Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:38:57 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21366
#KOTW21366
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 15, 2019
புகாரி ஷரீஃப் 1440: சமய நல்லிணக்கம், உலக அமைதி, நிலையான நல்லாட்சி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1853 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.

ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுவதும் வழமை. அந்த அடிப்படையில் 07.04.2019. ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிகாலை நிகழ்ச்சிகள்:

அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாமிதிய்யா மத்ரஸா மாணவர் எஸ்.எம்.நூஹ் மிக்தாத் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிறைவுநாள் பாடம் ஓதித் துவக்கி வைக்கப்பட்டது.

காலை நிகழ்ச்சிகள்:

காலை நிகழ்ச்சிகளை – தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ‘அக்கு ஹீலர்’ ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார். அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்கினார்.

தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் என்.டீ.எஸ்.முஹம்மத் சாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ உரையாற்றினார்.

அபூர்வ துஆ பிரார்த்தனை:

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூ தாஹிர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், நாட்டு நலன், நிலையான நல்லாட்சி, இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, விவசாய நல்விளைச்சல், விவசாயிகளுக்குப் பாதுகாப்பு, நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு, நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்துகொண்டனர்.



















பிரார்த்தனையில் பங்கேற்ற முக்கியமானோர்:

காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர், செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உட்பட - நகர பொதுமக்களும், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

இட வசதி:

ஆண்களுக்கு, மஜ்லிஸின் ஆண்கள் பகுதி ஹல்கா, பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, குருவித்துறைப்பள்ளியின் உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, குருவித்துறைப்பள்ளி மையவாடி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பெண்களுக்கு, மஜ்லிஸின் பெண்கள் பகுதி ஹல்கா, கிழக்குப் பகுதி மைதானம், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா, வாவு அப்துல் கஃப்பார் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒரே குரலில் ‘ஆமீன்’ என்று கூறி, துஆ - பிரார்த்தனை செய்தனர்.

துஆ இறைஞ்சிய ஆலிமுக்கு வழியனுப்பு:

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிறைவுற்ற பின்னர், துஆ இறைஞ்சிய ஆலிமை - ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் பாடி நகர்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.







பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஆறுமுகநேரி காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸ் வைபவக் கமிட்டியின் சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கே.எம்.டீ. மருத்துவமனை, எஸ்.டி.பீ.ஐ. கட்சி ஆகியவற்றின் சார்பில் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனம் நிகழ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரிலிருந்து தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அப்பாபள்ளித் தெருவிலிருந்தே வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பாபள்ளித் தெரு - தீவுத் தெரு சந்திப்பில் துவங்கி, மஜ்லிஸ் வளாகம் வரை ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அரபிக் கல்லூரிகளுக்கு விடுமுறை:

அபூர்வ துஆ பிரார்த்தனையை முன்னிட்டு, அன்று காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரி, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு உள்ளிட்ட மத்ரஸாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மாலை நிகழ்ச்சிகள்:

16.45 மணிக்கு, நபிகள் நாயகம் மீது சுப்ஹான மவ்லித் ஓதும் மஜ்லிஸ் நடைபெற்றது. மஸ்ஜிதுல் ஈமான் பள்ளியின் இமாம் கே.எம்.ஹாமித் லெப்பை தலைமையேற்க, ஹாமிதிய்யா மாணவர் ஹாஃபிழ் எச்.கே.எம்.முஹம்மத் அலீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.

17.35 மணிக்கு எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இரவு நிகழ்ச்சிகள்:

19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியின் இமாம் மக்கீ ஹாமித் லெப்பை தலைமையில் நடைபெற்றது.

21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மாணவர் எம்.ஏ.ஹைதர் அலீ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா கைரீ வழங்கினார்.

நேர்ச்சை வினியோகம்: ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா நன்றி கூற, கே.எம்.டீ. பள்ளியின் இமாம் எஸ்.எம்.செய்யித் ஹுஸைன் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மறுநாள் (08.04.20189. திங்கள்) 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் என்.டீ.எஸ்.முஹம்மத் சாலிஹ் ஆலிம், துணைத்தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், மேலாளர் என்.எஸ். நூஹ் ஹமீத், இணைச் செயலாளர்களான எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் சாலிஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ, துணைச் செயலாளர் என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஆகிய நிர்வாகிகளும், வைபவக் கமிட்டி தலைவர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஆலிம் தலைமையில் – மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, குளம் முஹம்மத் தம்பி உள்ளிட்ட வைபவக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.

படங்களில் உதவி:
நோனா உவைஸ் & தினகரன் ப்ரவீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தேன்மதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [16 April 2019]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46391

இறை பிரார்த்தனை என்பது ஒரு காலத்தில் ஆலிம்கள் அரபியில் ஓதுவதும் கேட்பவர்கள் ஆமீன் என்று சொல்லுவதுமாகத்தான் இருந்தது. ஓதுபவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் புரியாமலிருந்தது. 92 வருடங்களுக்கு முன்பே இந்த நிலையை மாற்றி பிரார்த்தனைக்கு தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்து சாதனை படைத்தனர் நமது முன்னோர்கள்.



இந்த மாபெரும் சபையை ஏற்படுத்திய பெருந்தகைகளில் எனது தந்தை எங்கள் நினைவெல்லாம் நிறைந்து வாழும் ஹாஜி முஹம்மது மக்கி ஆலிம் சித்த்தீகி அவர்களின் தந்தை அ.வு . நூஹுத்தம்பி லெப்பை ஆலிம் ஹாபிழ் ஹாஜி அவர்களும் ஒருவர்

தினசரி ஓதப்படும் ஹதீதுகள் சுமார் 278 என்றாலும் நான்கு ஐந்து ஹதீதுகளை மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அந்த ஐந்து ஹதீதுகளை உள்வாங்கி கொண்டு நாம் அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலே சுவர்க்கம் செல்வது மிக எளிது என்று நமது உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள்.



அந்த வகையில் இறுதிநாளன்று அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் வழங்கிய தமிழ் மணம் கமழும் பிரார்த்தனை உலக நாடுகளில் உள்ள தமிழ் பேசும் நல்லுள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டிருக்கும். இணையத்தளத்தில் உலகம் முழுவதும் அதை கேட்டவர்கள் தமிழ் பொதிகை இங்கிருந்து தென்றலாய் மக்களை தழுவுவதை பார்த்திருப்பார்கள். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று தமிழ் கவிஞன் பாரதி பாடினான். அதை அவையில் அமர்ந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணன் என்ற தமிழ் மகனும் கேட்டு மகிழ்ந்திருப்பார்.

காய்தல் உவத்தல் அகற்றி எல்லோருக்குமான பிரார்த்தனையாக ஆலிம் அவர்கள் ஆற்றிய பிரார்த்தனை, இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் என்ற எல்லையை தாண்டி இந்த அகண்ட பாரதத்தின் முன்னேற்றத்துக்காக, விவசாயிகள் நோயாளிகள் ஆட்சியாளர்கள் எல்லோருக்குமான பிரார்த்தனையாக கடல்போல் விரிந்து வியாபித்திருந்தது. நடக்கின்ற ஆட்சிக்கும் இனி வரப்போகும் ஆட்சிக்கும் கட்டியம் கூறும் பிரார்த்தனையாக அமைந்திருந்தது பாராட்டத்தக்க ஒரு திருப்பம்.

நாம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அதன் தலைமையை உருவாக்கக் கூடிய புதியதொரு விடியலை நோக்கி காலெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல வேளையில் நாம் மற்றவர்களை விட ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தலை அணுகுகிறோம். அது தான் நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு வெறுமனே வாக்களிக்க மட்டும் செல்ல விருக்கிறோம். நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நமக்கு நல்லவர்களை ஆட்சியாளர்களாக அல்லாஹ் தருவான். நாம் அவனுக்கு மாறு செய்து வாழ்ந்தால் அவனும் நமக்கு மாறு செய்து விடுவான் என்ற அருமையான வாழ்வியல் தத்துவத்தை வெளியிட்டு தமது பிரார்த்தனையை முடித்துக்கொண்ட ஆலிம் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்.

வாழ்த்துக்கள்.

ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YAKHAAFUKA VALAA YARHAMNAA ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved