Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:25:43 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17035
#KOTW17035
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 20, 2015
தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தன்னை சந்தித்தது குறித்து நகர்மன்றத் தலைவர் அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3745 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் மாநில நிர்வாகிகளும் நகர்மன்றத் தலைவரை வெள்ளியன்று சந்தித்து மனு கொடுத்தனர். இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்:

தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக குழுவினர் என்னை - வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து, மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனு - சாலைகள் உட்பட சில நகராட்சி சேவைகளில் உள்ள குறைப்பாடுகளை களைவது குறித்ததாகும். இந்த சந்திப்பின் போது, நகராட்சி நடப்புகளை - அந்த குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்.

= மழைக்காலம் துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, சாலைகளுக்கு பேட்ச் வொர்க் செய்ய ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை செய்ய அவர் எந்த முயற்சி எடுக்கவில்லை.

= நகரில் போட திட்டமிடப்பட்ட சாலைகள் குறித்த மதிப்பீடு விபரங்களை - கேட்டு, பல மாதங்கள் ஆகியும், இன்று வரை ஆணையர் வழங்கவில்லை.

= நகராட்சியின் செலவுகள் முறைப்படி செய்யப்படுகிறதா என பார்க்கும் கடமையும், சட்டப்பூர்வமான உரிமையும் நகர்மன்றத் தலைவருக்கு உண்டு. அந்த கணக்கு விபரங்களை - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - கேட்டும், ஆணையர் இன்று வரை தரவில்லை.

இவைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

இது தவிர - மக்களுக்கு தேவையான் நகராட்சி பணிகள் - தரமாகவும், நியாயமாகவும், முறைக்கேடுகள் இல்லாமலும் நடைபெற - நான் பல மாதங்களாக எடுத்து வரும் பிற முயற்சிகளையும் - விளக்கினேன். இவைகள் சம்பந்தமான ஆவணங்களின் நகல்களையும், இந்த சந்திப்பிற்கு பிறகு, சனிக்கிழமையன்று - அவ்வமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான தாஹிர் அவர்களிடம் வழங்கினேன்.



வெள்ளிக்கிழமையன்று - இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியின் நிர்வாகிகளும் என்னை சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களிடமும் - நகராட்சி நடப்புகளை விரிவாக எடுத்து சொன்னேன்.

நகர்மன்றத் தலைவருக்கும், நகர்மன்றத்திற்கும் - தீர்மானங்கள் மூலமாக பணிகள் செய்ய அனுமதி வழங்கும் உரிமையே உள்ளது; பணிகளை செய்ய வேண்டியது - அதிகாரிகளே. அதற்காக தான் - மக்கள் வரிப்பணத்தில் இருந்து அவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த அதிகாரிகள், ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் நகராட்சி மூலமாக சம்பளமும் பெற்று விட்டு வேலைகளை முறையாக செய்ய வில்லை என்றால், அது குறித்து - தலைவரால், மேல் அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முடியும். முறைக்கேடுகளில் ஈடுபட்டுள்ள ஆணையர் உட்பட அதிகாரிகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளேன். அதன் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை.

சட்டங்கள் நகர்மன்றத் தலைவருக்கு என வழங்கும் குறுகிய அதிகாரங்கள் மூலம், செய்ய முடிந்த அனைத்து பணிகளையும், எனது மனசாட்சிபடி செய்துள்ளேன். எஞ்சியுள்ள மாதங்களிலும் - அவ்வழியிலேயே, என் பணிகளும் - இறைவனின் துணையுடன் - தொடரும்.

இஸ்லாமிய ஆட்சியில் நாம் இல்லை, தவறுகள் நடக்க தான் செய்யும், கண்டு கொள்ளாதீர்கள், அப்போது தான் வேலை நடக்கும் என்ற அறிவுரையை தவிர்த்து - நகராட்சி நல்ல வகையில் செயல்புரிய ஆர்வம் தெரிவிக்கும் - அனைத்து அமைப்புகளுடனும், தனி நபர்களுடனும் - நகர் நலனுக்காக பணியாற்ற நான் எப்போதும் தயாராக உள்ளேன் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.


இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சாலை உத்திரவாதம் ஒரு வருடமா..? இரண்டு வருடமா...? யார் மீது தவறு...?
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [21 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42514

சேர்மன் மேடம்..! நகரில் சாலை அமைக்க டெண்டர் எடுக்கும் ஒப்பந்த தாரர்கள் யாராக இருந்தாலும் குறைந்த பட்சம் (சாலைகள் தரமாக அமையும் வகையில்) மூன்று ஆண்டுகள் உத்திரவாதம் இருக்க வேண்டும் என நீங்கள் நகர்மன்றத்தில் சில மாதம் முன்பு கூடிய கூட்டத்தில் ஒரு பொருள் தீர்மானமாக நிறைவேற்ற (அஜண்டா) கொண்டு வந்தீர்கள் நினைவிருக்கலாம் - ஆனால் அந்த பொருள் உங்களின் எண்ணப்படி (அமைக்கும் சாலைக்கு மூன்று ஆண்டுகள் உத்திரவாதம்) நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களின் கரகோசத்தால் தீர்மானம் நிறைவேறாமல் வெறும் இரண்டு ஆண்டுகள் உத்திரவாதம் என நீங்கள் கூற பிறகு ஒருவழியாக அரைமனதுடன் தீர்மானம் நிறைவேறியது நினைவிருக்கலாம் -

தற்போது சி கஸ்டம்ஸ் ரோடு டெண்டரில் ஒரு ஆண்டுகள் உத்திரவாதம் இருந்தால் போதும் என நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராகவும் சட்ட விதிமுறைகளுக்கு மாற்றமாகவும் சி கஸ்டம்ஸ் ரோடு டெண்டர் டாக்குமென்ட் ஆணையாளரால் வெளியிட பட்டதே இதற்கு உங்களின் நடவடிக்கைகள் என்ன..? சேர்மன் மேடம்..?

நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக ஆணையரின் இதுமாதிரி முறை தவறிய டெண்டர் வெளியீடு குறித்து நகரில் எவராவது நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தால் (அமையவிருக்கும் சாலை தடை) உங்களின் நிலைபாடு என்னவாக இருக்கும்..? அது குறித்து விளக்கம் தரவும்..!

வழக்கு தொடுத்தவ்ரின் மீது குற்றமா...? தவறென்று தெரிந்தும் ஒரு ஆண்டு என டெண்டர் வெளியிட்ட நகராட்சி ஆணையாளர் மீது குற்றமா..? வாய் மூடி அமைதி காக்கும் உறுப்பினர்களின் மீது குற்றமா..? இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்கும் உங்கள் மீது குற்றமா..? அனைத்திற்கும் விடை எப்போது...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...100 சதா வீதம் நல்லவர்கள் உலகில் இரண்டு பேர்தான்,,,
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 December 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42515

100 சத வீதம் நல்லவர்கள் உலகில் இரண்டு பேர்தான் ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்ற செய்தி நேற்று முன்தினம் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.அது தவறென்று தெரிகிறது.

நமது நகரமன்ற தலைவி அவர்களின் ஆதங்கம் உணர்வுகள் புரிகிறது. அவர்கள் நல்லெண்ணத்துக்கு அல்லாஹ் நற் கூலி கொடுப்பான்.

ஆனால் நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. நம் கண் முன்னால் ஒரு கொலையை செய்தவனை நாம் உடனே கொலை செய்ய முடியாது. சட்டத்தின் முன் நிறுத்தி சாட்சிகள், நீதிமன்றங்கள் கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு உச்ச நீதிமன்றம் வரை அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 24 வருடங்களுக்கு பிறகு அந்த குற்றவாளி நிரபராதி என்றோ குற்றவாளி என்றோ விடுதலை செய்யப் படுகிறான் அல்லது தண்டனை அளிக்கப் படுகிறான். இது இந்த நாட்டு நடப்பு.

நேற்று நிற்பா என்ற பெண்ணை கற்பழித்தவன் சிறுவன் (18 வயது?)என்று விடுவிக்கப் பட்டுள்ளான். தமிழக முன்னாள் முதல்வர் இந்நாள் முதல்வர் (நீங்கள் அந்த முதல்வரின் கட்சியில் ஒரு முக்கிய பிரமுகர்) என்பது வேறு விஷயம்.முன்னாள் பிரதமர்கள் இந்நாள் பிரதமர் உட்பட ஏதாவது வகையில் ஒரு ஊழல் செய்திருப்பதாக அன்றாட உடகங்களில் நாடாளு மன்றங்களில் விவாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு குடுவையிலிருந்து ஒரு குவளைக்குள் நீரை ஊற்றினேன் அது அழுக்காக இருந்தது மீண்டும் ஊற்றினேன் மீண்டும் அழுக்கு. உற்றுப் பார்த்தேன். குடுவையில் உள்ள நீரே அழுக்கு....இதுதான் நமது நாட்டின் ஆளுமைகள்.

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுப்பது பெரிய குற்றம் மக்களும் அதை பெரும் பாவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இங்கு இலவசம், விலை இல்லாப் பொருள்கள், மானியம் என்ற பெயரால் லஞ்சங்கள் தாராளமாக உலா வருகின்றன. தேர்தல் சமயங்களில் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பணம் வழங்குவதை வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் கமிஷன் தடை செய்ய முடியவில்லை. கேட்டால் அவர்களை கையும் களவுமாக பிடித்தாலும் உடனடியாக தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள்.நீரே அழுக்கு என்பது போல் இங்கு சட்டமே அழுக்கு .

நகர்மன்ற தலைவியிடம் ஊழல்களை கண்டும் காணாமல் இருந்து கொள்ளுங்கள் விஷயம் நடந்தால் சரிதான் என்று யார் சொன்னார்கள் என்று இங்கு அவர்கள் சொல்லவில்லை. இருந்தாலும் அனுபவ பட்டவர்கள் முன்பு ஆட்சி செய்தவர்கள் அதை சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நாலரை ஆண்டு காலம் முடிந்து விட்டது. இன்னும் சில மாதங்கள் உங்கள் ஆட்சி இருக்கும். மக்கள் RESULT டை எதிர்பார்க்கிறார்கள்.

நேரு அவர்கள் சொன்னார்கள். I DON 'T WANT TO LISTEN TO YOUR EXCUSES BUT I NEED RESULTS.

நீங்கள் ஆட்சியில் இருந்து இறங்கும்போது உங்கள் RESULT ''NIL '' என்று வரும் காரணம் உங்கள் கரங்கள் ''WHITE '' என்று நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.. அப்படியானால் இப்போதுள்ள சாலைகள் இப்படியே இருக்கும் நிர்வாகம் தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருக்கும் என்பதுதான் அர்த்தம்.

உங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நீங்கள் தயாரில்லை. மக்களும் இன்னல்களை தாங்கி கொள்ள இனியும் தயாராக இல்லை.

முஸ்லிம் லீக் ஒரு நூற்றாண்டை தாண்டிய தேசிய கட்சி. தவ்ஹீத் ஜமாஅத் இளைஞர்கள் ஆர்த்து எழுந்து சேவைகள் செய்யும் சிறிய கட்சி. ஆனால் இவை இரண்டும் இந்த மழை வெள்ளம் காலங்களில் சென்னை கடலூர் மக்களுக்கு களப்பணி செய்து பம்பரமாக சுழன்று சேவை செய்து வருகிறார்கள் என்பதை நீங்கள் ஊடகங்கள் மூலமாகவும் நேரிலும் கண்கூடாக கண்டு வருகிறீர்கள்..

அவர்களுடன் உட்கார்ந்து கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். மஷூராவில் வஹி யுடைய பரகத் இருப்பதாக உலமாக்கள் சொல்கிறார்கள்.

இதை நீங்கள் செய்ய உங்கள் மனசாட்சி இடம் தராவிட்டால், , உங்கள் தலைவி - புரட்சி தலைவி அம்மா அவர்கள் செய்வதுபோல் waatsup மூலம் மக்களுடன் பேசுங்கள் பிரதமர் மோடி செய்வதுபோல் mann ki baath என்று மக்களுடன் வானொலியில் உரையாடுங்கள். ..பிரச்சினைகள் தீர்ந்து விடும்

IF YOU CANNOT SOLVE A PROBLEM ,THEN YOU ARE PART OF THAT PROBLEM .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42517

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் நகர் மன்ற தலைவி அவர்களின் இந்த பதிலில் 100 % நியாயம் உள்ளது ....தலைவி அவர்கள் ஆணையர் அவர்களிடம் விளக்கம் கேட்டால் கொடுப்பது அவரின் முதல் கடமை ,, ஆனால் ஆணையர் முறையற்ற தனமாக நடப்பதற்கான காரணம் ?? நம் உறுப்பினர்கள் ஒரு சிலரின் ஒத்துழைப்பே தான் ...இவரின் முறைகேடான செயல்பாட்டுக்கும் ,, தளகனத்துக்கும் ,, தலைவி அவர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கும் முதல் காரணமே .....

நம் தலைவி அவர்கள் முறையாக நல்ல முறையில் ஊரில் பல திட்டங்கள் நடக்கணும் என்று தானே ...சொல்கிறார்கள் ...தப்பாக ஓன்று சொல்ல வில்லையே ...தலைவி அவர்களிடம் நியாயம் இருக்கும்போது .....நம் ஊர் பொது நல அமைப்புகளும் சரி ,, ஊரின் கட்சிகளும் சரி உண்மையை உணர்ந்து நம் தலைவி அவர்களுடன் சேர்ந்து உண்மையின் பக்கத்துடன் ஒருகிணைந்து செயலாற்றலாமே .......

நகர் மன்ற தலைவி அவர்கள் ஊரில் இருக்கும் போது துணை தலைவர் அவர்கள் தலைமையில் நகர் மன்ற கூட்டம் நடத்துவதே கொஞ்சமும் சரி இல்லையே ...அப்படி என்ன தான் அவசரமோ ...இவர்களுக்கு பதவியின் ஆசையா ?? அல்லது அல்லனுமா ....இல்லை இவர்களின் பின்னால் இருந்து இயக்கும் சென்னை வாழ் நபரின் ??

நம் தலைவி அவர்கள் நியாயத்துக்காக ' ' நீதி மன்றத்தை '' நாடுவதில் ஒன்றும் தப்பே இல்லை .....

ஒடி விட்டது காலங்கள் ...வருகின்ற நம் ஊர் நகராச்சி தேர்தலில் ..தமிழகத்தை ஆளுகின்ற ஆளும் கட்சி யாராக இருப்பின் அவர்களையே நாம் தேர்வு செய்து ...ஆளும் கட்சி சப்போட்டோடு நம் ஊருக்கு நல்லது நடக்கும் வாய்ப்பை பெறுவோம் ........இது தான் மிக சரியானது ....

வருகின்ற தேர்தலில் நம் ஊரின் எந்த ஒரு ஜமாத்தும் & பொது நல அமைப்புகளும் ,, தலையிடாமல் இருப்பதே சரியானது ...அப்போதான் ஊரின் நலன் பாதுகாட்க படும் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved