Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:04:08 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20365
#KOTW20365
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 6, 2018
அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்! ஏப். 07 அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்தில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3154 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினர் – தைக்கா தெருவைச் சேர்ந்த எச்.எம்.கியாது என்ற கியாது சேட், இன்று 12.45 மணியளவில், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி & பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எஸ்.ஓ.ஹபீப் முஹம்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எச்.எம்.முஹம்மத் லெப்பை, மர்ஹூம் எச்.எம்.செய்யித் உமர், எச்.எம்.ஷேக் ஆகியோரின் சகோதரரும்,

எம்.எல்.அம்ஜத், எஸ்.ஷகீல் ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஏப்ரல் 07 – சனிக்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...c
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [06 April 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46112

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [06 April 2018]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46116

மாண்புயர் மனிதநேயர் மறைந்துவிட்டார்! இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!

என் பாசத்திற்கும்,பண்பிற்கும்,மரியாதைக்குரியவரான கியாது சேட் அவர்கள் வபாத்தான செய்தியறிந்து சொல்லணா வேதனையால் வெதும்பினேன்!

அந்த புண்ணியவானைப்பற்றிய ஒருசில உண்மைவரிகள்: நான் இன்றுவரை அரபுநாட்டில் இருந்துகொண்டு பல லட்சங்களை சம்பாத்தித்து என் குடும்பத்தார்கள் அனைவர்களையும் வாழவைத்து நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால்,அதற்கு முதல் முழு காரணகர்த்தாவாக எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நிமயமிக்கப்பட்ட மகிமைமிகு மனிதரில் ஒருவர் கியாதுசேட் அவர்கள்தான்என்றால் அது மிகையல்ல.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னாள் அரபுநாட்டிற்க்கு செல்லவேண்டும் என்று பம்பாய்க்கு வரும் நமதூர் பிள்ளைகளை வரவேற்று தங்கள் பல்லாக்கு நிறுவன இல்லத்தில் இலவசமாக தங்க வைத்து, அவர்களை சரியான அரபுநாட்டு ஏஜெண்டு மூலமாக அரபகத்திற்கு அனுப்பி வைக்கின்ற ஒரு புண்ணியமான சேவையை எந்த சத்தமும் இன்றி, எந்த விளம்பரமும் இன்றி, எந்த சுயநலமும் இன்றி செய்து வந்தது பம்பாய் பல்லாக்கு நிறுவனம். அதில் முதன்மையாகவும்.முக்கியமாக செயல்பட்டவர்கள் மர்ஹூம் சேகு ஹாஜியும்,கியாது சேட்டு அவர்களும்.

ஒருசிலருக்கு ஏஜெண்டு பணத்தொகையைக்கூட கடனாக கொடுத்துதவி செய்திருக்கிறார்கள்.அப்படி உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன்!.

நமதூரில் ஏழை,நடுத்தரகுடும்பங்களை சேர்ந்தவர்கள் அரபுநாடு சென்றால் அவர்கள் குடும்பம் நன்றாக வாழட்டுமே என்ற ஒரு மனிதநேயமிகு மாண்புதவி குறிக்கோளைத்தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இல்லை!

கியாதுசேட் என்னிடம் பணம் தரும்பொழுது கூறிய வார்த்தைகள்,சுல்தான் உனக்குத்தரும் இந்த தொகையை நீ அனுப்பவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது, உன்னைப்பற்றி கேவிப்பட்டேன்,உன்னுடைய தவ்ஹீது நடவடிக்கையையும் கவனித்து வந்திருக்கிறேன், ஆகவே,உன் உடன்பிறந்தாரின் சிபாரிசுகளைவிட உன்னை நான்நம்புகிறேன்,நீ சரியாக திருப்பி அனுப்பினால் அந்த பணம் உன்னைபோன்று வேறொருவருக்கு உபயோகமாகும் என்று கூறினார்கள் என்றால் அவர்களின் தொடர்ச்சியான உதவும் உள்ளம்,அந்த உணர்வு எப்படி ஊற்றுக்கண் போல் ஊறுகிறது!

அன்று 30 வருடங்களுக்கு முன்னாள் ரியாத்துக்கு ஒரு கார் கம்பெனிக்கு அவர்களால் அனுப்பப்பட்ட நான்,அக்கம்பெனியில் நமதூர் பிள்ளைகளை சுமார்50 திலிருந்து60 பிள்ளைகள் வரை சேர்க்கக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.சுமார்10 விசாக்களை நமதூருக்கு அனுப்பி அவர்களையும் வரவழைக்கும் வாய்ப்புக்குரிய பாக்கியத்தையும் பெற்றேன்.

அந்த அனைத்து குடும்பங்களின் துவாவும்,எனக்கும்,என்னை அனுப்பிவைத்த கியாதுசேட் அவர்களுக்கும் அவர்களின் பல்லாக் நிறுவனத்திற்கும் நிச்சியம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை என்றைக்கும் எனக்குண்டு!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய எல்லாப்பிழை களையும் பொறுத்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவித்துயரில் துவளும் குடும்பத்தாருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழந்த அனுதாபம் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.அஸ்ஸலாமுஅழைக்கும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [06 April 2018]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46118

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக அமீன் . அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சப்ருன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்துருள்வானாக அமீன் .

அஸ்லாமு அழைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [07 April 2018]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46119

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...புரியாத பிரியம் பிரியும்போது புரியும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [07 April 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46120

கியாது சேட் அவர்களின் பிரிவின் தாக்கம் அவர்களின் ஜனாஸாவை பின்பற்றி சென்ற மக்கள் கடல் அலையென திரண்டு சென்ற போது தெரிந்தது. அவர்களை ஒரு நட்பு வட்டத்துக்குள் சென்று நலம் விஜாரித்துதான் எனக்கு பழக்கம்.

1960 - 70 களில் அரபுநாட்டு மோகத்தில் அலை அலையாக நமதூர் மக்கள் பம்பாய் சென்றபோது அவர்களுக்கெல்லாம் புகலிடம் கொடுத்தது மிர்சா வீதி 13 ம் இலக்கத்தின்கதவுகள் அவர்களுக்காக திறந்து கொடுத்தது பல்லாக் ஹவுஸ் பெயருடன் இயங்கி வந்த அந்த மாடியில் அரசாண்டு கொண்டிருந்தவர்கள் பி.ஏ.ஷேய்க் ஹாஜி என்ற பெருந்தகையும் கியாது சேட் என்ற ஒரு இளைஞரும்தான். பம்பாயிலிருந்து அரபு நாடு செல்வோருக்கு தங்கள் சொந்த பணத்தை அள்ளிக் கொடுத்து அற்புதமான யோசனைகளையும் சொல்லி வழியனுப்பியவர்களில் கியாத் சேட்டின் பங்கு ஷேக் சாஹிப் அவர்களின் பங்குக்கு சரி சமமாக இருந்திருக்கின்றது என்பதை வாழும் SMB ஏ ஆர் தாஹா அவர்களின் நினைவஞ்சலியின் மூலமும் ஆதம் சுல்தான் அவர்கள் இங்கே பதிவு செய்துள்ள நன்றிப் பெருக்கு மிக்க செய்தியும் மௌன சாட்சியாக இருக்கிறது.

நாம் எதை பிறருக்கு கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு உள்ளது நாம் எதை விட்டு செல்கிறோமோ அது பிறருக்குள்ளது என்று நபிகள் நாயம் சொன்னது எவ்வளவு சத்தியமானது. கியாத் சேட் அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த புரியாத பிரியம் அவர்கள் பிரியும்போது புரிந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக அவர்கள் பாவங்களை மன்னித்து அருள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.

பனிக்கும் கண்களுடன் அவர்கள் குடும்பத்தினர் துயரில் பங்கு கொள்ளும்

மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம்
குடும்பத்தினர்கள்..7530075337.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:... அல்ஜாமிவுல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர்....காலமானார்.
posted by சாளை:M.A.K. முஹம்மத் இப்ராஹீம் ஸூஃபி. (கோழிக்கோடு.) [08 April 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46121

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون 
யா அல்லாஹ்! 
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!

இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம்  செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம்  செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த  குடும்பத்தையும் கொடுப்பாயாக!  யா ரஹ்மானே !

யா அல்லாஹ் !
இவரை இழந்து வாடும் இவர்களது குடும்பத்தார்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் உன்புறத்திதிலிருந்து பொருமையை கொடுத்தருள்வாயாக!

யா ரஹ்மானே!
இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved