Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:30:21 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16585
#KOTW16585
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 20, 2015
“ஆசிரியருக்கு மரியாதை, நேர மேலாண்மை - இவற்றில் கவனம் செலுத்தினால், வெற்றி நம்மைத் தேடி வரும்! “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதன்மாணவியர் பேச்சு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3333 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு மரியாதை அளித்தல், நேர மேலாண்மை ஆகியவற்றை சரிவர கடைப்பிடித்தால், வெற்றி நம்மைத் தேடி வரும்” என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற - நகர பள்ளி மாணவ-மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, 2014-2015 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியர் ஜெ.பவித்ரா, எல்.பி.நிவேதா ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளன.

அந்த வரிசையில், நடப்பு 10ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சி, 05.09.2015 சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில் நடைபெற்றது.

நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியரான - திருப்பூர் விகாஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற ஜெ.பவித்ரா, கோயமுத்தூர் சவுடேஷ்வரி வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற எல்.பி.நிவேதா ஆகியோருடன், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, 05.09.2015 சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.



இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்ளான வாவு எஸ்.அப்துல் கஃப்பார் தலைமை தாங்க, ஜெஸ்மின் ஏ.கே.கலீல், எம்.ஏ.எஸ்.ஜரூக், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.







தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் சாதனை மாணவியர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.





பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தம் பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சாதனை மாணவியருடன் எம்.ஜெ.ஹபீபுர்ரஹ்மான் கலந்துரையாடினார்.



மாணவ-மாணவியரின் கேள்விகளுக்கும், இடையிடையே பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கும் சாதனை மாணவியர் விடையளித்தனர். சில கேள்விகளுக்கு மாணவியரின் பெற்றோரும் விடையளித்தனர்.







தமது பூர்விகம், துவக்கக் கல்வி, மேனிலைக் கல்வி, வணிகவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், மாநில சாதனை மாணவியராக அறிவிக்கப்பட்ட பின்னர் கலந்துகொண்ட - தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டு நிகழ்ச்சிகள் குறித்து அவர்கள் தகவல்களை வழங்கினர். மாநில சாதனை மதிப்பெண் என்பது எட்டாக்கனியல்ல என்றும், மனதை ஓர்மைப்படுத்தி முயற்சித்தால் யாருக்கும் அது கைகூடும் என்றும் அவர்கள் கூறினர்.



மாநில சாதனையாளராவதற்காக பிரத்தியேகமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.



பள்ளியில் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையளித்து, அவர்கள் நடத்தும் பாடங்களைக் கூர்ந்து கவனித்து, சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இருக்கும் நேரத்தை சரியான முறையில் ஒவ்வொரு பணிக்காகவும் ஒதுக்கிப் பழக்கப்படுத்திக்கொண்டால், சாதனைகள் நம்மைத் தேடி வரும் என்றும் அவர்கள் கூறினர்.

நிகழ்ச்சி இடைவேளையின்போது மாணவ-மாணவியருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இக்ராஃ பொருளாளர் கே.எம்.டீ.சுலைமானின் நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - நாட்டுப்பண்ணுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ, கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரான ஹுஸைன் ஹல்லாஜ், இசட்.எம்.டி.முஹம்மத் அப்துல் காதிர், சமூக ஆர்வலர்களான ஹாஃபிழ் என்.ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ


கடந்தாண்டு (2014) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இக்ராஃ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மலரும் நினைவுகள்,,,
posted by mackie noohuthambi (colombo) [21 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41873

நாங்கள் கல்வி கற்கும் நாட்களில் நடந்த சில சுவையான நிகழ்சிகள் ஞாபகத்துக்கு வருகிறது.

தூய சவேரியார் கல்லூரி பாளையம்கோட்டை. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற காலம். கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்தார்.

கல்லூரி முதல்வர் அவர்கள் பேசும்போது எங்கள் கல்லூரியில் அரசியலும் காதலும் கற்றுக் கொடுப்பதில்லை என்றார். அண்ணா அவர்கள் பேசும்போது கல்லூரி முதல்வர் அவர்கள் இந்த இரண்டையும் படித்துக் கொடுக்க தேவை இல்லை. இந்த மாவட்டத்திலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கல்லூரியில் கல்வி கற்றவர்கள்தான். காதல் என்பது அந்த பருவத்தில் தானாகவே வந்து விடும் எனவே இந்த இரண்டும் நீங்கள் கற்றுக் கொடுக்காமல் இருப்பது ஒன்றும் குறையில்லை. என்றார்.

கூடியிருந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

''நூற்றுக்கு நூறு'' என்று ஒரு திரைப் படம். அதில் ஜெய்ஷங்கர் பேராசிரியராக இருப்பார் மாணவ மாணவிகள் சுற்றுலா செல்வார்கள். அதிலே ஒரு பாடல் வரும் ''உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்... நானும் மாணவன்தான்''. ஆண்டவன் கட்டளை என்று ஒரு திரைப் படம் அதில் சிவாஜி கணேஷன் பேராசிரியராக வருவார். அதிலே ஒரு பாடல் ''தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது.''....இப்படி பல விஷயங்கள் மாணவர்கள் ஆசிரியர் உறவுகளை சீராக வைத்திருந்த காலங்கள் அது.

இப்போது அந்த உறவுகள் அருகி விட்டதால் ஆசிரியர் மாணவர் தலைமுறை இடைவெளிகள் அதிகமாகி விட்டதால் ஆசிரியர்களை மதிக்கும் மாணவர்கள் குறைந்து வருகிறார்கள்.

நேர மேலாண்மையும் இப்படித்தான். கல்லூரிக்கு வரும் பேராசிரியர் தெருவை கடக்கும்போது தெருவில் நடப்பவர்கள் நேரத்தை சரிபார்த்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது நேரம் தவறாமை ரயிலுக்கும் பேருந்துக்கும்தான் நமக்கில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலைகள் மாற வேண்டும் அப்போதுதான் சாதனை மாணவிகள் சொல்வது அரங்கேறும்.

வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கு முனைந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியவர்கள் நேரலைக்கு ஏற்பாடு செய்யவில்லையே என்ற ஆதங்கமும் எனக்குள் எழுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved