Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:47 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21760
#KOTW21760
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 18, 2020
அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்க காலதாமதம் ஏன்? சட்டமன்ற உறுப்பினர் நிதியொதுக்கீடு என்ன ஆனது?? “மெகா / நடப்பது என்ன?” கேள்வி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2025 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்கிட காலதாமதம் ஏன் என்றும், அவ்வகைக்காக சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கியதாகக் கூறப்பட்ட நிதி என்ன ஆனது என்றும் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் நகரில் சிறுநீரகம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோர், நகரில் இருந்து வெகுதூரம் சென்று DIALYSIS போன்ற சிகிச்சைகளை பெறவேண்டியுள்ளதை கருத்தில்கொண்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - 2017 ஆம் ஆண்டு முதல் இதற்கான கோரிக்கையை பல்வேறு மட்டங்களில் வைத்து வருகிறது.

நவம்பர் 29, 2017 அன்று - இது குறித்த கோரிக்கையை - அப்போதைய தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெயசிங் நட்டர்ஜீ அவர்களிடம், மெகா அமைப்பு, வைத்தது.



சவுதிஅரேபியா ஜித்தாஹ் நகரத்திற்கு வருகை புரிந்திருந்த ராஜ்ய சபா உறுப்பினர் திரு திருச்சி சிவா அவர்களிடம், மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக இந்த கோரிக்கை பிப்ரவரி 3, 2018 அன்று வைக்கப்பட்டது.



செப்டம்பர் 12, 2018 இல் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் முக்கிய தேவைகள் என DIALYSIS பிரிவு உட்பட 11 விஷயங்கள் பட்டியலிடப்பட்டு - திருச்செந்தூர் தொகுதி சட்டமன்றம் உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதன் பிறகும் - இக்கோரிக்கை குறித்து எவ்வித முன்னேற்றம் இல்லாததை அடுத்து - சென்னையில், ஜூலை 9, 2019 அன்று - மாநில சுகாதார சங்கத்தின் (STATE HEALTH SOCIETY) அப்போதைய திட்ட இயக்குனர் (MISSION DIRECTOR) டாக்டர் தரேஸ் அஹமத் IAS அவர்களை சந்தித்து - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு DIALYSIS கருவிகள் தேவைக்குறித்து எடுத்துரைக்கப்பட்டது. டாக்டர் தரேஸ் அஹ்மத் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

மேலும் - அத்துறை அதிகாரிகள் - இரு கருவிகள் வரை தரலாம் என்றும், இந்த கருவிகளை இயக்க தண்ணீர் சுத்தீகரிப்பு (Reverse Osmosis Plant) ஏற்பாடுகள் அவசியம் என்றும், அந்த ஏற்பாடுகள் செய்தபின் தகவல் கிடைக்கப்பெற்ற இரு வாரங்களுக்குள் - அந்த கருவிகள் காயல்பட்டினம் வந்தடையும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையே - சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் (MLACDS) இருந்து, DIALYSIS பிரிவினை உருவாக்க நிதி தருவதாக கூறியுள்ளார் என செய்தி வந்தது. அதனை கருத்தில் கொண்டு - மெகா அமைப்பு தனது முயற்சியினை கிடப்பில் சிறிது காலம் வைத்தது.

இடைப்பட்ட காலத்தில் இது குறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்ததில் - சட்டமன்ற உறுப்பினர் நிதி வழங்கும் விஷயத்தில் முன்னேற்றம் இல்லை என தகவல் வந்தது. இந்த கட்டத்தில் - கத்தர் காயல் நற்பணி மன்றம் - அரசு மருத்துவமனையில் RO கருவிகள் நிறுவிட முன்வந்தது.

மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகளும், கத்தர் காயல் நற்பணி மன்றத்தின் மூத்த நிர்வாகிகளும், ஆகஸ்ட் 2019 முதல் வாரம் - தூத்துக்குடியில், மாவட்ட சுகாதாரத்துறையின் அப்போதைய இணை இயக்குனர் டாக்டர் பரீதா ஸீரீன் அவர்களை நேரில் சந்தித்து - ஏற்கனவே மாநில சுகாதார சங்கம், இரு DIALYSIS கருவிகளை தர முன்வந்துள்ளதை தெரிவித்தும், அதற்கு தேவையான RO கருவிகளை கத்தர் காயல் நற்பணி மன்றம் தர முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய இணை இயக்குனர் - திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா - RO கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்வதாக மீண்டும் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கவே - மெகா அமைப்பு, அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டது. இருப்பினும் - அதன் பிறகும், இவ்விஷயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - 2019 - 2020 காலகட்டத்தில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் - தனது தொகுதி நிதியில் இருந்து பரிந்துரைந்துள்ள பணிகள் விபரங்கள், மெகா அமைப்பு சார்பாக கோரப்பட்டது.

அதற்கு பெறப்பட்ட பதிலில் - அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் - DIALYSIS பிரிவுக்கு தருவதாக கூறியிருந்த திட்டம் இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

இந்த தருணத்தில் - இந்த பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் போதாது, இன்னும் 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்; அந்த நிதியையும் சட்டமன்ற உறுப்பினர் தருவார் என்ற செய்தி - சமூக ஊடகங்கள் மூலம் - நவம்பர் 2019 முதல் வாரம் - பரவியது.

ஆனால் - பிப்ரவரி 2020 முதல் வாரம் வரை, இந்த பணிக்கான ஒப்புதல் - சட்டமன்ற உறுப்பினர் நிதியினை கையாளும் துறையினால் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இது குறித்து விசாரித்ததில், கீழ்காணும் தகவல்கள் அறியமுடிந்தது.

சட்டமன்ற உறுப்பினர் - ஜூலை 2019 மாதம் துவக்கத்தில் வழங்கிய பரிந்துரையில் - DIALYSIS கருவி பிரிவு அறைக்கு தேவையான AC போன்ற விஷயங்களை சேர்த்திருந்ததால், அது போன்ற பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் செய்யமுடியாது என்பதால் - அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

அதன் பிறகு - சில மாதங்கள் கழித்து, நவம்பர் 2019 இல். RO கருவிகள் போக, DIALYSIS கருவிகளையும் சேர்த்து - 20 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் ஒரு பரிந்துரையினை, சட்டமன்ற உறுப்பினர் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் - இந்த பரிந்துரைக்கு, இதுவரை மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் - DIALYSIS கருவிகளை தமிழக அரசின் மாநில சுகாதார சங்கம் (SHS) இலவசமாக வழங்கிட ஒப்புதல் கொடுத்த பிறகும், சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையில் அவை இடம்பெற்றுள்ளன.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பழைய சோதனைக்கூடத்தில் (LABORATORY) - DIALYSIS கருவிகளை நிறுவிட திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புனரமைப்பு பணிகளை செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்ட பிறகு, அந்த கட்டிடத்தை புனரமைக்கும் பொறுப்பினை காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் - RO கருவி மட்டும் - சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் நிறுவப்பட்டிருந்தால், அரசின் உதவியுடன் - DIALYSIS பிரிவு எப்போதோ காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டிருக்கும்; அல்லது - கத்தர் காயல் நற்பணி மன்றம் முன்வந்த காலகட்டத்தில் RO கருவி நிறுவ அனுமதிக்கப்பட்டிருந்தால், DIALYSIS பிரிவு எப்போதோ துவங்கப்பட்டிருக்கும்.

ஆனால் - இன்று வரை, இவ்விஷயங்களில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்னன் அவர்களின் ஒதுக்கீடு பெறப்படாததால் - இப்பணிகள் துவங்கப்படாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன.





இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved