Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:43:09 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17028
#KOTW17028
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 19, 2015
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, சாலைகளைப் புதுப்பித்துத் தரக் கோரி இ.யூ.முஸ்லிம் லீக் நடவடிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3064 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றவும், சாலைகளைப் புதுப்பித்துத் தரவும் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-

1. மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏம.எம்.முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்காப், மாவட்ட துணைச்செயலாளர்கள் பெத்தப்பா சுல்தான், இப்ராஹிம் அத்ஹம், தாய்லாந்து காயிதே மில்லத் பேரவை தலைவர் வாவு எம்.எம்.சம்சுத்தீன், ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் அல்ஹாபிழ் வி.எம்.டி.ஹஸன் மற்றும் காயல்பட்டணம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மது ஹசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சேக்முகம்மது ஆகியோர் 17-12-2015 வியாழன் பகல் 01:00 மணி முதல் 01:30 மணி வரை தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார் அவர்களை சந்தித்து காயல்பட்டணம் நகராட்சி நிர்வாகம் தொடர்பாகவும் தற்போதைய மழை வெள்ளத்தால் சாலைகளின் நிலவரம் குறித்திம் பேச்சு வார்த்தை நடத்தி மனுவும் அளித்தனர்.



அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அடுத்த ஒரே நகராட்சி காயல்பட்டணம் மட்டுமே. 45000 மக்களுக்குமேல் வாழும் இந்நகராட்சியில் கடந்த நான்கு வருடங்களாக நகராட்சி மன்றம் செயல்படாமல், நகராட்சி தலைவருக்கும், உறுப்பினர்களுக்கு மிடையே மோதல். நகராட்சி தலைவருக்கும் ஆணையாளருக்கும் இடையே பிரச்சனைகள் என தொடர்கதையாகிப் போன சம்பவங்களால் நகர் நலபணிகள் முற்றிலும் தேங்கிவிட்டன.

இதனிடையே சமீபத்தில் பெய்த பெருமழையால் இந்நகரின் சாலைகள் பெரும்பாளனவை போக்கு வரத்திற்கு தகுதியற்றவையாகி விபத்துகள் சர்வசாதரண மாகிவிட்டன. இந்நகரின் 43 சாலைகளை புதுப்பிக்க நகராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பின் நகராட்சி தலைவர் நீதிமன்றத்தின் மூலம் தடையானை பெற்றுள்ளார். ஸி-கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளை போடுவதற்கும் தடையாணை பெற தயாறாக இருக்கிறார். என அறியவருகிறோம். நகராட்சி நிர்வாகத்துக்கோ, மன்றத்துக்கோ சம்பந்தம் இல்லாத சில தனி நபர்களின் தவறான வழிகாட்டல் எங்கள் ஊர் நகராட்சி தலைவருக்கு இருக்கின்ற காரணத்தால் ஒட்டு மொத்த நகரமும் துன்பம் அனுபவிக்கிறது.

எனவே ஆற்றல்மிக்க தாங்கள் செயல்படாத நகராட்சி நிர்வாகம் அமைந்துள்ள காயல்பட்டணத்தை நேரில் பார்வையிட்டு, சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கவும், சாலைகளை புதுப்பிது போடவும் உரிய முயற்சிக்க வேண்டுவதோடு, அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடையவும், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மக்கள் பணிகள் விரைவாக நடைபெறவும் காயல்பட்டணம் நகராட்சியை கலைத்து விட்டு தனி அதிகாரியை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யவும் அன்புடன் வேண்டுகிறோம்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ’ஊராட்சியாக இருந்தால் நான் இப்போதே நடவடிக்கை எடுப்பேன். ஆனால் நகராட்சி ஒரு வரம்புக்கு மேல் தலையிட முடியவில்லை. 12 கோடி ரூபாய்க்கு மேல் பொதுநிதியை இருப்பில் வைத்துக் கொண்டு எந்தப்பணியும் நடைபெறாமல் இருப்பது வேதனை தருகிறது’ என்றார்.

’மக்களின் உணர்வுகள் போராட்டமாக மாறினால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அன்றைக்கு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நீங்கள்தானே தலையிடுவீர்கள். எனவே தமிழக அரசின் கவனத்திற்கு இப்போதே கொண்டு செல்லுங்கள்’ என முஸ்லிம் லீக் குழுவினர் குறிப்பிட்டனர்.

உடனே மாவட்ட ஆட்சியர் நகராட்சிகளின் இயக்குனறை தொடர்பு கொண்டு பேசினார். காயல்பட்டணம் நகராட்சி ஆணையரை அழைத்துக் கொண்டு 18-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நேரில் வருகை தரவேண்டுமென நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு உத்தரவிட்டார். அவர்களுடன் கலந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலை போக்கு வரத்திற்கு தகுதியற்றதாக உள்ளது. தங்களை சந்திக்க காயல்பட்டணத்திலிருந்து புதுக்கோட்டை சுற்றியே வருகிறோம் எனவே அந்த சாலையை புதுப்பித்துதர முஸ்லிம் லீக் குழுவினர் கோரினர். வரும் ஜனவரி மாதம் அப்பணி தொடங்கபடும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

கிழக்கு கடற்கரை சாலை செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களால் சிதைக்கப்பட்டு காயல்பட்டணம் புறக்கணிக்கப்பட்டது குறித்து முஸ்லிம் லீக் குழுவினர் வேதனை தெரிவித்தனர். தற்போது போடப்படுவது கிழக்கு கடற்கரை சாலையே அல்ல கன்னியாகுமாரி, திருச்செந்தூர், தூத்துக்குடி நெடுஞ்சாலைதான் தற்போதுள்ள மார்க்கத்தின் வழியாக சாலையின் தரம் அதிகரித்து ஆறு ஊர்களில் புறவழி சாலைகள் அமைத்து கொண்டுவரப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை என்ற திட்டம் இப்பகுதிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.

நெருக்கடியான வேலைபளுவுக்கு மத்தியிலும் இவ்வளவு நேரம் ஒதுக்கித்தந்ததற்கு நன்றி கூறி முஸ்லிம் லீக் குழுவினர் திருநெல்வேலி சென்றனர்.

2. நகராட்சிகளின் மண்டல இயக்குனருடன் சந்திப்பு:

பின்னர் மாலை 04:00 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக திருநெல்வேலி மண்டல் இயக்குனர் திரு.கலைச் செல்வம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த முஸ்லிம் லீக் குழுவினர் காயல்பட்டணம் நகராட்சி நிலவரங்கள் குறித்து விவரமாக எடுத்துக் கூறி மனு அளித்தனர்.



காயல்பட்டணம் நகராட்சி மன்றத்தில் வெளியார் தலையீடுகளால் எந்தப்பணியும் செய்ய முடியவில்லை. டெண்டர் காப்பியை பலரும் பிரதி எடுத்து கொண்டு ஒப்பந்தக்காரர்களை மிரட்டுவதால் யாரும் வேலை செய்வதற்கே அஞ்சுகின்றனர். தகவல் உரிமை சட்டத்தை சர்வ சாதாரனமாக பயன்படுத்தி மிரட்டுவதால் நமக்கு ஏன் வம்பு என எல்லோரும் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. என இயக்குனர் வேதனைப்பட்டார்.

அப்படியானால் காயல்பட்டணத்தின் 45 ஆயிரம் மக்களும் துன்பங்கள் தான் அனுபவிக்க வேண்டுமா ? நகராட்சி நிர்வாகம் இப்படி இருக்கிறது என்றால் உள்ளாட்சித்துரை அமைச்சர் அல்லது முதல் அமைச்சரின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்ல வில்லை என முஸ்லிம் லீக் குழுவினர் கேட்டனர். நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரச்சொல்லியுள்ளார். அவருடன் கலந்து நல்ல முடிவு எடுப்போம் என உறுதி கூறினார்.

3. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கூட்டம்:

இதனைத் தொடர்ந்து அன்று இரவு 08:30 மணிக்கு நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்று நகர மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கு நடப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டன்.

மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாவட்ட செயலாளர் மஹ்மூது ஹசன் மற்றும் வாவு சம்சுத்தீன், வி.எம்.டி.ஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்காப், என்.டி.இஸ்மாயில், எம்.எல்.ஷேக்னா லெப்பை, முகம்மது அலி என்ற ஹாஜி காக்கா, எஸ்.கே.சாலிஹ், நகர செயலாலர் எ.எல்.எஸ்.அபுசாலிஹ், நேஷனல் காஜா எம்.ஏ.முஹம்மது ஹசன், ஏ.கே.மஹ்மூது சுலைமான் ஆகியோர் கருத்துகள் கூறினர்.







இதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரி செய்யது பாத்திமா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மது நாசர் அவர்கள் பூரண உடல் நலத்திற்கு பிரார்த்தித்தும் துஆ ஒதப்பட்டது.

மீண்டும் மாநில பொறுப்புக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ்.எ.இபுராகிம் மக்கி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.



டிசம்பர் 27 அன்று நடைபெறும் ஏ.கே.மஹ்மூது சுலைமான், 30 தேதி நடைபெறும் எம்.ஏ.முஹம்மது ஹசன் மற்றும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெறும் மர்ஹூம் பி.எச்.எம்.அப்துல்காதர், 17 ம் தேதி நடைபெறும் காயல் மகபூப் இல்ல திருமணங்களில் கலந்து சிறப்பிபது என்றும், வரும் தலைவர்களை வரவேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டு, ஜனவரி 16 அன்று பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. காயல்பட்டணம் நகராட்சி சம்பந்தமாக நகர்மன்ற தலைவரை சந்தித்து மனு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

4. காயல்பட்டணம் நகர் மன்ற தலைவருடன் சந்திப்பு:

இத்தீர்மானத்தின் அடிப்படையில் 18-12-2015 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்குப்பின் நகர்மன்ற தலைவர் ஜனாபா ஐ.ஆபிதா ஷேக் அவர்களை அவரது இல்லத்தில் முஸ்லிம் லீக் குழுவினர் சந்தித்து நீண்ட நேரம் பேசினர். இரண்டு பக்க மனுவையும் அளித்தனர்.



அந்த மனுவில் முஸ்லிம் லீக் கோரிக்கையாக ’காயல்பட்டணம் நகராட்சி எல்லைக்குள் போடப்பட வேண்டிய 43 சாலைகளுக்கான நீதிமன்ற தடையானை வழக்கை இந்நகர மக்கள் நலன் கருதி திரும்பப் பெறவும், புதிதாக போட வேண்டிய சாலை மற்றும் மழை வெள்ள பாதிப்பு பணிகளை உடனடியாக துவங்கவும், அதன் மூலம் இந்நகருக்கு நன்மை செய்வதோடு மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றித்தரவும் தங்களை அன்புடன் வேண்டுகிறோம்’. என இடம் பெற்றிருந்தது.

43 சாலைகள் போட நீதிமன்றத்தில் தான் தடைவுத்தரவு பெற்றது, தான் ஊரில் இருக்கும் போது துணைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தியது சட்டவிரோதம். மாவட்ட அமைச்சரின் அறிவுரைப்படி ஒரு வார்டுக்கு ரூ 20 இலட்சம் வீதம் புதிய சாலைகள் அமைக்கும் மனுக்களை கூட உறுப்பினர்கள் என்னிடம் நேரில் தராமல் பதிவுத்தபால் மூலம் அனுப்பினர். நான் எந்த தகவல் கேட்டாலும் ஆணையாளர் தகவல் தருவதில்லை. சாலை போடுவதற்கு பொறியாளர் இல்லாமல் உறுப்பினர்களே எஸ்டிமேட் தயாரித்தனர் ஆகவேதான் தான் நீதிமன்றம் சென்றதாக குறிப்பிட்டார். ஊர் நலம் கருதி தலைவரும் நகர் மன்ற உறுப்பினர்களும் ஈகோவை கைவிட்டு எஞ்சியுள்ள சிலமாதங்களாவது பணிகளை விறைந்து செயல்படுத்த கோரினோம்.

5. மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாக இயக்குனர் வருகை:

முஸ்லிம் லீக் குழுவினரின் சந்திப்பின் பயனாக நகராட்சி ஆணையரும் மண்டல இயக்குனரும் 18-ம் தேதி காலை தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தைவர் மேற்கண்ட இருவரையும் அழைத்துக் கொண்டு பகல் 01:30 மணிக்கு காயல்பட்டணம் வருகை தந்தார். அவருடன் திருச்செந்தூர் கோட்டாச்சியர் திரு.தியாக ராஜன், வட்டாசியர் திரு. வெங்கடாசலம் உடன் வந்தனர். பின்னர் நகரின் சில இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். தேவையான உடனடி பணிகள் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

6. காயல்பட்டணம் நகராட்சி ஆணையருடன் சந்திப்பு:

18 ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 03:00 மணிக்கு முஸ்லிம் லீக் குழுவினர் தங்கள் முயற்சியின் தொடர்ச்சியாக கே.எம்.டி மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளின் மழைநீரை வெளி யேற்றுவது தொடர்பான பணிகளை மேற் கொண்டிருந்த நகராட்சி ஆணையார் திரு.காந்திராஜன் அவர்களை சந்திது நகராட்சி நிர்வாக சீர்கேடுகள், நகராட்சி தலைவர் கூறிய குற்றச் சாட்டுக்கள், நகர மக்களின் குமுறல் அனைத்தையும் எடுத்துக் கூறினர்.



மாவட்ட ஆட்சியரும், மண்டல இயக்குனரும் தமக்கு சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாகவும், நான்கு மோட்டார் பம்புகள் வந்து விட்டன மேலும் மூன்று நாளை வந்துவிடும் என்றும் மழைநீர் வெளியேற்றப்பட்டதும் ஜே.சி.பி மூலம் சலைகள் போக்கு வரத்திற்கு சீராக்கித்தரப்படும் என்றும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு சுகாதாரம் காக்கப்படும் என்றும் தொடர்ந்து சாலைப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். அவர் இந்த உறுதி மொழிதரும் போது நூற்றுக் கணக்கான பொதுமக்களும் உடனிருந்தனர்.

7. முதல் அமைச்சருக்கு மனு:

மாவட்ட ஆட்சியர், நகராட்சிகளின் மண்டல இயக்குனர், நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு தரப்பட்ட மனுக்களின் விவரங்களுடன் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர், நகராட்சிகளின் இயக்குனர் ஆகியோருக்கு மணுக்கள் அனுப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரின் 30 மணி நேர இடைவிடாத நடவடிக்கைகளின் காரணமாக சில அதிரடிபணிகள் காயல்பட்டணத்தில் நடைபெற தொடங்கியுள்ளன. ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இது ஒரு நல்ல அடித்தலமாக அமையட்டும் என்ற வாழ்த்துக்களை முஸ்லிம் லீக் குழுவினருக்கு பொதுமக்கள் தெரிவித்தனர்.

”நல்ல வழி காட்டல் இல்லாத காரணத்தாலேயே நான்கு வருடங்கள் வீனாகி விட்டன. நாங்கள் உங்களுக்கு துணைபுரிய நான்கு வருடங்களுக்கு முன்பே உங்களை இல்லத்தில் தேடிவந்து நாங்கள் வழிகாட்டுகிறோம். என்றோம். ஆனால் நீங்கள் எங்களை பயன்படுத்த தவறிவிட்டீர்கள் அதன் விளைவை இப்போது பார்த்தீர்களா ? என நகர் மன்ற தலைவர் இடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் குறிப்பிட்டது சிந்திக்கக் கூடிய செய்தி.

காலம் கடற்து விட்டாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரின் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் இப்போதாவது செயல்படுத்துவாரா என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பு.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[விடுபட்ட படம் இணைக்கப்பட்டது @ 15:42 / 20.12.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack sma (kayalpattinam) [20 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42496

< நகராட்சி நிர்வாகத்துக்கோ, மன்றத்துக்கோ சம்பந்தம் இல்லாத சில தனி நபர்களின் தவறான வழிகாட்டல் எங்கள் ஊர் நகராட்சி தலைவருக்கு இருக்கின்ற காரணத்தால் ஒட்டு மொத்த நகரமும் துன்பம் அனுபவிக்கிறது. > C & P

முற்றிலும் உண்மை . எந்தவொரு வேலையை எடுத்துகொண்டாலும் அதில் வீம்பாக மூக்கை நுழைத்து , வழக்கு போட்டு போட்டு தடையாணை பெருவதெர்கென்றெ ஒரு கூட்டம் உள்ளது . தாங்கள் போட்ட வழக்கில் ஜெயித்துவிட்டால் தங்களுடைய திட்டங்களை நிறைவேற்றிவிடலாம் என்பைதைவிட எதிராளியை அசிங்கப்படுத்தி விடலாம் என்பதுதான் இவர்களின் நோக்கமே தவிர வேறெதுவும் இல்லை .

ஒருவேளை இவர்கள் ஜெயித்துவிட்டால் எதிராளி சும்மா இருக்க மாட்டார் . அவரும் மேல் நடவடிக்கையாக நீதிமன்றம் செல்வார் . ஆக , ஊரில் எந்த காரியமும் நடக்காது . நடக்க விடவும் மாட்டார்கள் . பதவியில் யார் இருந்தாலும் இனிமேல் இப்படித்தான் இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆமா...! ஆமா...! உண்மையாகவே சிந்திக்கக் கூடிய செய்தி தான்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [20 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42503

நாங்கள் உங்களுக்கு துணைபுரிய நான்கு வருடங்களுக்கு முன்பே உங்களை இல்லத்தில் தேடிவந்து நாங்கள் வழிகாட்டுகிறோம். என்றோம். ஆனால் நீங்கள் எங்களை பயன்படுத்த தவறிவிட்டீர்கள் அதன் விளைவை இப்போது பார்த்தீர்களா ? என நகர் மன்ற தலைவர் இடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் குறிப்பிட்டது சிந்திக்கக் கூடிய செய்தி. CP

ஆமா...! ஆமா...! கண்டிப்பாக உண்மையாகவே சிந்திக்கக் கூடிய செய்தி தான்...! 100% SURE

இவர்களை அவர் (தலைவர்) பயன்படுத்த தவறி விட்டதாலேயே அதன் விளைவை இப்போது நகர்மன்ற கூட்டங்களில் உறுப்பினர்களின் நடவடிக்களிளின் மூலம் நகர பொதுமக்கள் அறிய முடிகின்றன..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் கட்சியின் சகோதரர்களே..! ஆமா...! ஆமா...! கண்டிப்பாக உண்மையாகவே நகரின் சாதாரண பாமரனும் அறிந்த வைத்திருக்கும் செய்தி தான்...!

தொடரும்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. காவல் துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை - பணிசெயும் போது உதவிக்கு காவலர்களின் உதவியை ஏன நாடவில்லை - என் கேள்விக்கு என்ன பதில்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [21 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42516

காவல் துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை - பணிசெயும் போது உதவிக்கு காவலர்களின் உதவியை ஏன் நாடவில்லை..? என் கேள்விக்கு என்ன பதில்...!

1) காயல்பட்டணம் நகராட்சி மன்றத்தில் வெளியார் தலையீடுகளால் எந்தப்பணியும் செய்ய முடியவில்லை. CP

--> நகராட்சி மன்றத்தில் தனியார் தலையீடுகளால் எந்த பணியும் இந்த உத்தமர்களால் செய்ய முடியவில்லையாம் என கூறும் போது, ஏன்..? காவல் துறையின் உதவியை நாடவில்லை..? என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் - அதை தவற விட்டது ஏன்..?

2) ஒப்பந்தக்காரர்களை மிரட்டுவதால் யாரும் வேலை செய்வதற்கே அஞ்சுகின்றனர். CP

--> ஒப்பந்தக்காரர்களை மிரட்டுகிறார்கள் - வேலை செய்வதற்கே அஞ்சுறார்கள் என கூறும் போது, ஏன்..? காவல் துறையின் உதவியை நாடவில்லை..? என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் - அதை தவற விட்டது ஏன்..?

3) டெண்டர் காப்பியை பலரும் பிரதி எடுத்து கொண்டு. CP

நகராட்சி டெண்டர் காப்பியை பிரதி எடுப்பது குற்றமா..? என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் - அதை தவற விட்டது ஏன்..?

சாலைக்கான டெண்டர் காப்பிகளை இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியின் நகர நிர்வாகிகள் படிக்க நேர்ந்தால்அதில் பல முறைகேடுகளை அறியலாம் அதில் ஓன்று தற்போது சி - கஸ்டம்ஸ் ரோடு டெண்டரில் நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக / சட்ட விதிமுறைகளுக்கு மாற்றமாக சாலைக்கு ஒரு ஆண்டு உத்திரவாதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியின் நகர நிர்வாகிகளே.. எனதன்பு சகோதரர்களே..!

உங்களின் எவராவது சில ஆயிரமே மதிப்புடைய முக்கியமான வீட்டு உபயோக பொருகளில் நீண்ட ஆண்டுகள் உத்திரவாதம் இல்லாத பொருள்கள் கடைகளில் கேட்டு வாங்கியதுண்டா..? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..!

இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியின் நகர நிர்வாகிகளே..! எனதன்பு சகோதரர்களே..!

நமது வரிப்பணம் (46 லட்சம் - சி - கஸ்டம்ஸ் ரோடு) அதில் அமையும் சாலைக்கு குறைந்தது 3 ஆண்டுகளாவது வேண்டாமா..? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..! எனதன்பு சகோதரர்களே..!

ஆக்குக ஆகுக..! நகரமக்களின் சிந்தனை மற்றும் செயல் திறன்களை அமைப்புகூடி மந்தாமாக ஆக்குக ஆகுக...!

நகர்மன்ற தலைவர் நல்ல வரிகளோடு நகர்மக்களுக்கு அவரின் முகநூல் பக்கத்தில் அறிக்கை ஓன்று வெளியிட்டு இருக்கிறார்கள் அதை படியுங்கள் (காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம் https://www.facebook.com/aabidha.shaik) அவர் கூறும் ஆலோசனைப்படி அவருடன் இணைந்து அநீதிக்கு / முறைகேடுகளுக்கு / அக்கிரமங்களுக்கு எதிராக நல்ல பணிகள் ஆற்றுங்கள்..! எனதன்பு சகோதரர்களே..! உங்களை நகரில் பலரும் வரவேற்பார்கள்..

தொடரும்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42519

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊரின் நலத்துக்காகவும் ,, உண்மையாக ஊருக்கு உழைக்கவும் ,, நியாயத்துக்காவும் செயல்படுகிற ஒரு நகர் மன்ற தலைவியோடு ...ஒரு மாநில இஸ்லாமிய கட்சியின் & ஊரின் பொது நல அமைப்புக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருப்பின் ..நம் நகர் மன்ற தலைவி அவர்கள் அனைத்தும் சரி செய்து ...ஊருக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேறி அனைத்தும் சிறப்பாக நிறைவேறி இருக்கும் .......

நம் நகர் மன்ற தலைவி அவர்கள் இரு அமைப்புகளிடமும் முழுமையான ஆதாரத்துடன் கூறிய .அருமையான விளக்கத்துக்கு ....இவர்களின் தற்போதைய செயல்பாடு தான் என்னவாம் ....

அநியாயத்தை அழித்து ,, நியாயத்தோடு போராடுபுவர்களோடு இணைந்து ..நீங்களும் ஒன்றுபட்டால் ஊர் சிறப்படையும் .....ரோடு போடுகிற விசையத்தில் தலைவி அவர்கள் சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது ..சொல்லுங்களேன் ....

நகர் மன்ற நம் தலைவி அவர்கள் ....அவர்களின் முழுமையான விளக்கத்தை அனைத்து ''இணைய தளங்களிலும் '' அவர்களின் ''FACE BOOK ,, மற்றும் பல பக்கத்துக்கு நோட்டீஸ் அடித்தும் ஊரில் பொது மக்கள் கையில் கிடைக்கும் விதமாகவும் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது .....

நம் தலைவி அவர்கள் ''WHATS APP '' மூலமாக பதிவு செய்து பேசி அனுப்பி இருந்தால் உண்மை நிலவரம் .இன்னும் நம் ஊர் மக்கள் அதிகம் பேர் மனதில் சென்று அடைந்து இருக்கும் ..... மற்றவர்களின் '' பித்தல்லாற்றமும் '' வெளிக்கு வந்து இருக்கும் .....

நகர் மன்ற தலைவி அவர்களை பின் நின்று இயக்குபவரை பற்றி கூறும்...இவர்கள் ..... நம் நகர் மன்ற ஒரு சில உறுப்பினர்களை இந்த 4 1/2 வருசமாக பின் நின்று இயக்குபவரை பற்றி ஒன்றுமே சொல்லாத காரணம் என்ன ??

ஊழல் புரிபவர்களுடன் இணையாத நம் தலைவியை நினைத்து நாம் பெருமை அடையணும் .....ஊழலுக்காக நம் நகர் மன்ற அதிகாரிகளுடன் ஓன்று சேர்ந்து .ஊரின் நலனில் அக்கறை கொள்ளாத ஒரு சில உறுப்பினர்களை நினைத்து நாம் வேதனையும் ,,வெட்கமும் படனும் ......

நம் ஊருக்கான '' இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியின் இந்த முயற்ச்சியையும் ,, நல்ல செயல்பாட்டையும் பாராட்டலாம் .......

நம் ஊரின் பொது நல விரும்பிகளே நம் நகர் மன்ற தலைவி அவர்களிடம் நியாயம் இருப்பதை முதலில் உணருங்கள் ....பின்பு இணையுங்கள் .....நாம் நினைப்பதை நிச்சயம் சாதிக்கலாம் .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நகராட்சி இயக்குனர் சொல்வதே வேதம் என்ற நம்பிக்கை வீணானது..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [21 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42520

தகவல் உரிமை சட்டத்தை சர்வ சாதாரனமாக பயன்படுத்தி மிரட்டுவதால் நமக்கு ஏன் வம்பு என எல்லோரும் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. என இயக்குனர் வேதனைப்பட்டார். CP

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் விதிகளின்படி ஒரு மனுதாரர் தகவலை மட்டுமே கோர அனுமதித்துள்ளதா..? அல்லது - ஒரு மனுதாரர் தகவல் கோருவதை தவிர்த்து பொது தகவல் அலுவலரை மிரட்டுவதை அனுமதித்துள்ளதா..? என வேதனைப்படும் இயக்குனரிடம் அதை முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள் அந்த இயக்குனரிடம் விபரம் கேட்டு இருக்கவேண்டும் - அதை தவற விட்டது ஏன்..? நகராட்சி இயக்குனர் சொல்வதே வேதம் என நீங்கள் நம்பிவிட்டீர்களா...?

ரூபாய் 10 க்கான நீதிமன்ற வில்லை இணைத்து தகவல் கோருவதை தவிர்த்து விட்டு மிரட்டும் வகையில் வாசகம் இருக்குமானால் அதை தலைமை தகவல் ஆணையரிடம் அந்த இயக்குனர் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருக்கலாமே..? தாய்சபை காரர்களே..! நீங்கள் நகராட்சி இயக்குனர் சொல்வதை அப்படியே நம்பி விட்டீர்கள் போலும்..!

சமீபத்தில் ஒரு புது கவிதை வாட்சப்பில் கேட்டது இதோ: --> வாயிலே அலுகென்று..! நீர் எடுத்து கொப்பளித்தேன்...! கொப்பளிக்க கொப்பளிக்க வாயும் ஓயாமல் அழுக்கும் போகமால்...! உற்று பார்க்கிறேன் நீரே அழுக்கு... அழுக்கு நீரெடுத்து ஆயிரமுறை கொப்பளித்தாலும் வாயழுக்கு போகாது..!

எனதன்பு நகர சகோதரர்களே..! இது யாருக்கு பொருந்தும் என மனசாட்சியுடன் சிந்தியுங்கள் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர நிர்வாகிகளே..! இப்போதும் கூட எங்கு தவறு நடக்கிறது என்று உங்களால் உணர முடியவில்லையா..? அல்லது உண்மை நிலவரத்தை மனம் ஏற்க மறுக்கிறதா..?

நகராட்சி இயக்குனர் சொல்வதே வேதம் என்ற நம்பிக்கை வீணானது..!

தொடரும்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved