார் அவர்களே......
posted by s.s.md meerasahib (TVM) [22 August 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36551

ஜெய குமார் அவர்களே....... உங்களின் விளக்கம் "சாத்தான் வேதம் ஓதுகின்றன" என்ற முதுமொழிக்கு ஒப்பாகும். நீங்கள் குறிப்பிட்டது.....

"உலகத் தரக் கொள்கையான மறு சுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கையைக் கடைபிடிப்பதுடன், அதிநவீனத் தொழில்நுட்பம் வாய்ந்த நேனோ மற்றும் மாறுநிலை சவ்வூடு பரவுதல் மற்றும் பூஜ்ய நிலைக் கழிவு நீர் வெளியேறும் ஆலையாக எங்கள் ஆலை திகழ்கிறது". மேலும், இவ்வாறு சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. என்றால்.....


அந்த நீரை நிலத்தில் கால்வாய் வெட்டி கடலில் கலக்க செய்வதேன்? கிட்டத்தட்ட 4,5 கிலோ.... மீட்டருக்கு கால்வாய் என்றால்...... அந்த நிலத்தடி நீரின் தன்மை எவ்வாறு இருக்கும்? "பூஜிய நிலை கழிவு நீர்" என்கிறீர்கள். அவ்வாறாக இருப்பின் உங்களின் வீட்டு பயண் பாட்டுக்கு கொண்டு சென்று பார்க்கவும். கேக்குறவன் கேணயர்கள் என்று தமிழக மக்களை என்ன வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [22 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36554

இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? என்ற தலைப்பில் ஆகஸ்ட் 18 அன்று வெளிவந்ததில் சில வரிகள்...! ஐயா..! இரா.ஜெயக்குமார் அவர்கள் பார்வைக்கு இதோ..

என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?

இவையெல்லாம் பற்றி டி.சி.டபிள்யூ. ஆலை நிர்வாகத்தின் கருத்து என்ன? தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, விவரம் கேட்டவர்கள் அதற்குப் பின் தங்கள் பெயரைக்கூடச் சொல்லாமல் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆலையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் office@shpm.dcwltd.com எனும் மின்னஞ்சல் முகவரியோ மின்னஞ்சலைத் திருப்பியடிக்கிறது...! ஐயா..! இரா.ஜெயக்குமார் அவர்களே.. மேலே உள்ள வாசகத்திற்கு உங்கள் தரப்பில் ஏதாவது விளக்கம் உண்டா...?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by L.A.K.BUHARY (Hong Kong) [22 August 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36555

"''"கட்டுரையோடு வெளியான சில படங்கள் எங்கள் நிறுவனத்தை எதிர்ப்பவர்களால் எடுக்கப்பட்டவை""""". COPY & PASTE

சரி ...அப்படியென்றால் satellite ம் உங்களுக்கு எதிர்ப்பா..?

http://kayalpatnam.com/shownews.asp?id=4978
http://kayalpatnam.com/shownews.asp?id=5193


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36560

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுருக்கமாக சொல்ல போனால் இந்த நாசமாபோன >>> DCW <<< தொழிற்சாலை நிர்வாகத்தினர்களின் பொய்யான ...படு மோசடித்தனமான பிரசாரமும் ....பொய்யான தகவலும் ( வார்த்தைகள் ) தான் ....நம் பகுதி பொது மக்களை கொலப்பலாம் என்று நினைக்கிறார்கள் ....ஆனால் நம் பகுதி பொது மக்களும் சரி..( ஊடகங்களும் சரி ) ....இணைய தளங்களும் சரி ....டிவி சேனல்களும் சரி ....பத்திரிக்கையும் சரி ....இவர்களின் பேச்சை கேட்டு ஏமாறுவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்லவே .....

ஆனால் ஓன்று மட்டும் நமக்கு புரிவதில்லை ....நமது அரசாங்கம் ஏன் இப் பகுதி பொது மக்களின் உயிர் போக கூடிய இப் பிரச்னையை செவிகொடுத்து சுத்தமாகவே கேட்பது இல்லை .....காரணம் என்ன ..??

எங்கு இருந்தோ வந்து நம் பகுதி மக்களின் உயிரை எடுக்கிறார்கள் என்றால் நாம் சும்மா இருக்க கூடாது .......

நமது போராட்டத்தை இன்னும் நாம் வேக படுத்த வேணும்...... DCW .... நிர்வாகத்தினர்களின் பொய்யான தகவல் ஒரு போதும் நிலைத்து நிற்காது .....

வஸ்ஸலாம்.

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved