Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:22:03 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17030
#KOTW17030
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 19, 2015
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான மாற்றமாவோம் கட்டுரையில், காயல்பட்டணம்.காம் செய்தியாளர் எஸ்.கே.ஸாலிஹ்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3112 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தி இந்து தமிழ் நாளிதழில், மாற்றமாவோம்! எனும் தலைப்பில் நேற்று (18.12.2015. வெள்ளிக்கிழமை) கட்டுரை நேற்று வெளியானது.

அக்கட்டுரையில் - அந்நாளிதழின் ஆசிரியர்களுள் ஒருவரான சமஸ், சுயமாற்றத்திற்கு உதாரணமாக ஏழு சமூக ஆர்வலர்கள் குறித்து குறிப்புகளை வழங்கியுள்ளார். அந்த எழுவருள் ஒருவர் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் செய்தியாளர்களுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் ஆவார். அந்த கட்டுரை - முழுமையாக கீழே வழங்கப்பட்டுள்ளது.



மாற்றமாவோம்!

அரசியலுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இப்படியும் புரிந்துகொள்ளலாம்: சகஜீவிகள் மீதான அன்பு. அரசியல் செயல்பாடுகளுக்கு நிறைய தொடக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இங்கிருந்தும் தொடங்கலாம்: சுயமாற்றம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா ஸ்ரீராம். நுண்கலை படித்தவர். கணவர் ராஜீவ் பெங்களூருவில் பொறியாளர். இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் நவீன வாழ்க்கை, நவீன விவசாயம் நஞ்சாகத் தரும் உணவு, நவீன கல்வி உருவாக்கும் அடிமையாக்கப் பயிற்சி எல்லாவற்றினாலும் விரக்தி அடைந்தார் சங்கீதா.

எல்லாவற்றுக்கும் மாற்றுத் தேட ஆரம்பித்தார். மாற்று வாழ்க்கைச்சூழல், மாற்றுக் கல்வி, மாற்று விவசாயம்… திருவண்ணாமலையில் இருக்கிறார் இப்போது. நவீன விவசாயத்துக்குப் பின்னுள்ள சர்வதேச சந்தை அரசியலை அம்பலப்படுத்தும் ‘பசுமைப் புரட்சியின் கதை’ அவர் எழுதிய முக்கியமான புத்தகம்.

இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகப் பணியாற்றும் சந்தை அமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றார். இப்போது நாடு முழுவதும் மாற்றத்துக்காக உழைக்கும் வெவ்வேறு தனிநபர்கள், சிறுகுழுக்கள் இடையேயான உறவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அழகேசபாண்டியன் மதுரையைச் சேர்ந்தவர். இஸ்ரோவின் கிளை அமைப்பான தேசிய தொலை உணர் மையத்தில் தன் வனவியல் மற்றும் சூழலியலில் முனைவர் ஆய்வை முடித்தவர். மின் ஆளுகைத் துறைசார் வேலைகளிலும் நகர்ப்புற ஆளுகைசார் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர். இன்றைக்கு அவருடைய கவனத்தின் முதன்மைப்புள்ளி விவசாயம். சூழலியல் அக்கறையை உலகைப் பின்னுக்குத் தள்ளும் முனைப்போடு அணுகாமல் கள யதார்த்தப் பின்னணியில் அணுகுகிறார். தொடர்ந்து களத்திலும் மாணவர்களிடையிலும் பேசுகிறார்.

மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு சென்னை வந்தவர் தமிழ்தாசன். சினிமா முயற்சிகளுக்கு இடையில் தமிழ்தாசனுக்கு இருந்த பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது. அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருந்த சேரி தண்ணீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டபோது, அந்தப் பகுதிக்குத் தண்ணீர் வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு வீதியில் உட்கார்ந்திருக்கிறது தமிழ்தாசன் கிரிக்கெட் குழு. தண்ணீர் லாரிகளோடு, கொஞ்ச நாட்களில் தண்ணீர் குழாய்களும் சேரி நோக்கி வந்திருக்கின்றன. கிரிக்கெட் குழுவுக்கு இது ஒரு கண் திறப்பு. மக்கள் பிரச்சினைகளில் கால் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரொம்ப சீக்கிரம் சொந்த ஊர் போன தமிழ்தாசன் அங்குள்ள நண்பர்களோடு கை கோத்தார். நாணல் நண்பர்கள் இயக்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் கண்மாய்கள், குளங்கள் வெட்டும் பணியில் மக்களோடு களம் இறங்கியிருக்கிறார்கள். கூடவே ஆளுக்கொரு இலக்கோடு தனித்தனி முயற்சிகளையும் கூட்டு தேவைப்படும் நேரத்தில் ஒன்றுசேர்ந்தும் கலக்குகிறார்கள்.அரிட்டபட்டி ரவிச்சந்திரன் நாட்டு மீன்கள் இனம் தொடர்பான ஆய்விலும் ஆவணப்படுத்துதலிலும் இறங்கியிருக்கிறார்.

பூபாளன் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் இயற்கை வேளாண்மைக்குப் பின்னுள்ள அரசியலையும் ஒருங்கிணைக்கிறார். கார்த்திக் மண்ணின் மரங்களை ஆவணப்படுத்துகிறார். விரகனூர் விக்னேஷ் பாரம்பரிய விதைகளைச் சேகரித்து ஆவணப்படுத்துகிறார். கம்பம் நேசன் மக்களுக்கான அறிவியலைக் கிராமங்களை நோக்கிக் கொண்டு செல்கிறார். சாதிக் உள்ளூர் கோயில்களின், கல்வெட்டுகளின், ஆளுமைகளின் வரலாற்றை ‘நம்ம வரலாறு’ என்ற பெயரில் தொகுக்கிறார். தத்தனேரி ஸ்ரீதர் நெடுஞ்செழியன் மக்கள் நலப் போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். கிராஃபிக் வடிவமைப்பாளர். ஒருநாள் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தவர் விளையாட்டாக காந்தியைப் பற்றி விசாரிக்கிறார். எந்தக் குழந்தைக்கும் எதுவும் தெரியவில்லை. ஏதோ மனதைத் துளைக்க ஆரம்பிக்கிறது. மறுநாள் அவர்களுடைய பள்ளிக்குச் சென்றவர், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று ஒவ்வொரு வகுப்பறையாக காந்தியை அறிமுகப்படுத்திப் பேச ஆரம்பிக்கிறார். ஆர்வத்துடன் கை நீட்டும் பிள்ளைகளுக்கு, ‘சத்திய சோதனை’ புத்தகங்களைக் கொடுக்கிறார். இப்போது ஒவ்வொரு பள்ளிக்கூடமாக காந்தியோடு சென்றுகொண்டிருக்கிறார்.

கால் நூற்றாண்டுக்கு முன் சென்னையில் எஸ்.வி. ராஜதுரை, எஸ்.எஸ். கண்ணன் இருவராலும் நிறுவப்பட்ட நூலகம் ‘மார்க்ஸ் நூலகம். சென்னையில் ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் பயன்பட்டுவந்த நூலகம். தொடங்கியவர்கள் இருவரும் முதுமையோடு மோதிவந்த நிலையில், புதிதாகக் களம் இறங்கியிருக்கிறார்கள் இளைஞர்கள். சேலத்தில் பிறந்தவர் சதீஷ்குமார். நண்பர்கள் குழுவோடு நூலகப் பொறுப்பை ஏற்றவர், மார்க்ஸிய சிந்தனைப் பள்ளியாக அதை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் சுற்றுச்சூழல், இலக்கியம், திரைப்படங்கள், அரசியல் என்று பலதரப்பட்ட கூட்டங்கள், விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இப்போது வால்பாறையில் இருக்கிறார். துண்டுக் காடுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறது இவருடைய குழு. பறவையிலாளருமான இவர் காட்டுயிர் விழிப்புணர்வுக்காகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.

காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.சாலிஹ். ஊர் காரியம் எது என்றாலும் முதல் ஆளாக அங்கே சாலிஹைப் பார்க்கலாம். ஊர் தேவைகளுக்கான போராட்டங்களா, ஊரில் உள்ள மாணவர்கள் படிப்புக்கோ, எளியோரின் மருத்துவ உதவிக்கோ உண்டியல் குலுக்க வேண்டுமா, யோகா வகுப்பு புதிதாகத் தொடங்க வேண்டுமா பொது வேலை எதுவென்றாலும் சாலிஹை நோக்கி விரல் காட்டுகிறார்கள். “நான் படிச்சது என்னவோ பன்னிரெண்டாவதுதான். வசதியும் கிடையாது. ஆனா, ஊரு சொந்த புள்ள மாதிரி பாக்குதுன்னா சமூகத்துக்காக ஓடுறதுதாம் காரணம். நம்மாழ்வார் ஐயா பெரிய வழிகாட்டி நமக்கு. அரசியல் மாற்றம் வயல்ல ஆரம்பிக்கணும்ங்க” என்கிறார்.

கடலூர், ராமநத்தத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் கருப்பையா. படித்தது பிஸியோதெரபி. இப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம மக்களோடு சேர்ந்து பொதுக்கிணறுகள், குளங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார். “இயற்கை ஆதாரமான தண்ணீரைக்கூட நம்மால சமமா பகிர்ந்துக்க முடியலையே, சமூக அமைப்பு தர்ற ஆதாரங்களான கல்வி, சுகாதாரம், இன்ன பிறதை எப்படி சமமா பகிர்ந்துக்க முடியும்? அதிகாரத்தை எப்படிச் சமமா பகிர்ந்துக்க முடியும்? சமமான பகிர்தல்தான் நல்ல அரசியலுக்கான அடையாளம். கூட்டுறவாலதான் அது முடியும். ஆனா், வெறுமனே இதைப் பேசுறதில்லை. மக்களோடு கை கோத்து, அவங்களோட வேலை செஞ்சுக்கிட்டே பேசுறோம்” என்கிறார்.

இப்படி நூற்றுக்கணக்கானோர் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஒரே அமைப்பின் கீழ் செயல்படுபவர்களோ ஒரே சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டவர்களோ அல்ல; பெரிய இயக்கங்களையோ, அமைப்புகளையோ கட்டி ஆளும் கனவில் மிதப்பவர்களும் அல்ல. ஆனால், இந்நாட்டின் இயற்கையைப் பாதுகாப்பதில், பண்பாட்டைக் காப்பதில், ஜனநாயகத்தைக் காப்பதில், மனித விழுமியங்களைக் காப்பதில் அற்புதமான காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். எது இவர்கள் அனைவரையும் இணைக்கிறது? மாற்றத்துக்கான அரசியல். சக மனிதர் மீதான கரிசனம். சிறிய புள்ளியிலிருந்தும் இந்த உலகைக் காத்துவிட முடியும் என்ற நம்பிக்கை.

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு தன்னுடைய ‘தாவோ தே ஜிங்’ நூலில் எழுதியது இது:

“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன
இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது

ஒன்பது மாடிக் கோபுரம்
சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது

எனவே, பெரிய விஷயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை

அதனாலேயே, பெரிய விஷயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது!”


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ziaudeen Mahmood (HK) [20 December 2015]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 42493

சகோ ஸாலிஹ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...SK ......
posted by mackie noohuthambi (kayalpatnam ) [20 December 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42494

SK சாலிஹ் அவர்கள் காயல்பட்டினத்தை சார்ந்தவர், நானும் காயல்பட்டினவாசிதான். சாலிஹ் அவர்கள் தந்தை மறைந்த SK அவர்களும் ஒரு பொதுநல சேவகர்தான். சாலிஹ் அவர்களின் சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்களும் பொது சேவையில் ஆர்வம் கொண்டவர்.

மறைந்த SK அவர்களுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் ஒரு நண்பர் பேசினார். ''அட SK . நீ எல்லா கட்சியிலும் சேருகிறாயே , பிஜேபி காறன் கூப்பிட்டாலும் அங்கேயும் போவியோ?''

அதற்கு மறைந்த SK அவர்கள் சொன்னபதில் என்ன தெரியுமா...''நிச்சயமா போவேன் இந்த ஊருக்கு இந்த சமுதாயத்துக்கு நன்மை செய்கிறேன் வா என்று கூப்பிட்டால் அங்கேயும் போவேன் எனக்கு நமது ஊர் நலம் சமுதாய நலம் தான் முக்கியம்'' என்று பதில் சொன்னாராம்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா... புலியை பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் பூனைகள் - வரிக் குதிரையை பார்த்து பொறாமைப் படும் கோவேறு கழுதைகள் உள்ள நாட்டில் இப்படி உயர்ந்த உள்ளங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. சமஸ் சார் அவர்களுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Kulam mohamed salih k.k.s (chennai ) [20 December 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42495

மிக அருமயான கட்டுரை . பாராட்டுகள் ..

என்னது சிறிய வேண்டுகோள் .. நீங்கள் நமது ஊரில் உள்ள சமுக சேவை செய்யும் மக்களை கண்டறிந்து அவர்களின் இது போல் வெளி படுத்த வேண்டும் அப்போதுதான் நமது மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகும் இன்ஷா அல்லாஹ்..

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல வாழ்த்துக்கள் ..
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [20 December 2015]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 42498

நல வாழ்த்துக்கள். மென் மேலும் உங்கள பணி தொடர வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அன்பு நிறை மச்சான்....
posted by kavimagan kader (BAHRAIN) [20 December 2015]
IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 42499

நல்லவன் என்றோ
கெட்டவன் என்றோ
இவனை முன்மொழியாத
வழிமொழியாத
உரையாடல்களே இல்லை...

பஞ்சப் பராரிகளையும்
பணம் படைத்தவர்களையும்
ஒருபோலக் காட்டத் தெரிந்த
சமூக ரசம் பூசப்பட்ட
சமத்துவக் கண்ணாடி...

மத வாதம் இல்லாத
மதப் பற்றாளன்...
மனங்களை உற்று நோக்கும்
மனித நேயன்...
இமைப் பொழுதும் நான் மறவா
இனிய நண்பன்...
வாழ்க நீ நலமுடன்...நிறைவுடன்...
வல்லவன் இறைவனின் அருளுடன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42500

மிகவும் சந்தோசம்.

ஆனால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காரணம் தம்பி SKS இடம் நாம் அறிந்து இருக்கும் இயல்புகளை தான் குறிப்பிட்டு காட்டியுள்ளார்கள். இவரை அறியாதவர்களுக்கு ஆச்சரியமே...!!

போதும் என்ற மனப்பான்மை, எளிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு தோன்றிய கருத்தை நேர்மையாக சொல்லும் பாங்கு, வெத்து அலைப்பறை இல்லாமை போன்ற குணங்களை அவனிடம் கண்டு பொறாமைப்படுவேன்.

வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று ( கூடவே ஒரு ஆண் குழந்தையும் ) , சமூகத்திற்கு மேலும் உதவியாக இருந்து, இரு உலகிலும் வெற்றி பெற பிராத்திக்கின்றேன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...வாழ்த்துக்கள்
posted by NIZAR (kayalpatnam) [20 December 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 42504

சென்னை இந்து நாளிதழில் வெளிவந்த மாற்றமாவோம் என்ற கட்டுரையில் தங்களை பற்றிய வந்த செய்திகளுக்காக என் இதயமார்ந்த வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.இதை போன்ற செய்திகள் மூலம் தங்கள் குடும்பம் உறவுகள் மற்றும் ஊருக்கே பெருமை சேர்த்து உள்ளீர்கள்.

இன்றைய காலத்தில் தன் சுய வேலை நேரத்தை ஒதுக்கி பொது சேவை செய்வது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை நான் அறிந்து உள்ளேன். ஆனால் எந்த பிரதிபலனையும் எதிபாராமல், யாருக்காக? என்று ஆய்வு செய்யாமல் தாங்கள் பொதுசேவையில் முனைப்போடு ஈடுபடுவது வியப்புக்குரியது.

இதை போன்ற சேவைகள் எத்தனை வலிமையானது என்பதை உங்கள் மூலம் இன்றைய இளைஞ்சர்கள் அறிந்து கொள்ளவேண்டும் .தாங்கள் இன்னும் நிறைய பொது சேவைகள் செய்து வளர்ந்து வளரும் இளைஞ்சர்களுக்கு முன்னோடியா திகழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 December 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42505

அஸ்ஸலாமு அலைக்கும்

முதலில் என் அன்பு தம்பி .S.K.ஸாலிஹ் அவர்களை வாழ்த்தி ,, துவா '' செய்கிறேன் ......

அருமை தம்பி S.K.ஸாலிஹ் அவர்களின் திறமையை பற்றி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை .....மாஷா அல்லாஹ் அருமை தம்பியின் இந்த நல்ல வளர்ச்சி போற்ற கூடியதே ....அவருக்கு சரியான ஒரு படிக்கட்டு தான் அமைய வில்லை ....

அருமை தம்பி அவர்களின் வளர்ச்சியை இன்னும் வெளி உலகத்துக்கு கொண்டுவர ஒரு நல்லதோர் படிக்கட்டு விரைவில் அமையும் என்கிற நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் உண்டு .....

நான் இந்த சபர் ஊர் சென்ற சமயம் ...எனக்கு ஒரு பழக்கமான நபர் தன் சொந்த விசையமாக நண்பர் .S.K.ஸாலிஹ் அவர்களை பார்க்க போகிறேன் என்றார்கள் .நான் கேட்டேன் அவர் என்ன செய்வார் என்று ...அப்போது அந்த நபர் இன்ஷா அல்லாஹ் ..நண்பர் S.K.ஸாலிஹ் அவர்களிடம் நல்ல பண்புடன் கலந்த ,,ஒரு பொது நல சேவைகள் செய்யகூடிய தன்மை உள்ளது ...என்று ஒரே போடாக போட்டார்கள் ...நான் அப்படியே திகைத்து விட்டேன் ....இவ்வளவு நல்ல மனதா ... நமக்கு தான் இப்படி பட்ட நல்ல பண்புள்ளவரிடம் பழக்கமே இல்லாமல் போய் விட்டதோ என்று எண்ணி வருத்த பட்டது உண்டு .....

அருமை தம்பி S.K.ஸாலிஹ் அவர்களிடம் நம் ஊர் மக்கள் இவ்வளவு முழுமையான ஒரு நம்பிக்கை வைத்து இருப்பதை நினைத்து பெருமை பட்டேன் .....

தம்பி SKS அவர்களின் மர்ஹும் வாப்பா அவர்களை பற்றியும் நாம் கேள்வி பட்டதுண்டு ....வாப்பா அவர்களை போன்று தம்பி SKS அவர்களின் பொது சேவைகள் ஊர் மக்களுக்கு இருப்பதை நினைத்து பெருமையே ......அல்லாஹ் தம்பி அவர்களை எப்போதும் சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன்.......

இப்போது இன்னும் நமக்கு தெளிவாகி விட்டது ....நம் ஊர் & மக்கள் நலன் மீது அருமை தம்பி S.K.ஸாலிஹ் அவர்கள் வைத்து உள்ள எண்ணத்தையும் ,, செயல்பாட்டையும் ,, நினைத்து அருமை தம்பி மீது நம் யாவர்களுக்கும் பெருமையே .....

அருமை தம்பி S.K.ஸாலிஹ் அவர்களின் ஊருக்கான ( உழைப்பு ( பொதுநல தொண்டுகள் .... தொடரட்டும்.....

>>>> மீண்டும் அருமை தம்பியை '' வாழ்த்துகிறேன் <<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [20 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42512

"அஸ்ஸலாமு அலைக்கும்."

எஸ். கே. எஸ். சாலிஹு மச்சான் வாழ்த்துக்கள்!!!

உங்கள் பணி மென் மேலும், சிறக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவனஹா ஆமீன்!!!

வாழ்த்தும் உள்ளங்கள்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by கா. அப்துல் லத்தீப், கே.எம்.டி. மருத்துவமனை (Kayalpatnam) [20 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42513

பொது மக்களின் நலனுக்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற அங்கீகாரம் தான் உந்துசக்தி. சகோதரருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved