Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:24:31 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16222
#KOTW16222
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 9, 2015
ரமழான் 1436: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு & குடும்ப சங்கமம் நிகழ்ச்சி! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3547 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் - கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் அமைந்துள்ள சினேகாஞ்சலி கம்யூனிட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் மஸ்ஊத் தலைமையில் நடைபெற்றது.







துவக்க நிகழ்வுகள்:

அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் யு.எல்.செய்யித் அஹ்மத், செயலாளர் உதுமான் லிம்ரா, துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர், மற்றும் சாளை அபுல் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களுடைய மகனார் சேட் முஹம்மது இப்ராஹீம் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

வரவேற்புரை:

நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்களையும், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களையும், மன்ற துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.

மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி:

சிறுவர்-சிறுமியருக்கான இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும் தமது திறமைகளை அழகுற வெளிக்காட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர். சாளை அபுல் ஹசன் காக்கா அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.







சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசு:

1,கோழிக்கோடு M M H SCHOOL லில் பயின்று, நடைபெற்று முடிந்த +2 கேரளா அரசு பொதுத்தேர்வில் 92.5% சதவிகிதம் பெற்ற-மன்ற செயலாளர் உதுமான் லிம்ரா அவர்களின் மூத்த மகள் ஃபிதா

2,கோழிக்கோடு HILL TOP PUBLIC SCHOOL லில் பயின்று,நடைபெற்று முடிந்த CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் A+ தரத்தைப் பெற்ற-மன்ற பொதுக்குழு உறுப்பினர் செய்யித் தமீம் அவர்களின் மகன் எஸ்.டி.ஷாக்கிர் ரஹ்மான்

3,கோழிக்கோடு HILL TOP PUBLIC SCHOOL லில் பயின்று, நடைபெற்று முடிந்த CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் 9.6% சதவிகிதம் பெற்ற-மன்ற செயலாளர் உதுமான் லிம்ரா அவர்களின் இளைய மகள் நிதா

4,நடைபெற்று முடிந்த தமிழ்நாடு பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்ற - மன்ற பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் மகள் சுமய்யா

5,காயல்பட்டினம் சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று நடைபெற்று முடிந்த தமிழ்நாடு பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்ற - மன்ற பொதுக்குழு உறுப்பினர் நோனா காதர் மூஸா அவர்களின் மகள் முத்து ஆயிசா ரிப்கா ஆகியோரின் சாதனைகளைப் பாராட்டி, மன்றத்தின் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.



தலைமையுரை:

கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.



மருத்துவ உதவி உட்பட - தேவையான நகர்நலப் பணிகள் அனைத்தையும், மக்வா இறையருளால் நிறைவாகச் செய்து வருவதாகக் கூறிய அவர், உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவிக் கூட்டமைப்பான ஷிஃபா மூலம் பயனாளிகளுக்கு நம் மன்றம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.மேலும் ஷிஃபாவின் செய்லபாடுகளை வெகுவாக பாராட்டினார்.

இஃப்தார் - நோன்பு துறப்பு:

கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு பேரீத்தம்பழம், காயல் கஞ்சி, சாலா வடை என உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவும், சுவைபடவும் உணவுப் பதார்த்தங்கள் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.







மஃரிப் தொழுகை:

இஃப்தார் நிறைவுக்குப் பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. சகோதரர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தொழுகையை வழிநடத்தினார்.



அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது



சிறப்புரை:

இக்கூட்டத்தில், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயலாளரும்,மலபார் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் சிறப்புரையாற்றினார்.



1) ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்ததால் மட்டும் நாம் முஸ்லிம்கள் ஆகிவிட முடியாது. அல்லாஹ்தான் நமக்கு ஹிதாயத்தை வழங்கினான்.

2) நாம் முன்னோக்கும் கிப்லா ஒன்றே. தொழும் தொழுகை ஒன்றே. பிறகேன் நமக்குள் எண்ணற்ற பிரிவினைகள்?

3) நமக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். பிரிவினைகள் கூடாது. உமர் ஃகத்தாப் (ரழி) அவர்களுக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களுக்கும் இடையே 100- க்கும் மேற்பட்ட கருத்துவேற்பாடுகள் இருந்தன. குர்ஆனுக்கு பல தஃப்ஸீர்கள் வந்ததே ஸஹாபாக்கள் மற்றும் இமாம்கள் இடையே நிலவிய கருத்துவேறுபாடுகளால்தான்.

4) நமக்குள் பிணங்கி வேறுபட்டு நிற்பதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக நாம் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றோம். அதனால் தான் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் நாதியற்று கேட்பாரற்று தாக்கப்பட்டு வருகின்றனர்.

5) எனவே நமக்குள் ஒன்றுபட்டு ஒற்ற்மையோடு வாழ்வது காலத்தின் கட்டாயமாகும். அப்போதுதான் அல்லாஹ்வின் உதவியும் நமக்கு கிடைக்கும்.

மலபார் காயல் நலமன்றம் மேலும் பல்லாண்டுகள் தழைக்க வேண்டும். தமக்கு முடியாத பெரும் பெரும் நோய்களில் அகப்பட்டோருக்கு உதவுவதன் மூலம் அம்மக்களின் துஆக்களும் அல்லாஹ்வின் கருணையும் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வற்றா கருணயையும் பெரும் கிருபையையும் இம்மையிலும் மறுமையிலும் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.


இவ்வாறு அவர் மனம் நெகிழ்ந்து உரையாற்றினார்.

செயலர் சுருக்கவுரை:

அடுத்து, மன்றச் செயலாளர் உதுமான் லிம்ரா உரையாற்றினார்.



உதவிகள் கோரி மன்றத்திற்கு வந்த மனுக்கள் அவற்றுக்கு மன்றத்தால் ‘ஷிஃபா’ மூலம் முடிந்த அளவு உதவி செய்த விபரம் குறித்தும் அவர் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.

வாழ்த்துரை:

பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சாளை அபுல் ஹசன், ஜனாப் நாகூர் மீரான் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜ்,வாழ்த்துரை வழங்கினார்கள்.



விருந்தோம்பல்:

பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்பம் , கலரிக்கரி,மற்றும் காயல் ஜவ்வரிசி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.





நன்றியுரை:

நிறைவாக மன்றத்தின் மன்ற துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு, இரவுணவு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இரவு 08.30 மணியளவில், அனைவரும் தத்தம் வசிப்பிடம் திரும்பினர்.






இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்வா சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இதயம் இனிக்கிறது உள்ளம் கனக்கிறது
posted by mackie noohuthambi (kayalpatnam) [10 July 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41281

மருமகன் ஷமீமுல் இஸ்லாம் கருத்துக்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது ஆனால் உள்ளம் கனக்கிறது. எல்லோரும் ஒற்றுமை ஒற்றுமை என்றுதான் பேசுகிறோம். ஆனால் புனித ரமாலனில் வரும் லைலதுல் கதர் 3 நாட்கள் அதை தொடர்ந்து வரும் பெருநாட்கள் மூன்று.

ஒரு காலத்தில் சொன்னோம் இஸ்லாத்தில் ஆண்டி அரசன் என்ற பேதம் இல்லை எல்லோரும் ஒரே அணியில் நின்று தொழுகிறோம். சஜ்தா செய்கிறோம் என்று ஆனால் இன்று நடைமுறையில் அது காணாமல் போய் விட்டது. சாதாரண தொப்பி போடுவது முதல் மண்ணறையில் வைக்கும் முறை வரை நம்மில் வேறுபாடு இவை எங்கே இருந்து முளைத்தன.

இரண்டு ஆடுகள் ஒரு பாலத்தில் எதிரெதிராய் நிற்கின்றன. கீழே ஆர்பரித்து செல்லும் ஆறு ஓடுகிறது. ஒரு ஆடை இன்னொரு ஆடு கடந்து அந்த பக்கம் செல்ல வேண்டும். ஒரு ஆடு படுத்துக் கொண்டு மற்ற ஆட்டுக்கு வழி கொடுக்கிறது.இலகுவாக கடந்து செல்கின்றன. இந்த ஐந்தறிவு மிருகத்துக்கு உள்ள விட்டுக் கொடுக்கும் தன்மை மனிதர்களில் இருசாராருக்குமே இல்லை. நான் சொல்வதே சரி என்று இருவரும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு குர் ஆன் ஹதீதுகளில் இருந்து ஆதாரம் சொல்கிறார்கள்.

சாதி வெறி நமது மாநிலத்தில் தலை தூக்கி நிற்கிறது ஒரு சாதியில் உள்ள பெண்ணை இன்னொரு சாதி ஆண் மணக்கவும் முடியவில்லை மனத்தால் நினைக்கவும் முடியவில்லை. இஸ்லாமிய திருமணத்துக்கு வாருங்கள். பெண் மாப்பிள்ளை என்று பேசும்போதே நீ தௌஹீத் ஜமாத்தா சுன்னத் ஜமாத்தா என்று கேட்டுத்தான் பேச்சே ஆரம்பமாகிறது நமது ஊரில். இதுதான் இன்றைய நிதர்சன உண்மை. சுன்னத் ஜமாஅத் தௌஹீத் ஜமாஅத் தப்லீக் ஜமாஅத் என்று மூன்று கோஷ்டியாக தான் மார்க்க அமல்கள் பிரிக்கப்பட்டு நடை முறையில் இருந்து வருகிறது. எனவே நீங்கள் சொல்லும் ஒற்றுமை வெறும் கானல் நீர்தான்.

ஹிதாயத்து அது ஒரு வழிப்பாதையில் கிடைக்காது. விட்டுக் கொடுப்பது இணைந்து செல்வது. நாம் சொல்வது சத்தியமாக இருந்தாலும் அதில் குழப்பம் ஏற்படும் என்றால் அந்த சொல்லை சொல்லாமல் இருப்பது எல்லாம் இஸ்லாத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இதை இரு சாராரும் உணராமல் புரியாமல் அவரவர் செய்வதே சரி என்று வாதிட்டுக் கொண்டிருப்பதால் யுக முடிவு காலம் வரை இந்த பிரிவினை தொடரவே செய்யும். வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved