Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:58:55 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15722
#KOTW15722
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 7, 2015
திருச்செந்தூர் சாலையில் பைக் மீது பள்ளி வாகனம் மோதியது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4072 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று 16.00 மணியளவில், திருச்செந்தூர் சாலையில், மோட்டார் பைக் மீது பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், திருச்செந்தூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் வாகனத்தை, ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டியதில், பைக் மீது வேன் மோதியது. இதில் பைக்கின் முன்பகுதி சேதமடைந்தது. பள்ளி வாகனத்தின் முன்புற கண்ணாடி அதிர்வு தாங்காமல் நொறுங்கிச் சிதறி விழுந்தது.



பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர். காயல்பட்டினத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றுக்கொண்டு அவர்கள் வீடு திரும்பினர்.

மேற்படி பள்ளி வாகனத்தை முறையான பயிற்சியற்ற ஓட்டுநர் ஓட்டி வருவதாகவும், அவர் எப்போதுமே இதுபோன்று அத்துமீறிய நிலையிலேயே வாகனத்தை ஓட்டி வருவதாகவும், இவ்விபத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்:
K.S.முஹம்மத் யூனுஸ்

படம்:
Y.M.முஹம்மத் தம்பி (AKM ஜுவல்லர்ஸ்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஈரம் காயவில்லை.....
posted by mackie noohuthambi (colombo) [07 April 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 40023

கண்ணியம் மிக்க உலமாக்கள் - ஒரு ஓட்டுனரின் கவனக் குறைவால் சாலை விதிகளை மீறி ஓட்டியதால் - கொத்தும் குலையுமாக மரணத்தை தழுவிய செய்தி - நம்மை எல்லாம் நிலை குலைய செய்து நம் அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைத்த செய்தி இன்னும் ஈரமாக நெஞ்சில் இருக்கிறது. அந்த ஈரம் காயும் முன் இப்படி ஒரு நிகழ்ச்சி நமதூரில் நடை பெற்றிருக்கிறது.

அல்லாஹ் காப்பாற்றினான். உயிர் சேதங்கள் இல்லை என்று நாம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும் இந்த மாதிரி அரைகுறை ஓட்டுனர்களை தேடித் பிடித்து அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும். நமது பிள்ளைகளும் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி நடக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பஞ்சின் மேல் நெருப்பு விழுந்தாலும் நெருப்பின் மேல் பஞ்சு விழுந்தாலும் சேதம் பஞ்சுக்குதான். உயிர் விலை மதிப்பற்றது. அது இப்படி சாலை விபத்துக்களில் அதுவும் ஓட்டுனர்களின் கவனக் குறைவால் பறிக்கப் படுகிறது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

விழிப்புடன் இருப்போம் சாலை விதிகளை மதிப்போம். நிதானமாக நமது வாகனங்களை ஓட்டுவோம்.

SUBUHAANALLATHEE SAKKHARA LANAA HAATHA VAMAA KUNNAA LAHOO MUQRINEEN VA INNAA ILAA RABBINAA LA MUNQALIBOON என்ற துஆவை வாகனங்களில் ஏறி அமர்ந்ததும் கண்டிப்பாக ஓதி, நமது பயணத்தை ஆரம்பிப்போம்.

கிருபானந்த வாரியார் ஒரு செய்தி சொல்லுவார்.

"மதுரை செல்லும் பேருந்தில் நாம் ஏறினால் மதுரைக்கு போய் சேரலாம். மதுரை போகும் பேருந்து நம் மீது ஏறினால் முருகப் பெருமானிடம் போய் சேரலாம்"

அதாவது இந்த உலகை விட்டு போய் விடுவோம்.
சிரிப்பான செய்தி என்றாலும் சிந்திக்க வேண்டிய ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஓட்டுனரின் கையிலிருப்பது வலயம் அல்ல உயிர்!
posted by முஹம்மது அதம் சுல்தான் (yanbu) [07 April 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40032

மேற்படி பள்ளி வாகனத்தை முறையான பயிற்சியற்ற ஓட்டுநர் ஓட்டி வருவதாகவும், அவர் எப்போதுமே இதுபோன்று அத்துமீறிய நிலையிலேயே வாகனத்தை ஓட்டி வருவதாகவும், இவ்விபத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.(C&P)

மேலே கண்ட செய்தி வாசகங்கள் ,இந்த இடத்திலேயே தீர்ப்பு வழங்கியது போல் இருக்கிறதே என்று என் மனம் நெருடலுக்குள்ளானாலும், அந்த விபத்தின் நிகழ்வுகளின் நிழற்படம் சொல்லும் உண்மமை 9௦% சதவீதம் ஓட்டுனரின் தவறுதான் என்பதை ஒப்புக்கொள்ள வைக்கிறது!

நமதூரில் வாகனத்தின் வலதுபக்க ஓரத்தில் ஓட்டுனர் உட்கார்ந்துகொண்டு வாகனத்தை சாலையின் இடது பக்கமாக செல்லும் பாதையை நோக்கி செலுத்துவார். அப்படித்தான் செலுத்தவேண்டும் என்பது சாலைவிதி ஆனால் நடந்த விபத்தின் நிகழ்வு காட்சியில் இடதுபுறமாக வந்து கொண்டிருந்த பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து வலதுபக்க பாதைக்கு திமிறிக்கொண்டு திரும்பி அங்கு சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் முட்டி மோதி நிற்கிறது!

ஓட்டுனர்களே, உங்களில் சிலரின் நிதானமின்மையின் காரணமாக செலுத்தும் வாகனத்தால் ஏற்படும் விபத்தில் உங்கள் உயிர் மட்டுமல்ல உங்களோடு பயணிக்கும் நபர்களின் உயிர்களும், நீங்கள் மோதும் மற்றைய வாகனத்தில் உள்ளவர்களின் உயிர்களும் ஒரு கண் சிமிட்டும் காலப்போலுதில் ஏற்படும் கவனக்கசிவின் முடிவு மதிப்பிடமுடியா எத்தனையோ உயிர்களின் வாழ்க்கையை முடிவாக்கி வைத்துவிடும் என்பதை உணர்வீர்களா?

நம்மை படைத்த இறைவன் நலமுடன் இவ்வுலகில் வாழத்தான் நம்மை விட்டு வைத்திருக்கிறான், அந்த உயிர்களின் ஆசாபாசங்கள் அடங்கும் முன்னமே உங்களின் அத்துமீறிய ஓட்டுதலாலும்,அக்கறையின்மையின் நடத்தலாலும்,அதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி அனாவிசியமாக அப்பாவி உயிர்களை பறிக்கின்ற பெரிய பாவத்திற்கு காரணமாக அமைந்து காலம் காலமாக அந்த குடும்பத்தாரின் சாபத்திற்கு நீங்களும்,உங்கள் குடும்பமும் ஆளாகலாமா?

நீங்களும் நீடித்த ஆயுளுடன் வாழவேண்டும்,உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் அத்தனை உயிர்களும் எந்த ஆபத்தின்றி அவர்களின் சேரும் இடத்தை சென்றடையவேண்டும். ஆண்டவனுக்கடுத்தது அனைத்து பொறுப்பும் பாதுகாப்பும் உங்களுடையது. நீங்கள் இருகைகளாலும் பிடித்திருப்பது வலயம் அல்ல உயிர்கள் என்பதை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்டுங்கள். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது அதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தயவு செய்து விளக்கவும்.
posted by Shaik Abdul Cader (KayalPatnam) [08 April 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40037

சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயரை குறிப்பிடாதது ஏனோ ? பேரூந்தில் பள்ளியின் பெயர் குறிப்பிடப்பட்ட பகுதியும் மறைக்கப்பட்டுள்ளது ஏனோ ?தயவு செய்து விளக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by nizam (india) [08 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40041

இந்த திருச்செந்தூர் காயல் சாலைக்கு விபத்து சாலை என்று இனி அழைக்கலாம் இந்த மாதத்திலே இரண்டாவது விபத்து நானும் இரண்டுமுறை காமன்டிலே இதை விபத்து பகுதியாக அறிவித்து அதிகபட்ச வேகம் 60 ஆக இருக்க சாலையை அகலபடுத்த போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பில் கொண்டு வர ஆட்சியரிடம் வேண்டுமாறு நகராட்சி தலைவியையும் ஊர் நல அமைப்புகளையும் கோரிக்கை விடுத்தேன். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட்டமாதிரி தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [08 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40050

அஸ்ஸலாமு அலைக்கும்....

இந்த பைக் விபத்தில் நம் மக்கள் மிக லேசான சிறு காயங்களுடன் தப்பியதை அறிந்து மனது ஒரு நிலை அடைந்தது ......அல்ஹம்துல்லிலாஹ் .....

பொதுவாகவே நமது ஊர் பகுதியில் '' பள்ளி வாகனத்தை முறையான பயிற்சியற்ற ஓட்டுநர்கள் ஓட்டி வருவதால் தான் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நம் ஊர் பகுதியில் நடக்கிறது .....இதற்க்கு ஒரு முடிவு தெரிய வேண்டுமானால் ....நம் ஊர் பொது நல அமைப்பினர்கள் மூலம் ...முறையான ஒரு அதிரடியான கடும் நடவடிக்கை கண்டிப்பாகவே எடுத்தாக வேணும் .....

இல்லை என்றால் நம் ஊருக்குள் வரும் இவர் போன்ற முறையற்ற ஓட்டுனர்களால் நம் ஊர் சிறு குழந்தைகளுக்கும் & வயதானவர்களுக்கும் பாதிப்பு வரலாம் ....

பள்ளி வாகனம் '' நம் ஊருக்குள் இப்போது மிக அதிகமாகவே வருகிறது .....பள்ளி வாகன ஓட்டுனர்களின் நடவடிக்கையை நம் ஊர் பொது நல அமைப்புக்கள் ..கொஞ்சம் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ...கொஞ்சம் ஓட்டுனர்களுக்கு பயமும் ....நமக்கு விபத்தில் இருந்து நாம் ....பாது காட்கபடலாம்

இந்த ஓட்டுனர் ( அவர் ) எப்போதுமே இதுபோன்று அத்துமீறிய நிலையிலேயே வாகனத்தை ஓட்டி வருவதாக நாம் அறிந்து இருப்பதால் இவர் மீது முறையாகவே தக்க நடவடிக்கை எடுக்க வேணும் ...

தங்கள் நிழற் படத்தில் ...வாகனத்தில் பள்ளி ''பெயர் இல்லை ....பள்ளி நிர்வாகத்திடமும் நம் ஊர் பொது நல அமைப்புக்கள் முறையாக ,, முறையிடலாம் .....அப்போது தான் மற்ற பள்ளி ஓட்டுனர்கள் பயப்படுவார்கள் ........

இது போன்ற விபத்து நம் ஊர் பகுதியில் அடிக்கடி நடக்கிறது ....இதை எப்படி சரி செய்வது என்று தான் தெரிய வில்லை ......

தயவு செய்து நம் ,, மக்களும் ...எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் ..வேகத்தை குறைத்து ,,....மிக ,,கவனமுடன் ...நிதானமாக ,, ஒட்டவும் ....நம் உயிர் நமக்கு முக்கியம் இல்லையா ......உங்களையே நம்பி இருப்பவர்களையும் கொஞ்சம் நினைத்து பார்க்கவும் .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஆ... என்னா கீட்டுபா...! (?!)  (5/4/2015) [Views - 3633; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved