Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:10:20 AM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16548
#KOTW16548
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 11, 2015
ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4125 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர்மன்றக் கூட்டம்:

காயல்பட்டினம் நகராட்சியில், இன்று (செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை) மதியம், ஒற்றைப் பொருளை முன்வைத்து நடத்தப்பட்ட நகர்மன்றக் கூட்டத்தின் நிறைவில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனையிலிருந்து, கடற்கரை வரையிலான ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு, ரூபாய் 46 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பங்கேற்றோர்:

இன்று 15.30 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். ஆணையர் ம.காந்திராஜன் முன்னிலை வகித்தார். 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா தவிர இதர 17 உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.





கூட்டப் பொருள்:

துவக்கமாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய அவர், பின்வருமாறு கூட்டப் பொருளை வாசித்தார்.







பின்னர் கருத்துக் கூறிய நகர்மன்றத் தலைவர், அதிகளவில் வாகனப் போக்குவரத்துள்ள ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் தரமான தார் சாலை அமைத்தால்தான், அது நீண்ட காலத்திற்குப் பிரச்சினையின்றி தாக்குப் பிடிக்கும் என்றும், எனவே தனது இக்கருத்தை ‘நகர்மன்றத் தலைவர் குறிப்பு’ என்று பதிவு செய்வதாகவும், என்றாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே தீர்மானமாகும் என்றும் கூறினார்.

தீர்மானம் நிறைவேற்றம்:

அடுத்து பேசிய 11ஆவது வார்டு உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் குறிப்பை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மினிட் புத்தகத்தில் எழுத வேண்டும் என்று கூறினார். அதை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்தனர்.





நிறைவில், நகர்மன்றத் தலைவர் குறிப்பு நிராகரிக்கப்பட்டு, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு, 46 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை விரைவாக வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத் துளிகள்......

ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதாலும், கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும், அங்கு தரமான தார் சாலை அமைத்திட தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், பேவர் ப்ளாக் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் கூறினர்.

“அப்படியானால், 07ஆவது வார்டில் நிறைவேற்றப்படவுள்ள பேவர் ப்ளாக் சாலையை நிறுத்தி விடலாம்... ஏனெனில், அது அந்த வார்டு உறுப்பினருக்குப் பிடிக்காது அல்லவா?” என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் உள்ளிட்டோர் அவரது கருத்தை ஆதரித்துப் பேசினர்.

சில நிமிடங்களுக்குப் பின் எழுந்து பேசிய உறுப்பினர் ஜெ.அந்தோணி, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் பேவர் ப்ளாக் கற்கள் கொண்டு புதிய சாலை அமைப்பதற்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதனால், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 17 உறுப்பினர்களில், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன், பேவர் ப்ளாக் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி பொறியாளர் சிவக்குமார் மற்றும் சில அலுவலர்களும் இக்கூட்டத்தின்போது உடனிருந்தனர். கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!



காயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by samu shihabudeen (chennai) [11 September 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 41831

waste of money...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தரமான ? சாலை !
posted by Firdous (Dubai ) [11 September 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41832

இம்மாதிரியான ப்ளாக்குகள் நடைபாதை, மற்றும் பார்க்கிங் போன்ற இடங்களில் அமீரகத்தில் பார்க்கலாம். பிரதான சாலைகளில் பயன்படுத்தினால் என்ன ஆவது?

இவர்களின் சுய ஆதாயத்திற்காக செய்யும் இதுபோன்ற நிகழ்வுகளூக்கு நாம் எதிர்ப்பு காட்டவில்லையென்றால் பின்னால் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaik abdul cader (bangalore) [12 September 2015]
IP: 79.*.*.* Germany | Comment Reference Number: 41833

Utter waster of money. Does it make sense to prepare a road with favor blocks on such a busy roads. Its common peoples money. Should think before we vote and all the opposing ward members think before you act.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Samu (chennai) [12 September 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 41834

WOW! Rainy season, Slippery surfaces, Customs road going to be most accident-prone area for bikers soon ... kudos to all brainy members...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்) [12 September 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 41835

தலைவியின் ஆதங்கம் சரியானதே. மக்கள் அதிகம் உபயோகிக்கும் இந்த சாலை தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே நேரத்தில் நமதூரை அடுத்துள்ள திருச்செந்தூரில், நமதூரை விட மிக அதிகம் கனரக வாகனங்கள் செல்லும் திருச்செந்தூர் கோயில் போகும் வழியிலும் (பஸ் ஸ்டான்ட் அருகில்) மற்றும் திருநெல்வேலிக்கு திரும்பும் வளைவிலும் இதே பேவர் பிளாக் கல் (paver block) தான் பதிக்கப்பட்டுள்ளது. ஊரில் இருப்பவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

அங்கு ஒரு நாளைக்கு எத்தனை பஸ் (பஸ் ஸ்டாண்ட்- கோயில்- பஸ் ஸ்டாண்ட்) போய் வருகிறது?. மேலும் தி.வேலி, நாகர்கோயில் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் இதே சாலையில் தான் செல்கிறது.

அந்த சாலையை ஒப்பிடும்போது நமதூர் ஸி-கஸ்டம்ஸ் சாலை எந்தளவுக்கு கனரக வாகனங்கள் செல்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

ஆனால், போடப்படும் சாலை, தரமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கம். அதில் சமரசம் செய்ய முடியாது.

ஏற்கனவே போடப்பட்ட சில சாலைகளை, ஓர் அமைப்பு கண்காணித்து, தரமான சாலை அமைய உதவியது போல், இந்த சாலையும் அரசின் தரக்கட்டுப்பாடு மற்றும் ஒப்பந்தபுள்ளியில் குறிப்பிட்டவாறு போடப்படுகிறதா என்று பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருந்து தரமான சாலை அமைய பாடுபடுவோம்.

மொத்தத்தில் தரமான சாலை அமைந்தால் சரி.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஸீ-கஸ்டம்ஸ் சாலை சீ...கஸ்டம்ஸ் சாலை
posted by Refaye (Abudhabi) [12 September 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41838

எப்படியோ !!!!

ஸீ-கஸ்டம்ஸ் சாலை சீ...கஸ்டம்ஸ் சாலையாக மாறாமல் இருந்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by HAMEED MN (Chennai) [12 September 2015]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 41839

காயல்பட்டண மக்களுக்கு ஓர் நற்செய்தி!

நல்ல முறையில் டங்கா அடித்து பழக நகர்மன்ற உறுப்பினர் பத்ருல் ஹக்கை அனுகவும் …


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. முடிவும் தீர்மானமும் அங்கு வசிக்கும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [12 September 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41840

நகர்மன்ற தலைவர் எனும் எதிர்ப்பு / ஆதரவு கண்ணாடி - நகர்மன்ற உறுப்பினர்கள் எனும் ஆதரவு / எதிர்ப்பு கண்ணாடி - 2011 ல் நகரில் பொது வேட்பாளரை நிறுத்தி தோல்வி கண்ட ஐக்கிய பேரவை எனும் எதிர்ப்பு / ஆதரவு கண்ணாடி அனைதையும் கழற்றி வைத்து விட்டு நடுநிலை எனும் 1 கண்ணாடி அணிந்து கடற்க்கரைக்கு செல்லும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை அமைக்க பேவர் ப்ளாக் (தனி தனி கற்கள்) கொண்டு அமைப்பது தரமானதா...? ஜல்லி போட்டு தார் ஊற்றி இயந்திர அழுத்தம் கொடுத்து தார் சாலை அமைப்பது தரமானதா...? என்ற முடிவு - நகர்மன்ற தலைவரின் / நகர்மன்ற உறுப்பினர்களின் / ஒப்பந்தக்காரருக்கு தலையாட்டும் அதிகாரிகளின் / அதிகாரிக்கு தலையாட்டும் ஒப்பந்தக்காரரின் முடிவாகவும் தீர்மானமாகவும் இருக்க கூடாது -

அந்த முடிவும் தீர்மானமும் அங்கு வசிக்கும் மக்களின் முடிவாக இருக்க வேண்டும்..! என்பது நகரின் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தார் சாலையே தரமானது.
posted by M.A.K.JAINUL ABDEEN (kayalpatnam) [12 September 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41841

ஸி.கஸ்டம்ஸ் சாலைக்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதேநேரம் அந்த சாலையை தலைவி அவர்கள் சொன்னதுபோல் தரமான தார்சாலையாக அமையவேண்டும் என்பதே என்போன்ற பொதுமக்களின் கருத்து.

அதிகமான போக்குவரத்துள்ள பகுதியான இந்த ரோடு முழுவதும் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமையவேண்டும்.

இதை நகர்மன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு தரமான சாலை அமைய வழிவகை செய்யவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...நன்றியும் வேண்டுகோளும் வாழ்த்துக்களும்!
posted by ஜெம் தீபி (Kayalpatnam) [12 September 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41844

நகர் மன்ற தலைவருக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.

இதே ஒற்றுமையோடு எஞ்சியுள்ள காலங்களில் விடுபட்டுள்ள திட்டங்களை விரைந்து நிறைவேற்ற என் அன்பான வேண்டுகோள்! அவைகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சகோதரர் ‘காக்கும் கரங்கள்’ M.A.K.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொன்னது போல, அதிகமான போக்குவரத்துள்ள இந்தச் சாலை முழுவதும் ஆழமாகத் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமைக்க வேண்டும்.

அந்தச் சாலை அமைக்கும்போது கீழ்க் கண்ட விஷயங்களை முக்கியமாக கவனித்து செயல் பட வேண்டும்.

1) மழைக் காலங்களில் இந்தச் சாலையில் ஏற்படும் நீர்ப் பெருக்கம் சரியான முறையில் வடிந்து செல்லத் தோதுவாக, அல்ஜாமிஉல் அஸ்கர் முனையிலிருந்து கடற்கரை வரை, சாலையின் இரு பக்கவாட்டிலும் ஓடை (gutter line) அமைக்க வேண்டும். அதன் இறுதிப்பகுதியை கடற்கரையில் ஒரு பெரிய செயற்கை குளமோ (pool) / பெரிய தொட்டியோ (reservoir) அமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும்.

கடற்கரை நிலப் பகுதிகளில் நிறைய மரங்களை நட்டி அதற்கு நீர் பாய்ச்ச அந்தத் தண்ணீர் உபயோகமாக இருக்கும், அல்லது செயற்கை நீரூற்றுக்களை வடிவமைத்துக் கட்டினால், சுற்றுலா வருவோருக்கு இன்பகரமாக இருக்கும். நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் இது ஓர் பசுமைப் புரட்சி என்பதை நினைவிற்கொண்டு செயல்பட்டால் நல்லது.

2) சாலையின் நடுப் பகுதி லேசான மேடாகவும், தண்ணீர் தேங்காமல் வழிந்து ஓடும்படி கரைப்பகுதி தாழ்வாகவும் அமைக்க வேண்டும்.

3) K.T.M.தெரு, K.M.K.தெரு, அலியார் தெரு, ஆசாத் தெரு, பரிமார் தெரு, சித்தன் தெரு, அப்பா பள்ளித் தெரு, தீவுத் தெரு மேல் பகுதி, மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத் தெரு கீழ் பகுதி, சொளுக்கார் தெரு, முத்துவாப்பா தைக்காத் தெரு, கொச்சியார் தெரு, தேங்காய் பண்டக சாலை ஆகிய தெருக்களின் முனையில் சந்திப்பு தொட்டி (junction pit) கட்டி அதை ஓடையோடு இணைத்து விடவேண்டும்,

அந்தத் தெருக்களிருந்து பெருக்கெடுத்துவரும் மழை நீர் எளிதில் வடிந்து, சந்திப்புத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, ஓடையின்வழியே எவ்வித இடையூறுமின்றி கடற்கரைக்குச் சென்று விடும்படி வடிவமைக்க வேண்டும்.

4) அந்தச் சாலையின் இரு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

5) சந்திப்புச் சாலைகள் இணையும் இடங்களில் வேகத் தடை அமைத்து அதற்கு முறையான கருப்பு, வெள்ளை (zebra crossing) வண்ணம் தீட்ட வேண்டும்.

6) அந்தச் சாலை முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

7) அந்தச் சாலையின் இரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்களில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்புக்களை தனியார் பெறு வணிக நிறுவனங்களிடமோ/ தன்னார்வத் தொண்டு அமைப்புக்களிடமோ வழங்கினால் சிறப்பாக இருக்கும். அதைச் சுற்றி வேலியமைத்து, அதில் அவர்களின் விளம்பரங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

8) அந்தச் சாலை அமைந்த பிறகு, அதில் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்கவோ, பந்தல் போட / ஆர்ச் போட என்று குழி தோண்டவோ, வேறு எந்த ரூபத்திலும் அந்தச் சாலையை யாரும் சிதைக்கவோ அனுமதிக்கவே கூடாது. இவ்விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

9) அந்தச் சாலைக்கு, நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி, சமீபத்தில் நம்மை விட்டும் மறைந்த மேதகு டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் நாமத்தைச் சூட்ட, நகர் மன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். உடனடியாக அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்தாகும்.

இது சம்பந்தமாக வேறு கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால் இக்கருத்தைத் தொடர்ந்து வரையுங்கள். நல்ல விஷயங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது நம் எல்லோருடைய கடமையும் கூட.

நன்றி. வாழ்த்துக்கள்.

என்றும் நகர் நலன் நாடும்,
ஜெம் தீபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இந்த வக்காலத்து வுருப்பினர்களிடாம நல்லது வெளிப்பட போகிறது
posted by K.S.Seyed Mohamed Buhary (Abu Dhabi ) [12 September 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41846

நமதூரை குழிதோண்டி புதைக்கும் Dcw வக்காலத்து வுருப்பினர்களா நமக்கு நல்லது செய்ய போகிறார்கள் மக்களே வுஷார் இந்த ரோடு யாருக்கு favouro இல்லையோ வுருப்பினர்கள் ஆட்டைய போட favour போல தெரியுது இந்த சாலையின் கோரம் முழுவதும் வுர்ப்பினர்கலயே சாரும் தலைவரை சாராது வருகிற தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்க இந்த சாலை நியாபக மூட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved