Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:23:46 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18204
#KOTW18204
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன், ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு! வீடியோ பதிவு வெளியீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5134 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக துவக்கம் முதல் இருந்து வந்த ஹாஜி எம்.எம்.உவைஸ், 2013ஆம் ஆண்டு காலமானார்.

இவ்வாறிருக்க, ஐக்கியப் பேரவைக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக, 09.08.2016. அன்று பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், பல ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும் கலந்துகொள்ளாததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது ஒத்திவைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக,
(1) ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,
(2) ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
(3) ஹாஜி எல்.எம்.இ.கைலானீ,
(4) ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்
ஆகியோரடங்கிய நால்வர் சமாதானக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

மேற்படி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சிறுநெய்னார் பள்ளியின் செயலாளருடன் இக்குழு, குழுவினருள் ஒருவரான ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன் முழு அசைபடப் பதிவை காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடுமாறு, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலாளர் எம்.ஏ.மஹ்மூத் என்ற பட்டறை மஹ்மூத் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.



அதனடிப்படையில், அக்கூட்டத்தின் அசைபடப் பதிவு இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி, அசைபடப் பதிவைக் காணலாம்:-





தகவல் & படம்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 08:57 / 24.08.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன்
posted by ISMAIL (hk) [24 August 2016]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 44480

Same way Jami-ul- Azhar Jammath also should follow this method of Negotiation


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [24 August 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44484

அல்மதத் யாமுஹைதீன்

வீண் பலி, அவதூறு, பித்தனா,கொடும்பாவி ஏறிப்பு, 144 தடை உத்திரவு , கடை அடைப்பு பந்த் , தேர்தல் புறக்கணிப்பு , சுவரொட்டி விளம்பரம் ,முந்தைய ஐக்கிய பேரவை நிவாகிகள் பட்டறை மஹ்மூத் அவர்கள் மீது நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நியாயம் தான?

நீதி கிடைக்குமா? புதிய நிர்வாகிகளிடம் இருந்து என்று எதிர்பார்க்கிறார்.

முந்தைய பழைய நிர்வாகிகள் எப்படி அநீதிக்கு நகரமக்களை முட்சந்தியில் அழைத்து கோசம் கண்டனம் கொண்டார்களே, அதே சந்திப்பில் நியாயம் நீதி புதிய நிர்வாகிகள் கூறுவார்களா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamedyounus (Dubai) [24 August 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44487

பட்டறை மஹ்மூத் காக்காவின் மேல் இந்த விசயத்தில் தவறான எண்ணம் கொண்டவனின் நானும் ஒருவன். ஆனால் அவர்களின் இந்த பட்ட வர்தனமான தன்னிலை விளக்கம் அவர்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் துளி ஏதும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது.

பெண் கடத்தப்பட்ட விசியம், மொட்டை கடிதம் வெளியான விசியம் ஆகியவற்றில் ஐக்கிய பேரவையின் ஒரு சார்பான நடவடிக்கை, எவ்வளவோ எடுத்து கூறியும் மஹ்மூத் காக்காவிடம் தன்னிலை விளக்கம் கேட்காதது கன்னடத்திற்கு உரியது மட்டும் அல்ல ...அதன் நிர்வாகமும் எவ்வளவு மோசமாக நடந்துள்ளது என்பதை தோலுரித்து காட்டுகிறது.

அவர்களும் அவர்கள் குடும்பமும் பட்ட அவமானமும் உண்மையில் வேதனைக்குரியது. பாதிக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்கும் திரை இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நடந்தவற்றை மறப்போம்..இனிமேலும் இத்தகைய உணர்ச்சி பூர்வமான சம்பவம் ஏதும் நடப்பின் இரு சாரார்களிடமும் விளக்கம் கேட்கவேண்டும் என்ற அவசியத்தை இந்த சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.

குளம் முஹம்மது யூனுஸ்
துபாய், அமீரகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஐக்கியப் பேரவை நிலைப்பாடு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [24 August 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44493

காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன், ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு உரையாடலை முழுமையாக கேட்டேன்.அதில் சகோதரர் பட்டறை மஹ்மூது அவர்ககள் பேச்சில் 90%சதவீதம் தான் ஐக்கியப் பேரவை யால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதை தன்னிலை விளக்கமாக விவரித்தார்!

ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஜமாத்தார்களை சந்த்தித்து விளக்கம் பெற சென்றார்களா?அல்லது தனிமனிதர் மஹ்மூது அவர்களுக்கும் ஐக்கியப் பேரவைஇங்கும் இடையில் (10 வருடத்திற்கு) முன்னால் நடந்த விவகாரத்தை பேச சென்றார்களா என்று தெரியவில்லை?

அல்லது தனி மனித மஹ்மூதுக்குறிய குறையானது அந்த ஜாமாத்து முழுமைக்கும் இழைத்த குறைதான் என்ற ஒப்புதலுடன் சமரசம் பேசமுன் வந்தார்களா?

ஏனெனில் ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் எவர் ஒருவரும்,நீங்கள் தனி நபர் பாதிப்பை சொல்கிறீர்கள், நாங்கள் இந்த ஜமாத்து ஒட்டுமொத்த மக்களுக்காக பேச வந்திருக்கிறோம்,ஆகவே தனிமனித விவகாரத்தையும், ஜமாத்தையும் முடுச்சு போட வேண்டாம் என்று ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் எந்த இடத்திலும் யாரும் பேசியதாக இந்த வீடியோவில் பதிவாக வில்லை!

ஆக,இதிலிருந்து ஐக்கியப் பேரவை நிலைப்பாட்டை என் போன்றவர்கள் புரிந்து கொண்டது,

எந்த ஒரு தனிமைதருக்கு எதிராக ஐக்கியப் பேரவையால் ஏதாவதொரு நிகழ்வு நடந்திருக்குமேயானால் அது அந்த மனிதர் சார்ந்த ஜமாத்துக்கு எதிராக ஐக்கியப் பேரவை செயல்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்ற உண்மையானது இந்த வீடியோ பதிவின் மூலம் புலனாகிறது!

இதையே முன்மாதிரியாக வைத்து ஐக்கியப் பேரவை அனைத்து ஜமாத்தினருடனும் வெளிப்படையாக விவாத்தித்து இது போன்ற வீடியோ பதிவை வெளியிட்டு சாதாரண சாமானிய காயல் சகோதரர்களும் புரிந்துணர்ந்து உண்மைநிலையை பெற்றிட ஒரு உள்ளசுத்தியான நிகழ்வுக்கு வழி வகுப்பார்கள் என்று நம்புவோமாக! அதற்காக அனைவர்களும் காத்திருப்போமாக! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Hameed Rifai (Jeddah (KSA)) [24 August 2016]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44499

அன்பின் ஆதம் சுல்தான் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...

ஐக்கியப் பேரவை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நமதூரின் ஒரு தனி நபரைக் கண்டித்து நடத்தப்பட்டது மட்டுமல்ல, அந்த தனிநபரை - அவர் இந்த ஊரின் அவலம் - ஊரில் குடியிருக்கவே தகுதியற்றவர் என்பது போல் சித்தரித்து, அவர் பொறுப்பு வகிக்கும் ஜமாஅத் நிர்வாகத்தைக் கைப்பற்றப் போவதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மொத்தத்தில், நமதூரின் ஒரு குடிமகனுக்கும் - ஒரு ஜமாஅத்திற்கும் எதிராக நடத்தப்பட்டதே அந்த (ஆராயாத - ஆராய முற்படாத - ஆராய வேண்டும் என பலரால் வலியுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளாமல் நடத்தப்பட்ட இந்த) ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தனிநபரையும், ஜமாஅத்தையும் இணைத்தே என்பதால், அதற்கான விளக்கமும் இரண்டையும் இணைத்தே வழங்கப்பட்டுள்ளது. ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டையும் இணைத்ததன் காரணமாகவே, இரண்டுக்கும் இணைத்து பதில் கொடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்...

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கியப் பேரவையால் ஊருக்கு எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல! அதன் கடந்த கால அனைத்து செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்த ஊரில் இயங்கத் தகுதியற்ற அமைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.

மொத்தத்தில், பேரவையைக் கொண்டு நமதூருக்கு நன்மையோ, இல்லையோ...... அதைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சிலருக்கு ‘நிறைய்........ய’ நன்மைகள்! சில ஜமாஅத்துகளுக்கும், பல தனிநபர்களுக்கும், பல பொதுநல அமைப்புகளுக்கும் பெரும் தீமையே நடந்திருக்கிறது என்பதை விளக்கிட, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி தனித்தனி கட்டுரையே எழுத வேண்டும். அவ்வளவு சரக்கு உள்ளது.

“ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஜமாத்தார்களை சந்த்தித்து விளக்கம் பெற சென்றார்களா?அல்லது தனிமனிதர் மஹ்மூது அவர்களுக்கும் ஐக்கியப் பேரவைஇங்கும் இடையில் (10 வருடத்திற்கு) முன்னால் நடந்த விவகாரத்தை பேச சென்றார்களா என்று தெரியவில்லை?” c&p

இவ்வாறு தாங்கள் கூறியிருக்கிறீர்கள்... ஒரு பேச்சுக்கு, உங்கள் கருத்துப் படி, ஒரு தனி நபரின் விளக்கத்தைக் கேட்பதற்காக பேரவையின் இந்தப் பிரதிநிதிகள் குழு சென்றது கேள்விக்குரியது என்றால்,

அதே தனிநபருக்கு எதிராக - நகரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் (அவர்களுக்கு உண்மை விவரங்களை மறைத்து, இருட்டடிப்பு செய்து, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி, அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு) ஆர்ப்பாட்டம் நடத்திய செயல் மகா கொடூரம் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்???

தனது - தன் குடும்பத்துப் பிரச்சினைகளையெல்லாம் ஊர்ப் பிரச்சினையாக்கி, எல்லா ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள்... ஏன்? ஆலிம்களையெல்லாம் அழைத்து கோஷம் போட வைத்தது நமது “அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான (???)” ஐக்கியப் பேரவை!

அதே நேரத்தில் ஊரின் முக்கியப் பிரச்சினைகளான கலாச்சார சீரழிவுகள், ஒழுக்கக் கேடுகள், இறைச்சி விலையேற்றம், இன்று நானும், தாங்களும் அங்கம் வகிக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் அரவணைத்து, கையில் எடுத்து நடத்தி வரும் - ஆட்டோ கட்டண ஏற்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் (அனைவரும் அல்ல!) பலரின் தகாத நடவடிக்கைகள், நகராட்சியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் செயல்படுத்தப்படாமலிருக்கும் அவலம், போக்குவரத்து நெரிசல்கள், நமதூரைப் புறக்கணித்து செல்லும் பேருந்துகளை மீண்டும் இவ்வழியில் இயக்குதல், மது ஒழிப்பு, சாலை விதிகளை மாணவர்கள் மதிக்கச் செய்தல்

என இப்படி ஊருக்கு அவசியமான - போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சரி செய்ய வேண்டிய பல பிரச்சினைகள் இருக்க, அவற்றையெல்லாம் யாருக்கோ, எவருக்கோ நடந்த பிரச்சினை போல கண்டுகொள்ளாமல் - முக்காடிட்டு ஒளிந்துகொண்டது...

அதே அழுக்கடைந்த முக்காட்டை - கொஞ்சம் கூட சுத்தம் செய்யாமல் அணிந்த நிலையில் - மீண்டும் வரவுள்ள நகர்மன்றத் தேர்தலில் காற்று குடித்து உயிர் பெற எத்தனிக்கும் முயற்சி... என எதுவுமே பார்ப்பதற்கு நன்றாக இல்லை.

இனியேனும், உளத் தூய்மையுடன் - வெளிப்படையாக - அனைவரையும் அரவணைத்த நல்ல நிர்வாகத்தை அரசுப் பதிவுடன் தருவார்களானால், அப்படியொரு அமைப்பு நமதூருக்கு அவசியமே!

பொறுத்திருந்து பார்ப்போம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கிட்சன்
posted by hylee (colombo) [25 August 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44515

காலம் மாறும் காட்சியும் மாறும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Sabeer (Bangalore) [02 September 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 44575

காயல்பட்டனத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல் ஜமாஅத் மற்றும் சங்கங்கள்-அமைப்புகள் யாவும் ஒருங்கிணைந்து புதிய பேரவை துவங்க வேண்டும். இதுவே நகரின் இழந்த ஐக்கியத்தை மீண்டும் உருவாக்கும்.

பேரவையின் செயல்பாடுகள் உள்ளம் தூய்மை கொண்டதாக இருத்தல் மிகவும் அவசியம்.

யாரையும் பணிய வைக்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது.

வெறிப் பிடித்த குல பெருமையோ எந்த வகையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த போவதில்லை.

ஊரின் பொது அமைதி சீர்குலைத்த முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முன்னாள் நிர்வாக பிரமுகர்களின் உண்மை முகம், செயல்பாடுகள் யாவற்றையும் அறிந்து நீங்கா மனவேதனை அடைகிறோம்.. மீண்டும் இது போன்ற வன்முறையாளர்கள் பேரவையில் அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர்களை தவிர்த்துக்கொண்டு புதிய ஐக்கியப் பேரவை அமைக்க வேண்டும் என்பது எங்களது கருத்தை பதிவு செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved