Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:02 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16579
#KOTW16579
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 18, 2015
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள்படி - கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவருக்கு உறுப்பினர்கள் கடிதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2725 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் உட்பட 14 உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவருக்கு 4 பொருட்களை கொண்டு, செப்டம்பர் 25 தேதிக்குள், மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள் படி - கூட்டம் நடத்த கடிதம் அனுப்பியுள்ளனர்.

உறுப்பினர்களின் கோரிக்கையில் இடம்பெற்றுள்ள பொருட்கள் -

<> துப்பரவு பணிகளுக்கு என 100 (நூறு) பணியாளர்கள் நியமனம் செய்வது,

<> 23.5 லட்ச ரூபாய்க்கு டாங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது,

<> தனியார் வசம் வழங்கப்பட்டுள்ள 21.5 லட்ச ரூபாய் மதிப்பிலான தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை 10 சதவீதம் உயர்த்தி, அதே ஒப்பந்ததாருக்கு வழங்குவது,

<> ஜூலை மாதம் விடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 5 சாலைகளுக்கு பணியானை வழங்குவது ஆகும்.

இந்த நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கை கடிதத்தையும், அதற்கான தனது பதிலையும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நகர்மன்றத் தலைவரின் முகநூல் பதிவு வருமாறு:

செப்டம்பர் 16 அன்று துணைத் தலைவர் உட்பட 14 உறுப்பினர்கள் கையெழுதிட்ட கடிதம் ஒன்று எனக்கு கிடைத்தது. அதில் - மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) படி செப்டம்பர் 25 அன்று கூட்டம் நடத்திட இந்த கடிதத்தை தாங்கள் அனுப்புவதாகவும், அவ்வாறு நடத்த வில்லை என்றால் துணைத் தலைவர் கொண்டு அந்த கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் - மன்ற பொருள் 1 என குறிப்பிட்டு, நான்கு வெவ்வேறு பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை இணைத்துள்ளேன்.





மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள் படி - அடுத்த சாதாரண கூட்டம்வரை காத்திருக்க முடியாத ஒரே ஒரு பொருள் மட்டும் தான் இது போன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளில் இருக்க வேண்டும். இந்த விதிமுறை மீறப்பட்டதால் தான் - ஜூலை 27 அன்று நடந்த கூட்டம், சட்டத்திற்கு புறம்பானது என்று நிலைப்பாட்டை நான் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஜூலை 27 நடந்த கூட்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது.

உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் உள்ள 4 பொருட்களில், 3 பொருட்கள் - செப்டம்பர் 22 சாதாரண கூட்ட அஜெண்டாவில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்படாத ஒரே பொருள் - டாங்கர் மூலம் நகரில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குறித்தது (23.5 லட்ச ரூபாய்க்கு டாங்கர் மூலம் தண்ணீர் விநியோகம்).

இந்த டாங்கர் மூலம் குடிநீர் விநியோகம் சம்பந்தமாக, நான் ஏற்கனவே - முகநூலில் பதிவு செய்துள்ளேன். இது குறித்து, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு (RDMA) 11.7.2015 அன்று நான் எழுதிய கடிதத்திற்கு பதில் (17.7.2015) வழங்கியிருந்த RDMA, ஒரு வார காலத்திற்குள் - இது குறித்த விளக்கத்தை எனக்கு வழங்க ஆணையர் காந்திராஜனுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். RDMA இன் பதில் கிடைக்கப்பெற்று (17.7.2015) 2 மாதத்திற்கு மேலாகியும், இது வரை - ஆணையர் காந்திராஜன் இது சம்பந்தமான பதிலினை எனக்கு தரவில்லை.



எனவே - உறுப்பினர்களின் 15.9.2015 கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இந்த பொருள், ஆணையரிடம் இருந்து முறையான விளக்கம் பெறப்பட்டப்பின் - கூட்ட பொருளில் இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற விரிவான தகவலை, நான் உறுப்பினர்கள் அனைவருக்கும் - தனியொரு பதிவு தபால் மூலம் தெரிவித்துள்ளேன்.

நகர்மன்ற உறுப்பினர்கள் - செப்டம்பர் 22 அன்று அழைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துக்கொண்டு, நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான இத்தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி கேட்டு கொள்கிறேன்.



இவ்வாறு நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...திருநாளை போவார் நாயனார்
posted by mackie noohuthambi (colombo) [18 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41870

அப்பர் அடிகள் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று இந்து மதம் இவரைப் போற்றி புகழும். இவர் தில்லைக்கு சென்று சிதம்பரம் நடராஜனை தரிசிக்க ஆசைப் பட்டார் ஆனால் கையில் பணம் இல்லை நடந்து போகவும் தெம்பு இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் நான் நாளை தில்லை அம்பல நடராஜனை சந்திக்க போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் போன பாடில்லை. எனவே இவர் தினசரி இப்படியே சொல்லிக் கொண்டிருந்ததால் இவருக்கு திரு நாளைப் போவார் நாயனார் என்று பெயர் வைத்து விட்டார்கள் .

நமது நகர்மன்ற நடவடிக்கைகளும் இப்படிதான் போய் விட்டது கூட்டம் கூடுவதாக தேதி அறிவிப்பது திடீரென்று ஒத்திவைப்பு என்று சொல்வதும். வெளி நடப்பு செய்வதும் ... தலைவர் இல்லாமல் துணைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடப்பதும் அது நடந்தது செல்லாது என்று தலைவி வழக்கு போடுவதும் மீண்டும் தலைவர் கூட்டம் அறிவிப்பதும் .... இது ஒரு தொடர்கதை,,,, கே பாலச்சந்தரின் ''அவள் ஒரு தொடர்கதை'' போல.. 2016 வரை தொடரும்.... நல்ல நகர்மன்றம் நல்ல தலைவி நல்ல உறுப்பினர்கள் நல்ல மக்கள்..நம் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [19 September 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41871

சேர்மன் மேடம்...! நீங்க இப்படி எல்லாம் கணக்கு கேட்டீர்களேயானால் இனி உருப்படியாக நகர் மன்ற கூட்டம் நடக்காது.

நகராட்சியில் செயற்க்கையான தண்ணீர் தட்டுபாடு உருவாக்கம் முறியடிக்கப்பட வேண்டும்..!

உறுப்பினர்கள் இது விசியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு சகோதரர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறியது இப்போது இந்த செய்தியின் மூலம் நினைவுக்கு வருகிறது அதாவது வானியக்குடி தெரு மற்றும் அதன் உட்பகுதி தெருக்களில் உள்ள எவருமே டாங்கர் லாரி மூலம் தண்ணீர் கேட்காத போது தானாகவே சம்பந்தமில்லாமல் டாங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்த போது அங்குள்ள குடியிருப்பு மக்கள் தண்ணீர் பிடித்து வீட்டில் வைக்க எந்த ஒரு பாத்திரமும் / குடமும் / வாளியும் அப்போது காலியாக இல்லை - காரணம் அங்கு தேவைக்கு அதிகாமாகவே தண்ணீர் அவர்களின் வீட்டில் இருந்துள்ளது - பிறகு அங்கு வந்த ஒரு சகோதரர் அந்த டாங்கர் லாரியை அழைத்து கொண்டு போய் அவருக்கு தேவையான தண்ணீரை அவரின் கட்டிட பணிக்கு பெற்று கொண்டு டாங்கர் ஓட்டுனரை கவனித்து அனுப்பியதாக சொல்லபடுகிறது -

23.5 லட்ச ரூபாய்க்கு டாங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் குறித்து ஆணையரிடம் இருந்து முறையான விளக்கம் பெறப்பட்டப்பின் - கூட்ட பொருளில் இணைப்பது குறித்து முடிவெடுக்க நீங்கள் முற்ப்பட்டால் அக்கூட்டம் எப்படி சுமூகமாக நடந்தேறும் ? என்ற கேள்விகளும் மனதில் கணம் நிறைந்த கவலைகளும் நகரின் சமூக ஆர்வலர்களின் மத்தியில் எழுகிறது - ஆட்கொள்கிறது.

மக்கள் வரி பணம் மக்களின் தேவைகளுக்காக செலவிட பட வேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved