Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:50 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18094
#KOTW18094
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 14, 2016
வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3522 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டணம் நகர ஊழியர் கூட்டம், 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணியளவில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் MLA தலைமையில், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி முன்னிலையில், காயல்பட்டணம் சதுக்கைத் தெருவிலுள்ள நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.

அரபி எம்.எம்.சாஹுல் ஹமீது கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்காப் அறிமுகவுரையாற்றினார்.

மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணைச் செயலாளர் பெத்தபா எம்.ஏ.சி.சுல்தான், சீனா காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் பி.எஸ்.என்.அஹ்மது ஜரூக், 7-வது வார்டுத் தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில் புஹாரி, செயலாளர் கே.வி.ஹெச்.எம்.மஹ்மூது ஜிஃப்ரீ, 3-வது வார்டு மாவட்ட பிரநிதிகள் எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா), எம்.டி.ஏ.முஹம்மது முஹியத்தீன் மற்றும் 2-வது வார்டு செயலாளர் எம்.ஜெட்.சித்தீக், 18-வது வார்டுத் தலைவர் எஸ்.ஆர்.ரஹ்மதுல்லாஹ், 10-வது வார்டு மாவட்ட பிரநிதி எம்.ஹெச்.அப்துல் வாகித், உறுப்பினர் அதுகம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நிறைவாக, மாநில பொதுச் செயலாளரும், கடைநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊழியர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமாக உரைநிகழ்த்தினார்.



அன்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் களம் கண்டு வெற்றிவாகை சூடிய, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுக்கர் MLA வுக்கு, நகர கிளையின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ்கானும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 – காயல்பட்டணம் நகரசபை தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவது:-

விரைவில் நடைபெறவுள்ள, உள்ளாட்சி மன்றத் தேர்தலில், காயல்பட்டணம் நகரசபை தலைவர் மற்றும் 12 கவுன்சிலர் பதவிகளுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடுவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 2 – முஸ்லிம் லீக் போட்டியிட கூடிய வார்டுகளை கண்டறிய ஐவர்குழு:-

காயலபட்டணம் நகராட்சியில் தற்போதுள்ள 18 வார்டுகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்பு உள்ள வார்டுகளை கண்டறிய கீழ்கானும் ஐவர்குழு அமைக்கப்பட்டது.

1. மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்காப் (ஒருகிணைப்பாளர்)
2. மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன்
3. மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான்
4. நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ்
5. 7-வது வார்டுத் தலைவர் என்.டி.முஹம்மது இஸ்மாயில் புஹாரி

இக்குழுவினர் காயல் நகரின் அனைத்து பகுதி ஜமாஅத்தினர் மற்றும் பொது மக்களிடம் கலந்து பேசி, நாம் வெற்றிபெற கூடிய வார்டுகளை கண்டறிந்து, அதன் அறிக்கையை இரண்டுவார காலத்துக்குள் சமர்பிக்க இக்கூடம் கேட்டு கொள்கிறது.

தீர்மானம் 3 – உள்ளாட்சியில் நல்லாட்சி பிரகடனம், காயலின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா:-

ஆகஷ்ட் மாதம் முதல்வாரத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி பிரகடனம் மற்றும் காயலின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.


இக்கூட்த்தில் மேற்கண்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



எஸ்.கே.சாலிஹ் நன்றி கூற, 4-வது வார்டுச் செயலாளர் கே.எம்.என்.உமர் அப்துல் காதர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உள்ளது உள்ள படியே !!!
posted by Seyed Ibrahim (Tuticorin) [14 July 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44240

உள்ளது உள்ளபடி செய்தி

"ஏ.ஆர்.ஷேக் முஹம்தம்" வெளியிட்டுள்ள அறிக்கை:- C &P

"உறுப்பினர் அதுகம்" ஆகியோர் கருத்துரையாற்றினர்.- C &P

"ஆகஷ்ட்" மாதம் முதல்வாரத்தில் - C &P

மேலே சில உதாரணங்கள் மட்டுமே சுட்டி காட்டப்பட்டுள்ளது....

காயல்பட்டணம்.காம் காயலின் தினத்தந்தி ஆக மாறி விட்டதா ??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [15 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44257

வரவேற்பவை, வாக்களிப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கட்சி என்றில்லாமல் சுயேட்சையாக நின்று ...
posted by N.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்) [16 July 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44258

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென தாய் சபையின் காயல்பட்டணம் ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள் – இது வரவேற்கக் கூடிய விசயமாக தெரிய வில்லை.

------------------------------

இன்றைய நாளில் தாய் சபையின் செயல்பாடுகள் அற்புதமாகவும், வேகமும்,விவேகமும் கூடியதாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நிறைய விசயங்கள் பாராட்டுக்குரியதாகவும், தொலைநோக்கு பார்வையிலும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை காணமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்!.

------------------------------

எவ்வளவுதான் அரசியலில் தொலைநோக்கு பார்வையை செலுத்தி காலத்தின் கட்டாயம் இது என்று இந்த முடிவை எடுக்க நினைத்திருந்தாலும் – நமது ஊர், நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தால் நிச்சயமாக – இந்த முடிவு ஏற்பட்டிருக்காது.

----------------------------

இதுவரை நம் ஊரில் உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட்டதில்லை , இனிமேலும் நம் ஊருக்கு அது வரக்கூடாது என்பதுதான் நல்லது. அரசியல் கட்சிகள் நம் ஊர் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கினால் – நமது கொள்கை, கோட்பாடுகள், குறிக்கோள்கள் அனைத்தும் சீரழிந்து போகும் – தேர்தலில் அல்ல, தேர்தலுக்குப்பின் படிப்படியாக நாசமாகும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.

----------------------------

இன்று தாய் சபை களத்தில் இறங்கனால் இன்ஷா அல்லாஹ்! வெற்றி பெறும் அதில் சந்தேகமில்லை – ஆனால் எப்போதுமே தாய் சபை நின்று வெற்றி பெற்றிட முடியுமா? கூட்டு, குருமா என்று மற்ற தேர்தலில் நிற்கின்றோமே – அந்த கூட்டுக்கட்சிக்கும் வேறொரு முறை விட்டுக்கொடுக்க வேண்டியது வருமே! – அப்போது என்னவாகும் நமது கலாச்சாரங்கள்!!

------------------------------

சொல்ல வேண்டியது பலதும் உண்டு ஆனால் அவையெல்லாம் எழுத்தில் எழுத முடியாது – ஆகவே! சிந்திக்க, சிந்திக்க சிந்தனையில் சீரான முடிவு கிடைக்கும் என்பதை தங்களது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் – சீரான முடிவை எடுத்து நமது ஊர் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழி காட்டுங்கள்.

-----------------------------

அரசியல்தான் வேண்டாம் என்கின்றேனே! தவிர, தாய்சபையினர் நகராட்சிக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆகவே, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்று 18 வார்டுக்கும் கட்சி என்றில்லாமல் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று நல்லாட்சியை தாருங்கள் – அல்லாஹ்! நம் மக்கள் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 July 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44266

அஸ்ஸலாமு அழைக்கும்

இப்படி தான் நடக்கும் என்று எப்போதே நமது ஊரில் நியூஸ் பரவியது தான் .....பல அரசியல் கட்சிகள் தனி ,,தனியாக அவர்களின் வேட்பாளர்களை நிறுத்தினால் ... இன்னும் நமது ஊரில் '' ஒற்றுமை '' களைய வாய்ப்புக்கள் ''அதிகம் உண்டு ....

எது எப்படியோ நமது ஊரின் பழைய ஒழுக்கமான பண்பாடும் ,, மரியாதையும் ,, நேர்மையான நடைமுறைகளும் கொஞ்சம் ,,கொஞ்சமாக குறைந்து வருகிறது என்பது தான் மனதுக்கு கடுமையான வேதனையாகவே இருந்து வருகிறது ..

எது எப்படியோ தொகுதி மக்கள் மிகவும் கவனமுடன் தங்கள் தொகுதிக்கு நல்லதோர் உறுப்பினர்களை தேர்வு செய்தால் தான் நல்லது ..அத்தோடு நகர் மன்றத்துக்கு நல்ல திறமை மிக்க ,,நேர்மையான ,,பண்பு உள்ள ஒரு சேர்மனையும் தேர்வு செய்ய வேணும்...இல்லையேல் இன்னும் '' 5 வருடங்கள் நாம் பல சிரமத்துக்கு ஆளாகி ,, ஊர் நலனில் பாதிக்க பட கூடிய வாய்ப்புக்கள் தான் அதிகம் ஏற்படும் ...

இந்த நகர் மன்ற தேர்தலை நம் ஊர் மக்கள் கவனமுடன் நன்கு யோசித்து '' செயல்பட்டால் தான் நல்லது ....தற்போது இருக்க கூடிய உறுப்பினர்கள் திரும்பவும் நின்றாள் .... அவர்கள் யாரையுமே ஊர் மக்கள் தேர்வு செய்யாமல் இருப்பது தான் புத்திசாலி தனமான ஒரு செயல் + நல்லதும் கூட .....போதும் இவர்கள் ஊருக்கு நல்லது செய்யாமல் ஒரு சில பணக்காரர்களுக்கு பின்னால் 5 வருடங்கள் ஓடியது ......நேர்மையான பண்புஉள்ள ஒரு தலைவி அவர்களை நாம் பெற்றும் நமது ஊருக்கும் ,, மக்களுக்கும் தடுத்தது தான் தற்போதைய உறுப்பினர்களின் திறமையான செயல்பாடு என்றே கூட சொல்லலாம் .....

மேலும் நமது அனைத்து ஜமாத்து & ஐக்கிய பேரவை '' இந்த தேர்தலில் முன்பு நடந்ததை நினைத்து '' களம் '' இறங்காமல் இருப்பது தான் சால சிறந்தது .....நம் மக்களுக்கும் '' ஜமாத் + ஐக்கிய பேரவைக்கு மனதளவில் வேற்றுமை வராமல் பாதுகாட்க படும் .....

முஸ்லிம் லீக் சார்பாக ஏணி சின்னத்தில் யார் நின்றாலும் வரவேற்கத்தக்கது ....இவர்களின் இந்த முயற்சசியை பாராட்டி ,, வரவேற்கிறோம் ...மற்றும் .DMK / ADMK / மதிமுக / தேதிமுக / SDPI ..தலைமையும் ஒத்துழைக்க நமது ஊரின் இந்த கட்சி அனைத்து தலைவர்களும் .... அவர்களின் தலைமையுடன் பேசி முழுமையான ஒத்துழைப்பை நல்கினாள் அல்ஹம்துலில்லாஹ் ....ஊரின் சகோதர தன்மையும் ,, தேவைகேற்ற பிரசனைகளும் வராது பாதுகாட்க படும் ....

நமது ஊரில் நகர் மன்ற தேர்தலை ...முதல் ,, முதலாக .....அரசியல் கட்சிகள் மூலம் ...களம் காண்கிறது ...ஒவ்வொரு வீட்டிலும் பலதரப்பு பட்ட கட்சிகள் உள்ளன ..ஆதலால் . இந்த தேர்தலில் '' வீட்டிலும் ,, ஊரிலும் '' குழப்பம் வராது அல்லாஹு தான். ஒற்றுமையை பாதுகாட்க வேணும் ....

நகர் மன்ற தேர்தல் விஷயத்தில் ,,,நம் முதல்வர் அம்மா அவர்கள் ஒரு சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயமே ....முன்பு ஒரு சில பணக்காரர்களின் சொல்படிதான் நாம் துணை தலைவரை தேர்வு செய்து ஊருக்கு ஒன்றுமே நல்லது நடக்காமல் தடுக்க பட்டதும் யாவரும் நன்கு அறிந்ததே ......

நல்ல உறுப்பினர்களை நாம் தேர்வு செய்து .....நல்ல திறமையான சேர்மனையும் ,, துணை சேர்மனையும் தேர்வு செய்து ஊருக்கு பல நல்ல திட்டங்களை செயலாக்குவோம் ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved