Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:38:55 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17374
#KOTW17374
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 26, 2016
மனிதநேய மக்கள் கட்சிக்கு சொந்தம் கோரிய தமீமுன் அன்சாரி மனு தள்ளுபடி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2372 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் மோதல் உருவானது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரியை நீக்குவதாக ஜவாஹிருல்லா அறிவித்தார்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமீமுன் அன்சாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கடந்த 2009-ல் மனிதநேய மக்கள் கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தோம். கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி மத்திய நிர்வாகக்குழு மற்றும் மத்திய பொதுக் குழுவுக்கு பொதுச்செயலாளர்தான் தலைமை வகிப்பார். கடந்த 2012 முதல் கட்சியின் பொதுச்செயலாளராக நீடித்து வருகிறேன்.

ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் தன்னிச்சையாக தாம்பரத்தில் பொதுக்குழு வைக் கூட்டி அதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக பி.அப்துல் சமது, பொருளாளராக ஓ.யு.ரகமத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித் துள்ளனர். அந்தக் கூட்டத்தை மத்திய நிர்வாகக்குழு அங்கீகரிக்கவில்லை. எனவே, அந்தக் கூட்டத்தை சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூட்ட முடிவுகளை செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 2015 செப்டம்பர் 21-ம் தேதியுடன் தமீமுன்அன்சாரியின் பதவிக் காலம் முடிந்துவிட்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ல் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி, கட்சியின் அனைத்து கூட்டங்களுக்கும் தலைமை வகிக்கும் அதிகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித் துள்ளனர். பதவியிலேயே இல்லாதபோது அவரால் இந்த மனுவை மமக சார்பில் தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, அவருடைய மனுவை ஏற்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து ‘தி இந்து’விடம் ஜவாஹிருல்லா கூறும்போது, ‘‘நியாயம் வென்றுள்ளது. இது நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் மமக-வில் நீடித்து வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. இனி தமீமுன் அன்சாரி எங்களின் கட்சிப் பெயரையோ, கட்சிக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது. சட்டரீதியாக பயன்படுத்தவும் முடியாது’’ என்றார்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நூற்றாண்டும் எட்டான்றும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [26 February 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43227

மனித நேய மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் தங்களை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து சுமார் எட்டு ஆண்டுகள் கூட நிறையவில்லை. அதற்கிடையில் தலைவர் செயலாளர் சக்களத்தி சண்டை ஆரம்பித்து நீதி மன்றம் வரை சென்று இன்று தீர்ப்பு வந்துள்ளது.

தமீமுல் அன்சாரியா ஜவாஹிருல்லாவா என்பது அல்ல இங்கு பிரச்சினை நீயா நானா என்ற நிகழ்ச்சிக்கு ஒரு நொறுக்கு தீனி இது.

அது நபி தோழர் உமர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் ஆட்சி காலம் என்று நினைக்கிறேன் . போர்ப்படை தளபதியாக காலித் இப்னு வலீத் தலைமை ஏற்று செல்கிறார்கள். காலித் இப்னு வலீத் தலைமை தாங்கினால் வெற்றி நிச்சயம் என்று மக்களிடையே ஒரு கருத்து நிலவியது. உண்மையும் அதுதான். ஆனால் அல்லாஹ் நாடியவர்களுக்கு வெற்றியை கொடுக்கிறான் அவன் நாடியவர்களுக்கு தோல்வியை அளிக்கிறான் என்ற இஸ்லாமிய நெறிமுறைக்கு மாறான எண்ண ஓட்டம் அது என்பதை உணர்ந்த கலீபா அவர்கள் காலித் இப்னு வலீத் அவர்களை திடீரென்று போர்க் களத்தின் தளபதி பதவியிலிருந்து பின்வாங்க வைத்து வேறொருவரை மிகவும் அறிமுகமில்லாத ஒருவரை தளபதியாக நியமிக்கிறார்கள். போரின் உக்கிரத்தை அறிந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் ஒரு சலனமுமில்லாமல் கலீபா அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு அந்த தலைமை பதவியை காலித் இப்னு வலீத் அவர்கள் வேறொருவருக்கு விட்டுக் கொடுத்த சரித்திரம் நம் எல்லோருக்கும் பரிச்சயமான செய்திதான். படிப்பதற்கு இலேசாக இருந்தாலும் தலைமை பதவியை விட்டுக் கொடுக்கும் பண்பு - தியாகம் - அந்த மனப் பான்மை சாதரணமான ஒன்றல்ல என்பதை நாம் இவர்கள் சண்டை மூலம் உணர முடிகிறது.

அப்படியானால் நூற்றாண்டுகளை கடந்து நிமிர்ந்து நிற்கும் முஸ்லிம் லீக் எவ்வளவு சோதனைகளை தாண்டி வந்திருக்கும் எவ்வளவு சவால்களை சமாளித்து வந்திருக்கும் எவ்வளவு தலைமை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பொறுமையோடு வளர்ந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களை மேடைதோறும் கொச்சைப் படுத்தி இவர்கள் பேசிய பேச்சுக்களையும் அசைபோட்டுப் பார்க்கிறேன்.

போர்க்குணம் இல்லாத கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டது இவர்களால். ஆனால் இவர்களது போர்க்குணம் இந்த சமுதாயத்துக்கு அதன் முன்னேற்றத்துக்கு பயன்படும் என்றெல்லாம் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். இப்போது தெரிகிறது தலைமை போராட்டம் அதற்காக அதன் தலைவர்கள் எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

தலைமை போராட்டம் திராவிட முன்னேற்ற கழகத்திலும் இருக்கிறது காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருக்கிறது. அது சகஜம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அல்லாஹ்வின் பெயரால் நபிகள் நாயகத்தின் நெறிமுறையை வழி முறையை பின்பற்றுகிறோம் என்று புறப்பட்டவர்கள் - இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே மக்களுக்கு அளிக்கிறோம் என்று அறைகூவல் விட்டவர்கள் இப்படி பிரிந்து நிற்கிறார்களே என்பதை எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.

விட்டுக் கொடுப்பது ஒரு வழிப் பாதை அல்ல அது இரு வழிப்பாதைதான். இருந்தாலும் நபிகள் நாகயம் அதை தங்கள் இயல்பாகவே ஒரு வழிப் பாதையாக ஆக்கி கொண்டு குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்களே ஹுதைபிய்யா உடன்படிக்கை அதை என்னவென்று சொல்வது. அல்லாஹு அக்பர்.

உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறானே, கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து உங்கள் செய்கையை மாற்றுங்கள். இல்லாவிட்டால் அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு வராது எதிர்வரும் தேர்தலில் நீங்கள் யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தோல்வியை தழுவுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved