Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:56:21 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17371
#KOTW17371
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 25, 2016
நடப்பாண்டு அரசுப் பொதுத் தேர்வெழுதும் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இக்ராஃ சார்பில் தேர்வு வழிகாட்டு பிரசுரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2339 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு கல்வியாண்டில், 10ஆம் - 12ஆம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவ-மாணவியருக்கு தேர்வு கால வழிகாட்டல்களை வழங்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் பிரசுரம் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயலர்கள் அனைவருக்கும் - இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம்.

தமிழகத்தில் நடைபெறும் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு, வருடம் தோறும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ''கல்வி வழிகாட்டல் பயிற்சி வகுப்பு'' உள்ளூர் தொலைக் காட்சி (கேபிள் டிவி) மூலம் ஒளி பரப்பி வந்தது இக்ராஃ கல்விச் சங்கம். ஆனால் தற்போது உள்ளூர் தொலைகாட்சி நிறுவனங்கள் செயல்படாத நிலையுள்ளதால் நடப்பாண்டு அத்தகைய ஒளிபரப்பை செய்திட இயலவில்லை.

எனவே இது குறித்து 12-12-2015 அன்று இக்ராஃ கூட்டிய ''நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில்'' ஆலோசிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த தலைமையாசிரியர்கள், '' 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியரை, முதல்நிலை, நடுநிலை, தாழ்நிலை (Above average, Average, Below average) என மூன்று வகைகளாகப் பிரித்தறிந்து, அவர்களுக்கு தனித்தனியே பயிற்சிகள் (Special coaching) வழங்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சிக்காக மிகவும் தேர்ந்த ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்படவேண்டும். இதனால் தாழ்நிலை (Below average) மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல்நிலை (Above average) மாணவர்களும் கூடுதல் பயன்பெறுவர். தாழ்நிலை மாணவர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்கள் ஃபெயில் ஆகாதிருப்பதற்குத் தேவையான materials வழங்கப்பட வேண்டும்'' என்ற ஆலோசனையினை வழங்கினர்.

அதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பள்ளி விடுமுறையின் போது மேற்கண்ட கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியினை (அனைத்து பாடங்களுக்கும்) நடத்திட இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த டிசம்பர் இறுதியில் வழமையான கூடுதல் விடுமுறைகள் இல்லாததாலும், அளிக்கப்பட்ட விடுமுறைக் காலங்களில் கூட , (மாவட்ட கல்வி அலுவலக உத்தரவுப்படி) 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு (special class ) பள்ளியில் வைக்கப்பட்டதாலும், இக்ராஃ ஏற்பாடு செய்தபடி கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்திட இயலவில்லை.

இந்நிலையில் அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும், தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ''புதிய தலைமுறை கல்வி'' வார இதழில் (08 பிப்ரவரி 2016) திரு. பொன் தனசேகரன் அவர்களாலும், திரு வெ.ஸ்ரீதரன் அவர்களாலும் வழங்கப்பட்டிருந்த அருமையான ஆலோசனைகள் எங்களை கவர்ந்தது.

எதிர்பார்த்ததை விட மிக அழகாக அமைந்திருந்த அந்த ஆக்கத்தைத் உடனே சேகரித்து இக்ராஃ கல்விச் சங்கம் சார்பாக தனி பிரசுரமாக அச்சிட்டு, நடப்பாண்டு அரசுப் பொதுத்தேர்வைச் சந்திக்கவுள்ள நமதூரின் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, மற்றும் காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு, அவரவர் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று அவற்றை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கி வினியோகிக்கப்பட்டுள்ளது.

இக்ராஃ வெளியிட்டுள்ள இந்த பிரசுரம் மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.அந்தப் பிரசுரம் இதோ:









இப்பிரசுரத்தைப் பார்க்கும் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள், நடப்பாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள உங்கள் மக்களுக்கு இதனடிப்படையில் வழிகாட்டல்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமதூர் மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நல்ல நடவடிக்கைகளையும் கருணையுள்ள அல்லாஹ் தனதருளால் வெற்றியாக்கித் தந்து, நம் மாணவர்களை மாநில - மாவட்ட அளவில் சாதனையாளர்களாகத் திகழச் செய்வானாக, ஆமீன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)


KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...IQRA
posted by mackie noohuthambi (kayalpatnam ) [26 February 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43222

அருமையானதொரு வழிகாட்டு பிரசுரம்.

INTELLIGENT QUOTIENT - RELIABLE ASSISTANCE -= IQRA இந்த பிரசுரம் இணையளத்தில் மட்டும் பதிவு செய்யப் பட்டுளதா அல்லது எல்லா 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் ஒரு கை ஏடாக கொடுக்கப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அவர்கள் கரங்களில் கை ஏடாக ஒரு BOOKLET ஆகவே கொடுக்க ஏற்பாடு செய்யும்படி இகர நிர்வாகத்தை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவ மாணவிகள் இந்த வகுப்பில் இருப்பவர்கள் அனேகம் பேர் wattsup வசதியுள்ள செல்போன்களை வைத்திருக்கிறார்கள். அது தவிர்க்க mudiyaatha ஒரு சாதனமாகி விட்டது. அதிலே இந்த செய்திகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் இந்த குறிப்புக்கள் நன்கு உதவும்.ஒருநாள் நிகழ்ச்சியாக ஜலாலியா போன்ற இடங்களில் ஏற்பாடு செய்து இந்த குறிப்புக்களை அவர்களிடம் கொடுக்கலாம்.

செல்வத்துட் செல்வம் செவி செல்வம் அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - என்று சொல்வார்கள். காதால் கேட்டால் அதை உள்வாங்கி கொண்டால் அந்த செய்தி மறக்காமல் இருக்கும் என்பார்கள். இவ்வளவு பெரிய சிரமங்களை மேற்கொண்டு தேடித் பொறுக்கி இந்த செய்திகளை மாணவ மாணவிகளுக்கும் அளிக்கும் உன்னத பனி மிகவும் பாராட்டுக்குரியது. பெற்றோர்கள் இந்த சேவைக்கு தோள்கொடுத்து இக்ராவுக்கு உற்ற துணையாக இருந்து தங்கள் மக்களை நெறிப் படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

நாங்கள் படிக்கும் காலங்களில் இப்படி அறிவுரை தருவதற்கும் பொருளாதார வசதிகள் செய்து தருவதற்கும் தகுந்த சாதனங்கள் எங்களுக்கு இல்லாமல் இருந்ததால் நாங்கள் படிப்பில் எட்ட வேண்டிய உயரத்தை சென்றடைய முடியாமல் போய்விட்டது. இப்போது எல்லா உதவிகளும் மாணவ மாணவிகளின் காலடியில் வந்து கொட்டிக் கிடக்கிறது. அல்ஹம்து லில்லாஹ். உலக காயல் நலமன்றங்களின் உறுப்பினர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த கல்விக்காக செலவிடுகிறார்கள்.

இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னலம் கருதாமல் செயல்படும் IQRA - KCGC போன்ற அன்பர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved