காயல்பட்டினம் அரசு நூலகத்தில், புத்தகங்களை அடுக்கி வைத்துப் பாதுகாப்பதற்காக, அலமாரி வாங்க வேண்டியிருந்தது. நூலகர் முஜீப் கோரியதன் பேரில், புத்தக அலமாரி வாங்குவதற்காக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் 15 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ஆம் நாள் சனிக்கிழமையன்று, கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் அத்தொகையை அரசு நூலகர் முஜீபிடம் வழங்கினர்.
![](/newsimg/216201572874.jpg)
காயல்பட்டினம் அரசு நூலகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|