Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:50:32 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16613
#KOTW16613
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 28, 2015
டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி! 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5269 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சாகுபுரம், டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டிணத்தில் பெண்கள் வழிபடும் தைக்காவிற்கு ரூபாய் இரண்டு இலட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.



காயல்பட்டிணம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு, பிலால்நகர், நயினார் தெருவில் கதிஜா நாயகி பெண்கள் தைக்கா மக்தபத்துல் முஹம்மதியா பள்ளிவாசல் கட்டப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யூ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 3வது வார்டு கவுன்சிலர் சாரா உம்மாள் தலைமை வகித்தார். தைக்கா பொறுப்பாளர்கள் செய்து ஹலீமா மற்றும் அகமது அலி பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.சி.டபிள்யூ நிறுவன செயல் உதவி தலைவர் மே.சி.மேகநாதன், டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் 2வது வார்டு கவுன்சிலர் முகமது செய்யது பாத்திமா, பிலால் பள்ளி வாசல் நிர்வாகிகள் முஸ்தபா, வி.கே.எஸ். சித்திக், சேட்டப்பா ஹரீம் கோமான் ஜமாத்தைச் சேர்ந்த ரபீக் டி.சி.டபிள்யூ நிறுவன துணை மேலாளர் (மக்கள் தொடர்பு) சித்திரைவேல், மக்கள் தொடர்பு அதிகாரி அருணா மற்றும் அப்பகுதி பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்துல்லா செய்திருந்தார்.

தகவல்:
www.tutyonline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...DCW THAIKKAA
posted by mackie noohuthambi (colombo) [28 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41887

ஒருபுறம் DCW க்கு எதிரான போராட்டம் மறுபுறம் DCW ஆதரவில் நிதி உதவியில் தைக்கா. என்ன முரண்பாடுகள் நமது மக்களின் மனோ நிலையை என்னென்று சொல்வது.

அது ஒரு உலமாக்கள் நிறைந்த காலம்.

1. பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் கடைகள் கட்டிக் கொடுத்து அந்த வாடகையில் பள்ளிவாசல் நிர்வாக செலவுகள் செய்யலாமா

2.மாற்று மதத்தினர் ஒரு பள்ளி வாசலையே கட்டிக் கொடுக்கிறார்கள் அதை ஏற்றுக் கொண்டு அங்கு தொழுகை நடத்தலாமா தொளுகலாமா. இந்த விஷயத்துக்கு பத்வா கேட்டு எல்லா மதரசாக்களுக்கும் அனுப்பினார்களாம்.

எல்லா மத்ரஸாக்களில் இருந்தும் அது கூடும் என்று வந்து விட்டதாம். நமது ஊரில் ஒரே ஒரு முதிர்ந்த ஆலிம் அவர்களின் பத்வா மட்டும் வரவில்லை. அவர்கள் சொன்னார்களாம் . எல்லா கிதாப்களையும் பார்த்து விட்டேன் LIL MASJIDH என்றுதான் வருகிறதே தவிர AL MASJIDH என்று வரவில்லை. பள்ளிவாசலுக்கு செய்தால் ஏற்றுக் கொள்ளலாம். பள்ளிவாசலையே கட்டிக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.

எவ்வளவு நுணுக்கமான விளக்கம். இப்போது அதெல்லாம் எப்படி ஆராயப் படுகிறது, யார் சட்டை செய்கிறார்கள். அதுவும் இந்த ஊருக்கு பிரச்சினை நோய் புற்று நோய் இவை வருவதற்கு காரணமாக இருப்பது DCW தான் என்று காயல்பட்டினம் சுற்றுப புற சூழல் இயக்கம் பல லட்சம் பேர்களிடம் சொல்லிக் கொண்டு போராட்டங்களையும் முன்னெடுத்து சென்று கொண்டு அதற்கான வழக்குகளும் நடந்து கொண்டிருக்கின்றது இந்த சூழ் நிலையில் இப்படி ஒரு உதவியை அவர்களிடமிருந்து பெறுவது முறைதானா..

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by kamalmusthafa (abha.ksa) [28 September 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41890

அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்)அன்பார்ந்த நெய்னார் தெரு காயல்மா நகர மக்களே தாங்கள் டி சி டபிள்யூ நிர்வாகத்திடம் உதவி கேட்டது தப்பில்லை ஆனால் அல்லாஹ்வை வழி படும் ஸ்தலங்கள் ஒரு முமீனுடைய பொருளாகவோ பணமாகவோ இருக்கவேண்டும் தாங்கள் அனைவரும் நினைத்து இருந்தால் எல்லா வீடு களிலும் வசூல் செய் தேஇந்த வேலையை செய்து இருக்கலாம் அல்லது எத்தனையோ செல்வத்தர்கள் உங்கள் தெரிவிலேயே இருக்கிறார்கள் அவர்கள் நினைத்து இருந்தாலும் இதை செய்து இருக்கலாம்.

அந்த டி சி டபிள்யூ அலையினால் நம் ஊர் களில்எத்தனையோ தாய் மார்கள் பல நோய்களுக்கு ஆளாகி உள்ளார்கள் எத்தனையோ அமைப்புகள் அந்த ஆலைக்கு எதிராக போராடி வருகிறார்கள் இதெல்லாம் தெரிந்து தங்களின் எண்ணங்கள் இப்படி அமைந்து விட்டது இது சிலரின் ஆதாயத்துக்கு கூட இருக்கலாம் ஏமார்ந்து விட்டிர்கள் அல்லாஹ் எல்லாம் நன்கு அறிந்த்தவனாக இருக்கிறான் இந்தஉதவியை கேட்டு அந்த நிருவாகத்திற்க பக்க பலமாக மாறி விட்டிர்கள் அல்லாஹ் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாக அருள் செய்யட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Lukman (Tiruvallur) [28 September 2015]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 41891

அஸ்ஸலாமு அலைக்கும்.

DCW உதவியுடன் நடைபெற்ற - பெண்கள் தைக்கா நிகழ்ச்சியில் கோமான் ஜமாஅத்தின் ரஃபீக் என்பவர் கலந்துகொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள். அப்படி யாரும் கோமான் ஜமாஅத்திலிருந்து கலந்துகொள்ளவில்லை.இது போன்ற ஊருக்கு துரோகம் செய்பவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கோமான் ஜமாஅத்தார்கள் ஒருபோதும் கலந்துகொள்ள மாட்டார்கள்.

இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் ,சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகிகளிடம் செய்தியின் உண்மை நிலை அறிந்துகொண்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். (இந்த செய்தியை வேறு தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தாலும் கூட.)

மேலும், ஊரைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கும், ஊருக்குத் துரோகம் இழைக்கத் துணிபவர்களுக்கும் கோமான் ஜமாஅத்தார்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

Lukman
Koman theru.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. where is our knowledge is going?
posted by syed umar (bangalore) [28 September 2015]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 41893

If that amount is comming from intrest means. All our amal is waste. Please think and do it before. That thaika members before doing this activity will u concern all jamaath?. Our enemy is not in outside


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by M.I. முசா நெய்னா (காயல்பட்டணம்) [28 September 2015]
IP: 98.*.*.* United States | Comment Reference Number: 41894

இச்செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாக உள்ளது.

DCW நச்சு ஆலையால் நமதூர் மற்றுமின்றி சுற்று வட்டார பகுதி மக்களும் படும் அல்லல்கள் அனைத்தும் தெரிந்த பின்னும், அந்த நச்சு ஆலையால் நமது சகோதர சகோதரிகள் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளார்கள் என்பதை நன்கு அறிந்ததும், அந்த நச்சு ஆலையை அகற்ற ஊர் மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள், அதற்காக ஒரு அமைப்பே உறுவாகி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றெல்லாம் தெரிந்த பின்னரும் இப்படிப்பட்ட செயலில் ஒரு சாரார் இறங்கி செயல்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அச்செயல் நமதூர் மக்களை காட்டி கொடுக்கும் செயல் அல்லவா?.

DCW நிர்வாகத்தினர் நமதூரின் கருப்பு ஆடுகளை கண்டறிந்தது அவர்கள் மூலம் நமது ஒற்றுமையை பிரித்தாளும் செயலில் இறங்கி விட்டார்கள். இனி தான் நாம் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.

இவ்விசயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் ஊரின் முக்கியஸ்தர்கள் குறிப்பாக 3-ம் வார்டை சார்ந்த முஹல்லா பெரியவர்கள் சம்பந்த்தபட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அதனை ஊர் மக்களுக்கு பகிரங்கமாக தெரியபடுத்த வேண்டும். ஏனெனில் இது போன்ற நபர்கள் நமதூரில் மேலும் இருப்பார்களேயானால், நமது ஒட்டுமொத்த கடும் எதிர்பையும் அப்படிப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதின் மூலம் பிற்காலத்தில் அவர்கள் திருந்த வாய்ப்பாக அமையும்.

பிலால் பள்ளி நிர்வாகி மதிப்பற்குரிய குளம் முஸ்தபா கமால் அவர்களும், 2-ம் வார்டு உறுப்பினர் சகோதரி முஹம்மது செய்து பாத்திமா அவர்களும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்கள். எனவே அவர்கள் இருவரும் இந்த விஷயத்தை முன்னெடுத்து இக்கொடிய செயலுக்கு யார் யார் உடந்தை என்பதை கண்டறிந்தது ஊர் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம...
posted by M.N.L. முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [29 September 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 41895

அவர்களின் உள் நோக்கத்தையும் சூழ்ச்சிகளையும் மக்கள் நன்கு அறிவர். சுவரில் அடித்த பந்து போல் அது அவர்களுக்கே திரும்பி வரும் இன்ஷா அல்லாஹ்...!

ஊரை காட்டிக் கொடுத்து எய்த்து பிழைக்கும் இவர்களுக்கு எலும்புத் துண்டை வீசி எறியும் டிசிடபிள்யூவின் நீண்ட கால கனவும், நோக்கமும் இதன் மூலம் நிறைவேறியுள்ளது. மானங்கெட்ட ஜென்மங்கள். எப்போது திருந்த போகிறார்களோ...?

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தனவந்தர்கள் வாழும் ஊரில் ஒரு கருப்பு புள்ளி.
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [29 September 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 41900

மக்களுக்கு, ஒரு அரசு செய்ய வேண்டிய குடிநீர் திட்டத்தை, நமதூர் தனவந்தர்கள் முதல் அன்றாடம் காய்ச்சிகள் தங்களது பணத்தில் செய்தது அந்த காலம்.

ஆனால் இன்று, அல்லாஹ்வை துதி செய்யும் பள்ளிவாசல் / தைக்காவுக்கு , அல்லாஹ்வுக்கு மாற்றமாக இருக்கும் மாற்று மத நபர்களிடம் கையேந்தும் அவல நிலை. இந்த தைக்கா விஷயமானாலும் அல்லது நமதூரில் சில பள்ளிகளுக்கு, நமது மாற்று மத பிரதிநிதியிடம் நன்கொடை பெற்ற நடப்பாக இருந்தாலும் சரி, நமதூர் மக்களிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் செயலை, இந்த நச்சு ஆலையும் செவ்வனே செய்கிறது. நலத்திட்டங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்று செயல்படுத்தி, தனது கோர செயலை மறைக்க முயற்சிக்கிறது. அதற்கு சில கைக்கூலிகள் உடந்தை.

இந்த செயலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும், இந்த கா(கூ)ட்டிக் கொடுக்கும் செயலுக்கு யார் காரணம் என்றும், அந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும், 2-வது வார்டு உறுப்பினர் சார்பாகவும் மறுப்பு வெளியிட்டுள்ளனர். துரோகிகளை இனம் கண்டு தனிமைபடுத்த வேண்டும்.

இந்த செயலுக்கு பின்னராவது, நமதூர் மக்கள் அந்த ஆலை விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்னர், இந்த நச்சு ஆலை சார்பாக, நமதூர் பெண்களுக்கு 'இலவச தையல் பயிற்சி' கொடுத்து சான்றிதழ் கொடுத்த நிகழ்ச்சி நடந்தது.

நமதூர் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, இந்த நச்சு ஆலையின் பிரித்தாளும் செயலும் அதிகரிக்கிறது. நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [29 September 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41904

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நிழற்படத்தை '' பார்த்ததுமே ...நம் அனைவர்களின் மனமும் கொதிக்கிறது .......ஒருபக்கம் நம் ஊர் அனைத்து பொதுநல அமைப்புக்களும் + ஊர் அனைத்து பொது மக்களும் ,, நம் ஊர் இணைய தளங்களும் ,, ஊர் ஜமாத்துக்களும் & வெளியலக பொது நல அமைப்புக்களும் ,, அனைத்து உலக காயல் அமைப்புக்களும் ..ஒரு சில உள்ளூர் அரசியல் கட்சிகளும் ....இப்படி யாவர்களும் ஓன்று சேர்ந்து மிகவும் கடுமையாக போராடி கொண்டு இருக்கும் இந்த வேலையில் ...இந்த நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு இவர்களிடம் >>DCW <<< கை நீட்டி பணம் வாங்கி தான் இவர்கள் தங்கள் தைக்காவிர்க்கு கட்டுமான வேலைகள் பார்க்க வேணுமா ??

ஊர் பொது மக்களின் கோபத்துக்கு ஆளாகி தான் இவர்கள் இதை சாதிக்க வேணுமா ?? என்ன ??

இந்த >> DCW << தொழிற்சாலையால் நமது ஊர் மக்கள் எவ்வளவு நோய்களால் ''பாதிக்க படுகிறார்கள் ...என்று கூடவா இவர்களுக்கு தெரியாமல் போனது ..... ??

நம் ஊர் மக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டு ஒரு சில பத்திரிக்கைகளும் / டிவி சேனலும் ...நமக்கு ஆதரவாக செயல் படும் போது ...இவர்களுக்கு மட்டும் என்னவாம் ??

இந்த பணத்தை இவர்கள் DCW மூலம் வாங்க உதவியவர்களையும் சரி ,, பணத்தை வாங்கி கட்டுமான வேலைகளை பார்த்தவர்களை சரி நம் ஊர் அனைத்து மக்களும் கொஞ்சமும் மன்னிக்கவே மாட்டார்கள் ..பணம் வாங்க'' யார் '' காரணம் என்பதையும் நம் ஊர் மக்கள் நன்கு அறிவார்கள் .....

இந்த DCW தொழிற்சாலை விரிவாக்க பிரச்சனையில் நம் நகர் மன்ற தலைவி அவர்கள் முழுமையாக எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த போது .......இவர்களை போன்ற ..புள் உருவிகள் தான் ...ஆதரிக்காமல் ,,எதிர்த்தார்கள் ....இப்போதான் நமக்கு தெரிகிறது இவர்களின் சுய ரூபம் ''....எதற்காக இவர்கள் எதிர்த்தார்கள் என்றும் புரிய வந்து உள்ளது ......

நமது பொது நல அமைபினர்களின் >>>> DCW <<<< தொழிற்சாலை பற்றிய விழிப்புணர்வு '' நம் பெண்கள் மத்தியில் போதாது .....என்று தான் தெரிய வருகிறது ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohideen (Jeddah) [29 September 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41905

டியர் அட்மின்

இந்த மாதிரி சென்சிடிவான செய்தி வெளியிடும் பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் தீர விசாரித்துவிட்டு வெளியிட்டு இருந்தால் சிறந்ததாக இருக்கும். இது ஏற்கனவே தி இந்து நாளிதழில் வந்தது தானே என்று கூறாதீர்கள், நாளிதழுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கருப்பு ஆடுகளின் முகத்திரை கிழியப்பட வேண்டும்
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [29 September 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41909

நமதூருக்கு எதிர்ப்பாகவோ,அல்லது நமதூரை மதிக்காமல், கிடக்கிறார்கள் இவர்கள்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்புடனோ எலும்புத்துண்டுக்காக அலையும் சில எச்சிலை நாய்கள் நமதூரில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இவர்கள் நமதூருக்கும் நம் மக்களுக்கும் எதிராக என்ன வேண்டுமானாலும் செய்ய சிறிதும் தயங்காத துரோகிகள்!

பணத்திற்காக DCW யிடம் மட்டுமென்ன, மாது,மது விற்பனை வியாபர உரிமையாளர்களிடம் கூட பச்சோந்தித்தனமாக பல்ளிளித்து, பணத்திற்காக அவர்கள் பாதம் கழிவியேனும் ஈனத்தனமாக தங்கள் வாழ்க்கையை நடத்துவதோடு பல நல்லவர்களையும் அவர்களின் சூழ்ச்சி வலையில் விழச்செய்யும் சில பேடிகளின் சித்து விளையாட்டுகளில் ஒன்றுதான் இந்த தைக்கா உதவி நிகழ்ச்சியாகும்!

தைக்கா நிர்வாகமும் அந்த ஜமாத்தும் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்கவில்லை என்றும் அந்த நிகழ்விற்க்காக மனம் வருந்துவதாகவும் அறிக்கை வெளியிட்டிருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து ஊருக்கு தெரியப்படுத்துவது அவர்கள் கடமையாகும். அந்த புகைப்படத்திலுள்ள அவர்கள் ஜமாத்து ஆட்களை விசாரணை செய்வதும் அவர்கள் உரிமையாகும்!

DCW யிடம் பணமே பெறாவிட்டாலும் அந்த ஆலையின் உதவித்தலைவர் அந்த நிகழ்ச்சிக்கு வரக்காரணம் என்ன?சாதாரணமாகக்கூட அவரை கூப்பிடலாமா?அவர்களின் ஆலையின் நிகழ்ச்சிகளுக்கு நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டதற்கு, நம் கண்டனத்தால் கடித்து குதறும் நாம், அந்த ஆலையின் தலைவரையே நம் புனித குரான் ஓதும் ஒரு புண்ணிய இடமாகிய தைக்காவிற்கு அழைத்திருக்கிறோம் என்றால் நமதூரை சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களும் நம்மை பார்த்து ஏளனம் செய்ய மாட்டார்களா? இவர்களை எவுவ்ளவு அடித்தாலும் தாங்கும் ஜென்மங்களடா என்று இழிசொல் மழையை பொழிய மாட்டார்களா?

ஆகவே,அன்பு காயல் நெஞ்சங்களே, ஊருக்கு துரோகம் விளையும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருக்கும் கயமை குணமுள்ள கருப்பு ஆடுகளின் முகத்திரையை கிழித்தெறிந்து ஊருக்கு அவர்களை அடையாளம் காட்டுவது ஒவ்வொரு உண்மையான காயலர்களின் கடமையாகும்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [02 October 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41939

நகர நலன் பேணும் நல மன்றதின் ஊழியர் கையில் குல்லாவை வைத்து போடோவுக்கு போஸ் கொடுப்பது பெரிய வியப்பு .

DCW வை ஏதிர்த்து போராடும், அனைத்து காயல் நல மன்றம் இந்த ஊழியரின் போடோ போஸ்க்கு விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved