Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:05:16 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17532
#KOTW17532
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 11, 2016
நகரில் அடையாளம் தெரியாதோர் கருத்துக் கணிப்பு பெயரில் விபரம் சேகரிப்பு! SDPI கட்சியினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3667 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், அடையாளம் தெரியாத சிலர், நகரின் பல தெருக்களில் வீடு வீடாகச் சென்று நேற்றும், இன்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு எனும் கேள்வியை உள்ளடக்கிய அவர்களின் கருத்துக் கணிப்பு படிவத்தில், கருத்துக் கூறுபவரின் பெயர், கைபேசி எண் உள்ளிட்ட சுய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இன்று காலையில் காயல்பட்டினம் அலியார் தெருவில் அவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, SDPI கட்சியின் நிர்வாகிகள் இதனைக் கண்ணுற்று அவர்களிடம் விபரம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் தகவல் கூறியதாகத் தெரிகிறது.

சந்தேகம் வலுக்கவே, ஆறுமுகநேரி காவல் அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு அவர்கள் நடப்பைத் தெரிவித்ததையடுத்து, தேர்தல் கண்காணிப்பு காவல்துறையினர் முஹ்யித்தீன் தெரு - ஹாஜியப்பா தைக்கா பள்ளிவாசல் அருகில் கருத்துக் கணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவர்களை ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.







அதில், சீர்காழி தாலுகா காத்திருப்பு என்ற ஊரைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ஏ.இளையராஜா (வயது 33), அதே ஊரைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் டீ.இளையராஜா (வயது 27), காரைக்கால் நிரவியைச் சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் சரவணன் (வயது 33), கோவில்பட்டியைச் சேர்ந்த வி.முருகன் என்பவரது மகன் வேலுச்சாமி ஆகியோர் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தாமதமாகக் கிடைத்த தகவலின் படி, அவர்கள் அனைவரும் புகழ்பெற்ற தனியார் டீவி ஒன்றுக்காக கருத்துக் கணிப்பில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. ஆனால் அதுகுறித்த எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்பதோடு, காவல்துறையினர் விசாரித்தபோதும் அவர்கள் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நகரில் அடையாளம் தெரியாதோர் கருத்துக் கணிப்பு
posted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [12 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43494

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சர்வே நடத்தியவர்களிடமே அவர்களைப் பற்றிய விபரத்தை சேகரித்த SDPI யினரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல்களைக் கூறியதன் மர்மம்?

அது போல் சர்வே படிவத்தில் உங்கள் தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

உங்கள் தொகுதியின் பிரச்சனைகள் மற்றும் உடனடி தேவைகள் என்ன?

உங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கும் வளர்ச்சிப் பணிகள் என்ன? என்ற இது போன்ற கேள்விகளைப் பார்க்கும்போது சர்வே பணியில் ஈடுபட்டவர்கள் அமைதி பூங்காவான தமிழகத்தில் செல்லாக் காசாகிப்போன அரசியல் கட்சியின் முழு நேர ஊழியர்களாக இருப்பார்களோ என்று நம்மை யூகம் கொள்ள செய்கின்றது.

இவர்கள் கொடுக்கும் ரிப்போட்டை வைத்து ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் மனநிலையறிந்து தேர்தல் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்.

அல்லாஹ் மட்டுமே அனைத்தையும் மிக துல்லியமாக அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43511

அஸ்ஸலாமு அலைக்கும்.

பொதுவாக சொல்வதாளால் நமது ஊருக்கு இவர்களின் கருத்து கணிப்பு சுத்தமாகவே தேவையற்றதே .......

இந்த கும்பல் முதலில் நம் காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்க வேணும் ...அல்லது நம் ஊரின் முக்கியமான பொதுநல அமைப்புக்களிடம் பேசி இருக்க வேணும் ..இவை இரண்டையுமே இந்த நபர்கள் செய்ய வில்லை ....முறையாக இவர்கள் செய்து இருந்தால். நம் அமைப்புக்கள் அவர்களின் உறுப்பினர் ஒருவரை இவர்களோடு துணையாக அனுப்பி இருக்கும் ......நம் ஊர் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருந்து இருக்கும் ......

மேலைக்கு இது போன்ற தப்பான ஒரு சம்பவம் நடக்காமல் நாம் கவனிக்கணும் ......

நம் ஊர் பெண்களின் தொலை பேசி என்னை இவர்கள் எடுத்து தப்பான செயல்களில் ஈடு பட கூட வாய்ப்பு இருக்கிறது ...

இது சம்பந்தமாகவும் அவசியம் நம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும் ......

இது போன்றவர்கள் மீது கடுமையான ஒரு நடவடிக்கை நம் காவல் துறை எடுத்து இருக்க வேணும் .....

இதை தடுத்து நிறுத்திய நம் ஊர் '' SDPI '' அமைப்பை ....மனதாரவே பாராட்டுகிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved